உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.5
(14)

அத்தியாயம் -8

சுகுமாரன் அறையில், தேவகி  பொண்ணு வீட்ல எல்லாரும் நல்ல விதமா இருக்காங்க… பிரகதி கொஞ்சம் சாஃப்ட் போல என்க..

ஆமாங்க ஓரே பொண்ணு தானே அப்டின்னு செல்லம் கொடுக்காம நல்ல பக்குவமா வளத்திருக்காங்க தேவகி சொல்ல..

உன் பையன நெனச்சு தான் பயமா இருக்கு என்றார்..

அவன் பாவம் இன்னைக்கு அவன் முகமே சரியில்லை.. காலையில் கலகலப்பா இருந்தான்.. நாம எல்லாரும் பேசியே அவன் டென்ஷன் ஆகிட்டான்..

உன் பையன விட்டுக்கொடுக்க மாட்டியே என்று சொல்ல, எனக்கு தூக்கம் வருது என்று தேவகி கண்ணை மூடிக்கொண்டாள்..

பையன சொன்னா போதும் கோவம் வந்திடும் என்று அவரும் தூங்கிப் போனார்..

திவ்யா கொடுத்த கவரை பார்த்த

அரவிந்த்க்கு சந்தோஷம் கலந்த அதிர்ச்சி.

பரவால்ல நம்ம மேல பாசம் இருக்கு போல ஆனா பேச மட்டும் இல்ல என நினைத்துக் கொண்டான்..

அங்கே அபிஷேக்கின் அறையில் குழந்தையை உறங்க வைத்து விட்டு

கணவன் அருகே அமர்ந்து அன்றைய நாளின் நிகழ்வுகளை பேசிக் கொண்டிருந்தாள்..

என்ன பார்க்க வரும் போது நீங்க கிஃப்ட் வாங்கிக்கொண்டு வரல தான.. உங்க தம்பிய பார்த்தீங்க தான எப்படி இருக்கார்…

அவன் பர்ஸ்ட் டைம் பார்க்கிறான் அதனால அப்படி…

நமக்கு அப்படியா என்று பேசிக்கொண்டே அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்…

அவளும் அவனுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே அவர்களின் காதல் கதையை பேசிக் கொண்டிருந்தனர்…

இவ விட்டா பேசிட்டு தான் இருப்பா மனுசன் நெலம புரியாம…

உடனே அவள் இதழ்களில் முத்தம் கொடுத்துக்கொண்டே ப்ளிஸ் டி ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் என்று கூறி முடியும் முன்பே அவளும் அவனை அணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது..

யாரு இப்ப கதவை தட்டுறதுனு தெரியல என்று அவளிடம் இருந்து விலக அவளோ அவனை விடவே இல்லை..

மீண்டும் மீண்டும் சத்தம் வர, வெயிட் பண்ணு டி வரேன் என்றுஉடையை சரி செய்து கொண்டே கதவை‌த் திறந்தான்..

அரவிந்த் தான் நின்று இருந்தான்..

கரடி என முனுமுனுத்துக் கொண்டே என்ன டா என்றான்..

அபிஷேக்கை பார்த்ததும் அவனுக்கே சங்கடம் ஆகிப்போனது..

இல்ல ப்ரோ அண்ணி பார்சல் கொடுத்தாங்க அத பத்தி என்று அசடு வழிந்து கொண்டு கூற..

அவ தூங்கிட்டா காலையில கேட்டுக்கோ என்று கூற… அரவிந்த்துக்கோ அவனை நினைத்தே கோபம்..ச்ச காலையிலயே கேட்டிருக்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு “சாரி ப்ரோ குட் நைட் என்று அவன் அறைக்கு சென்று விட்டான்”..

கதவை அடைத்துக் கொண்டே மனைவி அருகில் சென்றவன் மீண்டும் முத்தத்தில் ஆரம்பித்து ஒரு மாத பிரிவை தீர்த்துக்கொள்ள..

