அன்னமே 30, 31
அத்தியாயம் 30
முகத்தில் சோர்வும் களைப்பும் அப்பிக்கிடந்தாலும், அலங்காரத்தால் அழகு கூடி இருந்தது.
கருத்தடர்ந்து நீண்ட கருங்கூந்தலில் பூச்சரங்கள், ஏறி இறங்கிய வளைவுகள், அவள் உடுத்தியிருந்த கூரை புடவையை கருத்தில் கொண்டு வெறித்தவன், அவளை ரசிக்கவில்லை எவனோ ஒருத்தன் பக்கத்தில் உட்கார்ந்தாளே, அவள் கழுத்தில் அணிந்திருந்த மாலையை குரங்கு மாதிரி பிச்சு எரிய கைகள் பரபரத்தது.
ரோஜாப்பூ நிற உதட்டுச்சாயத்தில் குளித்திருந்த செழித்த அதரங்கள் அவன் கருத்தை கவரவேயில்லை.
ஒட்டியானம் இடையின் வளைவை எடுத்துக்காட்ட, அவளை பார்த்தாலே கட்டுக்கடங்காம திமிரும் இளமை அவன் அடங்கா சினத்தில் கட்டுப்பட்டு அடங்கியது.
“கட்டிக்கிறியான்னு கேட்டதும் சரின்னு சொல்லுற. எப்ப எப்பன்னு பாத்தியோ?” வேஷ்டியை மடித்துக் கட்டியவன் சாகறாப்புல கேட்டான்..
அவன் கேள்வியில் கண் இமைகள் வலியோடு தாழ்ந்தது. சாகிற நிலையில் இருந்தாலும் இத்தனை ஆட்கள் முன்ன வச்சு இந்தக் கேள்விக்கு ஆளானோமே சொல்லவொன்னா அவமானத்தில் உதடுகள் துடித்தது.
“என்னம்மிணி பதிலைக் காணோம். அவன் அயோக்கியன்னு தெரிஞ்சவுடனே நா யோக்கியமா தெரியுறேனா கண்ணு. ஆனாக்க நா எப்பவும் கெட்டவன்தான்” அவளை மேலும் கீழும் பாத்தவன்,
“அவன் வாங்கி தந்த புடவை, கழுத்துல மாலை, விட்டா தாலியும் கழுத்துல ஏறியிருக்கும். மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சாலும் அம்புட்டு அழுத்தம்டி உனக்கு. எதிர்க்க நா இருக்கறத பாத்துட்டும் அசையாம உக்காந்திருக்கேன்னா எம்புட்டு கொழுப்பு உனக்கு இருக்கணும். அத்தனையும் அடக்கிடுவேன் எங்கிட்ட வந்தா. யோசிச்சி தலையை ஆட்டு கண்ணு. நா எப்பவும் அதே காட்டுப் பையதான். உன்மேல ஆசை வந்துச்சு கட்டிக்கிறியான்னு கேட்டேன். அதுக்காக திருந்தி உன்னை பூ மாதிரி வச்சுப்பேன்னு கனவு காணாத” அவன் பேச்சை செவி மடுத்தாலும் பதில் சொல்லும் நிலை அவளுக்கு இல்லை.
அவனையே கண்களை மூடாமல் பார்க்க வேண்டி இமைகளை படபடத்து பார்த்தாள்.
“இங்க பாரு கண்ணு தாலி கட்டுன மறுநிமிஷம் பொறந்த வூட்டு உறவ அத்துப் போடனும். செத்தாக் கூட போக்குவரத்து வேணாம். நா மட்டும் போதும்னு வந்தா கட்டுன துணியோட வா. இல்ல என்னை விட்டுடு எனக்கு சொந்தக்கார கூட்டம் ஆவாது கண்ணு. போய்ட்டே இருக்கன்” அவன் உதிர்க்கும் சொற்கள் சுருக் சுருக்கென அங்கே நின்னவங்க மனசை தைச்சது. அன்னமோ ஏதும் உரைக்காமல் நின்றாள்.
