அன்னம் 21,22

4.6
(9)

அன்னம் 21,22

அத்தியாயம் 21 

சரமாரியாக குத்துவனை எதிர்த்து நில்ல முடியாமல் இல்லை அவனுக்கு.

அடிக்கும் கரங்களை தடுத்து விளக்கம் சொல்ல முடியும் அவனால். ஆனால் அடியை வாங்கிட்டு அப்படியே நின்றான்.

“போனாப் போவுது அநாதை பயலாச்சேன்னு உசுரோட விட்டு வச்சா ஆட்டைக் கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதையா எந்தங்கச்சி மேலயே கையை வைக்கற. உன் கதைய இன்னைக்கே முடிக்கறேன் பாரு” அவன் குத்திய குத்தில் சத்தியசீலனின் மூக்கில் ரத்தம் வழிந்தது.

“எந்தங்கச்சியை கொல்ல பாத்த உன்ன அன்னைக்கே சாச்சிருக்கணும். ஆனா யாருமில்லாத அனாதை. எங்கேயோ ஓரமா குறைச்சிட்டு கிடக்கட்டும்னு விட்டேன் பாரு எந்தப்புடா அது” அடிக்கப் போனவனை தடுத்தாள் அன்னம்.

“வேணாமண்ணே. அவனை கொன்ன பாவம் உனக்கு வேண்டாம். வா போகலாம்” சத்தியசீலன் இருக்கும் பக்கமே பார்க்கவில்லை அவள்.

இரண்டு தினங்களாக தன்கிட்டே தப்பாய் நடந்துக்க பார்த்தவனை சுத்தமாய் பிடிக்கலை அவளுக்கு. இப்போ எங்கே தொட்டுட்டான் மலுக்கென கண்ணீர் முட்டியது அவளுக்கு.

கழுத்தை தாக்க வந்த கையை பிடித்த சத்தியசீலன், கீழே விழாமல் சடுதியில் நிதானித்து காலை தரையில் ஊன்றி நின்றவன் அன்னத்தை ஊன்றி பார்த்தான்.

அவன் பார்வை உறுத்தியும் அவனை ஏறிட்டு பார்க்கவில்லை. தொடக்கூடாத இடத்தில தொட்டவன் அசிங்கமானவன் என்ற ஒன்றே அவளை அலைகளித்தது. 

“ஒண்ணே ஒண்ணு உந்தங்கச்சிகிட்ட கேக்குறேன் கருப்பா. அதுக்கு அவ பதில் சொல்லிப்புட்டா நீயா கால்ல விழுற வரைக்கும் உன் வீட்டுப்பக்கமே நா வரமாட்டேன். இது சத்தியம்” ரத்தக்கரையோடு கேட்டான்.

அவன் கையை விட்டவன், “கடைசி தடவன்னு சொல்லிட்ட. பேசு” கருப்புச்சாமி அவன் சொல்லுக்கு மதிப்பு தந்து விலகி நின்றான்.

“எனக்கு பேசறதுக்கு எதுவுமில்ல அண்ணா. நாம போகலாம்”

“இரு புள்ள. என்ன சொல்லப் போறான்னு வேடிக்க பாப்போம்” கருப்புச்சாமி நிதானித்து நின்றான். சத்தியசீலனின் கண்களில் இருந்த எதுவும் ஒன்று அவனை தேக்கியது.

கருப்புச்சாமி அவர்கள் தன் முன்னயே பேசட்டும் என நந்தியாக நிற்காமல் எட்ட வந்து நின்றான். 

அன்னத்தின் பக்கம் வந்து நின்ன சத்தியசீலன் “என்னை நிசமாவே உனக்கு புடிக்கலயா புள்ள” கெஞ்சிப் பழக்கம் இல்லாதவனுக்கு அவள் முன் எப்படி கேட்பதுன்னு தெரியலை.

