அரிமா – 8

4.6
(8)

மயக்கம் மெது மெதுவாக தெளிய தெளிய, சிரமத்துடன் தன் இமைகளை பிரித்து பார்த்தாள் மதுமதி. பார்வையில் தெளிவில்லை, அனைத்தும் மங்கலாய் தெரிந்தது.

 சுற்றியும் ஒரே இருள். காற்றில் ஜன்னல் வேறு மாறி மாறி அடித்துக்கொள்ள, இரும்பு ஜன்னலில்

‘ டமார் ‘ என்னும் சத்தம் அவளது மெல்லிய இதயத்தை நடுங்க செய்தது.

‘ எங்கே இருக்கிறோம்?’ பயத்தில் அவள் மனம் நடுங்கியது .

மிகுந்த சிரமத்துடன் எழ முயற்சித்தாள் முடியவில்லை.

 அப்பொழுது தான், தன் கைகளும் கால்களும் தான் அமர்ந்திருக்கும் நாற்காலியுடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவளது மூளை எச்சரித்து, அவள் கடத்தப்பட்டிருப்பதை நினைவுக்கு கொண்டு வர, தன்னை கடத்தும் பொழுது சந்தியா தன்னை காப்பாற்ற முயற்சித்ததை எண்ணியவளுக்கு சந்தியாவின் கதறல் ஒலி மனதை பிசைய ஆரம்பிக்க,

மது கத்தினாள்! கதறினாள்!! ஆனால் அவளுடைய எதிர் ஒலியே, அவளை எக்காளமாய் அச்சுறுத்தியது .

‘ எப்படியாவது தப்பித்து விடு ‘ மூளை எச்சரிக்க, கைகளையும்  கால்களையும் அசைத்து விடுவித்து கொள்ள முயற்சித்தவள், விடுபட முடியாது போகவும்  கதறி அழுதாள் .

” ப்ளீஸ் யாரவது வாங்க, இளா அண்ணா அர்ஜுன் வாங்க வந்து கூட்டிட்டு போங்க பயமா இருக்கு ” தன்னால் முடிந்தவரை கத்தினாள் மது.

காற்றில் துர்நாற்றத்துடன் கலந்து வந்த ரத்த வாடை அவளை மேலும் அச்சுறுத்தி, தான் இருக்கும் இடத்தின் கொடூரத்தை உணர்த்தியது.

 முடிந்தளவு பலத்தை கூட்டி மேலும் கதறினாள். ஈரம் இன்றி நா உலர்ந்தது தான் மிச்சம். அவளது கதறலுக்கு எந்த பயனும் கிடைக்க வில்லை. பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

 அப்பொழுது அழுத்தமான காலடிகளுடன் அவளை சில பேர் நெருங்குவதை பார்த்தவளின் கண்கள் அச்சத்தில் தானாய் விரிந்தது. தாடியும் சிவந்திருந்த கண்களும் என்று பார்ப்பதற்கு கொடூரமாக காட்சியளித்தவர்களை பார்த்தவளுக்கு பயத்தில் தேகம் நடுங்க துவங்க, நடுக்கத்துடனே அமர்ந்திருந்தாள் மதுமதி.

@@@@@@

வீட்டில் ப்ரீத்தாவோ தன் நிலையை எண்ணி ஒரு பாடு அழுது தீர்த்தவர், எங்கோ தன் அண்ணன் மகள் பத்திரமாக இருக்கிறாள் என்று ஒருவழியாக மனதை தேற்றிகொண்டவர்,

பின்பு திருமணம் முடிந்ததும் மதுவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வந்து, தன் அண்ணிக்கு வாக்கு கொடுத்தது போல மதுமதிக்கு சீக்கிரம் இன்னும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று, அவளது தற்போதைய நிலையையும், இறைவனின் கணக்கையும் அறியாது  உறுதி கொண்டார் ப்ரீத்தா.

