முரடனின் மான்விழி

5
(4)

 

எதிர்பாரா திருமணம்

அம்மா சொன்னா கேளுங்கம்மா….  எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் …. நான் ரொம்ப சின்ன பொண்ணுமா எனக்கு இப்பவே நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அதுவும் இந்த 2 கே  காலத்துல போய் எனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அப்படி நான் என்னம்மா அவசரம்  என்று கண்களில் கண்ணீர் வடிய  தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தால் விஹிதா

 அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா …என்று அவள் தன் அப்பாவிடம் பேச

 இல்லம்மா உண்மையாவே உனக்கு இந்த இடம் ரொம்ப நல்ல இடம்தான் … அதுவும் மாப்பிள்ளை வேற யாரும் கிடையாது என்னோட அக்கா பையன் அதனால கண்டிப்பா உனக்கு இந்த வாழ்க்கை நல்லபடியாக அமையும்…  ஏதோ ஒரு ஆண்டவன் புண்ணியத்துல பிரிஞ்சு போன சொந்தம் எல்லாமே ஒன்னு சேரூதுமா…  தயவுசெய்து நீ எதுவும் கொடுத்து விட்றாதம்மா அப்புறம் மறுபடியும் நம்ம அனாதையாக நிக்கனும்  என்று அவர் கையெடுத்து கும்பிட அதற்கு மேல் விஹிதாவால் பேச முடியவில்லை… 

எப்புடி பேசுவாள் உயிரென நினைக்கும் தந்தையே தன்னிடம் கையெடுத்து கும்பிடுவது போல் கெஞ்சுவது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதனால் அவள் மௌனத்தை தத்து  எடுத்துக் கொண்டாள்.. இத்தனைக்கும் தன்னை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திய அவனின் மேல் கட்டுக்கடங்காக கோபம் வந்தது அவளுக்கு

பொண்ணு,மாப்பிள்ளையும்  அழைச்சிட்டு வாங்க  நாழியாகுது என்று ஐயர் குரல் கொடுக்க….

 சிரித்து பேசி மகிழ  வேண்டிய மணப்பெண் தோழிகள் முகத்தில் டன் கணக்கில் சோகம் அப்பி போய் நிறைந்து  இருந்தது … எல்லோரும் ஒவ்வொரு பரபரப்புடன் இருந்தனர் யார் முகத்திலும் மகிழ்ச்சி என்பது சிறிதாக கூட இல்லை….  வந்தவர்கள் எல்லாரும் ஏதோ ஒன்றை பேசி கொண்டு இருந்தனர் அக்கம் பக்கத்தில் அவர்களுக்குள்ளவே … 

 பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்திருந்த அவனோ கழுத்தில் மாலையுடன் இருந்தான்… அங்கு  பார்க்கும்போதே தெரிந்து விட்டது அவன் தான் கல்யாணம் மாப்பிள்ளை என்று ஆனால் கல்யாணத்திற்கான சிறு சாயல் கூட அவன் முகத்தில் இல்லை…  அவ்வளவு கடினமாக ,  அவன் முகம் ஏதோ பாறையை வைத்து முழுங்கியது போல் கடுகடுவென்று  இருக்க…,  அவன் கண்களோ அக்னி தீ ஜுவாலையாக எரிந்து கொண்டிருப்பது போல் சிவப்பு நிறமாக இருந்தது…  அவன் துழியும் கூட யாரிடமும் சிரித்து பேசவில்லை… அவன் அப்படியே மௌனமாக நின்று கொண்டிருந்தான். அவனின் பக்கத்தில் இருப்பவர்கள் தான் அவனிடம் பேச ஆனால் அதற்கு அவன் கண்டுக்க கூட இல்லை ….  சற்று முன் நடந்த நிகழ்வில் அவன் முகம் இன்னும் இறுக்கியது…. 