அதன் பிறகு தான் அவளை விட்டான்…

இப்பொழுது தான் அவளிடம் அரவிந்த் வந்தது பற்றி கூற அவளுக்கு சிரிப்பை அடக்க முடியாமல்  அப்பவே சொல்லி இருக்கலாம் தானே நான் போய் சொல்லிட்டு வந்திருப்பேன்ல என்று கூற..

அவளை முறைத்து விட்டு ஏய் என்னாலேயே ஃபீலிக்ஸ் கன்ட்ரோல் பண்ண முடியல.. அவன் முகத்தை என்னாலயே பார்க்க முடியல ..அவன் என்னை  பார்த்து சொல்ல வந்தத சொல்லாம போயிட்டான்.. இதுல நீ வேற போயிருந்தா அவ்ளோதான் என்றான்…

அவளோ எதுக்கு வந்தாங்கன்னு எனக்கு தெரியும் என்று ,  “பிரகதி அவன் கோபமாக இருக்கிறான் என்று அறிந்து அவனுக்கு ஷர்ட் கிஃப்ட் செய்ததை கூறினாள்..

ஓஓஓ கிஃப்ட் பண்ற அளவுக்கு வந்தாச்சா,”இவனுக்கு ரொம்பவே பிடிவாதம்”.. யாருமே இப்படி ஒத்துக்க மாட்டாங்க…இவன் நினைச்சது நடக்கனும்னா முடியுமா என்று கூற..

ஒருவேளை உங்க தம்பி அந்த பொண்ண ஆல்ரெடி லவ் பண்ணி இருப்பாரோ என்று கூற..

இப்படி பேசாதன்னு காலையிலயே சொல்லிட்டேன் என்று அவளிடம் சொன்னான்…

உதட்டை சுழித்துகொண்டு ஆமா நான் பேசுனா மட்டும் கன்ட்ரோல் பண்ணுங்க என்று அலுத்துக் கொண்டாள்..

அவளது சுழித்த உதடை பிடித்து கடித்து வைக்க..மறுபடியும் அங்கே முத்த சத்தமும் முனகல் சத்தமும் கேட்டது.. தூங்குவதற்கு இரவு 1மணி ஆகி விட்டது..ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தூங்கிப் போயினர்….

அரவிந்த் காலையில் எடுத்து ஃபோட்டோக்களை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்..

எவ்ளோ அழகா இருக்க டி..

இந்த வெள்ளிக்கிழமை என்கேஜ்மென்ட்க்கு பதிலாக மேரேஜ் முடிவு பண்ணி இருக்கலாம்..

எப்படி தான் இன்னும் மூனு மாசம் வெயிட் பண்ணறது.. இப்படியே யோசித்துக் கொண்டே தூங்கிப் போனான்…

அதே நேரம் பிரகதி வீட்ல என்ன நடந்திருக்கும்ன்னு பார்த்துட்டு வந்திடலாம்…

வீடு வந்து சேர 10 மணி ஆகிவிட்டது…

அக்கா இன்னைக்கு இங்கேயே ஸ்டே பண்றிங்களா.

உங்களுக்கும் டயர்டா இருக்கும்..

எப்படியும் காலையில இங்க வரத்தானே வேணும் என்று கௌசல்யா கேட்க..

பிரகதி வீட்டிலேயே தங்கி விட்டனர் அருணாச்சலமும் ஜோதியும்..

கண்ணன் அருணாச்சலம் ஒரு அறையில் படுத்து கொண்டு இருந்தார்கள்..

பெண்கள் மூவரும் பிரகதி அறையில் படுத்து கொண்டனர்..

இரண்டு அம்மாவுக்கும் நடுவில் பிரகதி…

போச்சு ஏதோ அட்வைஸ் ஸ்டார்ட் பண்ண போறாங்க… இந்த கௌசி வேற ஸ்டார்ட் பண்ணா நிறுத்தவே மாட்டாங்க அவளது மைண்ட் வாய்ஸ் வேறு…

மாப்பிள்ளை வீட்டில எல்லாரும் நல்லா பழகறாங்க  என்று ஜோதி ஆரம்பிக்க…

ஆஹா ஸ்டார்ட் பண்ணிட்டாங்க டா அலார்டா இரு பிரகதி எப்படியும் உன் கிட்ட தான் முடியும் என்றது மைண்ட் வாய்ஸ்…அதை அடக்கியவள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தாள்..