“என்ன புடிக்கணும். இல்ல உன்னை எப்படி புடிக்கணும்னு கேக்கறேன். முதல்ல யாருய்யா நீ. என்னை எப்ப பாத்தாலும் அழவிட்டு வேடிக்க பாப்ப நீ. தண்ணியில முக்கி கொல்ல பாத்த. இப்ப வந்து கட்டிக்கலாம் வான்னு சொன்னா உடனே வரணுமா”

“இல்ல புள்ள உன்ன நல்லா வச்சுக்குவேன் என்ன நம்பு” 

“எதுக்கு நம்பனும்கிறேன். நீ ஆசைப்பட்டது இந்த உடம்பைத்தான. ஒரு நாள் அவுத்துப் போட்டுட்டு உங்கூட படுத்தா அம்புட்டுத்தான் உன் ஆச அத்தோட முடிஞ்சுக்கும். ஆனா அதுக்குப் பிறகு உன்ன மாதிரி பொறுக்கி கூட நாந்தான சாவ மூச்சூடும் வாழனும். தலையெழுத்தாய்யா எனக்கு”

அவன் முகம் கசங்கிப் போனது அவள் பேச்சில். 

“உண்மையச் சொல்றேன்யா அதுவும் பொம்பளை நா வெக்கமில்லாம சொல்றேன் நீயெல்லாம் அவுசாரிகூட போகத்தான்யா லாயக்கு. என்ன மாதிரி குடும்பப் பொண்ணை கட்டிக்கிட்டு அவ வாழ்க்கையையும் நாசமாக்காதே கெஞ்சி கேக்கறேன் உன்ன” கையெடுத்து கூப்பியவள், நெஞ்சம் தீ போல் வெந்தது. 

“அப்ப பிடிக்கல என்ன. அதான சொல்லற?”

“ஆமாய்யா உன்ன எனக்கு பிடிக்கவே இல்ல. நீயும் உன் மூஞ்சியும். என்னைக்காவது கண்ணாடியை செத்த நேரம் நின்னு பாத்திருக்கயாய்யா. கருகருன்னு யான மாதிரி. எனக்கு நீ வேண்டாம். என்னோட ஆச நல்லா படிச்சிருக்கணும். அழகா இருக்கணும். அவன்கூட நடந்து போனா பாக்க பாந்தமா இருக்கணும். இதுல ஒண்ணுமே இல்லைய்யா நீ ஒண்ணுக்கும் உதவாதவன் நீ”

அவள் பேசி முடித்து நின்றும் அதுக்கு மேல் கேக்க அவனுக்கு வார்த்தையும் இல்லை மனசும் இல்லை. நம்பமாட்டாது அவள் முகத்தை பார்த்தான். 

“கண்ட இடத்துல கைவச்சுட்டோம். இனி வேற ஒருத்தன நினைக்க மாட்டான்னு சொல்லித்தான என்ன தொட்ட. அடப்போய்யா அதெல்லாம் அந்தக் காலம். இப்ப ஆக்சிடென்ட் அதெல்லாம்” அவனை மொத்தமாய் கொன்னுட்டே அங்கிருந்து போனாள் அன்னம்.

அவள் போகிறதை பார்த்த கருப்பன், “நீ எந்தங்கச்சி மேல ஆசைப்பட்டது தப்பு இல்ல சத்யா. காதலுக்கு எதிரி இல்ல நானு. ஆனாக்க அவ மனசு புரியாம ஆசைப்பட்டுட்ட. போ போய் வேலைய பாரு” கருப்புச்சாமிக்குமே சத்தியசீலனின் உயிரில்லாத முகம் பார்த்து பாவமாய் போனது.

“டேய்” அவன் தோளை தொட்டான் கருப்புச்சாமி.

“என்னடா இப்ப சந்தோசமா இருக்குமே” இதல் ஓரமா வழியும் ரத்தத்தை துடைத்தவன் அப்போதும் திமிரா கேட்டான்.

கருப்புச்சாமியும் கிளம்பினான் கனத்த மனதுடன், அடங்கா சினத்தில் போட்டு அடித்தவன் சத்தியசீலன் காதல் என நிற்கவும் அடங்கினான்.

இருவரும் போய்விட, யாருமில்லாத சுற்றுப்புறத்தை ஒரு நொடி உள்வாங்கியவனுக்கு தன் நிஜம் புரிந்தது. அனாதை என ஒரே வார்த்தையில் சர்வமும் அடங்கிப் போனது.

