உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.7
(13)

அத்தியாயம் 21

மண்டபம் முழுவதும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது.

நுழைவு வாசலில் இருந்து ஹால் வரை, மல்லிகை, ஆர்க்கிட், ரோஜா மலர்கள் மணம் பரப்பில் கொண்டு இருந்தன..

சிறிய விளக்குகள் மலர் வளையங்களில் பின்னி, மின்மினி போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.

ஹாலில்  இசை  “சிறு சிறு காதல் பாடல்கள் போன்ற மெலோடியான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.

விருந்தினர்கள் வரிசையாக வந்து,  பரிசுகள், ஆசீர்வாதங்கள் வழங்கினர்.

ஒவ்வொரு விருந்தினரையும் அரவிந்த், பிரகதி – புன்னகையுடன், நன்றியுடன் வரவேற்றனர்.

தேவகி எதிலுமே கலந்து கொள்ளவில்லை… ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்…

அபிஷேக் திவ்யா இருவருக்கும் தான் மிகுந்த அலைச்சல்… அவளுக்கு உடம்பெல்லாம் ஒரு வலி.. இருந்தாலும் அவள் தானே செய்ய வேண்டும்…அவளுடைய அம்மாவும் அக்காவும் அவ்வப்போது உதவி செய்வார்கள்…

அபிஷேக் தந்தையிடம் அப்பா எல்லாரும் அம்மா ஏன் இப்படி இருக்காங்க ன்னு கேக்கறாங்க?

கல்யாணம் முடியட்டும் அவளுக்கு இருக்கு என்று வேலையை பார்க்க சென்று விட்டார்..

விருந்தினர்கள் மெல்ல குறைந்தார்கள்.

மேடையில்  சில நெருங்கியவர்கள் மட்டுமே.

அரவிந்த், பிரகதி  – கைகளை இணைத்து, விளக்குகளால் மின்னும் ஹாலை விட்டு வெளியே நடந்தார்கள்.

வெளியே சில ஃபோட்டோக்கள் எடுத்தனர்…மனதில்இனிய சிரிப்புகள்.

சோர்வா இருக்கா என்று கேட்க ? 

அவளோ இல்லை என்று தலையாட்டினாள்..

நாளைக்கு நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் தெரியுமா?

நான் ரொம்ப ஹேப்பி தெரியுமா? என்றான்..

எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்றாள் ‌…

நான் எப்போதும் உன் கூட இருப்பேன் டி என்று அவளை மென்மையாய் அணைத்து விடுவித்தான்…

அடுத்த நாள் காலை பரபரப்பாக இருந்தது..

பிரகதிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது..

இடையிடையே அபிஷேக் திவ்யாவை கவனித்துக்கொள்ள… அவளுக்கு இதமாக இருந்தது…

நம்ம கல்யாணம் நியாபகம் இருக்கா அபி?

ஏன் இல்லாம.. நம்ம ஃப்ரெண்ட்ஸ் பண்ண அலப்பறை இருக்கே.. செம ஜாலி வைப் ஆ இருந்துச்சு என்றான்…

பாப்பா எங்க டி?

அவ அக்கா கூட இருக்கா..

சரி நான் போய் ஃபுட் என்னாச்சுன்னு பார்ககறேன்…

முகூர்த்தம் அப்ப ஸ்டேஜ் வரேன் என்று சென்று விட்டான்…

கலைப்பு தான்; ஆனாலும் அவனுக்கு பிடித்த தம்பியின் திருமணம் ஆயிற்றே.. சந்தோஷமாக வேலைகளை செய்தான்… 

மெல்லிய நாதஸ்வர இசை,.

“மாங்கல்யம் தந்துனானேனா…” என்ற மெட்டில் இசை எழும்புகிறது.

மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்க ஐயர் கூற..

அரவிந்த், தன் அண்ணனுடன் மெதுவாக மேடையை நோக்கி வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தான்.

