எண்ணம் -31

4.9
(12)

எண்ணம் -31

ரித்திஷ்ப்ரணவின் பேசும் மொழி புரியாமல் விக்கித்து நின்றாள் தியாழினி.

“என்ன ஒன்னும் தெரியாத பச்ச புள்ள மாதிரி முகத்தை வச்சுட்டு இருக்க? இப்படி வச்சு தானே என்னை ஏமாத்துன?” என்றவன் பார்வையை அவளிடமிருந்து திருப்ப.

அவன் அலங்காரம் செய்த மேடையின் அலங்கோல நிலை, அவனுடைய தோல்வியை பறைச் சாற்ற, மூச்சு முட்டுவதுப் போலிருந்தது.

முதல்ல இந்த இடத்தை விட்டு போகணும் என்று எண்ணியவன், அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தான்.

 அந்த பெரிய பிரம்மாண்டமான வீட்டில் ஒருவரும் இல்லாமல் இருக்க.

தியாழினியின் முகம் பயத்தால் வெளுத்துப் போனது.

‘ வலதுகாலை எடுத்து வச்சு வா.’ என்று யாழினியிடம் கூற எண்ணிய மானங்கெட்ட மனதை அடக்கி வைத்து அவளைப் பார்க்க.

அவளோ முகம் முழுவதும் வியர்த்து இருக்க. தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தவளோ, வலதுகாலை தான் எடுத்து வைத்திருந்தாள்.

சந்தோஷப்பட்ட மனதை அடக்கியவன், தன்னை நினைத்தே அவன் மீது கோபம் வந்தது. அதை எல்லாம் தியாழினியிடம் திருப்பினான்.

“ என்ன பயமா இருக்கா? திருடுறதற்கு பயமில்லை. இதுக்கு மட்டும் பயமா? நம்பற மாதிரி இல்லையே.” என்று புருவத்தை உயர்த்தி கேலியாகப் பார்த்தான்.

அவனது பார்வையில் கூனிக் குறுகிப் போனாள் தியாழினி.

அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான்.

“ப்ளீஸ் சார்! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.” என்று கெஞ்சினாள் தியாழினி.

“நீ சொல்றதை நான் ஏன் கேட்கணும். நான் சொல்றதைத் தான் நீ கேட்கணும். நான் என்ன சொன்னாலும் செய்யணும்.” என்றவன் அவளை நெருங்க… அவளோ பின்னே சென்றவள் மடிந்து தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் அருகே அமர்ந்தவனோ,” எதுக்கு இப்போ நீ அழுது ஆக்ட் பண்ற? ஷ்! நீ தான் உங்க அண்ணனுக்காக என்ன வேணும்னாலும் செய்வியே. அப்புறம் என்ன?”என்று சினத்துடன் வினவியவாறே அவளது கன்னத்தைப் பற்றினான்.

“ப்ளீஸ் ப்ரணவ்! இப்படி எல்லாம் பண்ணாதீங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் உங்களை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?” என்று அவனது கைகளை விலக்கியவாறே, திக்கித் தினறி கூறினாள் தியாழினி.

“குட் ஜோக்! லவ்வுன்னா என்னன்னு உனக்குத் தெரியுமா? இப்படித்தான் லவ் பண்ணவங்ஙளுக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணுவாங்களா? திருடன் கையில சாவியை கொடுத்தா கூட திருடாம இருப்பான்னு பழமொழி உண்டு.ஆனா நீ அதை விட கீழானவ. உன் மேல நான் வச்ச கண்மூடித்தனமான காதல்னால உன் கிட்ட ஒப்படைச்ச முக்கியமான விஷயத்தை நீ எப்படி செய்கிறாய் என்பதை கவனிக்காமல் இருந்துட்டேன். ஆனால் நீ கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் உங்க அண்ணனோட சேர்ந்து என் முதுகுல குத்திட்டு, இதுல காதல், மண்ணாங்கட்டின்னு கதை விடுற.” என்று சினத்துடன் கூறியவன், கைகளை அங்கிருந்த டீபாயில் தட்டினான்.

“ ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க சார்! ஹை ப்ரஷர் உங்க ஹெல்த்துக்கு நல்லதில்ல.” என்று அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டவள், அவனிடம் கெஞ்சினாள்.

