ஒரு வழியாக அனைவரும் நிச்சயத்திற்கு உடைகள் எடுக்க இரு குடும்பமும் கிளம்பினர்…
அப்போது ஜோதிடம் நக்ஷ் பேபி நன்றாக ஒட்டிக்கொண்டாள்.. அதனால் ஜோதியுடனே அவள் கடைக்கு வருவதாக இருந்தது.
அம்மா நம்ம வீட்டு பாப்பா மட்டும் அவங்க கூட போகுதில்ல அவங்க வீட்டு பொண்ணு நம்ம கூட வர சொல்லு என்று கேட்டான்..
அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது..
டேய் என்னடா சொல்ற?
அவ குழந்தை டா அதனால அவங்க கூட போறா நம்ம எப்படிடா பிரதிய நம்ம கூட கூப்பிட முடியும் என்று தேவகியே அவனை திட்டிக் கொண்டிருந்தார்…
ப்ரோ நான் கேட்டதுல தப்பு இருக்கா? நீயே சொல்லு என்று அரவிந்த் கேட்க?
நீ கேக்குறது பூராவுமே தப்புதான் என்று அவன் நக்கலாக பதில் சொன்னான்.
சுகுமாரனுக்கு பொறுமை போய்விட்டது…
இவனுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இன்னைக்கு தான் பொண்ணு பாத்து இருக்கோம்..
அதுக்குள்ள இவன் இப்படி பண்ணிட்டு இருந்தா அவங்க பேமிலியிலேயே இவனை வேண்டாம்னு சொல்லிடுவாங்க..
அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லு என்று மனைவியிடம் சீறினார்…
கொழுந்தனரே நீங்க பேசுறது கேட்டு மாமாவே டென்ஷன் ஆயிட்டாங்க இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க அப்புறம் மாமாவே இந்த பிளான கேன்சல் பண்ணிடுவார் என்று திவ்யா கூறினாள்..
டேய் மானத்தை வாங்காத அதான் நம்ம கூட கடைக்கு தான வராங்க அப்புறம் என்னடா கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு..
மேரேஜுக்கு அப்புறம் நீ ஆச்சு உன் பொண்டாட்டி ஆச்சு.. என்னமோ பண்ணுங்க யாரும் கேட்க மாட்டாங்க என்று தேவகி அவனுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தார்…
அவனுக்கு சரியான கடுப்பு கார்ல கூட வந்தா அவளுக்கு பிடிச்சது பிடிக்காதது ஏதாவது தெரிஞ்சிக்கலாம் பிளான் போட்டா இவங்களை இப்படி பண்றாங்க.. நீயும் ஓவராத்தான் போற என்று அவன் மனசாட்சி அவனின் தலையில் தட்டியது…
எல்லாரும் இப்படி சொன்னவுடன் நான் கோபத்தோடு காரில் ஏறிக்கொண்டான்..
கௌசல்யா ஜோதிடம் என்ன அக்கா அந்த பையன் இவ்ளோ பாஸ்டா இருக்காங்க..
கௌசல்யாவுக்கு மனதுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என்று பயமாக இருந்தது…
அது மாப்பிள்ளைக்கு நம்ம பொண்ணு ரொம்ப பிடிச்சிருச்சு போல அதனால அப்படி நடந்துக்கிறாங்க ஜோதி கூறினார்..
வீட்டு ஆண்களுக்கு எதையும் வெளிப்படையாக பேசவும் முடியவில்லை..
அதனாலேயே பொறுமையாக அபிஷேக்கிடம் மாப்பிள்ளைக்கு பிரகதி புடிச்சிருக்கு சந்தோஷம் தான் ஆனால் கொஞ்சம் கல்யாணம் வரைக்கும் என்று ஏதோ கூற வருவதற்குள்..
எனக்கு புரியுது அங்கிள் நான் அவன்கிட்ட சொல்றேன் என்று கூறினான்..
அதற்குப்பின் பெரிய கடை வீதி சென்று ஆடை எடுக்கலாம் என முடிவு செய்து பிரகதி வீட்டினர் ஒரு காரிலும்
அரவிந்த் வீட்டினர் இன்னொரு காரிலும் சென்றனர் ....
போகும் வழியில் கௌசல்யா பிரகதியிடம் ” அவங்க கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு … கடைக்கு போயிட்டு எங்க கூடவே இரு மாப்ள வந்தா அழகா பேசு.. உன்கிட்ட தான் நாங்க சொல்ல முடியும் அவங்க கிட்ட சொல்ல முடியாது அதனால புரிஞ்சு நடந்துக்கோ என்று கூறினார்…
பிரகதிக்கு கடுப்பாக இருந்தது..
