எதாவது கேட்கணும் அப்படின்னா கேளு மா என்றான்? சிறிது நேரம் தயங்கிய.. பிறகு
நீங்க இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பொண்ணு பார்க்க வரீங்களா என்று கேட்டாள்?
ஆமா..அப்போ உனக்கு என்றான்?
உங்களோட சேர்த்து 4 என்றாள்..
அப்படியா அந்த கதையை கொஞ்சம் சொல்லு கேட்போம் என்றான்..
அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே என்னது கதையா? என் சோகம் எல்லாம் உங்களுக்கு கதையா என்று முகத்தை சுருக்கி கேட்டாள்..
அப்புறம் டைம் பாஸ் ஆக வேணாமா சும்மா சொல்லு என்றான்..
சரி சரி சொல்றேன் .
ஃபர்ஸ்ட் டைம் பொண்ணு பாக்க வந்தப்போ கொஞ்சம் ஆர்வமா தான் இருந்துச்சு.. அவங்க வந்து இன்னைக்கு கரண்ட் போயிடுச்சு.. அதனால சகுனம் சரியில்லன்னு சொல்லிட்டு என்ன வேணாம்னு சொல்லிட்டாங்க…
அப்புறம் செகண்ட் டைம் வந்து பாத்துட்டு போயிட்டாங்க. அப்புறம் அவங்க ரிலேட்டிவ்ஸ்லயே நல்ல இடம் வந்ததுன்னு மறுபடியும் வேணான்னு சொல்லிட்டாங்க..
இப்ப 4th டைம் நீங்க என்றாள் சோகமாக…
ஒவ்வொரு தடவையும் மேக்கப் போட்டுட்டு வந்து எல்லாரும் முன்னாடியும் நின்னுட்டு போகாது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?
இப்போ ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நாள்ல நானே தனியா ப்ராஜெக்ட் எடுத்து செய்யப் போறேன் என்றான்…
இன்னும் கொஞ்சம் இருவரும் பேசிவிட்டு இருந்தார்கள்..
அரவிந்த் அவளிடம் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு உன்னை மிஸ் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன். நானும் மத்தவங்க மாதிரி டைம் பாஸ் பண்ணிட்டு போக வந்திருக்கேன் நினைக்காத.. ரியலி ஐ லைக் யு சோ மச் என்றான்…
உன் பதிலுக்கு தாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றாள்..
அவன் பேசியதை வைத்து அவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் தான் இருந்தது.. இருந்தாலும் என்ன பதில் சொல்வது என்று தயக்கமாக இருந்தது…
பிறகு அவளே எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு… நான் கல்யாணம் ஆகி போயிட்டா ரொம்ப வருத்தப் படுவாங்க, தனியா ஃபீல் பண்ணுவாங்க என்றாள்?
நமக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா உன் பேமிலி என் ஃபேமிலி எல்லாமே நமக்கு ஒன்னு தான்…
உனக்காக எல்லாமே மேனேஜ் பண்றேன் என்று கூறினான்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது ஃபங்ஷன் கொஞ்ச நேரம் பார்த்ததுக்கா எனக்காக இவ்வளவு தூரம் வந்து என்கிட்ட இப்படி பேசிட்டு இருக்காரு என்று யோசித்தாள்..
பிறகு அவளுடைய சம்மதத்தையும் ஒரு வழியாக தெரிவித்து விட்டாள்..
அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது… அவன் ஆசைப்பட்ட மாதிரியே அவளும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்…
பிறகு இருவரும் கீழே இறங்கி வந்தார்கள்..
அரவிந்த் அபிஷேகிடம் போய் அமர”என்னடா அந்த பொண்ணு கிட்ட பேசினியா”அந்த பொண்ணு கூட பிடிச்சிருக்கா என்று கேட்டான்.. ப்ரோ நான் பேசி ஓகே ஆகாம இருக்குமா என்று சிரித்துக் கொண்டே கூற அவன் தம்பியை மெதுவாக அணைத்து விடுவித்தான்… அவன் முகத்தை பார்த்தே தேவகிக்கும் சுகுமாரனுக்கும் புரிந்தது…
இங்கு கவுசல்யாவுக்கு மகளின் முகத்தை பார்த்து அவ்வளவு சந்தோஷமாக இருந்தது… பிரகதியும் அவளுடைய சம்மதத்தை தெரிவித்தாள்…
பின் இருவரையும் பூஜை அறையின் நிற்க வைத்து இருவருக்கும் பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்…
திடீரென்று அரவிந்த் வெளியே சென்றான்.. அவளுக்கு புரியவே இல்லை ஏன் இவ்வளவு நேரம் நல்லா தானே திடீர்னு என்ன ஆச்சு என்று யோசித்தாள்…
பிறகு கடையில் வாங்கிய கவரை எடுத்து வந்தான்… அரவிந்த் வீட்டில் இருக்க புரிந்து விட்டது மெலிதாக சிரித்துக் கொண்டார்கள்..
பிரகதி திஸ் இஸ் ஃபார் யூ என்று அவளிடம் நீட்ட .
அவளுக்கு வாங்குவதா வேண்டாமா என்று தயக்கம்.
ஜோதியையும் கௌசல்யாவையும் பார்த்தாள் அவர்கள் பார்வையில் சம்மதம் சொல்ல அந்த கிப்ட்டை வாங்கிக் கொண்டாள்.. அந்த கவருக்குள் ஒரு பார்சல் இருந்தது.. அது பிரித்துப்பார்த்தாள்.
டிசைனர் கண்ணாடி வளையல்கள் அழகாக இருந்தது… அதைப் பார்த்ததும் அவளுக்கு முகம் எல்லாம் வெட்கம்… யாரையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை..