அன்னமே 33

5
(11)

அன்னமே 33

அத்தியாயம் 33

 

“என்ன புள்ள நா சொன்னது வெளங்குச்சா?” அம்சா செவ்வந்திகிட்ட விசாரித்தார்.

 

அவளுக்கு ஒரு மண்ணும் புரியல. அம்சா பாத்து பாத்து கட்டிவிட்டிருந்தார் பட்டுசீலையை.

 

“என்னடி ஒரு மார்க்கமா தலையாட்டி வக்கிற. ஆமாவா இல்லையான்னு வாய தொறந்து சொல்லு”

 

“ஆமாக்கா புரிஞ்சுது” பாக்க கூடாது கேக்க கூடாதுன்னு மெரட்டி வச்சுட்டு இப்ப இதெல்லாம் புரியுதான்னு சொல்லிட்டு வெக்கமே இல்லாம பேசறாங்க அப்படின்னு முகம் சிவந்து போனாள் செவ்வந்தி.

 

“என்ன புரிஞ்சுதோ போ புள்ள. எனக்கு கவலையா இருக்கு” அவள் தோற்றத்தை திருப்தியாய் பார்த்துவிட்டு

 

“பாரு புள்ள அவங்க பொண்ணு கல்யாணம் குழப்பமா போனதில அவங்களுக்கு கவலையாத்தான் இருக்கும். நீயும் ரூமுக்குள்ள மாப்பிள்ளை வரும்போது அதைப் பத்தியே பேசிட்டு இருக்காத அவரு கவனத்த உம்பக்கம் திருப்ப பாரு. அவர் பேசுனா அதுக்கு தலையை ஆட்டி கேட்டுக்கோ”

 

“சரிக்கா” அதற்கும் தலையை அசைத்தாள்.

 

“மாமியா மாமனாருன்னு எந்தக் குறையும் சொல்லிட்டு இருக்காத புள்ள. உன் நெனப்பு மட்டும் இருக்கற அளவுக்கு நட”

 

“ஆ சரிக்கா”

 

“சரி வா உன்னை கூட்டிட்டு போய் விடறேன். உன்ற மாமியா இந்நேரத்துக்கே படுக்கறேன்னு போயிட்டா” அம்சா அன்னத்தை கருப்புச்சாமி அறைக்குள் அனுப்பிவிட்டு,

 

“இங்கயே இரு புள்ள வெளிய வராத இனி. மாப்பிள்ளை சித்த நேரத்துல வருவாப்புல” அவர் போய்விட்டார்.

 

அறைக்குள் இருந்ததை எல்லாம் அரண்டு போய் சுத்தி பார்த்தாள் செவ்வந்தி.

 

இம்புட்டு பணக்காரவங்களா இவங்க? பாத்தவளுக்கு இங்கிட்டு எப்படி ஒட்டி வாழப் போறோமுன்னு பிரமிப்பாக வந்தது. ஏசியில் இருந்து வரும் சிலு சிலு காற்றை வேடிக்கை பார்த்தாள்.

 

பெரிய கட்டில் நடுவில் கிடக்க. அதைப் பார்த்து அருகில் போய் தொட்டுப் பார்த்து யாராவது வருகிறார்களா என்று பார்க்க யாரும் வரலை என்றாக மெதுவாக உட்கார்ந்தாள். உட்கார்ந்த விசையில் அப்படியே உள்ளே போய் வெளியே வர எழுந்து நின்றுவிட்டாள்.

 

‘அம்மாடியோ ஆளையே உள்ள இழுக்குதே’ நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.

 

தயாளன் வந்தவர்களை பார்த்து அனுப்பி வைக்கும் வேலையில் இருந்தார். கருப்புச்சாமியும் அவருக்கு உதவியாக செலவு கணக்குகளை பார்த்தான்.

 

“அப்பா அவனுக்கு எம்புட்டு வேணுமுன்னு கொடுத்து அனுப்புங்க. ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்கான்” தயாளன்கிட்ட அவன் சொல்ல அவர் நின்று கவனித்து.

 

“கருப்பா நீ உள்ள போப்பா. நா பாத்துக்கறேன்” தயாளன் அவனை கட்டாயமா உள்ளே அனுப்பினார்.