“இப்படியே நின்னா என்ன அர்த்தம். கண்ணு முன்னாலயே பொண்ணை இந்த பேச்சு பேசுறான். இவனை நம்பி புள்ளையை தரணுமா?” சுலோச்சனாவுக்கு சத்தியசீலனை புடிக்கவே இல்ல.
“இந்தப் பையன் இல்லையா வேற யாராவது நல்ல பையனா பாக்கலாம். இன்னைக்கே இந்தக் காட்டானை கட்டி வைக்கணுமுன்னு என்ன வந்துச்சு. நீங்க உள்ள புகுந்து வேண்டாமுன்னு தடுத்து நிறுத்துங்க போங்க” தயாளனை இடித்தார் சுலோச்சனா.
“நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன் சுலோச்சனா அதெல்லாம் ஊட்டு நிம்மதி காணாம போவ கூடாதுன்னுதான். அப்படியே இருந்தாலும் உன் புடிவாதத்தால இதுவரைக்கும் ஆரு நிம்மதியும் கெடல. அதனால போனா போவுதுன்னு கருப்பன் ஆத்தா முதற்கொண்டு உன்னை கண்டுக்காம விட்டுப்புட்டாங்க. ஆனாக்கா இது பொண்ணு விஷயம். ஒரு நூலு இடைவெளியில பொண்ணை காப்பாத்திப்புட்டோம். இல்லாட்டி அவ வாழ்க்கை ஒரு பொம்பளை பொறுக்கி கையால அழிஞ்சே போயிருக்கும். இந்த நேரத்திலயும் பொண்ணு வாழ்க்கைய நெனைக்காம கவுரவத்த கட்டிப்புடுச்சுட்டு நிக்கற பாரு. நெசமா சொல்லு நீயெல்லாம் ஒரு தாயா?”
“என்ன பேசறீங்க” சுலோச்சனா திகைத்தார்.
“என்ன பேசவைக்காத. எம்மவள நெனைக்கயில எப்ப வேணாலும் நெஞ்சு வெடிச்சு செத்துப் போவேன்னு நினைக்கறேன். பேசி பேசியே கொன்னுப்புடாத” தயாளன் விலகி நின்றார்.
சத்தியசீலன் பேசுவதை கேட்டாளான்னே தெரியாம ஊமையா நின்னவளை பார்த்து,
“சரின்னு சொல்லு புள்ள” கருப்பன் முன் வந்தான்.
அப்போதுதான் கல்யாணம் ஆன அண்ணனையும் செவ்வந்தியையும் பார்த்தவளுக்கு தன் நிலையை சொல்லி அவர்கள் சந்தோசத்தை உடைக்க மனசு வரலை. இப்போதைக்கு பற்றிக்கொள்ளும் துடுப்பாக சத்தியசீலன் தெரியவே அவனை வைத்து இங்கிருந்து கண்காணாம போக முடிவு பண்ணினாள்.
“வேற வழி இல்லன்னு இக்கட்டான நேரத்துல நெருக்குறீங்க” கசங்கிய முகத்துடன் சொன்னாள்.
“அப்படியும் வச்சுக்கலாம் கண்ணு. இப்ப ஒத்தையா ரெட்டையா போடுற வாய்ப்பை நீ இழந்துட்ட. ஒண்ணா என்கூட சேர்ந்து அமைதியா வர்றேன்னா வா. இல்ல கிட. இதுவும் ஆக்சிடென்டுதான உனக்கு” அவன் திரும்ப.
“விட்டுட்டு போய்டுவியா. அப்ப நா சொல்ற ஒத்த வார்த்தையில என்னை கழட்டி விட எப்பவுமே நீ ரெடியாத்தேன் இருக்க” அவன் கை பற்றியவள் அவன் உள்ளங்கயை விரித்து அதை வைத்தாள்.