@@@@@

அதேநேரம் பயத்தில் அமர்ந்திருந்த  மதுவை நெருங்கிய கயவர்கள், அவளை சுற்றி நிற்க. அவர்களுக்கு நடுவே வந்த சிவ குருவிடம் மது,

” ப்ளீஸ் என்னை விட்டுடுங்க நான் கெஞ்சி கேட்கிறேன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உங்கள பத்தி வெளியில யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் ” அழுதபடி கெஞ்சினாள். ஆனால் பதிலுக்கு எக்காளமாக சிரித்தவன் ,

” என்ன விடணுமா?? விடுறதுக்கா டி உன்னை பிடிச்சு வச்சிருக்கேன். அவனும் வரட்டும் அவன் கண்ணு முன்னாடி உன்னை போடுறேன், அப்புறம் அவனை போடுறேன் ” என மதுவின் இரு கன்னங்களையும் தன் நகம் பட அழுத்தி பிடித்த சிவ குரு,

” நல்லா கத்து நீ கத்துறது அவனுக்கு கேட்கணும். டேய் பச்ச தண்ணி கூட கொடுக்காதீங்க டா. இப்படியே சாக போடுங்க.”என தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான்.

அப்பொழுது அந்த அடியாட்களுக்கு தலைவன் போல் இருந்த ஒருவன் சிவகுருவை தனியே அழைத்து,

” குரு பாய் ஆதித்யாவை பழிவாங்க தான இந்த பொண்ணை கடத்திருக்கோம் “

” ஆமா அதுக்கு என்ன “

” இல்லை சும்மா இவளை கடத்திவச்சு இப்படி பார்த்துட்டே இருக்குறதுக்கு..”

” இருக்கிறதுக்கு.. ” குருவின் பார்வை அவனுக்கு எதிரே இருப்பவன் மேலே நிலைத்திருந்தது.

” குட்டி வேற சும்மா கும்முன்னு இருக்கு. செஞ்சி வச்ச சிலை மாதிரி இருக்கா பாய். தினமும் ஒவ்வொரு பொண்ணோட இருப்பீங்க இன்னைக்கு இவ கூட இருங்க “

” அப்படியே போட்டேனா. அடுத்தவன் பொண்டாட்டி கூட போய் ச்ச.. “

” பாய் பழிவாங்கணும்ன்னு வந்துட்டா பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க கூடாது. அவன் நம்ம ஐயாவை போடும் பொழுது பாவம் புண்ணியம் பார்த்தானா என்ன? நாம மட்டும் ஏன் பார்க்கணும்?அதுவும் இல்லாம அவன் என்ன இவளுக்கு தாலியா கட்டிட்டான். எப்படியும் இவளை போட போறோம். சாக போறவளுக்கு கற்பு எதுக்கு? இன்னொரு விஷயம் பாய் இவ உயிர் போனா துடிக்கிறது விட இவ மானம் போனா தான் ஆதித்யா ரொம்ப துடிப்பான். ஆதித்யாவை துடிக்க துடிக்க பழிவாங்கணும்ன்னா இது தான் பாய் சரியான சந்தர்போம். கொஞ்சம் யோசிங்க பாய் ” என அவன் ஏத்தி விட, சிவகுருவும் யோசித்தான்.

யோசனையின் முடிவில் மதுவின் அழகில் மதி மயங்கிய சிவகுரு பின்விளைவுகளை யோசிக்காமல் இச்சையுடன் மதுவை நோக்கினான் .

” கட்டை அவிழ்த்து விட்டுட்டு எல்லாரையும் போக சொல்லுடா, நீயும் போ டா “என குரு கட்டளையிட, அவனது கட்டளைக்கு இணங்க, மதுவின் கட்டுகள் அவிழ்க்க பட, அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே கிளம்பினர் .

அவர்கள் சென்றதும் தான் இருக்கும் திசை நோக்கி நடந்து வந்த சிவ குருவை பார்த்து மதுவுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது .

” சும்மா சொல்ல கூடாது அழகா தான் இருக்க ” என்றவன் தன் சட்டையின் பொத்தானை கழற்றியபடி வக்கிர பார்வையுடன் மதுவை  நெருங்கினான். அவனது பேச்சில் இன்னும் பயந்த மது,

” ப்ளீஸ் என்னை விட்ருங்க “என்றபடி பின்னால் சென்றாள்.

” விடுறேன் அதுக்கு முன்னாடி என்னை கொஞ்சம் சந்தோஷப்படுத்து ” என்றவன் வேகமாக மதுவை நெருங்கி தன்னோடு பிடித்து கொண்டான்.

அவனிடம் இருந்து தன் பெண்மையை காப்பாற்றிக்கொள்ள மது எவ்வளவோ திமிரினாள்,  அடித்தாள் , ஆனால் அதையெல்லாம் தூசியை போல உதறியவன். அவளை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டான் .

