அத்தியாயம் 6
இரு வீட்டு பெரியவர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்துக்கொண்டு இருந்தார்கள்…
கல்யாணம் எங்கு செய்ய வேண்டும், நிச்சயம் எங்கு செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்..
அருணாச்சலம் அவர் மனைவியிடம் காலண்டர் எடுத்து வரச் சொன்னார்..
பிறகு வரும் வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் நிச்சயம் வைப்பதாக முடிவுசெய்தார்கள்..
இன்னும் மூன்று மாதத்திற்குப் பிறகு
ஐப்பசியில் திருமணம் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்..
பிறகு வீட்டில் அனைவருக்கும் கூறினார்கள்..
அனைவருக்கும் சந்தோஷம்..
அதிலும் பிரகதி வீட்டினருக்கு அவ்வளவு மகிழ்ச்சி…
மதியம் உணவு கடையில் ஏற்ப்பாடு செய்தார்கள்..
ஹாலில் அனைவரும் இருந்தார்கள்.
அம்மா நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணவா அம்மாவிடம் கேட்க..
இப்ப வேண்டாம் டி. அப்புறம் சேஞ்ச் பண்ணு என்றார்..
அவள் ரூமுக்கு சென்றதை அரவிந்த் பார்த்துக்கொண்டு இருந்தான்..
இவ நம்மள கண்டுக்கவே இல்லயே.. எப்படியிவது பேச ஒரு சான்ஸ் கிரியேட் பண்ணணும் என நினைத்தான்..
டேய் அண்ணா வீட்ட சுத்தி பார்க்கணும்ன்னு சொல்லு என்றான்..
ஏதும் ப்ளான் பண்றயா என்றான் அபிஷேக் ..மேல் ஃப்ளோர் நல்லா இருந்துச்சுன்னு சொன்னேன். பார்கலானா போடா என்றான்..
அவர்களை பார்த்து கண்ணன் வாங்க வீட்ட சுத்தி காட்றேன் என அழைத்தார்…
கீழே ரெண்டு பெட் ரூம். மேல் ஃப்ளோர்ல மூணு ரூம்..
டெரெஸ் கார்டன் இருக்கு என்று கூறினார் .
பிரகதி அறைக்கு அழைத்துச் சென்றார்…
அழகாக இருந்தது..
அரவிந்த் உடனே அவன் அம்மாவிடம், எப்படியாவது அவள மேல் கூட்டிட்டு வர. அது உன் பொறுப்பு என்று கூறி எதுவும் நடக்காதது போல் மேலே சென்று விட்டான்..
இந்த பையனோட என்னோட முடியல என்று நினைத்துக்கொண்டே , திவ்யா பாப்பா உள்ளயே தூங்கட்டும் நீயும் பிரகதி கூட போய் மேல பார்த்துட்டு வா என்றார்..
என்ன அத்தை கொளுந்தனார் ப்ளானா என்று கேட்க அவரும் ஆமாம் என்று தலையாட்டி விட்டு அங்கே இருந்த ஜோதி கௌசல்யாவுடன் பேச்சில் கலந்து கொண்டார்..
மேலே சென்ற பெரியவர்கள் அனைவரும் கீழே வந்து விட, சிறியவர்கள் நான்கு பேரும் மேலே பேசிக் கொண்டிருந்தனர்…
டேய் அபி ஃபோட்டோ எடு என்றான் சைகையில்..
சரி சரி நில்லு எடுக்கிறேன் என்று கூற.. தனியா இல்லை டா எங்கள ஜோடியா என்றான் அசடு வழிய..
அபிஷேக் பிரகதியிடம்” கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கலாம் மெமரிஸ்காக என்றான்”. அவளும் சரி என்று கூறி திவ்யாவுடன் நின்றாள்..
அரவிந்த் அண்ணியிடம் நாங்க ரெண்டு பேரும் என்றான்..
அவளோ சிரித்து விட்டாள்..