“நா வேணாம்னுட்டா போயிட்டே இருய்யா. எனக்கும் நீ வேண்டாம் இப்பவும் சொல்றேன். ஆனா இங்க இருந்து கூட்டிட்டு போய்க்கோ. என்னால இவங்க சந்தோசம் போக வேண்டாம்” கண்ணீரும் கம்பளையுமா நின்னாள் அன்னம்.
அதை பார்த்தவன் விழிகளில் கலக்கம் வந்து போக, அவளை திகைத்து பார்த்தான்.
“இப்ப ஒத்தையா ரெட்டையான்னு நீதான் முடிவெடுக்கணும். நா சொன்னபடி இங்க இருந்து கூட்டிட்டு போ. ஆனா போற வழியில நா வேணுமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ. ஏ உசுரு இங்க போகூடாதுய்யா. என்னால இவங்க வாழ்க்கை கெட வேண்டாம். போற வழில சுடுகாடு இருக்கே வீசிட்டு போ நாய் நரின்னு திங்கட்டும்” நிற்க முடியாமல் தள்ளாடியவளை கையைப் பற்றி அருகில் அழைத்தவன் இதயம் ஜில்லிட்டு போனது.
கருப்பன் தந்த மஞ்சள் கயிறை வாங்கி அவள் கழுத்தில் கட்டபோக. “நல்லா யோசிச்சுக்கோ. செத்துகிட்டே இருக்கன். எனக்கு தாலி கட்டி உனக்கு எந்த லாபமும் இல்ல”
அவள் அதரத்தில் விரிந்த கசப்பான சிரிப்பை உள்வாங்கி.
“நா வேணாமுன்னு அத்துவிட்டுட்டு போன சிறுக்கி நீ. எமனசுல எப்ப வந்தியோ அப்பவே செத்தாலும் எம்பொண்டாட்டியாத்தேன் சாவனும் இனிமே” கட்டிமுடித்தவன்
“கருப்பா கல்யாணம் முடிஞ்சது. வீட்டுப்பக்கம் பொண்ணை பார்க்கணும்னு எவனும் வரப்புடாது சொல்லிட்டேன். நாங்க இப்படியே ஹனிமூன் போறம்” யாரையும் பார்க்காமல் சொன்னவன் அவள் கையைப் பற்றித் கைகளில் தூக்கிக்கொண்டு நடந்தான்.
போகும் வழியில் அண்ணா அப்பா அம்மா அப்பத்தா என பார்வையால் நிரப்பிக்கொண்டே போனவளை இதயம் கணக்க எல்லோரும் பார்த்தனர்.
சடுதியில் நிதானம் வரப்பெற்ற கருணா, “சரி கருப்பா நீ உம்பொஞ்சாதியை கூட்டிட்டு குலதெய்வத்தை பாத்துட்டு வாய்யா” அனுப்பிவிட நினைத்தார்.
அன்னத்தின் பின்னே போக முயன்றவர்களை கருப்பன் தடுத்துவிட்டான்.
“அவந்தான் சொல்லிட்டு போறானில்ல. பாத்துக்குவான் விடுங்க”
“அவன் முரட்டு பய கருப்பா. அவனை நம்பி பொண்ணை கொடுத்த சரித்தேன். ஆனாக்கா இப்படி அத்துவிட்டுட்டு போவ விடுறியே” தயாளன் மவளுக்காக பரிதவித்தார்.
“கொஞ்ச நேரம் முன்ன ஒரு தெருப்பொருக்கிக்கு கட்டி வைக்க பாத்தமே. சென்னைக்கு போன புள்ளைய என்ன பண்ணியிருப்பான் இந்நேரம். அப்ப உனக்கு பயம் வரலையாப்பா?”
