உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.7
(19)

அத்தியாயம் -5:

  அரவிந்த் மாடி ஏறிச் சென்றான்.. மேலே மூன்று அறைகள் இருந்தது. அங்கே வெளியே செல்லும் வழியின் கதவை திறந்து விட்டார் ஜோதி..

அங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட பால்கனி இருந்தது..

டெரஸ் கார்டன் அமைக்கப்பட்டிருந்தது.. சன் ரூஃப் அமைத்து அழகாக மெயின்டெயின் செய்து இருந்தார்கள்..

அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்கான செட்டப் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் தள்ளி மரத்தினால் ஆன ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது…

வாவ் ஆன்ட்டி உங்க வீடு அழகா இருக்கு.. நல்லா மெயின்டைன் பண்றீங்க என்றான்..

ஜோதி மெலிதாக புன்னகைத்தார்..

நீங்க இங்க இருங்க நான் பிரகதிய அழைச்சிட்டு வரேன் என்று கூறிச் சென்றார்‌…

பிரகதி மாடியறையில் இருந்த ஒரு ரூமில் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்..

பிரகதி கண்ணு மாப்பிள்ளை வெயிட் பண்ணிட்டு இருக்காரு ப்ளீஸ் எனக்காக போய் பேசு பயப்படாத டென்ஷன் ஆகாத என்று கூறினார்..

அவளோ ஐயோ பெரியம்மா ப்ளீஸ் நான் பேசல எனக்கு பயமா இருக்கு நான் பேச மாட்டேன் என்று சிணுங்கி கொண்டிருந்தாள்..

நான் டோர் கிட்ட வெயிட் பண்றேன் போய் பேசு.. நீ பேசக்கூட வேணாம்.. அவர் ஏதாவது கேட்டா பதில் மட்டும் சொல்லிட்டு வா போதும் என்றார்..

அவன் அங்கே இருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அவள் மெல்ல நடந்து வந்து அவன் அருகில் நின்றாள்..

  வா இங்க வந்து இரு என்று அவனுக்கு அருகே அமரச் சொன்னான்..

இல்லைங்க பரவால்ல நான் நினைக்கிறேன்..

ஓஓஓஓகே சரி நீ வரலைன்னா என்ன நான் உன் பக்கத்துல வரேன் என்று அருகில் வந்தான்…

அவள் சற்று பின்னால் நகர்ந்தாள்…

உங்க வீடு அழகா இருக்கு என்று கூற தேங்க்ஸ் என்றாள் மெல்லிய குரலில்..

வாவ் இந்த பட்டாம்பூச்சி கூட அழகா இருக்கு என்றான்..

அவள் நிமிர்ந்து பார்த்து அதை தேட …

இங்க இருக்கு பாரு என்று அவள் படபடக்கும் விழிகளை சுட்டிக்காட்ட..

அவள் கன்னம் சிவந்தது…

ஐயோ இவர் என்ன இப்படி பேசுறாங்க என்று மைண்ட் வாய்ஸ் வேறு அவளைப் பார்த்து சிரித்தது..

ஹெலோ என்றான் அவளைப் பார்த்து ‌..

சொல்லுங்க என்றாள் அவள்..

இப்படியே தலை குனிஞ்சு நின்னா நான் யாரு கிட்ட பேசறது…

அப்படி இல்லைங்க என்றாள்…

எனக்கு உன்னை அந்த மேரேஜ் ஃபங்சன்ல பார்க்கும் போதே ரொம்ப பிடிச்சிருந்தது…

அன்னைக்கு ப்ளூ சேரி ல இருந்த தான்…

செம அழகு நீ.. அப்பவே அம்மா கிட்ட சொல்லிட்டேன் நீ தான் எனக்குன்னு…

அவளுக்கு ஆச்சரியம்…

நான் உங்கள அந்த ஃபங்சன்ல பார்க்லயே என்க..

ஆனா நான் உன்ன பார்த்தேன்…

அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு என்ன பிடிச்சிருக்கா? அவன் கேட்க…

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை…

திரும்பி பார்த்தாள் ஜோதியை காணவில்லை..

ஆஹா என்ன கோர்த்து விட்டு ஓடிட்டாங்க போல என்று மனதுக்குள் நினைத்தாள்…

இப்படியே சைலண்டா இருந்ததா யாரு கிட்ட பேசறது‌‌‌?

உனக்கு என்ன பிடிக்கவில்லையா?

