ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க,
“ஒரு நாள் தான் டா இருக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணணும்ன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்” என்று ராம்குமார் கோபத்துடன் வினவ, மிருதுளாவோ அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார்.
” உன் அப்பா சொல்றதும் சரிதானே அர்ஜுன், நாளைக்கு ஒரு நாள் தானே இருக்கு அதுக்குள்ள கல்யாணம்ன்னா எப்படி பா?” என்று அருள்நிதியும் கேட்டுவிட, தன் தந்தை ராம்குமார் மற்றும் தன் மாமா அருள்நிதி இருவரையும் ஒருமுறை மாறி மாறி பார்த்த அர்ஜுன்,
” நான் ஒன்னும் கிராண்டா வேணும்னு சொல்லலையே மாமா, சிம்ப்பிளா நம்மளோட வீட்டிலயே பண்ணிக்கலாம்ன்னு தானே சொல்றேன். நம்ம கம்பெனி ஸ்டாப்ஸ், என்னோட ஃப்ரெண்ட்ஸ் அப்புறம் நம்மளோட க்ளோஸ் ரிலேடிவ்ஸ் இவங்க மட்டும் போதும். நம்ம வீடே பெருசா அரண்மனை போல தானே இருக்கு, எப்படியும் ரிசப்ஷன கிராண்டா தான பண்ண போறோம் அப்புறம் என்ன?”
“இவ்வளவு சிம்பிளா அவசர அவசரமா ஏன் பண்ணனும், கொஞ்சம் பொறுமையாவே பண்ணலாமே.” என்றார் ராம்குமார்.
” இதுல காரணம்னு எதுவும் இல்லை பா, பண்ணனும்னு தோனுது பண்ணிடுவோமே. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க எல்லா ஏற்பாடும் நானும் மாறனும் பார்த்துகிறோம் . நீங்களும் மாமாவும் நேர்ல கூட போக வேண்டாம், ஃபோன்ல இன்வைட் பண்ணுங்க, வர்றவங்க வரட்டும் பாத்துக்கலாம் பா” என்றான் அர்ஜுன்.
அப்பொழுது,
“ஆனா அர்ஜுன் ” என்று ஏதோ சொல்ல வந்த ராம்குமாரின் கரம் மீது தன் கரத்தை வைத்த பிரீத்தா,
“அர்ஜுன் தான் அவ்வளவு சொல்றானே பண்ணிடலாம்ங்க, அவன் சொல்றது போல ரிசப்ஷன நல்லா விமர்சையா பண்ணிடலாம்” என்க அதேநேரம்,
“ஓகே சொல்லிடலாம் ராம், அர்ஜுன் தான் சிம்பிளா போதும்ன்னு சொல்லிட்டானே. பணம் கொடுத்தா வேலை செய்யறதுக்கு ஆளுங்க இருக்காங்க அப்புறம் என்ன? ” என்று அருள் நிதியும் சொல்லவும் யோசனையில் அமர்ந்திருந்த ராம்குமார் ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க தோன்றாது சரி என்று தன் சம்மதத்தை தெரிவித்தார்.
ராம்குமார் சம்மதம் தெரிவித்ததும் மகிழ்ச்சியுடன் எழுந்து கொண்ட ப்ரீத்தா, தன் மகனையும் மதுவையும் அதே சந்தோஷத்துடன் வாழ்த்து கூறி கட்டி தழுவிக்கொள்ள, கண்ணீரை அடக்கியபடி நின்றிருந்த தன் மகளை பார்த்துவிட்டு, சிரித்த முகமாக நின்றிருந்த அர்ஜுன் பிரீத்தாவை வன்மத்துடன் நோக்கினார் மிருதுளா.