“ ஓ! ரொம்பத் தான் அக்கறை. இதுனால ஒன்னும் நான் செத்துப் போயிட மாட்டேன். ஆனால் நீ செஞ்சதை நினைச்சு, நினைச்சு செத்துடுவேன் போல. ஆனால் நான் செத்தா தான் உனக்கு நல்லது. இல்லைன்னா நீயும், உங்க அண்ணனும் என் கையில மாட்டி படாதபாடு படுவீங்க. அதை யாராலும் தடுக்க முடியாது.”

“ப்ளீஸ் சார்! எனக்கு என்னை தண்டனை வேணும்னாலும் கொடுங்க. ஆனா எங்க அண்ணனை விட்டுடுங்க.” என்று கெஞ்ச.

“ம்! அண்ணனுக்ககா என்ன வேணாலும் செய்யும் தங்கச்சி. ஒன் நைட் ஸ்டேக்கு கூட ஓகே சொல்லுவ போல. நீ ஓகே சொல்லைன்னாலும் அவனே உன்னை ஒத்துக்க வைப்பான்.” என்று எளக்காரமாக அவளைப் பார்க்க.

“சார்! எங்க அப்பா, அம்மா இறந்த பிறகு எனக்காக எங்க அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கார் தெரியுமா? அவரைப் பத்தி இப்படி எல்லாம் தப்பா பேசாதீங்க. என்னால காதுக் குடுத்துக் கேட்க முடியலை. உங்களுக்கு நஷ்டத்தைக் குடுத்திட்டேன் தான். மன்னிச்சிடுங்க. இல்லைன்னா

என்னை கொன்னுப்போட்டுடுங்க.” என்று கதறினாள் தியாழினி.

“லுக்! கேவலம் இந்த பணத்துக்கத்தான் நான் இவ்வளவு கோபப்படுறேன்னு நினைக்கிறீயா? நீ வேணும்னா பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம். நான் உன் மேல வச்ச காதலுக்காகத் தான் என்னையே நொந்துட்டு இருக்கேன். என்னை ஏமாத்த உனக்கு எப்புடிடி மனசு வந்தது. “ என்று கீழே அமர்ந்து அழுதவளின் தாடையைப் பற்றி ஆவேசமாக வினவினான்.

அவனது கைகளைப் பற்றி கண்களில் வைத்துக் கொண்டு,”உங்க அன்புக்கு நான் தகுதியில்லை. ஆனால் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் ப்ரணவ். நானும் காசுக்காக இந்த வேலை பார்க்கலை‌. எனக்காக மட்டுமே வாழ்ந்த என் அண்ணனோட அன்புக்காக மட்டும் தான் இத நான் செஞ்சேன்‌. ஆனா உங்களை பத்தியும் யோசிச்சிருக்கணும். அட்லீஸ்ட் என் மனம் அறிந்தபிறகாவது..,என்ன கொன்னு போட்டுடுங்க ப்ரணவ். இல்ல, இல்ல என் மேல உள்ள அன்புல உங்களுக்கு கொல்லக்கூட மனசு வராது. நானே சாகுறேன். என்னால உங்க குணம் மாற வேண்டாம். நீங்க எப்பவும் நல்லவங்க. நீங்க இன்னைக்கு என் மேல உள்ள கோவத்துல தப்பு பண்ணாலும் அப்புறம் வருத்தப்படுவீங்கனு எனக்கு நல்லாவே தெரியும். உங்களை அந்த நிலைக்கு நான் தள்ள விரும்பலை. நான் உயிரோட இருந்தா தானே எல்லா பிரச்சனையும்‌…” என்று வெறி பிடித்தவள் போலக் கூறிய தியாழினி சுத்தி முத்தி பார்க்க. டீபாயில் பழத்தோடு கத்தி இருக்க.

பாய்ந்து அதை எடுத்தவள் கையை கட் பண்ண முயல, வேகமாக அவளது கையில் இருந்து பறித்து தூக்கி வீசிய ரித்திஷ்ப்ரணவ், “இப்பவும் என்னை நினைக்க மாட்டேங்கறியேடி! நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு கொஞ்சம் கூட யோசிக்காமல் செல்ஃபிஷா இருக்க.” என்று அவளை கட்டிக்கொண்டவனது உடல் நடுங்கியது. அதை உணர்ந்தவளது விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து அவனது தோளை நனைத்தது.

