அத்தியாயம் 18
இன்னைக்கு அப்பா இல்லைன்னா அண்ணனை கூட்டிட்டு போகணும்னு நினைத்து படுக்கையை விட்டே எழுந்தாள் அன்னம். நன்றாக தூங்கியதால் முகம் பொலிவாக இருந்தது.
காச் மூச்சுன்னு பேச்சு சத்தம் காதை அடைத்ததால், ஜன்னலை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
அங்கே அப்பா அண்ணா இருவரும் கோபமாய் உரையாட, அப்பத்தா அம்மா ஒருபக்கம் உரிமைச் சண்டை போட்டனர்.
“மனசாட்சியோட நடந்துக்கங்கத்த. உங்க வீட்டுல கொடுத்ததுன்னா கொடுக்கறது கொடுக்காம போறது இதெல்லாம் உங்க விருப்பம். ஆனா உங்க மாமியார் பாத்திரம் அத்தனையும் தங்கம் வெள்ளியும், கெட்டிவெண்கலமுமா இருக்குமுன்னு கேள்விப்பட்டேன். அத்தனையும் ஒத்த ஆளா அமுக்கிக்கலாமுன்னு பாக்காதீங்க”
சுலோச்சனா நாகரீகமான வார்த்தைகளில் பேசுவதும் அதற்கு அப்பத்தா இந்த ஊர் பேச்சை பேசுவதையும் கேட்க சாம்பார் சர்க்கரை பொங்கல் கலந்து சாப்பிடுற சுவையில் இருக்கும் அன்னத்துக்கு.
அப்பத்தா தரை லோக்கல்ல பேசும். சுலோச்சனா அந்த பேச்சுல மொகரையை இழுத்துட்டு நிப்பாரு அதை பாக்கையில் வேற எடம் பாத்து போவலாமான்னு இருக்கும்.
“அட ஆமான்னுதான நானும் ஒத்துக்கறன். நானு மாமியாகிட்ட அடக்க ஒடுக்கமா சொன்ன சொல்லு தட்டாம இருந்தேன். அதுல மெச்சிட்டு சாவற காலத்துல எங்கையில கொடுத்துட்டு போய்ட்டா. ஆனாக்க நீ அப்படியில்லையே கண்ணு. எங்கிட்ட எடக்கு பேசிட்டு எம்மவன்கிட்ட தழுக்கி மயக்குறதும். எனக்கு உன்ற மொவரையை சுத்தமாவே பிடிக்கல. இதுல பாத்திரம் வேணும் பண்டம் வேணும்ன்னுட்டு. அதல்லாம் தர முடியாது போடி” பேரன் போய்ட்டானா என அமைதி காத்த ராமாயி அவன் போய்ட்டான் என தெரிய வாயை வளர்த்தார்.
கருப்புச்சாமிக்கு இப்படி வீட்டுல பொம்பளைங்க சண்டை போடறது வாக்குவாதம் பண்ணறது இதெல்லாம் புடிக்காது. அவனில்லாத நேரத்துலதான் ராமாயி மருமவளை சீண்டி விடுவார் வந்து பாரு சண்டைக்குன்னு.
“உங்க கால்ல விழுந்து கிடக்க நானொன்னும் இல்லாதப்பட்டவன் வீட்டுல இருந்து வரலத்த. எங்கப்பா கொண்டு வந்த சீரை எடுக்க உங்க வீட்டுலே இடம் காணல பாத்துக்கிடுங்க”
“அடேயப்பா. நா பாக்காத சீராடி. போக்கத்தவளே எங்கய்யன் தாந்துவிட்ட சீருல ஊரே வாயில விரலு வெச்சு அசந்து நின்னுச்சுடி கூறுகெட்ட சிறுக்கி”
“ஆமா ஆமா நல்லா பாத்தீங்க. அதான் எம்புருஷன் புது வீடா கட்டிக்கொடுத்தாரு எனக்குன்னு. பாத்தீங்கள்ள, கேட்டீங்கள்ள” சுலோச்சனா தன் அழகை பார் என நின்றார்.