அனைவரும் இருந்ததால் எதுவும் சொல்ல முடியாது அதிர்ச்சியுடன் நின்றிருந்த மதூவுக்கு, அப்பொழுது பார்த்து தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வரவும், சற்று தள்ளி சென்று அழைப்பை ஏற்றவள்,
” சொல்லுங்க யாரு ” என்று கேட்ட நொடி, ” ஹலோ மதி என்று தன் காதில் கேட்ட அழுத்தமான குரலில் பெண்ணவளின் இதயம் நின்று துடிக்க, மதி என்ற விழிப்பிலே அழைத்தது யார் என்று அவன் சொல்லாமலே கண்டு கொண்ட மதுமதிக்கு, பேச்சே வரவில்லை.
‘ இப்ப ஏன், இவரு கால் பண்ணி இருக்காரு, என் நம்பர் எப்படி கிடைச்சிருக்கும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,
“ஹலோ மதி ஆர் யூ தேர்” எதிர் முனையில் இருந்த ஆதித்யாவின் விழிப்பில் சுயம் பெற்றவள்,
“ஹான் சொல்லுங்க என்னாச்சு கால் பண்ணி இருக்கீங்க என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது ” சிறு தடுமாற்றத்துடன் வினவினாள்.
” அதெல்லாம் முக்கியம் இல்ல, நான் இப்ப சொல்லப்போறத மட்டும் கவனமா கேளுங்க, கொஞ்ச நாளைக்கு ” என்று ஆதித்யா ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்க,
” என்னாச்சு மது தனியா இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டபடி அங்கே வந்தான் அர்ஜுன்.
அப்பொழுது, ” ஹான் தெரிஞ்சவங்க கூட பேசிட்டு இருந்தேன் ” என்று அர்ஜுனிடம் கூறியவளவோ, அலைபேசியில் இருந்த ஆதித்யாவிடம்,
” நான் அப்புறமா பேசறேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள்.
மதுமதிக்கு ஆதித்யாவுடம் பேசுவதில் ஒரு பிரச்சனையும் கிடையாது, ஆனால் அர்ஜுன்? அவனை எண்ணும் பொழுது தான் தயக்கமாக இருந்தது. ஆதித்யா என்று வரும் பொழுது அர்ஜுன் காட்டும் கண் மண் தெரியாத கோபமும் அவன் விடும் வார்த்தைகளும் தான் பெண்ணவளுக்கு ஐயத்தை கொடுக்க அதனாலே அழைப்பை உடனே துண்டித்திருந்தாள்.
தான் சொல்ல வருவதை கூட கேட்காது, அழைப்பை துண்டித்த மதுமதியை எண்ணி கோபத்தில் நெற்றியை நீவினான் ஆதித்யா.
அப்பொழுது, ” என்ன ஆதி பேசிட்டியா?” என்று வினவினான் நாகா.
” அப்புறம் பேசுறேன்னு ஃபோன வச்சுட்டா ” என்றான் ஆதித்யா. அதைக் கேட்டதும் நாகாக்கு கோபம் வந்துவிட,
” இதெல்லாம் உனக்கு தேவையா ஆதி, நீ யாரு உன் ரேன்ஞ் என்ன? நீ அவ கிட்ட பேசணுமா என்ன? அவளை விடு, அவளுக்கு ஆபத்துன்னா அவளை பார்த்துக்க அவ வீட்டு ஆளுங்க இருக்காங்க, நீ இனிமே அவ கிட்ட பேசாத” என்ற நாகா அங்கிருந்து சென்றுவிட, பால்கனியின் கம்பிகளை இறுக்கமாக பற்றியிருந்த ஆதித்யாவின் விழிகள், இருண்ட வானில் ஒளிர்ந்து கொண்டிருந்த முழுமதி மீது பதிந்திருந்தது.
@@@@@@@@@
” பேசணும்னா பேசிட்டு வா மது” என்ற அர்ஜுனிடம்,
” இல்ல நான் அப்புறமா பேசறேன் ” என்றாள் மது.
” என்னாச்சு மது ஒரு மாதிரியாக இருக்க, கல்யாண விஷயம் பேசும்போது தனியா வந்துட்ட, உனக்கு விருப்பம் இல்லையா என்ன? ” அவளது விழிகளை பார்த்தபடி கவலையுடன் வினவினான் அர்ஜுன்.