இருவரது மோனநிலையை கலைப்பது போல் ரித்திஷ்ப்ரணவின் ஃபோன் அடித்துக் கொண்டே இருக்க.

 அதை எடுத்தவன், அவளை தன் கை வளைவில் வைத்துக் கொண்டே பேசினான்.

அழைத்தது கோபி தான். அவர் பேசியதைக் கேட்டவனது உடல் இறுகியது.

“நான் பார்த்துக்கிறேன்.” என்று ஒரு வார்த்தை மட்டும் கூறி விட்டு வைத்தவன், தியாழினியை இரக்கமாக பார்த்தான்.

அதை உணராமல் நிம்மதியாக இருந்தாள் தியாழினி.

மீண்டும் ரித்திஷ்ப்ரணவின் ஃபோன் இசைத்தது.

இந்த முறை அழைத்தது அவனது தாய்.

கண்களை மூடி திறந்தவன், அவளை மெல்ல விலக்கி விட்டு ஃபோனை எடுத்தான்.

“தம்பி எங்கப்பா இருக்க?” என்று பதட்டத்துடன் தீபா வினவ.

“ என்ன விஷயம் மாம் .”

“கோபி சொன்னார்பா. நீ கொஞ்சம் பொறுமையா இரு. உன் கோபத்தை எல்லாம் தியா கிட்ட காட்டாதே. முதல்ல நீ எங்க இருக்க?” என்று படபடத்தார்.

‘அந்த கோபி அங்கிள் மட்டும் என் கையில் கிடைச்சா அவ்வளவுதான் முதல்ல அவரை வேலையை விட்டு தூக்கணும். இவ்வளவு நேரம் கண்டவங்களைப் பத்தி சொன்னாரே. அம்மா கிட்ட எல்லா விஷயத்தையும் போட்டுக் கொடுத்துட்டேன்னு சொன்னாரா.’ என்று மனதிற்குள் கடுகடுத்துக் கொண்டிருக்க.

 அதற்குள் தீபா படபடக்க ஆரம்பித்து விட்டார். “தம்பி! அம்மா சொல்றத கேளுப்பா. நீ பண்றதெல்லாம் தப்பு.”

 ” ஸ்டாப்! ஸ்டாப்! நான் என்ன பண்ணேன்? நீங்களா ஏதாவது கற்பனை பண்ணாதீங்க?”

“ப்ரணா! உன் கோபத்தைப் பத்தி தெரியும். முதல்ல நீ எங்க இருக்க? தியா எங்க இருக்கா?அதை சொல்லு.”

“ நம்ம வீட்ல தான் இருக்கோம்.”

“பொய் சொல்லாதே. நாங்க வீட்டுக்கு வந்ததுட்டோம். வீடு ஃபுல்லா தேடிட்டோம். டெரஸ் வரைக்கும் பார்த்துட்டேன்.”

“ எல்லா இடத்தையும் தேடுனீங்க. ரைட் உங்க ரூமைப் பார்த்திங்களா?”என்று ரித்திஷ்ப்ரணவ் வினவ.

“அது‌…”என்று தீபா முழிக்க.

இங்கோ தியாழினி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

அதற்குள் மூச்சு வாங்க தீபாவும், பின்னே கேசவ்வும், தனுவும் அங்கு வந்தனர்.

“இங்கே தான் இருக்கியா தியா.” என்று தீபா அவளது கையை ஆதரவாகப் பிடிக்க.

அவளது அழுது சிவந்து வீங்கியிருந்த முகத்தைப் பார்த்து, பதறிய தீபாவோ, “ ரித்திஷ்! உன் கிட்ட இதை எதிர்ப்பார்க்கலை. அவ தெரியாமல் தப்பு பண்ணிட்டா, அதுக்காக அவளை ஹர்ட் பண்ணுவியா நீ” என்று கண்டிப்புடன் வினவ.

“மாம்! என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காமல் என்னை குறை சொல்லாதீங்க.”