ஐயர் கூறும் சடங்குகள் எல்லாம் செய்தான்…

பொண்ண அழைச்சிட்டு வாங்க என்று கூற,

பிரகதி தன் அம்மாவின் கையை பிடித்து மெதுவாக மேடையை நோக்கி வந்தாள்.

புடவை சத்தம் சரசரக்க, நகையின் ஒளி, முகத்தில் சிறிய புன்னகை கலந்த வெட்கம்.. ஆனாலும் முகத்தில் சிறிய வருத்தம் இருந்தது..

அவள் ஒரு தேவதை போல இருந்தாள்..

அவளைக் காணும் கணம் – சின்ன புன்னகை, சின்ன சிரிப்பு.

கண்கள் அசைவின்றி அவளையே பார்த்துக்கொண்டிருந்தன…

இருவரும் மேடையில் சந்திக்கிறார்கள்.

அவள் மெல்ல தலை குனிந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு அவன் அருகே அமர்ந்தாள்..

ஹாய்…” என்றான்.

அவளும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டாள்..

ஐயர் கூறிய சடங்குகளை எல்லாம் இருவரும் செய்தனர்..

கண்கள் பேச, இரு மனமும் இசை பாடும் அந்த தருணம் 

“நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற ஒரு மெளன உறுதி மட்டும் இருந்தது.

“என் பயத்தை புரிந்துவிட்டாரே… ஆனாலும் நான் சொல்லவே இல்லை.நாம  உணர்வதை உணர்ந்தவர்தான் உண்மையான துணை.”

பிரகதி சிரித்தாள். ஆனால் அந்த சிரிப்பில்,

பெரும் பதட்டம் கரைந்ததும்,

புதிய உறவுக்குள் ஏற்பட்ட நம்பிக்கையும் இருந்தது…

முகூர்த்த நேரம் நெருங்க அரவிந்திடம் தாலி கொடுக்கப்பட்டது..

தாலி கட்டும் போது அவளைப் பார்க்க 

அவளோ இமைகளை அசைக்காமல் அவனையே பார்த்தாள்.. அவளது முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம்.

அந்த ஒரு நிமிடம், 

புகைப்படமாக்கப்பட்டது ..

அவனும் அவள் கழுத்தில் தாலி கட்டி முடித்தான்.. அவள் அழுது விட்டாள்..

அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து நாங இருக்கேன் டி என்று அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டான்…

அடுத்தடுத்த சடங்குகள் எல்லாம் செய்தனர்..

பெண்ணை தாரை வார்த்து கொடுக்க அருணாச்சலம் ஜோதியையே நிற்க வைத்தனர் கண்ணன் தம்பதிகள்..

பெற்றது இவர்கள் ஆனாலும் வளர்ந்தது பெரியவர்களிடம் தானே… பிரகதி உட்பட பெற்றவர்கள் நால்வரும் அழுது விட்டனர்…

இந்த சடங்குக்கும் தேவகி வர மாட்டேன் என்று சொல்லி விட்டதால்  அபிஷேக் மற்றும் திவ்யா தான் தாரை வார்ப்பு பெற்றனர்…

சிறிது நேரம் போட்டோக்களை எடுத்து விட்டு.. மதியம் மண்டபத்திலேயே விருந்து முடிந்து அரவிந்த் வீட்டிற்கு பிரகதியை அனுப்பி வைத்தனர்…

கிளம்பும் போது அப்படி ஒரு அழுகை அவளுக்கு…

அவர்களை பிடித்துக்கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்….

தந்தையின் கையைப் பிடித்து கொண்டும் விடவே இல்லை….

அவளது மனதில் இரண்டு உணர்வுகள் கலந்திருந்தன –

ஒரு பக்கம் பெற்றோரிடம் இருந்து பிரிவின் வலி, இன்னொரு பக்கம் புதிய உறவுகளின் ஆர்வம்.

அவள் அவனது முகத்தைப் பார்த்து ஒரு மெதுவான புன்னகை கொடுத்தாள்…

அந்த புன்னகை, அவளது கண்களில் இன்னும் இருந்த கண்ணீரை மறைக்க முயன்றது.‌..