நான் என்ன பண்ண அவன் வந்து இப்படி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை… இன்னும் வந்து பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிடுவாங்க நெனச்சேன்.. ஆனா இப்ப எங்கேஜ்மென்ட் டிரஸ் எடுக்குற வரைக்கும் போயிடுச்சு…
நல்ல வேலை போட்டோ எடுக்கும் போது இந்த அம்மா கூட இல்ல.. அது மட்டும் பார்த்து இருந்தா நான் இன்னைக்கு அவ்வளவுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்…
சரி மா நான் என்ன பண்றது அவங்க தானே வந்து பேசுறாங்க எப்படி அவாய்ட் பண்றதுன்னு தெரியல எந்த சலித்துக் கொண்டே கூறினாள்…
பிறகு அனைவரும் அமைதியாக வந்தனர்… ஜோதியும் பிரகதியும் நட்சத்திராவோடு பேசிக்கொண்டே அமர்ந்திருந்தனர்..
அந்த காரிலோ “ஏன்மா இவன் இப்படி பண்றான்.. அந்த பொண்ணோட அப்பா கூப்பிட்டு சொல்ற அளவுக்கு இவன் நடந்திருக்கான் என்று சொன்னதும் போதும்”
சுகுமாருக்கு கோவம் வந்தது…
அவர் தேவகியை முறைத்துக் கொண்டே வந்தார்…
என்ன எதுக்கு முறைக்கிறீங்க அவன் செஞ்சான் அதுக்கு நான் என்ன பண்ண முடியும் இவன் இப்படி செய்வான் நான் என்ன எதிர்பார்த்தனா என்று அவரும் சிடுதெடுத்தார்…
இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன் எல்லாரும் இப்படி பேசுறீங்க சரி எனக்கு என்கேஜ்மென்ட் முடியற வரைக்கும் நான் அவ கூட பேச மாட்டேன் என்றான்..
ஒரு அரை மணி நேரம் பயணத்திற்கு பிறகு ஒரு பிரபலமான துணிக்கடை சென்றனர்..
பட்டு செக்ஷனுக்கு சென்று புடவை ஆராய்ந்து கொண்டிருந்தனர் பெண்கள் அனைவரும்…
அரவிந்த் அவள் இருக்கும் பக்கம் திரும்பவே இல்லை..
சிடுசிடுவென இருந்தான்…
அவள் திரும்பிப் பார்க்க அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்..
உன்கிட்ட இவ்ளோ சைலன்ட் எதிர்பார்க்கல டா என்று அவன் தோளில் தட்டிக் கொண்டு அபிஷேக் அவனிடம் பேசிக் கொண்டிருந்தான்..
நா ரொம்ப கோவமா இருக்கேன் என்று ஒரு வரியில் முடித்துக் கொண்டான் அரவிந்த்…
பிறகு அபிஷேக் திவ்யாவுடன் சேர்ந்து அவளுக்கு புடவை பார்த்துக் கொண்டிருந்தான்..
கொழுந்தனார் கிட்ட இவ்வளவு சைலன்ட் எதிர்பார்க்கவில்லை என்று திவ்யா கூற..
ஆமா நானும் தான் எதிர்பார்க்கல.. பட் அந்த பொண்ணு வீட்டுல கொஞ்சம் பயப்படுறாங்க அதனால தான் பேச வேண்டாம்னு சொன்னேன் இவன் தப்பா நினைச்சுக்கிட்டான் என்றான் அபிஷேக்..
சரி விடுங்க அவர் கொஞ்ச நேரத்துல ஓகே ஆயிடுவார் என்று சொல்ல ..
ம்ம் என்று தலையாட்டிக் கொண்டு புடவை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்..
உனக்கு செலக்ட் பண்ணிட்ட தான.. பிரகதி கிட்ட போய் அவங்களுக்கு செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணு என்று கூறினான்…
அவளும் சரி என்று பிரகதியிடம் சென்று விட்டாள்..
பிரகதிக்கு எதை செலக்ட் செய்ய வேண்டும் என்று கன்ப்யூஷன் ஆக இருந்தது…
பிரகதி எங்கேஜ்மென்ட்க்கு பேபி பிங்க் சாரி எடுத்துக்கோ நல்லா இருக்கும் என்று கூற யோசித்துக் கொண்டே அந்த புடவையை அவளுக்கு வைத்து பார்த்தாள் மிகவும் அழகாக இருந்தது..
நட்சத்திராவுக்கும் ஒரு அழகான பட்டு பாவாடை எடுத்துக் கொண்டனர்..
பிறகு ஆண்கள் தளத்திற்கு சென்று முதலில் அரவிந்தற்கு பார்த்தனர்..
இப்ப ஷேர்வானி எடுத்துக்கோ..
ரிசப்ஷனுக்கு கோட் எடுத்துக்கலாம் என்றான்..
ஏதோ ஒன்னு எடுங்க என்றான்.. உனக்கு தான்டா ட்ரெஸ் இருக்க வந்திருக்கு ஏன்டா டென்ஷனா இருக்க என்ற அபிஷேக்கிடம்..
டென்ஷன் எல்லாம் ஒன்னும் இல்ல…
நார்மலா தான் இருக்கேன் என்று கூறிக் கொண்டே உடையை பார்க்க ஆரம்பித்தான்…
அவன் முகத்தை வைத்தே அவன் கோபமாக இருக்கிறான் என்று அறிந்து கொண்ட பிரகதி, திவ்யாவிடம் அவர் ஏன் கோவமா இருக்காங்க என்று கேட்க..