“அதுக்கு இல்லப்பா” சுலோச்சனா
“அம்மா நீ பேசாதம்மா எதுவுமே. இன்னுமே நெஞ்சு பதறிட்டு இருக்கு. புள்ள வாழ்க்கையை அவ மனசை சாவடிச்சு உன் கவுரவத்த காப்பாத்த பாக்குற. அப்புடியென்ன படிப்பும் சொந்தமும் உனக்கு ஆக்கி கொட்டுது” கருப்பன் சினந்து நிக்க சுலோச்சனா வாயை மூடினார்.
“இங்க பாருங்க. அவன் முரடந்தான். ஆனாக்கா கெட்டவனா பொருக்கியோ இல்ல. அவம்மேல எனக்கு நம்பிக்க இருக்கு. எப்ப அவனா புள்ளைய பாக்க விடுறானோ அப்ப போயிக்கலாம். அதுவரைக்கும் வேலைய பாருங்க” அடக்கிவிட்டான்.
அத்தியாயம் 31
பைக்கின் முன்பக்கம் அவளை உட்கார வைத்தவன், மண்டபத்துல இருந்து தூரம் போய் அவள் முந்தானையை இழுத்தான்.
“ஐயோ” கையோடு பிடித்து விலக நினைக்க.
அவள் நகர்ந்த விசையில் பைக் கிழே சாய பார்த்தது, “கழுத ஆடித் தொலைக்காத. வண்டி சாஞ்சா. உன்னை மாதிரி அடிபட்டு நானும் கெடைல கெடக்க வேண்டியதுதான். மூடிட்டு உக்காரு”
தன் மார்போடு சாய்த்து விழுகாம இருக்க கட்டிக்கொண்டான் அவள் முந்தானையால்.
சட்டை காலரை பிடித்து நாசியை தேய்த்தாள் தூக்கத்தை விரட்டிவிட. “உறக்கமா வருதுய்யா. பயமா வருது” அவன் இடுப்பை கட்டினாள் கையால். கண்களை இருட்டிக்கொண்டு தூக்கம் வர தூங்க பிடிக்காம அவன் மார்பில் முகத்தை தேய்த்து விரட்ட நினைத்தாள்.
“மாத்தரய பாய்ஞ்சு பாய்ஞ்சு திங்கயில பயமா இல்லையாடி” அவள் முதுகில் தட்டி தந்தான்.
“அடிக்காத” முதுகில் கிடந்த கையை உதறிவிட்டாள். அவன் ஆதரவா தட்டி தருவது அடிக்கறது மாதிரி இருந்தது அவளுக்கு. சொச்ச நேரத்துக்கு முன்ன இருந்த மனநிலை இப்ப இல்ல.
உசுரோட பொழைச்சு வரணுமே தன்னால யாரும் மனசு நோவப்படாதே. இப்போ புதுசா அவன் மேல பாசம் பொத்துக்கிட்டு வந்தது அவளுக்கு. சத்தியமா இப்பவும் அவன் மேல வந்துருக்கறது என்ன விதமான ஆசைன்னு அவளுக்கு தெரியவே இல்ல.
அவள் உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது பயத்தில். கட்டுடம்பு அப்படிங்கறதால இன்னும் உசுரோட தப்பி இருக்கான். நோஞ்சானா இருந்திருந்தா இவ கட்டிப்புடிச்ச வேகத்துக்கு அப்பளமா நொறுங்கி கிடப்பான். இவனுக்கு அது பூனை உரசுர கணக்கா இருந்தாச்சு அது.
“அரமெண்டல். படிச்சிருக்கேன் படிச்சிருக்கேன்னு பீத்திகிட்ட. இப்புடி பண்ணி தொலைச்சிருக்க. இனி ஆஸ்பத்திரிக்கு போனா அவனுக்கு வேற ஆயிரக்கணக்குல தெண்டம் அழுவனும்” வேகமாக ஓட்டினான்.
“நீ ஒண்ணும் எனக்கு தெண்டம் அழுவ வேண்டாம். அண்ணங்கிட்ட சொன்னா கட்டுவான் பணத்தை” ரோசம் மூக்குக்கு மேல வந்தது அவளுக்கு.