“கோபி சொன்னார்‍! ஏதோ அவங்க அண்ணன் மேல உள்ள பாசத்துல தப்பு பண்ணிட்டா, அதுக்காக அவளை பனிஷ் பண்ணுவியா? பாவம்டா தியா. சின்ன வயசுல இருந்து அவங்க அண்ணன் தான் அவளுக்காக நிறைய செஞ்சிருக்காரு. அதுக்கு கைமாறு செய்வதா அரியாமல் தப்பு செஞ்சுட்டா. விடேன் டா‌.”

“மாம்! அவ தப்பைக் கூட மன்னிச்சிடுவேன். ஆனால் அவ அண்ணனை ஏதோ தியாக செம்மல் மாதிரி சொல்றீங்க பாரு. அதைத் தான் என்னால மன்னிக்கவே முடியாது. அவன் சரியான செல்ஃபிஷ்.” என்றான் ரித்திஷ்ப்ரணவ்.

“அண்ணன அப்படி சொல்லாதீங்க!” என்று மெல்லிய குரலில் கூறினாள் தியாழினி.

“கண்மூடித்தனமா உன் அண்ணனுக்கு சப்போட் பண்ணும் போது தான் எனக்கு அவனை ஏதாவது செய்யணும்னு தோணுது

 உனக்கு தெரியுமா இவ்வளவு நேரமாச்சே உன்னை காணும்னு கூட உங்க அண்ணன் வந்து விசாரிக்கலை. தான் மாட்டிக்க கூடாதுன்னு கவனமா ஒரு பொண்ணை அனுப்பினார்.அந்தப் பொண்ணு உன்னைப் பத்தி விசாரிச்சிட்டு, நீ ஓடிப் போயிட்டேன்னு அதுவா ஒரு முடிவுக்கு வந்துடுச்சு. இதுதான் உங்க அண்ணன் உன் மேல வச்ச பாசம்.”

“ இல்ல! வர்ஷு அவசரக்குடுக்கை. ஆனால் எங்க அண்ணன் அதை நம்பிருக்க மாட்டார். என்னைத் தேடிட்டு தான் இருப்பான்.”

“ இன்னும் நான் சொல்றத நம்ப மாட்டேங்குறல. என் கூட வா. இப்பவே உனக்கு நான் ப்ரூஃப் பண்றேன்.” என்றவன், தன்னுடைய அன்னை, தந்தையிடம் தலையசைத்து விட்டு அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு அவளுக்கு பேரதிர்ச்சி தான் காத்திருந்தது‌.

தன் அண்ணன் வாயாலே எல்லாவற்றையும் கேட்டாள்.

இவர்கள் சென்ற நேரம், அவர்களது வீடு திறந்து இருக்க.

 வர்ஷிதாவின் குரல் ஒலித்தது.

“விடு நேத்ரா! எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருக்கீங்க. நான் தான் ஏற்கனவே சொன்னேனே. தியா அந்த கே.ஆரை லவ் பண்றான்னு. நீங்க தான் நம்பலை. இல்லைன்னா போன வேலை முடிஞ்சதும் வந்திருக்கலாம்ல. சரியான செல்ஃபிஷ்.” என்றுக் கூற.

அதுக்கு மறுப்பாக எதுவும் பேசாமல், “ நல்ல இடத்துல அவளைக் கட்டிக் கொடுக்கணும்னு நினைச்சேன். இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா. மாலையும் கழுத்துமா இங்கே வந்து நின்னுட்டு ஆஃபிஸ்ல உரிமை கேக்காமல் இருந்தா சரி.”

“கம்பெனி உங்கப் பேருல தானே இருக்கு நேத்ரா.”

“ஆமாம்! அது என்னோட கனவு கம்பெனி. அதுல அவளுக்கு பங்கு இல்லை. எப்போ என்னைப் பத்தி யோசிக்காமல் ஓடிப் போனாலோ, இனி அவளுக்கு இந்த வீட்ல இடம் இல்லை. இனி அவளைப் பத்தி பேச்சே எடுக்காதே. நம்மைப் பத்தி யோசிக்கலாம். இந்த ப்ராஜெக்ட் ஸ்டார்டாகிட்டா எனக்கு டைம் கிடைக்காது. அதுக்குள்ள நம்ம கல்யாணம் நடக்கணும். நாளைக்கே உங்க வீட்ல பேசுறேன்.” என்று நேத்ரன் கூற.