“ஏய் உம்மவ அங்கிட்டு இருந்து உன்னையே பாக்கறா. கொஞ்சம் அடங்கு. பொறவு தாயை போல சேலைன்னு ஆவப்போவுது பாத்துக்க” பேத்தியின் இருப்பை அறிந்த ராமாயி பேச்சை நிறுத்தி உள்ளே போனார். சின்ன பிள்ளைக முன்ன வச்சு பெத்தவங்களை கேள்வி கேக்க கூடாதுன்னு ஒழுக்கம் தெரிந்து விட்டுக்கொடுத்தார்.
அது புரியாத சுலோச்சனா, “சண்டை பாதியில போச்சே” கவலைப்பட்டு நின்றார்.
இருவரும் போட்ட சண்டையைப் பார்த்து, இதுக்கு நாம தனியாவே போயிக்கலாம் என நினைத்தாள் அன்னம். பாத்திரம் பண்டம்னு அடிச்சுக்கறாங்களே இத்தனை வசதி இருந்தும் திருத்த முடியாது இவங்களை. அம்மாதான் இப்படின்னு தெரிஞ்ச கதை. அப்பாத்தாக்கு புத்தி வேணாமா.
ஏற்ற இரக்கம் வச்சு தைச்ச ஆடைகள் எல்லாவற்றையும் பொருக்கி தேங்காய் மூட்டைகள் போடும் கோணிப்பையில் போட்டு கட்டி வைத்தாள்.
“இனிமே இந்தக் கன்றாவியை வாங்கித் தரட்டும் அப்ப இருக்கு அவங்களுக்கு”
அப்படி கழித்து எறிந்ததில் பூராவும் சுலோச்சனா வாங்கிக் கொடுத்ததுதான். மீதியெல்லாம் கருப்புச்சாமி தயாளன் ராமாயி என மூவர் வாங்கித் தந்ததுதான்.
அதில் ஒன்றை எடுத்து அணிந்தவளுக்கு, அவன் நகம் பட்ட இடம் எரிச்சலைக் கொடுக்க, அவன் பற்றிய நினைப்பில் காய்ச்சல் வரும் போல குளிர்பிடித்தது.
“திரும்ப வரமாட்டான். ஐந்து வருசமா என் கண்ணுல கூட படாமதான இருந்தான்” நம்பிக்கையை மனதில் வைத்து பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள் அன்னம்.
“அம்மா போயிட்டு வரேன்” சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
“கண்ணு ராசாத்தி இந்த பூவை வச்சுட்டு போ. மல்லிப்பூவு எம்புட்டு மணமா இருக்குது பாரு” வயதை மறந்து ஓடி வந்த அருக்காணி அவள் கூந்தலில் பூவை வைத்துவிட்டாள்.
“நான் வரேன்க்கா. அப்பத்தா எங்க?”
“கருப்பு மார்க்கெட்டு போயிருச்சுன்னு அப்பத்தா வயக்காட்டுப்பக்கம் போயிருச்சு கண்ணு. நீ பாத்து போயிட்டு வா நா ஆத்தாகிட்ட சொல்லிக்கறேன்” அருக்காணி அவளை அனுப்பி வைத்தாள்.
நடக்கும் போது மார்பில் வந்து விழுந்த மல்லிச் சரத்தை தூக்கி பின்னால் விட்டு விட்டு போராடி மார்பிலேயே படர அனுமதித்தபடி பாதையில் நடந்தவள் அவனை பார்வையால் தேட, இல்லை அவன்.
“தொலையட்டும்” நிம்மதியடைந்த மனதுடன் அவனை மறந்து அன்றைய பாடங்கள் பத்தி நினைக்க நினைத்தாள்.
காற்றில் கலந்த மண் அவள் விழிகளை மறைக்க அடர் கருப்பு நிற புல்லட் அவள் பாதையை மறைத்தது, யாரென்று யூகிக்க பெரிய அளவு அறிவு வேண்டாம்.