நாங்களும் இந்த சிட்டுவேஷன் தாண்டி தான் வந்தோம் என்றாள் சிரித்துக்கொண்டே.. முதலில் அருகில் நின்று தான் எடுத்தனர். பிறகு போகப் போக அவள் கையைப் பிடித்து கொண்டும், தோளில் கை போட்டும் , விதவிதமாக எடுத்தனர்.. அவளுக்கோ கூச்சம் ஒருபுறம், பதட்டம் ஒருபுறம்.
அவள் கையை விடவே இல்லை..
கையை உருவினாள்.. உடும்புப் பிடி பிடித்தான்…
டேய் இது எல்லாம் ஓவர் டா.. அவங்களுக்கு கம்ஃபோர்டபிலா இல்லை போல என்றான் அபிஷேக் …
அவள் முகத்தை பார்த்து அப்படியா என்று கேட்க .
இல்லை என கூறுவாள் என்று நினைத்து…. அவளோ ஆமா என்றாள்..
திவ்யா சத்தமாவே சிரித்து விட்டாள்..
அண்ணி நோ டேமேஜ் என்றான்…
ஐயோட இவனோட முடியல.. இவன் என்ன இவ்ளோ க்ளோஸா இருக்கான்.. இத மட்டும் கௌசி பார்த்துச்சன்னா அவளோ தான் என்று ஏகப்பட்ட மைண்ட் வாய்ஸ் வேறு..
அவனோ அவளை ஒரு வழி பண்ணி விட்டான்..
ஊஞ்சலில் அவனுடன் அமர மாட்டேன் என்றவளை வலுக்கட்டாயமாக அவனுடன் அமர வைத்து தோளில் கை போட , எதுக்கு இப்படி பண்றீங்க ப்ளீஸ் கைய எடுங்க ஒரு மாதிரி இருக்கு என்றாள்.
இதை எல்லாமே அபி ஃபோட்டோ எடுத்துக் கொண்டு இருந்தான்.. அவளைப் பார்த்து கண் அடிக்க அவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.. அவளோ இந்த ஃபோட்டோ எல்லாம் அம்மா கிட்ட காட்டாதிங்க என்று சொல்லிக்கொண்டே செல்ல..அவள் கையை பிடித்துக் கொண்டவன் விடவே இல்லை..
ப்ளீஸ் அம்மா பார்த்தா திட்டுவாங்க நான் போறேன் என்று ஓடியே விட்டாள்..
டேய் இது எல்லாம் தப்பு டா பிரகதி பயப்படராங்க.. ரொம்ப ஓவரா போற என்றான் அபிஷேக்..
சும்மா விளையாட்டுக்கு தான் என்று சொல்ல
கொழுத்தனாறே நெஜமாவே பிரகதிய ஃபங்சன்ல தான் பாத்தீங்களா இல்ல அதுக்கும் முன்னாடியே லவ் ஏதும் என்று தொடங்க..
சும்மா இரு திவ்யா நீயும் கீழே போ என்று அவளை அனுப்பி விட…
இவருக்கு நான் ஏதாவது பேசினா பொறுக்காது என்று சொல்லிக் கொண்டு கீழே இறங்கினாள்
டேய் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணு.. அவங்க வீட்டில ஸ்டிரிக்ட் என்றான்..
சரி டா வா போலாம் என்று
அண்ணன் தம்பி இவரும் கீழே வந்தனர்…
பிரகதி ரூமுக்குள் வேகமாக ஓடிப் போய் கதவை அடைத்துக் கொண்டு கதவில் சாய்ந்து கொண்டே அவள் கையை பார்க்க மேனி முழுவதும் சிலிர்ப்பு… பிறகு முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்…
அதற்குள் சாப்பாடும் வந்து விட கௌசி நீ எல்லாம் எடுத்து வை நான் இப்ப வரேன் என்று பிரகதி அறைக்குள் நுழைந்து அவளைப் பார்க்க அவள் முகத்தை மூடி அமர்ந்து இருக்க அவள் அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டார்..