” அப்படி எல்லாம் எதுவும் இல்லை அர்ஜுன், அவசர அவசரமா பண்றதுக்கு கொஞ்சம் டைம் எடுத்து பண்ணிக்கலாமேன்னு தான்”
” நான் உன்னை அடிச்சதுல இன்னுமே என் மேல கோபமா இருக்கியா மது” அர்ஜுன் அவ்வாறு கேட்டதுமே, மதுவின் கண்களில் நீர் கோர்த்து விட,
“சாரி மது என்னதான் சாரி சொன்னாலும் நான் செஞ்சது தப்பு இல்லன்னு ஆகிடாது, ஆனா சாரி சொல்றதை விட வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.
என்னன்னு தெரியல ரெண்டு பேரும் ரொம்ப விலகி இருக்கிறது போலவே பீல் ஆகுது, அதனால தான் நமக்குள்ள இப்படிப்பட்ட பிரச்சனை வருதோன்னு தோனுது கல்யாணம் பண்ணிக்கலாம் மது.
எனக்கு பிடிக்காததை மட்டும் எப்பவுமே செய்யாத , மத்தபடி எனக்கு உன்கிட்ட எந்த பிரச்சனையும் இல்லை. என்னை நம்பு நாம நிச்சயம் ஹப்பியா இருப்போம். அப்புறம் மது நான் ஆல்ரெடி சொன்னதுதான் இனிமே அந்த ஸ்கூல் போறத பத்தி நீ யோசிக்காத, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அது சரி வராது.
புரிஞ்சிக்குவன்னு நினைக்கிறேன். சரி வா தூங்க போகலாம் நாளைக்கு ஷாப்பிங் போக வேண்டி இருக்குல” என்றவன் அவளது பதிலை கூட கேட்காது அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
எல்லாம் சரி இந்த பள்ளிக்கூட விஷயம் மதுவுக்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் இப்பொழுது இருக்கும் நிலைமையில் இதைப் பற்றி பேசி பிரச்சனை செய்ய விரும்பாத பெண்ணவள் அமைதியாக இருந்துவிட, அவளுக்கு இப்பொழுது ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்பதும் மறந்து போயிருக்க, ஒரு வித கவலையுடனே மெத்தையில் படுத்து கண் மூடினாள்.
ராயல் மாலில், வந்தவுடனே மதுக்கு தேவையானவற்றை முதலிலே வாங்கி விட்டிருந்ததால், அனைவரும் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்வதில் மும்மரமாக இருந்தனர்.
அந்நேரம் எதற்சயாக அங்கே ஆதித்யா யாருடனோ பேசியபடி கீழே சென்று கொண்டிருப்பதை மேல் தளத்திலிருந்து பார்த்த மதுவுக்கு, முந்தின நாள் அவன் தனக்கு அலைபேசியில் அழைத்தது இப்பொழுது நினைவிற்கு வர,
“இப்ச் நேத்து பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டு, திரும்ப கூப்பிடுறேன்னு கூப்பிடவும் இல்லை என்ன நினைச்சிருப்பாரு” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவள்,
நேரிலேயே அவனிடம் பேசி விடலாம் என்று எண்ணி, தன்னுடன் இருந்த ஜுவாலாவிடம் இப்பொழுது வந்து விடுவதாக கூறிவிட்டு, எஸ்கலேட்டரை நோக்கி வந்த மது, ஒற்றை ஃபிலீட்டில் விடப்பட்டிருந்த புடவையின் முந்தானை, அதில் மாட்டியது கூட தெரியாது அவசர அவசரமாக எஸ்கலேட்டரில் கால் வைத்தாள்.
சேஃப்டி பின்னின் பாதுகாப்பில் ஜாக்கெட்டுடன் இணைந்திருந்த முந்தானை, நகரும் படிக்கட்டில் சிக்கியதில் ஜாக்கெட்டை கிழித்துக்கொண்டு உள்ளே இறங்கும் நேரம், சுதாரித்த பெண்ணவளோ தானும் அதனுடன் போராடிக் கொண்டிருக்க, வலிய கரம் ஒன்று வேகமாக அவள் தோள் தொட்டு, ஜாக்கெட்டில் இருந்த சேஃப்டி பின்னை விடுவித்தது.