சத்தியசீலன்தான் அவளை பார்வையால் மென்று தின்றபடி பைக்கில் அமர்ந்திருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளை எப்படி அடித்தால் அவளோட அண்ணன் சிலிர்த்துகிட்டு சண்டைக்கு வருவான் என்பதைப் போலவே பார்ப்பான். ஏற்கனவே அடித்த இடத்தில் அடுத்த நாள் அடிக்க கூடாதென ஓரளவு நல்லதனமாய் யோசிப்பான்.
சின்ன நகக்கீரல் கூடப்படாது. அவன் அடிக்கும் இடத்தில் வீக்கம் கூட இருக்காது அத்தனையும் உள்காயமாக இருக்கும்.
இப்பொழுது அவன் பார்வையும், கீழுதட்டை கடிப்பதும் அவளுக்கு தப்பான கதையை சொல்ல, பிடிக்காமல் முகம் திருப்பினாள்.
பைக்கில் அமர்ந்திருந்தவனை பார்த்த அன்னத்துக்கு, எமன் எருமை மீது அமர்ந்திருக்கும் காட்சி கற்பனையில் உதிக்க.
நிஜத்திலும் எருமைகள் பாதையில் நடந்து வர, அதையும் அவனையும் பொருத்தம் பார்த்தவளுக்கு,
‘ஒரே மாதிரி இருக்கு’ தாளித்தவள் அவன் வாகனத்தை தாண்டிச் செல்ல நினைத்தாள்.
சப்தம் காதை அடைக்க முறுக்கியவன் அவள் அருகில் நெருங்கினான்.
அவனை பார்க்கவே இல்லை இதுவரை. அப்படியே போகத்தான் நினைத்தாள்.
கொஞ்சநேரம் போக, அவனுக்கு எப்பொழுதும் இந்த பூனை எலி விளையாட்டு என்றால் அதுவும் அவள் கூடன்னா ரொம்ப இஷ்டம். அதனால் சீண்டி சீண்டி இரக்கமின்றி விளையாட்டு காட்டினான்.
பைக் நகர்ந்த இடம் பள்ளமானது.
என்னதான் பண்ணுறான்னு பாக்கலாம் யோசித்தவள் அவன் முகத்தையே பார்க்காமல் அப்படியே நின்றாள்.
அவனும் பைக்கை நிறுத்திவிட்டு முன் புறம் சாய்ந்து தாடையில் கையூன்றி அமர்ந்தான்.
அவள் கட்டுப்பாட்டையும் மீறி ஓரக்கண்ணில் விழுந்த அவன் தோரணையில் கட்டுண்டாள்.
“எனக்கு நேரமாச்சு”
“ஆகட்டும்”
“சரி இப்ப என்ன பண்ணனும்?” பொறுமையாய் கேட்டாள்.
“என்ன ஒரு தடவ பாரு புள்ள”
அவனை படக்கென நிமிர்ந்து பார்த்து “சரி பார்த்துட்டேன். இப்ப போகனும். வழியை விடுங்க”
“உனக்கு நான் யாரு புள்ள”
“சத்தியமா மன்மதன் மாதிரி இல்ல. அதனால ஓவரா பண்ணாத”
“உன் மொகரக்கட்டைக்கு மன்மதன் ஓவர்தான் புள்ள. உனக்கு நானே அதிகப்படிதான்” உதட்டில் ஒருவிரலை பதித்து சிரிப்பை அடக்க நினைத்தான்.
“எனக்குன்னு யாரோ இருக்கட்டும். புள்ள கிள்ளன்னு கூப்பிடாதீங்க. எனக்கு பிடிக்கலை. அப்புறம் என் மொகரையை சகிச்சுக்க எந்த அவசியமும் இல்ல உங்களுக்கு. போங்க போய் வேலை இருந்தா பாருங்க” கையை நீட்டி அவனை போகச் சொன்னாள்.