“என் அத்தை பையன் போலீஸ் அவனுக்கு தெரிஞ்சா உன்னை சும்மா விட மாட்டான், என்னை விடு டா “

” யாரு டி அது புதுசா! ஓ ரெண்டு பேரா. அப்போ மூணாவதா என்னையும் சேர்த்துக்கோ ” என்றவன் நக்கலாக சிரிக்க மதுவோ,

 ” என்னை விடுடா ” என்று அவனை தன் காலால் மிதிக்க, கோபமுற்ற சிவகுரு பற்களை கடித்துக் கொண்டு கெட்ட வார்த்தையால் அவளை திட்டிய படி, அவளுக்கு ஓங்கி அறைய, கீழே விழுந்த மதுவின் கண்களில் கண்ணீர் புரண்டோடியது.

வேறு வழி தெரியாது அவனது காலை பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். ஆனால் சிவகுரு தன் காலால் அவளை உதறி தள்ளி, அவளது கேசத்தை இறுக்கமாக பற்றி தூக்கினான்.

ஒருகையால் கொத்தாக அவளது முடியை இறுக்கமாக பிடித்திருந்தவன், மறு கையில் மதுபான பாட்டிலை எடுத்து பற்களால் அதை கடித்து திறந்தான். பின்பு சிவப்பு திரவத்தை ஒரே மூச்சில் தன் வாயில் சரித்து, மது கெஞ்ச கெஞ்ச அவளிடம் அத்துமீறினான் .

அவமானத்தில் கூனி குறுகி நின்றவள் முடிந்தளவு பலம் கூட்டி அவனை எதிர்த்தாள். பின்பு ஒரு கட்டத்தில் அத்துமீறிய அவனது கரத்தை கடித்து விட்டு வேகமாக ஓட முயல, வெறி பிடித்தவன் போல கத்திய சிவகுருவோ வேகமாக அவள் முன்னே வந்து, அவள் சுதாகரிப்பதற்குள் சட்டென தன் கரம் நீட்டி அவளது மேல்புற ஆடையை பிடித்து இழுத்திருக்க, அவன் இழுத்த வேகத்தில் அவள் ஆடையின் முன்புறம் அப்படியே கிழிந்துவிட, பெண்ணவள் அலறி விட்டாள்.

அவளுக்கு மாலில் ஆதித்யா சொன்னது இப்பொழுது நினைவிற்கு வர, அவன் பெயர் தெரியாததால் அவனை எண்ணியபடியே,

“ப்ளீஸ் வந்திருங்க” என்று வாய்விட்டே கதறியவள், அந்த நிலையிலும் சிவகுருவுடன் போராடினாள்.

ஆனாலும் அவளைவிட மூணு மடங்கு உடம்பை வளர்த்து வைத்துக் கொண்டு போதையின் பிடியில் வெறி பிடித்தவன் போல நிற்கும் அவன் முன்னால் சிறு ஆம்பல் மலரால் என்ன செய்ய முடியும். தன் இயலாமையை எண்ணி அழுதவள் உதவி வேண்டி கத்தி கூச்சலிட்டாள்.

” என்னை ஏதும் பண்ணாதீங்க போக விடுங்க ப்ளீஸ் ” மூடி இருக்கும் அறையில் இருந்து தப்பிக்க வழி தெரியாது மீண்டும் அவனிடம் கெஞ்சினாள் .

 அதையெல்லாம் பொருட்படுத்தாத சிவகுருவோ,

” என்னையே அடிச்சிருக்க உன்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் டி” என்றவன் மதுவை கீழே தள்ளி, அவளின் மீதி ஆடையில் கைவைக்க நடுங்கி போனவள், கையில் கிடைத்த பாட்டிலால் சிவ குருவின் தலையில் ஓங்கி அடித்திருக்க, அவ்வளவு தான் தன் தலையில் இருந்து வலியும் ரத்தத்தை தன் கையால் தொட்டு பார்த்தவன் வலியில் கத்தியபடி, மீண்டும் மதுவுக்கு அறைந்திருக்க, அவளோ உடலில் வலு இழந்த போதிலும், அவனோடு போராடி கொண்டிருக்க, அந்த கயவனோ அவளுக்கென்று பாதுக்காப்பாக மிச்சமிருந்த  ஆடையையும் பறித்து விட்டு அவளை ஸ்பரிசிக்க முனைந்த நொடி,

 ‘ தடார் ‘ என்னும் சத்தத்துடன் கதவை திறந்து கொண்டு, அங்கே வந்த ஆதித்யா,

” ஹவ் டேர் யு. உனக்கு எவ்வளவு தைரியம் டா ” என கர்ஜித்தபடி சிவகுருவை நெருங்கியவன் , அவன் சுதாரிப்பதற்குள் தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியால் மதுவை ஸ்பரிசிக்க துடித்த அவனின் விரல்கள் நோக்கி வீசியிருக்க, இப்பொழுது சிவகுரு வலியில் அலறிவிட்டான்.