“இங்கிட்டு பாருங்கம்மிணி. உன் வாலு இப்ப என் கையில. தெனாவெட்டு காட்டிகிட்டு ஆடுனன்னு வை. வாலை நறுக்கி கையில கொடுப்பேன். மொதல்ல வாயை தைச்சு வைக்கணும்டி. எதுத்து எதுத்து பேசிட்டு கெடக்க”
“தைப்ப. இந்தான்னு வாயை காட்டிகிட்டு கெடப்பனா” மல்லுக்கட்டிட்டே வந்தா உசுரை கையில புடிச்சுட்டு.
பக்கத்தில் இருக்க ஆஸ்பத்திரிக்கு போனா அவன் கேஸை போட்டுருவான். போலீசு அதுயிதுன்னு அலைய ஆவாது என நெனைச்சவன், “ஏய் கிறுக்கி மாத்திரைய எப்ப முழுங்கி தொலைச்ச” அவளை உலுக்கி கேட்டான்.
“தெரியல. பாட்டில்ல இருக்கறத அப்படியே வாயில கொட்டி முழுங்கிட்டேன்” அவன் பேச்சில் ரோசப்பட்டு சொன்னாள்.
“ஒரு கா மணிநேரம் தாங்குவியா. இல்ல இப்பவே சாவற கண்டீசன்ல இருக்கியா. ஆஸ்பத்திரிக்கு பக்கத்து ஊருக்கு போவணும். தெரிஞ்சவன் டாக்டரா இருக்கான். அவன்கிட்டயே போவலாம்” கேட்டான்.
“சரி என்னமோ பண்ணித் தொலைன்னு” சொன்னவள் கண்களை மூடினாள்.
“ஆடாம உக்காந்து தொலை. சாவணும்னு நெனச்ச சிறுக்கி நேத்தே செத்து ஒழிய வேண்டியதுதான. இங்கிட்டு மண்டபத்துல வந்து சாவ பாத்திருக்க. இதுக்குத்தான் சினிமா பாத்து தொலைய கூடாது. கண்ட கருமத்தையும் பாக்கறது அதுல வர மாதிரியே பண்ணி பாக்கறது”
அவன் பேச்சு காதில் ஈயத்தை கரைச்சு ஊத்திய மாதிரி எரிச்சலாக இருந்தது. ‘சாவ கெடக்கிறான்னு பாவமே பாக்காம வாயிருக்குன்னு பேசிட்டே இருக்காப்புல. இம்புட்டு அவமானப்படணும்னு தெரிஞ்சிருந்தா அந்த கருமத்த திங்காம இருந்துருப்பேன்’ அரை தூக்கத்துக்கு போனவளை தட்டி எழுப்பியவன்,
“ஏண்டி லூசு. அம்புட்டு தூக்க மாத்திரய எந்த எருமை உனக்கு தாந்துச்சு?” கேட்டவன் இன்னும் வேகமா ஓட்டினான்.
“வாயை மூடிட்டு இருய்யா. நொய் நொய்ன்னு” தூக்க கிறக்கத்தில் சொன்னாள்.
“கிறுக்கி தூங்குனா அப்புடியே செத்துப் போயிருவ. ஏதாவது பேசிட்டே இரு. நல்லா சிக்கிட்டேன் உங்கிட்ட. சனியனை எப்ப பாத்தனோ அப்பவே புடிச்சுகிச்சு கெரகத்த” தானா மாட்டிகிட்ட கதைய நெனச்சு நொந்துகிட்டான்.
“நானா புடிக்க சொன்னேன்? விட்டுப்புட்டு போவறதுதான” அவன் மார்பில் அடித்தாள்.