அது கோவம் இல்ல கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாரு… உன்கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ண சொன்னோம் அதனால அப்படி இருக்காரு என்றாள் திவ்யா.. பிரகதிக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.. காலையில கிப்ட் எல்லாம் வாங்கி கொடுத்து நல்ல ஜாலியா தானே பேசிட்டு இருந்தாரு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்..
அவனும் ஹாஃப் ஒயிட் ஷேர்வானி எடுத்துக்கொண்டான்.. பிறகு மற்ற ஆண்களுக்கும் எடுத்தனர்..
பிறகு பில் போட்டு பணம் கட்டி முடித்து விட்டு நகை கடைக்கு சென்றனர்…
பிரகதி வீட்டு சார்பாக நிச்சயத்திற்கு அரவிந்துக்கு மோதிரம் போடுவதாக கூறினார்கள்…
அரவிந்திடம் உங்களுக்கு புடிச்ச டிசைன் செலக்ட் பண்ணுங்க பண்ணுங்க மாப்ள என்று கூற..
அவனும் அவர்களிடம் மறுக்க முடியாமல் டிசைன்ஸ் பார்க்க ஆரம்பித்தான்… சிறிது நேரம் கழித்து ஒரு மோதிரத்தை தேர்வு செய்தான்..
அது போலவே பிரகதிக்கும் ஒரு மோதிரத்தை தேர்வு செய்தனர்..
நிச்சயத்திற்கு மோதிரம் மாற்றிக் கொள்வதாக முடிவு செய்தனர்..
இதற்கு மணி 8 ஆகிவிட்டது..
ஒரு ஹோட்டலுக்கு சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு கிளம்பலாம் என்று முடிவு செய்து ஹோட்டலுக்கு சென்றார்கள்..
பிரகதிக்கும் அவனுடன் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது…
காலையில் அவனை பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது…
காலையில் கலகலவென இருந்தால் இப்பொழுது கொஞ்சம் கோபமாக இருந்தால்…
மதியம் போலவே இப்பொழுதும் அவன் அருகில் சாப்பிட அழைப்பான் என்று நினைத்திருக்க.. அவனும் அவளை கண்டுகொள்ளவில்லை..
இவள் திவ்யா அருகில் அமர்ந்திருக்க அவனும் அடுத்த கடைசியில் அமர்ந்திருந்தான்…
பிரகதி குடும்பத்தினருக்கு ஒரு மாதிரி வருத்தமாக போய்விட்டது என்றாலும் அவர்களால் வெளியே கூற முடியவில்லை….
இது உணவை முடித்துக் கொண்டு அவரவர் வீட்டுக்கு கிளம்பினர்…
கிளம்பும்போது அவனிடம் போய்ட்டு வரேன் என்று தலையசைக்க ஆனா சரி என்று மட்டும் சொல்லிக் கொண்டான்..
தேவகிக்கு மகனைப் பார்க்க பாவமாக இருந்தது…
அனைவரும் அவரவர் வீடு வந்து சேர்ந்தனர்.. அரவிந்த் யாரையும் பார்க்காமல் அவன் அறைக்கு சென்று விட்டான்…
ஏன்டா இவன் இப்படி இருக்கான்?
என்ன சொல்லிட்டன்னு முகத்தை இப்படி தூக்கி வச்சுட்டு இருக்கான்…
பொண்ணு பெத்தவங்களுக்கு கஷ்டமா தானே இருக்கும்.. கல்யாணத்துக்கு அப்புறம் யார் வந்து இவனை கேட்க போறா?.. இன்று சலித்துக் கொண்டே கூறினார்..
விடுங்க மார்னிங் சரியாயிடுவான் என்று கூறி அவன் அறைக்கு சென்று விட்டான்..
அவன் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்க..
கதவைத் திறந்து பார்க்க திவ்யா நின்று கொண்டிருந்தாள்.
கையில் இருந்த பார்சலை நீட்ட உங்களுக்காக ஸ்பெஷல்…
எங்கேஜ்மென்ட் டிரஸ் தானே கொடுக்காட்டி என்ன?.. என்று சொல்லிக் கொண்டே பார்த்தான் இரண்டு கவர் இருந்தது.. இது எங்கேஜ்மென்ட் டிரஸ் இல்ல பிரகதி உங்க கிட்ட கொடுக்க சொன்னா என்று அவள் சென்று விட்டாள்..
சிடு சிடுவென இருந்த முகம் இப்பொழுது பூவாக மலர்ந்து விட்டது…
அந்த ஷர்ட் ஒன்றை எடுத்து அவனுக்கு வைத்து பார்த்தேன் அழகாக இருந்தது..
நைஸ் செலக்சன் என்று மெலிதாக சிரித்துக் கொண்டான்…
டேய் என்னடா வெட்கமெல்லாம் படுற என்று அவனே அவனுக்கு கேட்டு புன்னகைத்துக் கொண்டான்….