நா அனாதைப் பயலேதான் நெஞ்சில் குத்தியவன் “சாகடிச்சுட்டா என்ன. இங்க குத்திட்டா நா அழகா இல்ல கருப்பா இருக்கன்னு. அது எந்தப்பு இல்லையே”

எதற்கும் பயப்படாதவன், தான் யாருக்கும் கீழ் இல்லை நானே ராஜா நானே மந்திரி என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என தன்னைப்பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்த நகல்கள் யாவும் அவள் உதிர்த்த சொற்கள் கரைத்துப் போட்டிருந்தது.

அடங்காத காளையான சத்தியசீலன் அனாதை என்ற நிஜம் மட்டுமே இப்பொழுது நிலைத்திருக்க கண்டவன் அதை தாங்க முடியாமல் புழுவாய் துடித்தான்.

கருப்புச்சாமி ஒரே ஒரு நொடி யோசித்து அப்பனை அடிக்க நினைச்சவன் நீதானா எனக் கேட்டிருந்தால் பின் வரும் அபாயத்தை தடுத்திருக்கலாம். இதுதான் விதி என்ற நிலைப்பாடு இருக்க அதை மாற்றும் வல்லமை மனுஷனுக்கு இல்லை.

அத்தியாயம் 22 

தென்னை மரத்தடியில் கேட்பாரில்லாத பிள்ளையாக சாய்ந்து அமர்ந்திருந்தான் சத்தியசீலன். ஒரு காலை நீட்டி மறுகாலை மடக்கி நெஞ்சில் சாய்த்து அதையே துணையாக நினைத்தானோ!… மரத்தின் கிளைகள் இடைவெளியில் தெரிந்த வெட்ட வெளியையே வெறித்துப் பார்த்தவன் முகத்தில் உயிர்ப்பு இல்லை.

மீசையை நீவி விட்டு அவன் சிரிக்கும் சிரிப்பில் கர்வம் தொனிக்கும் நான் ராஜாடா அப்படின்னு. சிரிப்பு தொலைந்து போக, அன்னம் பேசிய சொற்களில் மரித்து போயிருந்தான். 

கருப்புச்சாமி சொல்லிட்டுப் போனதுபடி சத்தியசீலன் யாருமில்லாத அனாதைப் பயலேதான். ஆனால் கருப்புச்சாமிக்கு குறைந்து இல்லை. கருப்புச்சாமியின் பாட்டனாரும் சத்தியசீலனின் பாட்டனாரும் மாமன் மச்சான் முறையாகுது. அவங்க காலத்தில் ஒண்ணுமண்ணாத்தான் இருந்தாங்க. ஒரே வெள்ளாமைதான் பார்த்தாங்க ஒத்துமையா.

தயாளனுக்கும் சத்தியசீலன் தகப்பனுக்கும் வாய்க்கா வரப்பு தகராறில் முட்டிக்கொள்ள, சொந்தம் விட்டுப் போனது. தீராப் பகையும் வந்தது.

எல்லாம் ஒரே காரணம்தான். சத்தியசீலன் தோப்புக்கும் கருப்புச்சாமி தோப்புக்கும் நடுவில் ஒரு பெரிய வேப்பமரம் இருக்கு. அதுக்கடியில் கருப்பன் சிலையும் முருகன் சிலையும் சேர்ந்த மாதிரி இருக்கும். கருப்புச்சாமி குடும்பத்துக்கு கருப்பன் குலதெய்வமாப் போனதால இங்கேயும் கிடாய் வெட்டி பூஜை போடுவாங்க.

தை பூச நாளில் சத்தியசீலன் குடும்பம் இங்கே விழா எடுப்பாங்க. தெரியாமல் கூட அந்த கோவிலில் சேவல் கோழி அறுக்க மாட்டார்கள் இது அவர்களுக்குள் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். 

அப்படியிருக்கப்போ கருப்புச்சாமிக்கு காது குத்து விழா நடக்கும் போது அப்பாவுக்கு சேவல் கறின்னா உசுரு, நாளைக்கு அதையே பலி கொடுத்து விருந்து போடலாங்க என்னோட சொந்தப் பந்தத்துக்குன்னு பொண்டாட்டி சொல்லவும் பொண்டாட்டி மயக்கத்தில் வழக்கத்தை மறந்தார்

கருப்புச்சாமியை விட ஒருவாரம் இளையவன் சத்தியசீலனுக்கு காய்ச்சல் கண்டிருக்க, பையனை பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போய்விட்டார்கள். 