திவ்யா நல்லா பேசுனா…

அந்த நக்ஷத்திராவை எனக்கு ரொம்பவே பிடிஞ்சிருக்கு‌‌‌..கண்ணுக்குள்ளயே இருக்கா என்று ஜோதி கூற..

ஆமாங்க அக்கா எல்லாரும் நல்ல விதமா இருக்காங்க..

இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்.. பழநி முருகா உன் கோவிலுக்கு நடந்தே வரேன்னு கௌசல்யா வேண்டிக் கொண்டு இருக்க..

அம்மா உங்களுக்கு எதாவது இருக்கா அவ்ளோ தூரம் எப்படி நடந்து போறது என்று பிரகதி திட்ட…

நீ சும்மா இரு டி… என் கஷ்டம் எனக்குத்தான் என்று கூற..

ஓஹோ அப்படியா… அப்ப நான் இங்க இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா… அதனால தான் எனக்கு கல்யாணம் பண்ணி இங்க இருந்து அனுப்ப பார்க்கரீங்க தானே என்று கேட்க..

நான் என்ன சொன்னா நீ என்ன சொல்றே…அது கூட்டுக் குடும்பமா இருக்கு… தனியா இருந்து கஷ்டப்பட வேண்டாம்ன்னு நான் சொன்னேன் டி கௌசல்யா கோபப்பட்டு பேச…

பிரகதி அழுது விட்டாள்…

கௌசி இங்க பாரு அவள அழுக வைக்காத…

இன்னைக்கு தான் நல்ல விஷயம் நடந்திருக்கு என அதட்டி பேச…

ஆமா நான் எதுமே பேச மாட்டேன்… என்று அவரும் அழுது விட…

ரெண்டு பேரும் அமைதியா இருந்தா நல்லது…

உங்க அப்பாக்கு நீ அழுகறது தெரிஞ்சா அம்மாவ தான் திட்டுவாங்க…

அம்மா இடத்தில் இருந்து யோசிக்க வேண்டாமா தங்கம் என்று ஆறுதல் கூறி சமாதானம் செய்து வைத்தார்…

மாப்பிள்ளை சின்ன வயசுல ரொம்பவே சுட்டியா இருந்திருப்பார் போல…

உனக்கு பிடிச்சு இருக்கு தான என கேட்க..

அவளுக்கு காலையில் நடந்ததை நினைத்து மெல்லிய முறுவல் தோன்றியது…

கௌசி உன் பொண்ணு

வெட்கப்படறா பாரு என்று சொல்ல போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டு படுத்தாள்…அம்மா இருவரும் புன்னகையோடு பார்த்துக்கொண்டனர்…

அவளுக்கோ அதிசயம்…ஒரு நாளில் எவ்வளவு மாற்றம் அவள் வாழ்க்கையில்..

எப்படி அவனை பிடித்தது என்று அவள் வாயாலே கூற வைத்து விட்டான்..

சரியான ரௌடி என அவனை நினைத்துக்கொண்டே உறங்கியும் விட்டாள்..

அந்த வீட்டின் ஆண்களுக்கும் அதே நினைப்பு தான்..

நல்ல வரன் தான்..

அரவிந்த் மகளை பார்க்கும் விதமே அவன் பிரகதியை நல்ல முறையில் வைத்துக் கொள்வான் என்று நம்பிக்கை இருந்தது..

இப்படியே அனைவரும் பேசிவிட்டு உறங்கப் போயினர் ‌‌…

அடுத்த நாள் எல்லாருக்கும் நிறைய கல்யாண வேலை இருக்கும்.. அடுத்த எபில பார்க்கலாம்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!