பின்பு அடுத்த நொடி அவளின் இடை தழுவி, புடவையை உருவி கொண்டிருக்க, அந்த வலிய கரத்திற்கு சொந்தக்காரனான ஆதித்யாவைத்தான் மதுமதி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் ஆதித்யா மதுமதியை பார்க்கவில்லை, தன் கரத்தில் மீதம் இருந்த புடவையை அவன் வீசியதும் அது எஸ்கலேட்டரின் உள்புறம் சென்று விட, மொத்த கூட்டமும் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, மதுமதியின் கலங்கிய விழிகளை இப்பொழுது ஏறிட்டுப் பார்த்தவன்,
” ஸ்டெப்ஸ் பாத்து வா” என்று பற்களை கடித்த படி கூற, ஆனால் அவளோ கலங்கிய விழிகளுடன் அவனது விழிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, இறங்கும் நேரம் நெருங்கியும் அவள் அசையாது இருப்பதை கவனித்த ஆதித்யாவோ, நொடி தாமதிக்காது அப்படியே அவளது இடைப்பற்றி தூக்கியவன் வேகமாக அவளுடன் அருகில் இருந்த டிரையல் ரூமிற்குள் நுழைந்தான்.
” அப்படியே நிக்கிற என்னதான் நினைச்சிட்டு இருக்க? ஹான், எப்பவும் உன் பின்னாடியே வந்துட்டு இருக்க முடியாது, கொஞ்சம் கூட கவனம் இல்லை. ஃபோன் பண்ணினா பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ற.” கர்ஜிக்கும் குரலில் பற்களை கடித்த படி வினவினான் ஆதித்யா.
ஆனால் மது மதியோ அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, அவளது நிறைந்த கண்களில் இருந்த கண்ணீர் துளிகளோ, அவளது இமையைத் தொட்டு கீழே விழ காத்திருக்க, ஒரு வார்த்தை பேசாது அப்படியே சிலையென நின்றாள் மதுமதி.
புடவை இன்றி அவன் முன்னால் தான் நிற்கும் கோலம் கூட அவள் கருத்தில் பதியவில்லை, தன்னை மறைத்துக் கொள்ளும் முயற்சி கூட செய்யாது இதயம் வேகமாக துடிக்க, தற்காலிகமாக செயலிழந்த புத்தியுடன் பெண்ணவள் நின்றிருந்தாள்.
அவள் இப்பொழுது இருக்கும் கோலத்தை, வேறு யாராக இருந்தாலும் சபலத்துடன் பார்த்திருக்க கூடும், ஆனால் ஆதித்யாவின் விழிகள் அவளது விழிகளைத் தாண்டி எங்கும் செல்லவில்லை.
அஞ்சிய அஞ்சன விழிகளும், அரிமா அவனின் கனல்விழிகளும் நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டிருந்தன. ஆதித்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இவ்வளவு நடந்து இருக்கின்றது அவ்வளவு திட்டுகிறான், ஆனால் ஒரு வார்த்தை பேசாது தன்னையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பவளிடம் இதற்கு மேல் கோபம் கொள்ள விரும்பாதவன், வேகமாக தான் அணிந்திருந்த மேல்கோட்டை கழட்டி அவளிடம் நீட்டினான்.
பின்பு அவளது நடுங்கும் கரத்தை பார்த்து என்ன நினைத்தானோ தானே அதை வாங்கி முன்புறமாக அவள் மேல் தன் விரல் நகம் கூட படாது போர்த்தி விட, இப்பொழுது அவளது கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.
இவ்வளவு நேரம் கழித்து இப்பொழுதுதான் நிதானத்திற்கு வந்திருப்பாள் போலும் தலையை தாழ்த்திக் கொண்டு இன்னும் அழுதாள்.