“நா பிறந்து வளந்த காலத்துல இருந்தே இதான் பேசிப் பழக்கம் கண்ணு. தாய்மண்ணை மறக்க முடியாது பாரு. உன்ற லொட்டு லொசுக்கு நாகரீகம் எனக்கு சுட்டு போட்டாலும் வசப்படாது கண்ணு”
“நீங்க எப்படியோ போங்க எனக்கு அது அவசியம் இல்ல. இப்ப போவணும் நான். உங்களால ஏற்கனவே ஒரு நாள் லீவு போட்டாச்சு”
“என்னாச்சு கண்ணு. எதுக்கு லீவு போட்ட” அவள் உணர்வை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவனுக்கு அவள் அன்று விடுப்பெடுத்த காரணம் புரிய இன்ப நகைப்பு இதழில் நெளிய, அவன் முகத்தில் வெட்கமும் பூத்தது.
“ஹையோ” சடுதியில் வெட்கம் பூத்துவிட முகம் சிவந்துபோய் தோளில் மாட்டியிருந்த பேக்கின் கைப்பிடியை கெட்டியாய் பற்றி தன்னை சமாளித்து, “நா போகணும்” அவன் முகம் பார்க்காமல் பாதையை பார்த்தாள்.
“சரி நேத்து இப்படித்தான போனிங்க. இப்பவும் அப்படியே போங்க அம்மிணி” அவன் வேண்டுமென்றே மரியாதையை கட்டி இழுத்து அவள் கையை எட்டிப் பிடித்தான்.
அவன் கையை உதற முயன்று “அண்ணன்கிட்ட சொல்லி வைக்கறேன் உங்க வண்டவாளத்தை. அன்னைக்கே சிக்க வச்சிருக்கணும். பாவம் பார்த்து விட்டா இப்ப கை புடிச்சு இழுக்கறது. முத்தம் தரதுன்னு சுத்த பொறுக்கித்தனம் பண்ணிட்டு” அவள் வாய் பொத்தி இடையோடு கைவிட்டு தூக்கி புல்லட்டின் மீது தனக்கு முன்புறம் அமர்த்தினான்.
அத்தியாயம் 18
இன்னைக்கு அப்பா இல்லைன்னா அண்ணனை கூட்டிட்டு போகணும்னு நினைத்து படுக்கையை விட்டே எழுந்தாள் அன்னம். நன்றாக தூங்கியதால் முகம் பொலிவாக இருந்தது.
காச் மூச்சுன்னு பேச்சு சத்தம் காதை அடைத்ததால், ஜன்னலை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
அங்கே அப்பா அண்ணா இருவரும் கோபமாய் உரையாட, அப்பத்தா அம்மா ஒருபக்கம் உரிமைச் சண்டை போட்டனர்.
“மனசாட்சியோட நடந்துக்கங்கத்த. உங்க வீட்டுல கொடுத்ததுன்னா கொடுக்கறது கொடுக்காம போறது இதெல்லாம் உங்க விருப்பம். ஆனா உங்க மாமியார் பாத்திரம் அத்தனையும் தங்கம் வெள்ளியும், கெட்டிவெண்கலமுமா இருக்குமுன்னு கேள்விப்பட்டேன். அத்தனையும் ஒத்த ஆளா அமுக்கிக்கலாமுன்னு பாக்காதீங்க”
சுலோச்சனா நாகரீகமான வார்த்தைகளில் பேசுவதும் அதற்கு அப்பத்தா இந்த ஊர் பேச்சை பேசுவதையும் கேட்க சாம்பார் சர்க்கரை பொங்கல் கலந்து சாப்பிடுற சுவையில் இருக்கும் அன்னத்துக்கு.
அப்பத்தா தரை லோக்கல்ல பேசும். சுலோச்சனா அந்த பேச்சுல மொகரையை இழுத்துட்டு நிப்பாரு அதை பாக்கையில் வேற எடம் பாத்து போவலாமான்னு இருக்கும்.