“நீ பேசுவடி. சாவட்டும்னு உடாம இழுத்துட்டு போறன் பாரு. செத்தா உங்கண்ணன் நாந்தேன் கொன்னேன்னு பலியை தூக்கி எந்தலையில போடுவான். ஏற்கனவே உங்கப்பனை அடிச்சது நாந்தான்னு இன்னும் பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு”
“அது நீயில்லய்யா. தூயவன்”
“அவனுக்கு பேரப் பாத்தியாடி. தூயவன்னு பேசாம காட்டுபண்ணின்னு வச்சிருக்கலாம். நாய்க்கு பேரு முத்துமாலையாமா”
“சத்தியசீலன்னு வச்சது மட்டும் எப்படி இருக்குது. எம்புட்டு அடி வாங்கிருப்பேன் உங்கிட்ட. சின்ன பாப்பான்னு கூட பாக்காம சேத்துல தள்ளி விடுவியே” பதில் சொன்னாள் அவனுக்கு.
நீ பேசுடி தங்கம். வாயிருக்குல்ல பேசத்தான் செய்வ” இப்படியே அவளை தூங்க விடாம பேசினான்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அன்னம் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
“சுயம் வர ரெண்டு நாளாகும். அதுவும் தானா எழுந்து நடமாடற அளவுக்குத்தான் இருக்கும். தலைசுற்றல் வாந்தி சோர்வு அதிகமா இருக்கும். தொண்டை வறண்டு போறதால தாகம் அதிகமா வரும் தண்ணி நெறய குடுங்க குடிக்கட்டும்” அவனிடம் சொன்னார்.
தெரிஞ்ச டாக்டரா இருந்தாலும் அவர் பார்த்த பார்வையில் என்னமோ இவன்தான் கொலைகாரன்னு இருக்க. செய்யாத தப்புக்கு தலை குனிந்தான் குற்ற உணர்ச்சியில்.
ஒரு விதத்தில் இவனும் குற்றவாளிதான். அவந்தான் நாதாரிபையன்னு தெரியுது. அப்பவே சொல்லி நடக்க இருக்க கல்யாணத்தை தடுத்துருக்கலாம். அத விட்டுப்போட்டு மண்டபத்துல தாலி கட்டுற நேரத்துல வச்சு சொன்னா, நீ கட்டிக்கடான்னு கால்ல விழுவான் கருப்பன். பொண்ணு தனக்குத்தான் என்ற நெனப்பில் இருந்துட்டான்.
அவன் நெனச்சதுதான் நடந்துச்சு ஆனாக்கா இவ இப்படிப் பண்ணி வைப்பான்னு ஆரு கண்டா.
இவளுக்கு அப்புடி என்ன சாவணுமுன்னு ஆத்திரம். நா ஒருத்தன் இருக்கன்னு நெனப்பில்லையே.
எப்படி எங்க வாங்கினாளோ சிறுக்கி மவ ஒரு பாட்டில் மாத்திரைய தின்னிருக்காளே. பாவி மவ. எதுக்கும் கலங்காதவனை உசுரோட சாச்சுப்புட்டாளே அங்கே போடப்பட்டிருந்த ஆசனத்தில் உக்காராம தரையிலேயே தலையில் கைவைத்து உக்கார்ந்தான். கண் இமைக்குற நொடியில அவளை இழந்திருப்போமே வலி மூளையை குடைந்தது வண்டாக.
இங்கே கூட்டிட்டு வந்து டாக்டர் பொழைச்சுக்குவான்னு ஒத்த வார்த்தை சொல்லறதுக்குள்ள அவன்கிட்ட உசுரே தங்கலையே. பைக்கின் முன் புறம் இருந்தவளை கீழே விழாம கூட்டிட்டு வந்த பாடு அவனுக்குத்தானே தெரியும்.
தூயவன் லீலையை தெரிஞ்சுக்கிட்டு அந்தப்புள்ளைய குழந்தையோட கூட்டிட்டு வந்ததே அவந்தான். எப்படியும் கல்யாணம் நின்னே தீரும்னு அவனுக்கு நல்லா தெரியும்.