குருதி வழிய சிவகுரு கதறி கொண்டிருக்கவும் தான் மது, கையில் குருதி படிந்த கத்தியுடன் வேட்டையாடும் அரிமாவாய் நின்றிருந்த ஆதித்யாவை பார்க்க, மதுவுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை, செல்லவிருந்த உயிர் வந்தது போல அவை யாவும் பெண்ணவளுக்கு  செத்துப் பிழைத்த நொடிகள்.

 இப்பொழுது தன்னை பார்த்தவள், தன்னை மறைக்க வழி தேட,  ஆனால் ஆதித்யாவின்  பார்வையோ சிவகுருவை விட்டு சிறிதளவும் அகல வில்லை.

கடுங் கோபத்தில் சிவப்பேறிய விழிகளுடன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக  தன் முன்பு கொலைவெறியுடன் காட்சியளித்த ஆதித்யாவை கண்டதும் சிவ குருக்கு அந்த வலியிலும் ஆக்ரோஷம் வர,

அதன் பிறகு நடந்தது அனைத்தும் பயங்கரமே. சிவ குரு எழ எழ அடித்து தாக்கினான் ஆத்தியா. இறுதியாக தன் பிஸ்டலை எடுத்து சிவ குருவின் தலைக்கு குறிவைத்த ஆதித்யாவை சிவ குருவின் அடி ஆட்களில் ஒருவன் ஓடிவந்து தள்ளிவிட, ஆதித்யா தடுமாறி கீழே விழுந்தான். அப்பொழுது ஆதித்யா கீழே விழுந்த நேரத்தில் சிவ குரு தன் அடியாளுடன் தப்பி ஓடிவிட,

” விட மாட்டேன் சிவா ஐ வில் கில் யு ” என்று கர்ஜித்த ஆதித்யா. அடிபட்ட சிங்கம் போல் தரையில் இருந்து சீறி எழுந்தவன். பழிவாங்கும் வெறியுடன் உரக்க கத்தினான்.

ஆதித்யாவுக்கு சுத்தமாக நிதானம் இல்லை, ஆனாலும் தன்னை நிதான படுத்திக் கொள்ள பெரு முயற்சி எடுத்தவன், இப்பொழுது சிவ குரு பின்னால் செல்வது முட்டாள்தனம் என்பதை உணர்ந்து, மதுவை எப்படியாவது இங்கிருந்து பத்திரமாக அழைத்து செல்வது ஒன்றே இப்போதைக்கு சரியான முடிவு என்பதை கருத்தில் கொண்டு தன் கோபத்தை விடுத்து. மதுவை அழைத்தான் .

அங்கே நடப்பதை காண பயந்த மது தனது கிழிந்த ஆடைகளால் தன்னை மறைத்தபடி, தன் கண்களை மூடி கொண்டு ஒரு ஓரமாய் மறைந்திருக்க, ஆதித்யாவின் சத்தத்தில் கண் திறந்தவளுக்கு தான் இருக்கும் கோலம் கண்டு அழுகை தான் வந்தது.

” மதி வா, வீ ஹவ் டூ கோ, போனவங்க கண்டிப்பா ஆளுங்களோட திரும்பி வருவாங்க, சீக்கிரமா நாம கிளம்பனும் ” என்றான் ஆதித்யா.

” சாரி என்னால வர முடியாது நீங்க போங்க ” பயந்தபடி கூறினாள் மது.

” என்ன நான் போகணுமா ?? நான் போறதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தேன். இப்போ நீ வரியா இல்லை நான் அங்க வரட்டுமா ” எரிச்சலுடன் கேட்டான்.

” நோ ப்ளீஸ் என் நிலைமைய புருஞ்சிக்கோங்க. என்கிட்ட ட்ரெஸ் இல்லை என்னால உங்களை ஃபேஸ் பண்ண முடியாது ” வார்த்தைகள் வர மறுக்க அழுது கொண்டே கூறினாள் .