பிரகதி என்று அழைக்க அவளோ வெட்கத்துடன் ஜோதியை அணைத்துக்கொண்டாள்..
உனக்கு அரவிந்த பிடிச்சிருக்கு தானே ?.
அவள் தலை நிமிராமல் ஆமாம் என்று தலையாட்டினாள்..
பேசவே மாட்டேன்னு சொன்ன.. ஆனா இப்போ என்ன ஆச்சு..
என் பொண்ணுக்கு வெட்கம் கூட வருதா என்று அவரும் கிண்டல் செய்ய மேலும் கன்னம் சிவந்தது..
சரி சரி ஒரு நல்ல டிரஸ் ஆ சேஞ்ச் பண்ணிட்டு நான் சாப்பிடலாம் என்று கூறிச் சென்றார்..
மா சாப்பிடும்போது பிரகதி என் பக்கத்தில் வரணும் நீ இப்ப சொல்லு என் அரவிந்த் கூற…
டேய் டேய் அவங்க வீட்ல இதுக்கெல்லாம் ஒத்துக்குவாங்களா தெரியலையே என்க
அதுல எனக்கு தெரியாது நீ தான் ஏதாவது செய்யணும்..
இவர்கள் பேசுவதை கேட்ட
திவ்யாவோ அத்தை நிஜமாவே அரவிந்துக்கு இந்த பொண்ணு தெரியாதா.. இவர் பண்றத பாத்தா அப்படி தெரியல..
எனக்கு அதே தான் டவுட் என்று கூறினார் தேவகி…
அப்போது அங்கு பிரகதி உடை மாற்றிக் கொண்டு வர தேவகி பிரகதி என் பக்கத்துல வா என்று அவர் அருகில் இருந்த இருக்கையை காண்பித்தார்.
அவர் அருகே சென்று அமர்ந்த உடன் தான் பார்த்தாள்..
அரவிந்துக்கும் தேவகிக்கும் நடுவில் அமர்ந்திருந்தாள்.. இவன்
பக்கத்துல யா என்று யோசிக்க தேவகி அவள் கையைப் பிடித்து அமர வைத்தார்.. அவளால் மறுக்க முடியவில்லை.
எப்படியோ ஒரு வழியாக அவன் குறும்புகளுக்கு மத்தியில் சாப்பிட்டு முடித்து அவள் அறைக்கு ஓடி சென்று விட்டாள்..
நாங்க நிச்சயத்துக்கு டிரஸ் பர்சேஸ் பண்ண கோயம்புத்தூர் தான் போறோம்…
இப்பவே பண்ணிட்டா மறுபடியும் அவிநாசி போயிட்டு இங்க வர வேண்டியது இல்ல..
அதனால நீங்களும் வரிங்களா ஒரே வேலையா சேர்ந்து போய் எடுத்துட்டு வந்துரலாம் என்று சுகுமார் கேட்டார்..
அருணாச்சலம் அவர் குடும்பத்தினரை ஒருமுறை பார்த்துவிட்டு சரி என்று ஒத்துக் கொண்டார்.. நாங்க எப்படியும் பர்ச்சேஸ் பண்ண போகணும் தானே .
அது எல்லாரும் சேர்ந்து போய் பர்சேஸ் பண்ணலாம் என்றார்..
அதைக் கேட்டதும் ஒருத்தனுக்கு சுவிட்ச் போட்டது போல பளிச்சென்று இருந்தது.. அது நம்ம ஹீரோ அரவிந்த் தான்…
எல்லாரும் காரில் போய்க்கொண்டு இருந்தார்கள்… ஒருத்தனுக்கு மட்டும் கோவம் கலந்த முகத்துடன் காரில் அமர்ந்து இருந்தான்…
என்ன ரீசன்னு அடுத்து எப்பில பாக்கலாம்