 

“சரிப்பா. நீயும் முடிச்சுட்டு போய் படு. ஒரே அலைச்சலு இன்னைக்கு” அவரிடம் சொல்லிவிட்டு போனவனுக்கு அன்னைக்கு ராத்திரி சாந்தி முகூர்த்தம் இருக்குன்னு கூட நினைவில்லாம போனது.

 

கதவை திறந்துட்டு உள்ளே போனவன் அங்கே இருந்த பால் பழம் கட்டிலில் தூவி விட்டிருந்த மலர்கள் அவனை பாத்ததும் பேந்த பேந்த மான் குட்டியாட்டம் முழிச்சுக்கிட்டே எழுந்து நின்ன செவ்வந்தியை பார்த்துவிட.

 

அப்போதான் இன்னைக்கு என்ன விசேஷம் என்பதே மனதில் உதித்தது அவனுக்கு.

 

காலையில் இருந்து புதுபொண்டாட்டி என்ன ஆனான்னு நெனைச்சுக் கூடப் பாக்க நேரமில்ல. அந்த அளவுக்கு மூளை கொதிச்சுப் போச்சு.

 

“உக்காரு புள்ள. நா மேலுக்கு தண்ணி வார்த்துட்டு வாரேன்” சட்டையை கழட்டி ஓரமா போட்டவன் உள்ளேயே இருந்த குளியல் அறைக்குள் புகுந்தான்.

 

அதையும் ஆச்சரியமாவே பாத்தாள் செவ்வந்தி வீட்டுக்குள்ளயே பாத்ரூமு இருக்கான்னு.

 

உள்ள இருக்க வசதிய பாத்து வாயை தெறக்கல செவ்வந்தி. இதெல்லாம் அவ பாத்தே இருக்காத ஒண்ணு. ஓட்டு வீடு அவங்க வசதிக்கு உண்டான பாத்திரம் பண்டங்கள். கயித்துக்கட்டில் இதுதான் அவங்க வாழ்க்கை.

 

ஆரு வீட்டுக்கும் போவ அனுமதியில்ல செவ்வந்திக்கு. கண்ணப்பனும் அமுதாவும் அந்த விசயத்தில் கெடுபுடியா இருந்தனர். எப்பவாவது அம்சா வீட்டுக்கு போவ விடுவாங்க அதுவும் அதிசயமாத்தான்.

 

டிவி பாக்க அவளுக்கே ஆர்வம் வந்தது இல்ல. அதுல கலர் கலரா உடுப்ப போட்டுக்கிட்டு ஆடுறாங்க அதப் போயி வேலையை கெடுத்துட்டு உக்காந்து பாக்கறாங்க வேலையத்தவங்கன்னு பாத்தும் பாக்காம போயிருவா செவ்வந்தி.

 

அதனால அடுத்தவங்க ஊட்டுல என்ன இருக்குன்னு பாக்க அவளுக்கு வாச்சது இல்ல. இங்க இருக்க உயர்மட்ட பொருட்கள் எல்லாமே அவளுக்கு அதிசயமா தெரிஞ்சது.

 

குளிக்க கிணத்துக்கு பக்கத்துல தடுப்பு ஒண்ணு போட்டிருக்க அதுக்குள்ள ஒரு தண்ணி அண்டாவை வச்சு அதுக்கு முன்ன நின்னோ உக்காந்தோ குளிக்கலாம் அந்த மட்டுக்குத்தான் இடம் அங்க இருக்கும். அதுவும் வாரம் ஒருக்கா சுண்ணாம்பு போட்டு பூசிடனும். இல்லாட்டி கண்ணப்பன் காட்டுகத்து கத்துவார்.

 

“குளிக்க ஒதுங்க புடிக்க இருக்க எடம் சுத்தமா இருக்கணும் புள்ள இல்லன்னா ஊடு வெளங்காது” அப்படின்னு அமுதாவை நல்லா கேட்டுவிடுவார்.

 

“மச்சான் பெரிய ஆளுதான். பாக்கத்தான் ஒண்ணுமில்லாத மனுசனாட்டம் வேட்டி துண்டோட இருப்பாரு. அதுவும் சட்டையை சாலை படல்ல கழட்டி போட்டுடுறது” அவன் குளித்து துவட்டி பட்டு வேட்டி சட்டை போட்டதை கூட பாக்காம இதைப் பத்தி நினைச்சுட்டு இருந்தாள்.