பிரகதி நல்ல நேரத்துல வீட்டுக்கு போகணும் மா.. நீ போயிட்டு வா.. நாங்க நாளைக்கு வரோம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்…

வரும் வழியில் எல்லாம் அழுதுகொண்டே தான் வந்தாள்..

அவனும் எவ்வளோ சமாதானம் செய்தும் அவளுக்கு அழுகை நிற்கவில்லை…

வீடும் வந்து சேர்ந்தது..

ஆரத்தி எடுத்து பின் உள்ளே நுழைந்து… சாமி அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து..

ஹாலில் அமர்ந்து கொண்டாள்…

அரவிந்த் அவளருகில்…

அவன் அவளது முகத்தைப் பார்த்து ஒரு மெதுவான புன்னகை கொடுத்தான்…

அந்த புன்னகை, அவளது கண்களில் இன்னும் இருந்த கண்ணீரை மறைக்க முயன்றது…

அந்த நேரம், அவளது மனதில் இரண்டு உணர்வுகள் கலந்திருந்தன ..

ஒரு பக்கம் பெற்றோரிடம் இருந்து பிரிவின் வலி, இன்னொரு பக்கம் புதிய உறவுகளின் ஆரம்பம்..

தேவியை தவிர அனைவரும் அவளுடன் நன்றாக பேசினர்..

பாலும் பழமும் கொடுத்தனர்…

பிரகதி நீ கீழே ரூம் கொஞ்ச நேரம் யூஸ் பண்ணிக்கோ…

அரவிந்த் நீ மேலே போய் ரெஸ்ட் எடு என்று அனுப்பி வைத்தார் ஒரு உறவு முறையில் இருந்த பெண்…

திவ்யா பிரகதிய உங்க ரூம்க்கு கூட்டிட்டு போ..‌இங்க எல்லாரும் இருக்காங்க .. அவளுக்கு சங்கடமா இருக்கும் என்று மேலே அழைத்துச் செல்ல; இதை அறியாத அரவிந்த் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டு கீழே வந்தான்..

என்ன டா கீழ இருக்க.. கொஞ்சம் நேரம் தூங்கி எழும்பு என்று அபிஷேக் கூற ..‌

இல்ல டா பரவால்ல நான் இங்கயே இருக்கேன் என்று அந்த ரூம் வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான்…

அபிக்கு புரிந்து விட்டது.. அவனும் உண்மையை சொல்ல வில்லை.. சிரித்துக் கொண்டே கடைக்கு ஏதோ வாங்க சென்று விட்டான்…

அவளோ சிறிது நேரம் தூங்கி எழுந்தாள்…

ஏதோ எடுக்க வேண்டும் என்று அந்த அறைக்குள் சென்றான்.. அவளை காணவில்லை… உறவினர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்..

என்ன அரவிந்த் பிரகதி அப்பவே மேல் ரூம் போயிட்டா‌ என்று அவனை கிண்டல் செய்ய அவனோ அசடு வழிந்து கொண்டு அபிஷேகை பார்த்து ‘ ஏண்டா இப்படி.. அப்பவே சொல்லிருந்தா நான் மேல் ரூம் போய் இருப்பேன் என்றான் “

டேய் டேய் வாட்டர்ஃபால்ஸ கன்ட்ரோல் பண்ணு..

இன்னும் அரை மணி நேரம் கழித்து தான் புரிந்ததா என்று சொன்னான்…

ஹான் ஓகே தான் டா..

அவ என்ன செய்யறான்னு தான் யோசிச்சேன் ; வேற எதுவும் இல்லை டா என்றான் சமாளிக்க…

நீ யாருன்னு எனக்கு தெரியும் டா?

வந்து சாப்பிடு என்றான்…பிரகதி என்று ஆரம்பிக்க அது

திவ்யா பாத்துக்குவா.. நீ சாப்பிட்டுவிட்டு ரெடி ஆகு…

அரவிந்த் முகத்தில் தௌசன்ட் வாட்ஸ் பல்பு எரித்தது …

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!