ஒண்ணுக்கு பத்து சேவலை பலி கொடுத்துவிட்டார். ராமாயி இன்னதுன்னு கனிக்கும் முன். பூசாரி வந்து தடுக்கும் முன்பே எல்லாம் நடந்துப்போக,

“என்னடா சேவலை பலி தருவோமுன்னு சொல்லவே இல்லையேப்பா” ராமாயி இனி நடக்க இருக்கும் பிரச்சனையை எண்ணி அஞ்சிநடுங்கி கேட்டார்.

“அதான் முடிஞ்சதுல்ல. இந்த கோவில் நமக்கும் சேர்ந்ததுதான” தயாளன் உறவை மறந்து பேசினார்.

ராமாயி கேட்டதையே சத்தியசீலனின் பெத்தவங்க வந்து கேட்டார்கள்.

அதை தன்மானப் பிரச்சனையாக எடுத்த தயாளன் வார்த்தையை விட, பதிலுக்கு அவங்க பேச. அவர்களைப் போலவே சாமியும் இரண்டாகப் பிரிந்தது.

சாமி கோவில் இருந்த துண்டு நிலத்தை ரெண்டாக பிரிச்சவர்கள் வேப்ப மரத்தை பிரிக்க முடியாம. சாமியை மரத்துக்கு அந்தப்பக்கம் ஒண்ணு இந்தப்பக்கம் ஒண்ணுன்னு. ஒண்ணுமண்ணா இருந்த சாமியை முதுகை காட்டி உட்கார வைத்துவிட்டார்கள்.

நாளைடைவில் சண்டை மருவி கருப்புச்சாமி வீட்டுக்கும் ரோட்டுக்கும் இடையில் இருந்த காலி இடத்தை தேவையே இல்லைன்னாலும் வேணும்னே வாங்கிப் போட்டான் சத்தியசீலன்.

அதன் முடிவு ஒரே எட்டில் மெயின்ரோடு போக வேண்டிய கருப்புச்சாமி வீட்டினர் எங்கே போனாலும் ஐந்து மைல் சுத்தித்தான் மெயின்ரோட்டுக்கே போக வேண்டி வந்தது.

எங்கேயோ காய்ந்த மட்டை உதிர்ந்து விழ, கண்விழித்து அங்கே பார்த்த சத்தியசீலனின் கண்கள் அன்னத்தின் கழுத்தில் அணிவித்த சங்கிலி மண்ணில் புரண்டு கிடப்பதை பார்த்தது.

“எம் மனசை தூக்கி எறிஞ்சுட்டு போனவ சங்கிலியை அத்துப் போட்டுட்டு போவ எந்நேரமாவப் போவுது. சிறுக்கி மவ சாவடிச்சுட்டுப் போய்ட்டாளே. இம்புட்டு நாலு நல்லாத்தா இருந்தேன் எப்ப பொம்பளை மேல ஆச வச்சேனோ அப்பவே ஏ நிம்மதி காணாம நாசமாப் போச்சு.

தயாளன் பெத்த ஏழரை நாட்டு சனியன்.

சுலோச்சனா அல்டாப்பு ராணி பெத்த மூதேவி.

நல்லாவே இருக்க சாபம் விடப் போனவன் வாயில் அடித்து தப்பு தப்பு அதெல்லாம் சொல்ல கூடாது என் ராசாத்தி அவ.

 மனசு பேதலிக்க உளறி கொட்டினான். 

எழுந்து போய் அதைக் குனிந்து எடுக்க அது அவன் அணிவித்தது இல்லை. அப்ப அவனுக்கு அத ஆராய தோணலை. ஏற்கனவே அவ கழுத்தில் பத்திரப்படுத்தியவன் உதிர்ந்த கிளையை எடுத்து மத்த பட்டைகளோடு போட்டான். அவளையும் தூர தூக்கிப் போட நினைத்தான்.