 

அடர் சிவப்பு நிற பட்டு வெண்ணிற உடம்பை எடுப்பா காட்டியது. அவளை சீண்டனும்னேதான் கருவாச்சின்னு சொல்லுவான் கருப்புச்சாமி. அதுக்கு அவளும் சும்மாயிருக்காம பதிலுக்கு பேசுவாள்.

 

அவள் பக்கத்தில் வந்தவன் அருகில் உட்கார்ந்தான்.

 

ஆண் நெருக்கத்தில் மூச்சு திக்கி திணறி வர அவனை ஏறிட்டு பாத்தவளுக்கு அவன் பார்வை சொல்லும் சேதி புரிய எச்சில் விழுங்கி தரையைப் பார்த்தவளின் முகம் செங்கொழுந்தாய் சிவந்து போனது.

 

அவள் வெட்கம் அவனை சூடேற்ற தன் கரம் கொண்டு அவள் கரத்தைப் பற்றி அழுத்தினான்.

 

அப்பதான் குளிச்சுட்டு வந்ததால் ஈரமும் சில்லிப்பும் அவள் கையை பற்றிய கரத்தில் உணர, சிலிர்த்து கையை உருவினாள்.

 

அதிகமாய் மடிப்பெடுத்து கட்டியிருக்க அவனை உசுப்பேத்தி இத்தனை நாளா தூங்க விடாம பண்ணிய இரு கூர் நிலவுகளில் ஒன்று அரையும் குறையுமா அவன் கண்ணுக்கு பட இத்தன நாளா தன்னை சாகடித்த அங்கம் இப்போது ரொம்ப பக்கத்தில கைஎட்டும் தூரத்தில் இதழ்கள் சுவைக்க துடிக்க சேயாய் முட்டிட ஏங்கினான்.

 

தன் இளமைக்கு விருந்தாய் கன்னிப்பெண் பக்கத்தில இருக்க அதுக்கு மேல் உலக பற்றுகளை விடுத்தவன் அடக்க மாட்டாமல் அவள் மீது பாய துடித்தான். தாம்பத்யத்தின் ரகசியங்களை அறிய துடித்தான்.

 

“செவ்வந்தி” அழைப்போடு எட்டி விளக்கை அனைத்தவன் அவளை தலையணையில் தள்ளி இதழ்களை குறி வைத்துப் பாய்ந்தான்.

 

“ஆஹ்!” ஒரே வார்த்தையை மட்டுமே கடைசியாக அவள் இதழ்கள் உதிர்த்தது.

 

மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்து அவள் அச்சம் வெட்கம் போக்கி தன் மோகத்தின் இன்ப உணர்வுகளை அவளுக்கும் கடத்தி கன்னியின் தேகத்தில் உணர்வுகளை கிளற வை. நீயே கதி என்னை ஏதாவது செய்யடா என வெட்கம் மறந்து மொத்தமாய் அர்ப்பணிக்க வை. அதுவே அவளை முழுவதுமாய் சுகிப்பதற்கும் சுவைப்பதற்கும் உண்டான நேரம். இது காமத்தின் விதிகளில் முதல் பாடம்.

 

கருப்புச்சாமிக்கு கறியும் மீனுமாய் நன்கு தின்று உடம்பில் தினவு ஏறிப்போய் இருந்தது. ஒரு ஆளே ஐம்பதுக்கு மேல நெல் மூட்டைகளை எற்றி இறக்குவான்.

 

உரம் ஏறிக்கிடக்கும் உடம்புக்கும் பெண் தேவைகள் இருக்குன்னு புரிஞ்ச நாள்தான் அது. செவ்வந்தியின் மாறாப்பு இல்லாத வனப்பு பாத்த நாளில் இருந்து ராத்திரி கட்டில்ல படுக்க முடியாம தவிச்சான். தலைக்கு ஏறும் விசமா மோகம் உடம்பெல்லாம் பரவி புரண்டு புரண்டு படுக்க வச்சது. கனவிலயே செவ்வந்தியை கசக்கி நுகர்ந்தான்.

 

இப்போ நெசத்துல காண கெடைக்க பாஞ்சுட்டான் அவ மேல. அவள் இதழ்களை விடாமல் சுவைத்தவன் அவள் மூர்ச்சையடையும் நேரம் பாவம் என விடுவித்தான்.