என் கிட்ட கேட்க ஏதும் இல்லையா?

அவளிடம் பதில் இல்லை…

பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல அதனால வெட்கம் விட்டு போகல என்று வடிவேலு ஸ்டைலில் பேச அவள் சிரித்து விட்டாள்..

சிரிச்சா அழகா இருக்கு டி என்றான் உரிமையாக..

என்ன டி சொல்ரிங்க என்றாள்?

கல்யாணம் பண்ணா பொண்டாட்டிய அப்படி தானே சொல்லனும் என்றான்..

என்னது பொண்டாட்டியா? என்று விழி விரித்துக் கேட்க?

அப்ப இல்லையா என்று அவன் சொல்ல..

உங்கள பத்தி எனக்கு என்ன தெரியும்? இல்ல என்ன பத்தி தான் உங்களுக்கு தெரியுமா? என்று கூச்சம் மறந்து அவனிடம் பேச ஆரம்பித்தாள் அவளை அறியாமலே…

அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு

தான் உங்க  வீட்ல எல்லாருக்கும் என்ன பிடிச்சிருக்கு ‌.

என் வீட்டில உன்ன பிடிச்சிருக்கு…

அவ்ளோ தான் இதுக்கு மேல என்ன வேணும்?

தாலி கட்ட நான் உன்ன பார்த்த அன்னைக்கே ரெடி..

தாலி வாங்க நீ ரெடி..

ஆசிர்வாதம் பண்ண பெரியவங்க இருக்காங்க எதுக்கு வெயிட் செய்யனும்? என்றான்.‌

எனக்கு பிடிக்கணுமே என்றாள்  அவசரமாக..

ஏன் எனக்கு என்ன குறைச்சல்? என்றான்?

அது  குறைச்சல் எல்லாம் இல்லை…. என்று தயங்க…

எதாவது கேட்கணும் அப்படின்னா கேளு மா என்றான்? சிறிது நேரம் தயங்கிய.. பிறகு

நீங்க இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பொண்ணு பார்க்க வரீங்களா என்று கேட்டாள்?

ஆமா..அப்போ உனக்கு என்றான்?

உங்களோட சேர்த்து 4 என்றாள்..

அப்படியா அந்த கதையை கொஞ்சம் சொல்லு கேட்போம் என்றான்..

அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே என்னது கதையா? என் சோகம் எல்லாம் உங்களுக்கு கதையா என்று முகத்தை சுருக்கி கேட்டாள்..

அப்புறம் டைம் பாஸ் ஆக வேணாமா சும்மா சொல்லு என்றான்..

சரி சரி சொல்றேன் .

ஃபர்ஸ்ட் டைம் பொண்ணு பாக்க வந்தப்போ கொஞ்சம் ஆர்வமா தான் இருந்துச்சு.. அவங்க வந்து இன்னைக்கு கரண்ட் போயிடுச்சு.. அதனால சகுனம் சரியில்லன்னு சொல்லிட்டு என்ன வேணாம்னு சொல்லிட்டாங்க…

அப்புறம் செகண்ட் டைம் வந்து பாத்துட்டு போயிட்டாங்க. அப்புறம் அவங்க ரிலேட்டிவ்ஸ்லயே நல்ல இடம் வந்ததுன்னு மறுபடியும் வேணான்னு சொல்லிட்டாங்க..

இப்ப 4th டைம் நீங்க என்றாள் சோகமாக…

ஒவ்வொரு தடவையும் மேக்கப் போட்டுட்டு வந்து எல்லாரும் முன்னாடியும் நின்னுட்டு போகாது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?

போட்டோல பார்த்தாவே தெரியாதா.. இதுல நேர்ல வந்து பார்த்துட்டு அப்புறம் வேண்டாம்னு  சொல்லிட்டு போறது…

ரொம்ப டூ மச்சாபண்றாங்க என்றாள் சிறிது கோபத்தை காட்டி…

அவள் பேசுவதை வைத்து அவள் மனநிலையை புரிந்து கொண்டான்…

அப்புறம் மூணாவதா வந்தவங்கள பத்தி சொல்லவே இல்லையே?

அ..அஅஅது அவங்கள பத்தி வேணாம்.. நான் சொல்ல மாட்டேன் என்றான்…

 சரி அதை விடு என்ன பத்தி நீ எதுவுமே கேட்கலையே?

சரி சொல்லுங்க என்றாள்..