அவ சொன்னதும் சரிதான என்ன மாதிரி ஒருத்தன எவ திரும்பி பாப்பா? என்ன இருக்கு எங்கிட்ட? பைத்தியக்காரன்தா நா. அவ மேல ஆசைப்பட்டுட்டேன். கோடாரியை எடுத்து மரத்தை வெட்டப் போனவன் அதை எறிந்தான் கையாலாகாது. அவ நம்ம உசுர எடுக்கறது பாத்தாதா? பாவம் இதுங்களையும் நம்ம தூக்கத்துக்கு நோவடிக்கணுமான்னு விட்டுட்டான். 

தோப்பில் நடந்ததை வெளியே பேசவில்லை இருவருமே. 

ஒருவாரம் செல்ல தயாளன் உடம்பு முழுமையாய் குணமானது.

“அன்பு அன்னத்துக்கு ஜாதகம் வந்திருக்குது. எங்களுக்கு பிடிச்சுப் போச்சு உனக்கும் பிடிச்சா சொல்லு. ஆகவேண்டியதை பார்க்கலாம்” சுலோச்சனா கருப்பனிடம் மாப்பிள்ளை புகைப்படத்தை தந்தார்.

அதை வாங்கி பார்த்தவன், “இப்ப எதுக்கு இம்புட்டு அவசரம்.. கொஞ்ச நாலு நம்ம கூடவே இருக்கட்டும்” சொன்னாலும் கல்யாணத்தை முடிக்கறது நல்லதுன்னு பட்டது கருப்புச்சாமிக்கும்.

“அவளுக்கு படிப்பும் முடிஞ்சு போச்சு அன்பு. நல்ல இடமா வரும்போதே பாத்து பண்ணிட வேணும்” சுலோச்சனா தயாளனுக்கு ஜாடை காட்ட.

“ஆமாப்பா அம்மா சொல்றது சரிதான்” ஆமாம் சாமி போட்டார்.

“தங்கச்சிகிட்ட ஒருவார்த்த கேட்டுக்கம்மா. அவளுக்கு பிடிச்சு பண்ணுங்க” கருப்புச்சாமிக்கு என்னவோ குழப்பம் இருக்க அவர்களுக்கு ஒழுங்கான பதிலை சொல்லாமல் விலகினான்.

“இப்படி ஒண்ணுமே சொல்லாம போனா எப்படி அன்பு” சுலோச்சனா கேட்டும் அவனிடம் பதிழில்லை.

இவர்கள் பேச்சு அன்னத்தின் காதுகளையும் எட்டியது. என்னத்தையோ இழந்த வலி பரவ கண்களில் கண்ணீர் அரும்பியது.

வருடக்கணக்கில் அவனிடம் அடிவாங்கியதில் வந்த பயம் கோபம் எப்ப காணாம போச்சுன்னே தெரியாத அளவுக்கு மூணு நாள் அவன் காதலில் குளிர் காய்ந்துவிட்டாள்.

ஆனால் பிடிக்கலை அவனை. தொடக்கூடாத இடத்தில் தொட்டவனை பிடிக்கலை. கருப்பாய் இருக்கான். படிப்பில்லை நாகரிகம் இல்லை. அவனோட வீட்டை அன்னத்துக்கு சுத்தமாகவே பிடிக்கவே இல்லை.

பிடிக்கலை எனச் சொல்ல இத்தனை காரணம் இருந்தது. இருந்தும் அவன் நினைவே அவளை கொன்றது. அதான் வேண்டாம்னு வெட்டிவிட்டுட்டு வந்துட்டோமே பேசக்கூடாததை பேசி அவன் மனசை உடைச்சுப் போட்டுட்டு வந்துட்டோமே இன்னும் எதுக்கு அவனையே நினைக்கனும்.

இரண்டு மனசாய் திரியும் தன் மீதே ஆத்திரம் வந்தது. ஜன்னல் கம்பியை விரல்களை நாம்பி அடிக்க வளையல்கள் உடைந்து கையை கீறியதும் வலிக்கவில்லை அவளுக்கு.

“என்ன நடக்குது எனக்கு. எதுக்கு அவனையே பைத்தியமாட்டம் நினைக்கறன்” தலையில் கைவைத்து ஜன்னல் மீது சாய்ந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!