ஆனா அவம்மனசில ஒரு நப்பாசை. நாம போய் அவமுன்ன நின்னா தூக்கி எரிஞ்சுப்புட்டு நம்ம பின்னாலயே வருவான்னு பகல் கனவு கண்டவன் திமிரா கால்மேல் கால் போட்டு உக்கார்ந்தான்.
ஆனாக்கா அவ அதைவிட திமிரா அவன் பக்கத்தில உக்கார அவன் கனவு சறுக்கியது. நாசமா போனவ புடிக்கலைன்னு உண்மையாத்தான் சொல்லியிருக்கா. நாமதான் கண்டதையும் நெனச்சு கருப்புபன்னி ஊட்டு கல்யாணத்துக்கு வந்துப்புட்டோம் கெரகத்த நெனைச்சவனுக்கு அப்ப தெரியல அவ முழு பாட்டில் தூக்க மாத்திரையை தின்னுபுட்டு உக்காந்திருக்கான்னு.
தாலி கட்டும் வரையில் எதிர்பார்ப்போடுதான் இருந்தான் சரி எப்புடியும் வேணாம்னு சொல்லுவான்னு ஆனாக்கா புள்ள அசையாம இருக்கக் கண்டவன் பொருக்கிய கட்டிக்கிட்டு திமிர் அடங்கட்டும்முன்னு போவலாமா என்றுக்கூட நெனச்சான்.
கோந்து போட்டு ஒட்டுனது போல அவன் மனசு வர மறுக்க அப்படியே இருந்த கிடைய விட்டு அசையாம இருந்தான்.
எந்திருக்கட்டும் மென்னிய முறிச்சு ஊட்டுக்குள்ள அடக்கி வைக்கறேன். என்னைய விட்டுப் போவ நெனைக்கற நேரம் ஒரு வார்த்த வந்து கூட்டிட்டு போன்னு சொல்லிருந்தா குறுக்க எவன் வந்தாலும் கெடாசிட்டு தூக்கிட்டு போயிருப்பேனே. நெனைக்க நெனைக்க அவன் மனசு அடித்துக்கொண்டது.
“சார் அவங்களை ரூமுக்கு மாத்தனும். வாங்க” செவிலியர் வந்து அழைத்தார்.
“சரிங்கம்மினி வரேன்” எழுந்து அவர் போன திசையில் நடந்தவன் கால்கள் சோர்ந்து நடந்தது. எங்கே அவளை தொலைச்சுடுவமோன்னு அவன் பட்டப்பாடு அவனுக்குத்தானே தெரியும்.
அவளை படுக்கையில் மாற்றி படுக்க வைத்துவிட்டு ட்ரிப்ஸ் போட்ட செவிலியர், “பாத்துக்குங்க. தீரும்போது நானே வருவேன். நீங்களும் எச்சரிக்கையா இருங்க. இல்லைன்னா ப்ளட் வெளிய வரும்” அறிவுறுத்த.
“அப்ப நீங்களே இருந்து பாருங்க” சத்தியசீலனுக்கு பயம் பிடித்தது.
“அதை நீங்க ஒழுங்கா பண்ணியிருந்தா இந்தப்பாடு இல்லையே. ஒரு பாட்டில் மாத்திரையை முழுங்குற அளவுக்கு கொடுமை பண்ணியிருக்கீங்க. டாக்டர் நல்லவர் அதனால கேஸ் கொடுக்காம விட்டுட்டார். இல்லாட்டி பொண்டாட்டிய கொன்னதுக்கு வாங்கி கட்டியிருக்கணும்” அவனை குத்தி பேசிவிட்டே போனார் செவிலியர்.
அவர் போகவும் அவன் கோபம் மயக்க நிலையில் கிடந்தவள் மீது பாய்ந்தது.
“தப்பு பூரா இவம்மேல இருக்க நா பேச்சு வாங்கிட்டு கிடக்கேன் ஊரு மூச்சசூட. எந்திரிக்கட்டும் அவளுக்கு இருக்குது” பக்கத்தில் இருந்த பெட்டில் உட்கார்ந்தான்.