அவனோ அவளையும் அவளது கண்ணீரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, வெயிட் பண்ணு என்றவன், வேகமாக டிரையல் ரூமை விட்டு வெளியேறி, சில நிமிடத்தில் கையில் ஒரு ஆடையுடன் உள்ளே வந்து அதை அவளிடம் நீட்டி,
“சீக்கிரம் வியர் பண்ணு ” என்றவன் தலையை கோதியபடி திரும்பி நின்றுக்கொள்ள, சில நிமிடத்தில் அவன் வாங்கி வந்த மேக்சியை தலை வழியாக அணிந்து கொண்டவள் தன் குரலை செருமவும், திரும்பி அவள் முகம் பார்த்தவன்,
“நேத்து ஏன் திரும்ப கால் பண்ணல” நிதானமாக வினவினான்.
“மறந்துட்டேன்” உள்ளே சென்ற குரலில் மெதுவாக கூறினாள்.
“இங்க பாரு கொஞ்ச நாளைக்கு நீ எங்கையும் வெளிய போகாத. ஒவ்வொரு தடவையும் உனக்கு என்ன ஆகுதுன்னு நான் பாத்துட்டே இருக்க முடியாது. சோ கவனமா இரு. எல்லாம் கொஞ்ச நாள் தான் சீக்கிரம் சரி பண்ணி விடுவேன்.” என்க, எந்த கேள்வியும் கேட்காது சரி என்றாள்.
“சரி நீ மட்டுமா வந்த “
” இல்ல வீட்ல எல்லாரும் வந்திருக்காங்க, மேல ஷாப்பிங் பண்ணிட்டு இருக்காங்க, நான் உங்கள பார்த்ததும் பேசலாம்னு நினைச்சு வந்தேன் அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு” தன் கீழ் அதரத்தை பற்களால் கடித்துக் கொண்டு அழுகையை அடக்கியபடி குழந்தை போல அவள் கூறவும், ஆதித்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட,
“இட்ஸ் ஓகே மதி இட்ஸ் ஹப்பன்ஸ், சரி தனியா நிக்காத அவங்க கூட போ” என்று ஆதித்யா தன்மையான குரலில் கூறவும், அவளும் வெளியேறிய சமயம்,
” ஒரு நிமிஷம் மதி” என்ற ஆதித்யா, சற்றென்று அவள் பின்னால் மண்டியிட்டு, கொஞ்ச தூரத்திற்கு மேலே தூக்கி இருந்த அவள் மேக்சியை கீழ் நோக்கி இழுத்து விட்டு சரி செய்தவன், அப்படியே எழுந்து அவள் முன்பு வந்து அவளது கைகளில் இருந்த தனது கோட்டை எடுக்க வர, அது புரியாது அவளோ பயத்தில் அவனது கோட்டை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரண்டு அடி பின்னால் நகரவும்,
“என் கோர்ட் மா” என்றவன் அவளது கையில் இருந்த கோட்டை வாங்கியிருக்க, இப்பொழுது அவளது கரம் நடுங்குவது அவன் கண்ணுக்கு நன்கு தெரிந்தது.
ஒரு சில வினாடிகள் அவள் விழிகளையே பார்த்திருந்த ஆதி, சட்டென்று அவளை நெருங்கி,
” மறுபடியும் சொல்றேன் கொஞ்ச நாளைக்கு கவனமா இரு மதி, வெளில போகாத” என்று தனது கோர்ட்டை அவள் மீது போர்த்தி விட்டபடி கூறி, பயத்தில் குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த அவளது மென் கரங்களை எடுத்து அவள் அணிந்திருக்கும் தனது கோட்டின் இரு பாக்கெட்டுகளிலும் நுழைத்து விட்டு, அவள் சொல்லாமலே அந்நேரம் அவளுக்கு தேவைப்பட்ட பாதுகாப்பு உணர்வை கொடுத்துவிட்டே அங்கிருந்து சென்றிருந்தான் ஆதித்யா.
Sema 😍
Thanks dear❤️