அவளது நிலையை புரிந்து கொண்ட ஆதித்யா தன் மேல் சட்டையை கழற்றி அவள் இருக்கும் இடம் நோக்கி நீட்டினான்,

” சீக்கிரம் வா மதி ” இப்பொழுது பொறுமையாக கூறினான் .

மறுக்காமல் வாங்கிகொண்டவள்,

” இது ஷார்ட்டா இருக்கு. ப்ளீஸ் நீங்க போங்க, என்னால உங்க உயிர்க்கும் ஆபத்து, நீங்க அர்ஜுன்க்கு கால் பண்ணுங்க அவனால மட்டும் தான் நமக்கு ஹெல்ப் பண்ண முடியும் ” விவரம் புரியாது சொல்ல, அர்ஜுன் என்ற பெயரை கேட்டதுமே ஆதித்யாவுக்கு சுர்ரென்று ஏறியது.

” அர்ஜுன் வர்ற வரைக்கும் இங்க இருக்க முடியாது மதி “பற்களை கடித்தபடி கூறினான் ஆதித்யா.

” நீங்க எப்படி இங்க வந்தீங்க ?? நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும். ?? அந்த ஆளு பேரு சிவ குருன்னு சொன்னீங்க உங்களுக்கு அவரை தெரியுமா ?? என்னை சுத்தி என்ன நடக்குது ?? அன்னைக்கு நைட் அந்த கொலைகாரன் கிட்ட இருந்து காப்பாத்துனீங்க. அப்புறம்  அந்த ஆக்சிடென்ட்ல இருந்து காப்பாத்துனீங்க, மார்னிங் எஸ்கலேட்டர்ல ,  இப்போ இவன்கிட்ட இருந்து. இவங்க எல்லாம் யாரு ??? முதல்ல நீங்க யாரு ?? மால்ல வச்சு என்னை ஏன் வெளிய வர வேண்டாம் சொன்னீங்க. ” மனதில் எழுந்த கேள்விகளை படபடப்புடன் வினவினாள்.

அவளது கேள்விகளில் கடுப்பான ஆதித்யா தன் இடதுகையால் தலையை அழுந்த கோதி மூச்சை இழுத்து விட்டு,

” இப்போ உனக்கு பதில் வேணுமா இல்லை இங்க இருந்து தப்பிக்கணுமா ” எரிச்சலுடன் கேட்டான் .

” —————————–“பதில் சொல்லாமல் மௌனமானாள் மது.

 அவள் மௌனமானதும்,

” மதி என்னை நம்புறீங்களா? டூ யு ட்ரஸ்ட் மீ ” ஆதித்யா ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான். சில நொடிகள் கழித்து அவன் சட்டையை அணிந்து கொண்டவள் அதை கீழே இழுத்து இழுத்து விட்டபடி தயங்கி தயங்கி வெளியே வந்தாள்.

 மதுவின் மனமோ, ‘ யார் நீ ? எனக்கு பிரச்சனை வரும் பொழுதெல்லாம் நீ தான் என் முன்னாடி வந்து நிக்கிற ?? எப்படி ?? ‘ என்று தனக்குத் தானே கேட்டுக்கொள்ள, பெண்ணவளிடம் அதற்கு  பதில் இல்லை, அவன் விடை தெரியாத புதிராகவே இருக்க, குழம்பி தான் தவித்தாள். ஆனாலும் மனம் ஏனோ அவனை நம்ப சொல்ல, அவன் அவ்வாறு கேட்ட மாத்திரம் அவன் முன்னே வந்து நின்றுவிட்டாள் மது.

 மதுவின் தயக்கத்தை உள்வாங்கிய ஆதித்யா,

 ” மதி நான் இப்போ உனக்கு ஒரு சத்தியம் பண்றேன். என் பார்வை உன் கண்ணை தாண்டி போகாது. நம்பி வா” எனத் தன்  கரம் நீட்டி, அவள் விழி நோக்கி கூறியவனின் பார்வை தவறி கூட அலைபாயவில்லை.

மதுவும் ஆதித்யாவின் ஆண்மையான குரலுக்கு கட்டுப்பட்டவள் போல தன் கரத்தை அவனிடம் கொடுத்தவள், மறுநொடி கேள்விகள் இன்றி அவனுடன் சென்றாள்.

 

– அரிமா வருவான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!