“அட ஆமான்னுதான நானும் ஒத்துக்கறன். நானு மாமியாகிட்ட அடக்க ஒடுக்கமா சொன்ன சொல்லு தட்டாம இருந்தேன். அதுல மெச்சிட்டு சாவற காலத்துல எங்கையில கொடுத்துட்டு போய்ட்டா. ஆனாக்க நீ அப்படியில்லையே கண்ணு. எங்கிட்ட எடக்கு பேசிட்டு எம்மவன்கிட்ட தழுக்கி மயக்குறதும். எனக்கு உன்ற மொவரையை சுத்தமாவே பிடிக்கல. இதுல பாத்திரம் வேணும் பண்டம் வேணும்ன்னுட்டு. அதல்லாம் தர முடியாது போடி” பேரன் போய்ட்டானா என அமைதி காத்த ராமாயி அவன் போய்ட்டான் என தெரிய வாயை வளர்த்தார்.
கருப்புச்சாமிக்கு இப்படி வீட்டுல பொம்பளைங்க சண்டை போடறது வாக்குவாதம் பண்ணறது இதெல்லாம் புடிக்காது. அவனில்லாத நேரத்துலதான் ராமாயி மருமவளை சீண்டி விடுவார் வந்து பாரு சண்டைக்குன்னு.
“உங்க கால்ல விழுந்து கிடக்க நானொன்னும் இல்லாதப்பட்டவன் வீட்டுல இருந்து வரலத்த. எங்கப்பா கொண்டு வந்த சீரை எடுக்க உங்க வீட்டுலே இடம் காணல பாத்துக்கிடுங்க”
“அடேயப்பா. நா பாக்காத சீராடி. போக்கத்தவளே எங்கய்யன் தாந்துவிட்ட சீருல ஊரே வாயில விரலு வெச்சு அசந்து நின்னுச்சுடி கூறுகெட்ட சிறுக்கி”
“ஆமா ஆமா நல்லா பாத்தீங்க. அதான் எம்புருஷன் புது வீடா கட்டிக்கொடுத்தாரு எனக்குன்னு. பாத்தீங்கள்ள, கேட்டீங்கள்ள” சுலோச்சனா தன் அழகை பார் என நின்றார்.
“ஏய் உம்மவ அங்கிட்டு இருந்து உன்னையே பாக்கறா. கொஞ்சம் அடங்கு. பொறவு தாயை போல சேலைன்னு ஆவப்போவுது பாத்துக்க” பேத்தியின் இருப்பை அறிந்த ராமாயி பேச்சை நிறுத்தி உள்ளே போனார். சின்ன பிள்ளைக முன்ன வச்சு பெத்தவங்களை கேள்வி கேக்க கூடாதுன்னு ஒழுக்கம் தெரிந்து விட்டுக்கொடுத்தார்.
அது புரியாத சுலோச்சனா, “சண்டை பாதியில போச்சே” கவலைப்பட்டு நின்றார்.
இருவரும் போட்ட சண்டையைப் பார்த்து, இதுக்கு நாம தனியாவே போயிக்கலாம் என நினைத்தாள் அன்னம். பாத்திரம் பண்டம்னு அடிச்சுக்கறாங்களே இத்தனை வசதி இருந்தும் திருத்த முடியாது இவங்களை. அம்மாதான் இப்படின்னு தெரிஞ்ச கதை. அப்பாத்தாக்கு புத்தி வேணாமா.
ஏற்ற இரக்கம் வச்சு தைச்ச ஆடைகள் எல்லாவற்றையும் பொருக்கி தேங்காய் மூட்டைகள் போடும் கோணிப்பையில் போட்டு கட்டி வைத்தாள்.
“இனிமே இந்தக் கன்றாவியை வாங்கித் தரட்டும் அப்ப இருக்கு அவங்களுக்கு”
அப்படி கழித்து எறிந்ததில் பூராவும் சுலோச்சனா வாங்கிக் கொடுத்ததுதான். மீதியெல்லாம் கருப்புச்சாமி தயாளன் ராமாயி என மூவர் வாங்கித் தந்ததுதான்.
