வணக்கம் நண்பர்களே 🙏
உயிர் தொடும் உறவே…இது ஒரு உணர்வுபூர்வமான முக்கோண காதல் கதை❤️❤️❤️. கதையை பற்றி சொல்லுவதை விட படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
கதை மாந்தர்கள் பற்றி சிறு அறிமுகம் :
நாயகர்கள் : ஈஸ்வரன், ஆதித்யன் .
நாயகி : மீனாட்சி.
மற்ற முக்கிய கதை மாந்தர்கள்:
சங்கரபாண்டியன் -கோமதி.
மயில்வாகனம் – வடிவாம்பாள்.
பாண்டியன்.
நேகா.
புகழினி
டீஸர் :
கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள் மீனாட்சி. அவன் வாங்கித் தந்த புடவையை அவனுக்காகவே பார்த்து பார்த்து கட்டிக்கொண்டு, தன்னவன் கண்கள் தன்னை மட்டுமே வட்டமிட வேண்டும் என்ற ஆசையின் விளைவாக தன்னை மிதமாக அலங்கரித்துக் கொண்டு அவனுக்காக கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் செய்து விட்டு அவனைப் சென்று பார்த்தால்… ஈஸ்வரன் இவ்வாறு முகத்திலடித்தாற்போல் பேசியது அவளது மனதினை குத்திக் கிழித்தது.
பெண் நெஞ்சம் அவனிடம் இருந்து எதிர்ப்பார்த்தது ஒன்றே ஒன்றைத்தான் ,” அழகா இருக்க டி…” என்ற ஆழ்ந்த அழகிய வார்த்தைகளை தான்..
ஆனால் அவனோ வேறு ஏதேதோ பேசி அவளது மெல்லிய மனதை காயப்படுத்தி விட்டானே…! என்ற ஆதங்கம் அவளுள் எழ கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.
“ ஹேய்…மீனுக்குட்டி….என்ன இந்த அடிக்குற வெயில்ல பளபளான்னு பட்டு புடவையை கட்டிட்டு எங்கடி வாக்கிங் போயிட்டு வர்ற…?” என்றவாறே தனது இரு சக்கர வாகனத்தை மீனாட்சியின் முன்பு நிறுத்தினாள் ஈஸ்வரனின் தங்கை புகழனி.
“ கோவிலுக்கு போயிட்டு அப்படியே உங்க அண்ணனை பாத்துட்டு வர்றேன்…” என்றாள் சோர்ந்த முகத்தோடு.
“ என்னாச்சு மீனு டார்லிங்..ஏன் உன் ஃபேஸ் டல்லா இருக்கு…? அண்ணன் ஏதாவது திட்டுச்சா…? அதெல்லாம் கவலைப்படாதே…மா. அது ஒரு லூசு…அப்பப்ப மண்டையில் இருக்குற நட்டு கழண்டுக்கும்…அதெல்லாம் பெரிசா எடுத்துக்காத.. ஆமா…இன்னிக்கு அதோட பிறந்தநாளாச்சே ஏதாவது கிஃப்ட் குடுத்தியா..?” என ஒரு மார்க்கமாக வினவினாள் புகழினி.
“ ஆமா…எப்பவும் போல தான் சட்டைய கொண்டு போய் கொடுத்தேன்…வேணாம்ன்னு சொன்னது மட்டுமில்லம…எங்க வீட்ல பாக்குற மாப்பிள்ளைய கட்டிக்கனுமாம் உங்க அண்ணனுக்கு…ரொம்ப தான் பண்றாப்ல. ஒரு நாள் இல்லை ஒரு நாள் பாரு நான் நெசமாவே வேற ஒருத்தருக்கு கழுத்த நீட்டப் போறேன்…உங்க அண்ணன் எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடப் போறாராக்கும்..” எனக் கோபத்தில் வார்த்தைகளை விட்டாள்.சில நேரங்களில் வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம் என்பதை அக்கணம் பெண்ணவள் அறியாமல் போனாள்.
புகழினியோ ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். ஏனெனில் விளையாட்டு போல் கூட இம்மாதிரியான வார்த்தைகளை மீனாட்சி பயன்படுத்த மாட்டாள். இன்று ஏனோ மீனாட்சி பேசியது மிகவும் நெருடலாகவே இருந்தது.
ஈஸ்வரனை கரம் பிடிக்கவே இத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தவள். இன்று திடீரென இவ்வாறு பேசியது அவளுள் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் சமாளித்து கொண்டு,” ஏன்டி மக்கு புள்ள…பிறந்தநாள் அதுவுமா சட்டையவா போய் குடுப்ப..? இறுக்கி அணைச்சு ஒரு உம்மால்ல கொடுத்திருக்கனும்… சட்டையை நீட்டுனா…சண்டைக்கு தான் எங்கண்ணன் வரும்…நீ வேணா போய் ஒரு டைட் ஹக் பண்ணி லிப் லாக் பண்ணிட்டு வந்துடேன். அப்பறம் பாரு எங்கண்ணன் உன் முந்தானையைவே பிடிச்சிட்டு சுத்தும்…” என கிண்டலடித்தாள்.
மீனாட்சியோ அவளை முறைத்து விட்டு ,” தங்கச்சி மாதிரியா பேசுற….நீயு…? சட்டைக்கே கண்டபடி பேசிடுச்சு மாமா..இதுல முத்தமாம் முத்தம்…போடி..அங்குட்டு…” என முகத்தை நொடித்துக் கொண்டாள்.
Waiting 😎😎🔥🔥🔥
நன்றி மா 🙏