என் பேரு அரவிந்த்..

****அந்த காலேஜ்ல சிவில் இன்ஜினியரிங் கம்ப்ளீட் செய்தேன்…

இப்போ ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நாள்ல நானே தனியா ப்ராஜெக்ட் எடுத்து செய்யப் போறேன் என்றான்…

இன்னும் கொஞ்சம் இருவரும் பேசிவிட்டு இருந்தார்கள்..

அரவிந்த் அவளிடம் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு உன்னை மிஸ் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன். நானும் மத்தவங்க மாதிரி டைம் பாஸ் பண்ணிட்டு போக வந்திருக்கேன் நினைக்காத.. ரியலி ஐ லைக் யு சோ மச் என்றான்…

உன் பதிலுக்கு தாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றாள்..

அவன் பேசியதை வைத்து அவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் தான் இருந்தது.. இருந்தாலும் என்ன பதில் சொல்வது என்று தயக்கமாக இருந்தது…

பிறகு அவளே எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு… நான் கல்யாணம் ஆகி போயிட்டா ரொம்ப வருத்தப் படுவாங்க, தனியா ஃபீல் பண்ணுவாங்க என்றாள்?

நமக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா உன் பேமிலி என் ஃபேமிலி எல்லாமே நமக்கு ஒன்னு தான்…

உனக்காக எல்லாமே மேனேஜ் பண்றேன் என்று கூறினான்.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது ஃபங்ஷன் கொஞ்ச நேரம் பார்த்ததுக்கா எனக்காக இவ்வளவு தூரம் வந்து என்கிட்ட இப்படி பேசிட்டு இருக்காரு என்று யோசித்தாள்..

பிறகு அவளுடைய சம்மதத்தையும் ஒரு வழியாக தெரிவித்து விட்டாள்..

அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது… அவன் ஆசைப்பட்ட மாதிரியே அவளும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்…

பிறகு இருவரும் கீழே இறங்கி வந்தார்கள்..

அரவிந்த் அபிஷேகிடம் போய் அமர”என்னடா அந்த பொண்ணு கிட்ட பேசினியா”அந்த பொண்ணு கூட பிடிச்சிருக்கா என்று கேட்டான்.. ப்ரோ நான் பேசி ஓகே ஆகாம இருக்குமா என்று சிரித்துக் கொண்டே கூற அவன் தம்பியை மெதுவாக அணைத்து விடுவித்தான்… அவன் முகத்தை பார்த்தே தேவகிக்கும் சுகுமாரனுக்கும் புரிந்தது…

இங்கு கவுசல்யாவுக்கு மகளின் முகத்தை பார்த்து அவ்வளவு சந்தோஷமாக இருந்தது… பிரகதியும் அவளுடைய சம்மதத்தை தெரிவித்தாள்…

பின் இருவரையும் பூஜை அறையின் நிற்க வைத்து இருவருக்கும் பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்…

திடீரென்று அரவிந்த் வெளியே சென்றான்.. அவளுக்கு புரியவே இல்லை ஏன் இவ்வளவு நேரம் நல்லா தானே திடீர்னு என்ன ஆச்சு என்று யோசித்தாள்…

பிறகு கடையில் வாங்கிய கவரை எடுத்து வந்தான்… அரவிந்த் வீட்டில் இருக்க புரிந்து விட்டது மெலிதாக சிரித்துக் கொண்டார்கள்..

பிரகதி திஸ் இஸ் ஃபார் யூ என்று அவளிடம் நீட்ட .

அவளுக்கு வாங்குவதா வேண்டாமா என்று தயக்கம்.

ஜோதியையும் கௌசல்யாவையும் பார்த்தாள் அவர்கள் பார்வையில் சம்மதம் சொல்ல அந்த கிப்ட்டை வாங்கிக் கொண்டாள்.. அந்த கவருக்குள் ஒரு பார்சல் இருந்தது.. அது பிரித்துப்பார்த்தாள்.

டிசைனர் கண்ணாடி வளையல்கள் அழகாக இருந்தது… அதைப் பார்த்ததும் அவளுக்கு முகம் எல்லாம் வெட்கம்… யாரையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை..

அவளுடைய ரியாக்ஷனை

பார்த்துக் கொண்டு அரவிந்த் மெலிதாக சிரித்தான்..

அனைவருக்கும் சந்தோஷமான தருணமாக இருந்தது,…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!