அதில் ஒன்றை எடுத்து அணிந்தவளுக்கு, அவன் நகம் பட்ட இடம் எரிச்சலைக் கொடுக்க, அவன் பற்றிய நினைப்பில் காய்ச்சல் வரும் போல குளிர்பிடித்தது.
“திரும்ப வரமாட்டான். ஐந்து வருசமா என் கண்ணுல கூட படாமதான இருந்தான்” நம்பிக்கையை மனதில் வைத்து பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள் அன்னம்.
“அம்மா போயிட்டு வரேன்” சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
“கண்ணு ராசாத்தி இந்த பூவை வச்சுட்டு போ. மல்லிப்பூவு எம்புட்டு மணமா இருக்குது பாரு” வயதை மறந்து ஓடி வந்த அருக்காணி அவள் கூந்தலில் பூவை வைத்துவிட்டாள்.
“நான் வரேன்க்கா. அப்பத்தா எங்க?”
“கருப்பு மார்க்கெட்டு போயிருச்சுன்னு அப்பத்தா வயக்காட்டுப்பக்கம் போயிருச்சு கண்ணு. நீ பாத்து போயிட்டு வா நா ஆத்தாகிட்ட சொல்லிக்கறேன்” அருக்காணி அவளை அனுப்பி வைத்தாள்.
நடக்கும் போது மார்பில் வந்து விழுந்த மல்லிச் சரத்தை தூக்கி பின்னால் விட்டு விட்டு போராடி மார்பிலேயே படர அனுமதித்தபடி பாதையில் நடந்தவள் அவனை பார்வையால் தேட, இல்லை அவன்.
“தொலையட்டும்” நிம்மதியடைந்த மனதுடன் அவனை மறந்து அன்றைய பாடங்கள் பத்தி நினைக்க நினைத்தாள்.
காற்றில் கலந்த மண் அவள் விழிகளை மறைக்க அடர் கருப்பு நிற புல்லட் அவள் பாதையை மறைத்தது, யாரென்று யூகிக்க பெரிய அளவு அறிவு வேண்டாம்.
சத்தியசீலன்தான் அவளை பார்வையால் மென்று தின்றபடி பைக்கில் அமர்ந்திருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளை எப்படி அடித்தால் அவளோட அண்ணன் சிலிர்த்துகிட்டு சண்டைக்கு வருவான் என்பதைப் போலவே பார்ப்பான். ஏற்கனவே அடித்த இடத்தில் அடுத்த நாள் அடிக்க கூடாதென ஓரளவு நல்லதனமாய் யோசிப்பான்.
சின்ன நகக்கீரல் கூடப்படாது. அவன் அடிக்கும் இடத்தில் வீக்கம் கூட இருக்காது அத்தனையும் உள்காயமாக இருக்கும்.
இப்பொழுது அவன் பார்வையும், கீழுதட்டை கடிப்பதும் அவளுக்கு தப்பான கதையை சொல்ல, பிடிக்காமல் முகம் திருப்பினாள்.
பைக்கில் அமர்ந்திருந்தவனை பார்த்த அன்னத்துக்கு, எமன் எருமை மீது அமர்ந்திருக்கும் காட்சி கற்பனையில் உதிக்க.
நிஜத்திலும் எருமைகள் பாதையில் நடந்து வர, அதையும் அவனையும் பொருத்தம் பார்த்தவளுக்கு,
‘ஒரே மாதிரி இருக்கு’ தாளித்தவள் அவன் வாகனத்தை தாண்டிச் செல்ல நினைத்தாள்.
சப்தம் காதை அடைக்க முறுக்கியவன் அவள் அருகில் நெருங்கினான்.
அவனை பார்க்கவே இல்லை இதுவரை. அப்படியே போகத்தான் நினைத்தாள்.
கொஞ்சநேரம் போக, அவனுக்கு எப்பொழுதும் இந்த பூனை எலி விளையாட்டு என்றால் அதுவும் அவள் கூடன்னா ரொம்ப இஷ்டம். அதனால் சீண்டி சீண்டி இரக்கமின்றி விளையாட்டு காட்டினான்.