 இல்ல நீங்க என்ன சொன்னாலும் சரி…  எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் கிடையாது … உங்க இஷ்டத்துக்கு நீங்க மாப்பிள்ளை பார்ப்பீங்க, ஆனா  நான் கல்யாணம் பண்ணிக்கணுமா…!!!  எனக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்குது …. அந்த அந்தஸ்துக்கெல்லாம் இவன் கொஞ்சம் கூட சரிப்பட்டு வரமாட்டான்… 

ஹேய் வார்த்தையை பார்த்து பேசுடி  பொம்பள புள்ளையாச்சே அப்படின்னு செல்லம் கொடுத்து வளர்த்தா …இப்போ  நீ இந்த அளவுக்கு பேசிக்கிட்டு இருக்கியா…..!!!  எல்லாம் உங்க அப்பன சொல்லணும் படிக்க போறேன்னு போறேல்ல … அந்த திமிறுல பேசுவ …  உங்க அப்பனும் உனக்கு ஒத்து ஊதிக்கிட்டு இருந்தான்ல அதனாலதான் நீ இவ்வளவு பேச்சு பேசுற … இது எவ்வளவு பெரிய சம்பந்தம் தெரியுமா …!!! இது எவ்வளவு பெரிய இடம் தெரியுமா…!!!  ஆனால் நீ என்னடானா இந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்க ..? அதுவும் கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு….இப்ப போய் இப்படி பேசுற ..?? என்று கிருத்திகாவை அவள் அன்னைத்திட்ட

நீ என்ன வேணா சொல்லிக்கோ… எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் கிடையாது…  அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு கணவனா வரப்போற அவனை பார்த்த சுத்தமா எனக்கு பிடிக்கல….  அவன் மூஞ்சிய பாத்தியா எப்படி வச்சிருக்கான்னு ..??? எங்கயாவது கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருக்கிறானா ….!! எனக்கு தெரியவே தெரியாது எனக்கு எந்த கல்யாணம்  வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் …. நேராக விதுரனின் பக்கத்தில் போய் உன்னை கல்யாணம் பண்ண எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் கிடையாது…  எங்க அம்மா அப்பானால தான்  இவ்வளவு தூரம் வந்தது. ஆனால் இதுக்கப்புறமும் நான் அமைதியா இருந்தேன்னா காலம் ஃபுல்லா உன் கூட குப்பை கொட்ட வேண்டியதா இருக்கும். அதனால இந்த கல்யாணத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று அவள் அசால்ட்டாக சொல்லியவள் அவன் கையிலே மாலையை திணித்துவிட்டு அந்த கோவிலை விட்டு சென்றாள்…. 

 யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை எல்லோரும் அமைதியாக மௌனமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க ஆனால் வயதில் மூத்தோரான  காதம்பரி பாட்டியோ நேராக  விஜயகுமார் ராகினி பக்கத்தில் போனார்.. 

 ஐயா ராசா உன் அக்கா பையன் இப்படி நின்னுகிட்டு இருக்கான்யா ….  நீ பொண்ணு கொடுத்து உதவியா…. அவன் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தான்….  நான் தான் வம்படியா அவன கல்யாணம் வரைக்கும் கூட்டிட்டு வந்தேன் … உங்க அக்காவும்..,  மாமாவும் என்னைக்கோ போய் சேர்ந்துட்டாங்க…  எங்க இவன் அப்படியே பட்ட மரமா போய்விடுவானோ ன்னு பயந்துகிட்டு தான் இந்த கல்யாணத்தை நான் அவ்வளவு தூரம் நான் எடுத்து நடத்தினேன் … ஆனா இப்படி வந்து நிற்கும்னு நினைச்சு கூட பாக்கலையா … உன் பொண்னு  மகராணி மாதிரி இருக்காயா …. அவளை இப்போ  உங்க அக்கா பையனுக்கு கட்டி கொடுயா…  எல்லாம் சொந்தம் தானய்யா…  என்று தன்  தங்கை மகன் இடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் காதம்பரி…. 

