உயிர் உறையும் நரகமா நின் காதல்… டீஸர்

4
(6)

 

“அப்பா ப்ளீஸ் அவரை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்பா ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் மங்கை. “அடிக்கிறது இல்லை டீ அவனை கொல்லனும்” என்ற அவளது அண்ணனோ ஒருவனை கட்டி வைத்து அடி வெளுத்துக் கொண்டு இருந்தான்.

 

“ஏன்டா வேலைக்கார நாயே வேலை பார்க்க வந்தால் கொடுத்த வேலையை மட்டும் பார்க்கனும் அதை விட்டுவிட்டு என் தங்கச்சி கேட்குதா உனக்கு” என்று அவனை அடித்தான் அவளது அண்ணன்.

 

“அண்ணா ப்ளீஸ் அவரை அடிக்காதீங்க என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க” என்று அவள் கதறிட, “உன்னை அடிச்சு வளர்க்காமல் அன்பை கொட்டி வளர்த்தோம் பார்த்தியா அதற்கு தான் இப்படி காதல் கருமாந்திரம்னு அதுவும் நம்ம கிட்ட வேலை பார்க்கிறவனை உன்னை” என்று அவளை அடித்தான் அவளது அண்ணன்.

 

“வேண்டாம் அவளை அடிக்காதீங்க என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க , அவளை அடிக்காதீங்க” என்றான் அவன் அவ்வளவு அடிகளையும் வாங்கிக் கொண்டு.

 

“இம்புட்டு அடி வாங்கியும் அவளை அடிக்க போனால் உனக்கு துடிக்குதா லவ்வு” என்று பற்களைக் கடித்தவன் கட்டையால் அவனை மேலும் அடித்தான்.

 

“ஐயோ அவரை அடிக்காதீங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்” என்று அவள் கதறிட , “நீ கேட்ப டீ கேட்கவில்லை என்றாலும் கேட்க வைப்போம் ஆனால் இவன் கேட்கனும் இந்த அனாதை நாய் கேட்கனும். இனி உனக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவனை எழுதிக் கொடுக்க சொல்லு” என்றார் அந்த பெரிய மனிதர்.

“தயவுசெய்து அவங்க கேட்கிறதை எழுதிக் கொடுத்துட்டு இங்கே இருந்து போயிருங்க” என்று அவள் கெஞ்சிட, “என் உயிரே போனாலும் அப்படி மட்டும் எழுதி கொடுக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என் மனைவி, நான் மட்டும் தான் உன் கணவன் அதை உன் அப்பா அண்ணன் யாராலும் மாற்ற முடியாது” என்றான் அவன்.

 

“அடிச்சு போட்டா ஏன்னு கேட்க ஆள் இல்லாத அனாதை நாய் நீ என் தங்கச்சிக்கு புருஷனா?” என்று அவனது முகத்தில் குத்தினான் அவளது அண்ணன். அவன் முகமெங்கும் ரத்தக்களறியாகி கிடந்தது அவளது அண்ணன் மீண்டும் அடித்த அடியில். அவன் கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்ட பொழுதிலும் மங்கை அவளை விட முடியாது என்று உறுதியாக நின்றான் அவன். 

 

“உன் மேல நான் வச்சுருக்கிற காதலால் உன் அண்ணன், அப்பா எல்லோரும் எனக்கு நரகத்தை காட்டினாலும் என் காதல் மாறாது” என்றான் உறுதியாக..

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

அவளது கன்னத்தில் பளாரென்று அறைந்தான் அவளது கணவன். கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பாவமாக அவனைப் பார்த்துக் கொண்டு அவள் நின்றிருக்க, “வெளியே கிளம்பும் போது என் கண் முன்னே வந்து நிற்காதே டீ என்று எத்தனை முறை சொல்லுவேன் அறிவு கெட்ட முண்டம்” என்றான்.

 

“நீங்க சாப்பிட வரவில்லை அதான் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்” என்றவள் கொண்டு வந்த உணவுத் தட்டு பறந்தது அவளுக்கு மீண்டும் கொடுத்த அறையில்.

“இதோ பாரு டீ உனக்கு பலமுறை சொல்லி இருக்கேன் என் ரூமுக்கு வரவே வராதே என்று அதுவும் வெளியே கிளம்பும் போது சுத்தமா வராதே” என்று பற்களைக் கடித்தவன் கிளம்பிக் கொண்டு இருக்க மங்கை  அவளோ அவன் கொட்டிய உணவை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.

 

“என்னடீ இதை அள்ளி குப்பையில் போட போறியா? ஏன் இந்த சாப்பாடு உன் அப்பன் வீட்டு சீதனமா குப்பையில் கொட்ட” என்ற அவளது மாமியாரை அவள் பாவமாக பார்த்திட, அவரோ துளியும் இரக்கம் இல்லாமல் தரையில் கிடந்த உணவை அவளை உண்ணச் சொல்ல அவளது கணவனோ உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டான். 

 

அவள் வேறு வழி இல்லாமல் அந்த உணவினை உண்ண ஆரம்பித்தாள்.

 

திருமணம் என்ற நரகத்திலிருந்து மங்கை அவள் மீள்வாளா…

💔💔💔💔💔💔💔💔💔

அங்கே ஒருவனுக்கு காதலால் நரகம், இங்கே ஒருத்திக்கு காதலின் அடுத்த கட்டமான திருமணம் நரகம்..

 

இருவரும் அவரவர் வாழ்வு தந்த நரகத்தில் மூழ்குவார்களா இல்லை கரைசேர்வார்களா…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!