“இப்பவே கூட உங்களோட இருக்க சம்மதம் .” என்று வெட்கக் குரலில் வர்ஷிதா கூற.

அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல், அழுதுக் கொண்டே ஓடினாள் தியாழினி.

அவள் பின்னே வந்த ரித்திஷ்ப்ரணவ் சமாதானம் செய்தான்.

“சாரி ப்ரணவ்! இப்படிப்பட்ட அண்ணனுக்காக உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன். ஆனால் அண்ணன் இப்படி பண்ணுவாங்கன்னே நினைச்சு பார்க்கவே இல்லை. சின்ன வயசுல இருந்து என்னை புராடெக்ட் பண்ணிட்டு இருப்பாங்க. எல்லாமே இந்த சொத்துக்காகத்தான்னு என்னால நம்பவே முடியல. எங்க அண்ணன் நேரா கேட்டுருந்தாலே நான் கொடுத்திருப்பேனே. இப்படி என்னை ஏமாத்திருக்க வேண்டாம்‌.” என்று அவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழ.

அவளது அழுகையை நிறுத்த எவ்வளவோ முயன்றான் ரித்திஷ்ப்ரணவ். ஆனால் அவள் சமாதானமாவது போல் தெரியவில்லை.

மெல்ல அவளை நிமிர்த்தி உதட்டில் தனது முதல் முத்திரையைப் பதித்தான்.

அதிர்ச்சியில் விழிகளை விரித்து அவனை மலங்க, மலங்கப் பார்த்தாள் தியாழினி.

“இங்க பாரு யாழினி! இனி உன் அண்ணனைப் பத்தி பேச்சே வரக்கூடாது. அவன் என்ன சொல்றது அவனோட வாழ்க்கையில நீ இல்லன்னு..‌. நான் சொல்றேன் நம்ம வாழ்க்கையில இனி அவன் கிடையாது. உங்க அண்ணன பத்தி நீ பேசவே கூடாது. நினைச்சு கூட பார்க்கக் கூடாது. இனி உன் எண்ணம் முழுவதும் என்னை சுத்தித் தான் இருக்கணும் புரியுதா?” என்று செல்லமாக மிரட்ட.

இன்னும் அந்த முத்தத்திலிருந்து வெளியே வராதவள், தலையை எல்லா பக்கமும் அசைத்தாள்.

அந்த அழகிய அசைவில், மீண்டும் அவளை முத்தமிட்டவன், “ம்! உன்னோடு தனியா இருந்தா சரி வராது. சீக்கிரம் வீட்டுக்கு போகணும். அடுத்த முகூர்த்தத்துலே கல்யாணத்தை வைக்க சொல்லணும். மாம் வேற பிரம்மாண்டமா நடத்தணும்னு ரொம்ப டிலேயாக்கிடப் போறாங்க. ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது.” என்றவன் காரை எடுத்தவன், மியூசிக் பிளேயரை ஆன் செய்ய.

“வாம்மா வாம்மா கம் அண்ட் சிங் குயின தேடி வந்தான் கிங் டைலா டைலா பீபி டும்மு மாலை மாத்தி போடு ரிங்கு…..

என்

எண்ணமே ஏன் உன்னாலே

உள்ள புகுந்தது தன்னாலே

இதயமே ஓடிப்போகாது

சும்மா ஒரு தாளத்துல

நினைவுகள் எல்லாம் உன்னாலே

எங்கேயோ போற மாதிரி இருக்கு

கண் மூடினாலும் நீதான் கண்ணா

மறக்க முடியலையே என்று பாடல் வரிகள் ஒலிக்க‌‌.

புன்னகையுடன் தியாழினியைப் பார்த்தான் ரித்திஷ்ப்ரணவ்.

அவளும் வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

இனி அவர்களது எண்ணமெல்லாம் ஒருவருக்கொருவரென மட்டுமாக சுழப் போகிறது.

முற்றும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!