பைக் நகர்ந்த இடம் பள்ளமானது.
என்னதான் பண்ணுறான்னு பாக்கலாம் யோசித்தவள் அவன் முகத்தையே பார்க்காமல் அப்படியே நின்றாள்.
அவனும் பைக்கை நிறுத்திவிட்டு முன் புறம் சாய்ந்து தாடையில் கையூன்றி அமர்ந்தான்.
அவள் கட்டுப்பாட்டையும் மீறி ஓரக்கண்ணில் விழுந்த அவன் தோரணையில் கட்டுண்டாள்.
“எனக்கு நேரமாச்சு”
“ஆகட்டும்”
“சரி இப்ப என்ன பண்ணனும்?” பொறுமையாய் கேட்டாள்.
“என்ன ஒரு தடவ பாரு புள்ள”
அவனை படக்கென நிமிர்ந்து பார்த்து “சரி பார்த்துட்டேன். இப்ப போகனும். வழியை விடுங்க”
“உனக்கு நான் யாரு புள்ள”
“சத்தியமா மன்மதன் மாதிரி இல்ல. அதனால ஓவரா பண்ணாத”
“உன் மொகரக்கட்டைக்கு மன்மதன் ஓவர்தான் புள்ள. உனக்கு நானே அதிகப்படிதான்” உதட்டில் ஒருவிரலை பதித்து சிரிப்பை அடக்க நினைத்தான்.
“எனக்குன்னு யாரோ இருக்கட்டும். புள்ள கிள்ளன்னு கூப்பிடாதீங்க. எனக்கு பிடிக்கலை. அப்புறம் என் மொகரையை சகிச்சுக்க எந்த அவசியமும் இல்ல உங்களுக்கு. போங்க போய் வேலை இருந்தா பாருங்க” கையை நீட்டி அவனை போகச் சொன்னாள்.
“நா பிறந்து வளந்த காலத்துல இருந்தே இதான் பேசிப் பழக்கம் கண்ணு. தாய்மண்ணை மறக்க முடியாது பாரு. உன்ற லொட்டு லொசுக்கு நாகரீகம் எனக்கு சுட்டு போட்டாலும் வசப்படாது கண்ணு”
“நீங்க எப்படியோ போங்க எனக்கு அது அவசியம் இல்ல. இப்ப போவணும் நான். உங்களால ஏற்கனவே ஒரு நாள் லீவு போட்டாச்சு”
“என்னாச்சு கண்ணு. எதுக்கு லீவு போட்ட” அவள் உணர்வை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவனுக்கு அவள் அன்று விடுப்பெடுத்த காரணம் புரிய இன்ப நகைப்பு இதழில் நெளிய, அவன் முகத்தில் வெட்கமும் பூத்தது.
“ஹையோ” சடுதியில் வெட்கம் பூத்துவிட முகம் சிவந்துபோய் தோளில் மாட்டியிருந்த பேக்கின் கைப்பிடியை கெட்டியாய் பற்றி தன்னை சமாளித்து, “நா போகணும்” அவன் முகம் பார்க்காமல் பாதையை பார்த்தாள்.
“சரி நேத்து இப்படித்தான போனிங்க. இப்பவும் அப்படியே போங்க அம்மிணி” அவன் வேண்டுமென்றே மரியாதையை கட்டி இழுத்து அவள் கையை எட்டிப் பிடித்தான்.
அவன் கையை உதற முயன்று “அண்ணன்கிட்ட சொல்லி வைக்கறேன் உங்க வண்டவாளத்தை. அன்னைக்கே சிக்க வச்சிருக்கணும். பாவம் பார்த்து விட்டா இப்ப கை புடிச்சு இழுக்கறது. முத்தம் தரதுன்னு சுத்த பொறுக்கித்தனம் பண்ணிட்டு” அவள் வாய் பொத்தி இடையோடு கைவிட்டு தூக்கி புல்லட்டின் மீது தனக்கு முன்புறம் அமர்த்தினான்.