 

பேசத் தெம்பில்லாம கழுத்தை உயர்த்தி மூச்சு வாங்கினாள் செவ்வந்தி பயந்து வியர்த்துப் போனாள் அவன் அவசரத்தில்.

 

அவள் வேர்த்து பூத்துப் போக, அவன் வேகம் கொறையாம அவள் உடுப்பை உருவி அவளை தொட்டு உணர ஆரம்பித்தான். அவளை பேசவோ செயல்படவோ தன் நிலையை செயலால் கூட சொல்ல அவகாசமே கொடுக்கலை அவன்.

 

பாலைவனத்தில் கடும் பசியோட நடப்பவனுக்கு தண்ணீரும் கொஞ்சமாய் சோறும் கொடுத்தா எப்படி பறந்து திம்பானோ அப்படித்தான் ஆகிப்போனான் கருப்புச்சாமி.

 

பார்த்து ஏங்கிய தங்கத்தில் பசியை ஆற்ற நெனைச்சவன், அங்கேயே நின்னு போனான்.

 

அவள் தேகத்தின் அங்கம் எங்கும் அங்கும் இங்குமாய் இதழ் பற்கள் என மாற்றி மாற்றி தடங்களை பதித்தான் கூட அவன் கைவிரல்களும் தன் பங்குக்கு அவளை இன்புறுத்த. பதிலா முதுகில் நகக்கீரலையும் தோளில் பல் தடத்தையும் பரிசா வாங்கினான்.

 

மாறனின் அம்புகள் இடைவிடாது பல வழிகளில் அவளை இன்பச் சித்திரவதைக்குள்ளாக்க அவளை இடைவிடாமல் முனக வைத்து கட்டிலில் மீனாய் துள்ளிட வைத்தான்.

 

“மச்சான் கத்த வச்சுடாதய்யா” அடிவயிற்றில் இருந்து மொழிகள் வந்தது.

 

“கத்துடி ஆரு வேணாம்னா. வாயாடி பேசுடி எதையாவது” சுடு மூச்சோடு உருமியவன் இறுதி கட்டம் போக அவளை தன்னை உணர வைத்தான்.

 

அவள் மிரண்டு தள்ளிவிட, “ஏய்!” அடிதொண்டையில் இருந்து மோக கூச்சல் சத்தமாய் எழுந்தது அவனிடம்.

 

“மச்சான் வெளிய கேக்கும்” பயந்து அலறினாள் உணர்ந்த செய்தியில்.

 

“ஏசி ரூமுடி. ஒரு சத்தம் வெளிய போவாது”

 

அவன் ஒவ்வொரு செயலுக்கும் அஞ்சி நடுங்கிய செவ்வந்தி அவன் தனக்குள் வர “மச்சான்” அவன் தோளில் பற்களை பதித்து துடித்துப் போனாள்.

காதலாய் காமத்தை வேண்டியிருந்தால் வலியை மறந்து அவனை உணர நெனைச்சிருப்பாள்.

 

முழுக்க முழுக்க காமமும் அவ மேல வந்த ஆசையும் மட்டுமே மனசில இருக்க அவள் வேதனையை மறந்தான்.

 

தன் உச்சத்தை அடைய நெனைச்சவன் தனக்கு அடியே சிதைந்த பெண்ணை உணராம போனான்.

 

கடைசிக்கு நெத்தியில ஒரு முத்தம் தந்திருந்தா கூட மனசு ஆறிப்போயிருக்குமோ அவளுக்கு. ஆனாக்கா தேவை தீர்ந்து அப்படியே விலகி படுத்தவன் கண்களை மூடினான்.

 

உடம்பு முழுக்க அவன் எச்சிலும் காமத்தின் மிச்சமும் என ஈரமா கசகசத்து போயிருக்க எழுந்து போய் சுத்தம் செய்ய மனசு நெனைக்க அவளால அசையவே முடியலை. வன்மையா ஆசைய தீத்துக்கிட்டு என்ன ஆனான்னு கூட பாக்காம பக்கத்துல படுத்திருப்பவனை தலையை திருப்பி பாத்தவளுக்கு மனசெல்லாம் கனத்துப் போனது.

 

இதுதா கல்யாணமா இதுக்கு போயி அம்புட்டு சந்தோசமா பெத்தவங்களுக்கு. இந்தக் கோராமைய தெனமும் அனுபவிக்க போறமா நெனைக்கவே நடுங்கினாள்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!