 அட என்ன மாமி நீங்க….. இதுக்கு போய் கெஞ்சிகிட்டு இருக்கீங்க..??? உன்  பொண்ண என்னோட பேரனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு கொடு டா சொன்ன   முடிஞ்சிருச்சு அதுக்கு ஏன் கெஞ்சிகிட்டு இருக்கீங்க…… அவ யாரு உங்க பேத்தி தானே உங்க பேத்திக்கு போய் இவ்வளவு தூரம் கெஞ்சுவீங்களா என்று சொல்லிய ராகினி  தன் நண்பிகளுடன் நடந்த கலவரம் எதுவும் தெரியாமல் சிரித்து பேசிக் கொண்டிருக்க அவளின் கையைப் பிடித்து வந்து நேராக விதுரனின் பக்கத்தில் போய் அவன் கைகளில் இருக்கும் மாலையை வாங்கியவள் விகிதாவின் கழுத்தில் போட்டால். 

அம்மா அம்மா எதுக்கு என் கழுத்துல மாலையை போடுற என்று தன் கழுத்தில் புதிதாக போடப்பட்டிருக்கும் மாலையைப் பார்த்து பெண்ணவள் புரியாமல் பதறி கொண்டு கேட்க… 

 எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் இப்ப போய் மாப்பிள்ளை பக்கத்தில் போய் நில்லு  என்று  ராகினி சொல்ல… 

 அவளை அப்படி இப்படி என்று பேசி சமாதானம் செய்தனர் விஜயகுமாரும் ராகினியும் …..நடந்ததை நினைத்துப் பார்த்த அவனின் முகம் பாறை போல் இறுகி இருந்தது….

விதுரன் இதில் எதுவும் கலந்து கொள்ளாமல் அவன் அப்படியே நிற்க விகிதாவை அவள் பக்கத்தில் நிற்க வைத்தனர்… 

 ஐயரே அம்மன் சன்னிதானத்தில் இருக்கும் அந்த  மாங்கல்யத்திற்கு மந்திரம் ஓத….  இங்கு அதே நேரத்தில் ரெடியாக வைத்திருக்கும் அந்த   அட்சத தட்டில் இருக்கும் அட்சதைய அங்கு உள்ளவர்களுக்கு ஐயர்  கொடுக்க … அவர்களும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு இருக்க அட்சதை தட்டில் கொஞ்சோண்டு அச்சதை இருக்கும் நேரத்தில் அய்யர் மறுபடியும் அந்த தட்டை அங்கே வைத்துவிட்டு அம்மன் சன்னிதானத்தில் இருக்கும் அந்த மாங்கல்யத்தை எடுத்து வந்தார்

 மணமகனின் கையில் கொடுக்க ..அவன்  மாங்கல்யத்தை ஒரு முறை பார்த்தவன் தன் பாட்டியையும் பார்த்து விட்டு  பக்கத்தில் பார்க்க வேண்டிய மணமகளை பார்க்காமல் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டான் அவனே….

 காதாம்பரி கண்களில் இருந்து கண்ணீர் வர…,  ராகினியோ  கண்கலங்க தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு நேராக தன் மகளின் பக்கத்தில் போய் அவள் தலையில் போட்டியிருக்கும் அட்சதையை அப்படி எப்படி என்று சரி செய்தால்…. 

கணவன் மனைவியா நல்லா அந்த அம்பாலா வேண்டிக்கோங்க … இன்னைக்கு  ரொம்ப நல்ல நாள் முகூர்த்த நாள் … அந்த நாள்ல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்திருக்கு…  நீங்க ரெண்டு பேரும் அந்த கடவுளால் ஆசிர்வாதிக்கப்பட்ட தம்பதிகள் அதனால நீங்க ரெண்டு பேரும் நல்ல  ஸ்வீட்சமா இருப்பீங்க …. என்று அந்த அய்யர் வாழ்த்திவிட்டு தனக்கான அமௌண்டை வாங்கிக்  கொண்டு..,  இந்த கோவிலை மூன்று முறை சுத்திவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார் அந்த இடத்தை விட்டு…. 

 அவன் கழுத்தில்  போடப்பட்டிருக்கும் அந்தத் துண்டில் பெண்ணின் தாவணியை கட்டி  இருக்க…. 

 தம்பி பாப்பா கைய பிடிச்சுக்கோங்க….  நீங்க ரெண்டு பேரும் இந்த கோவிலை சுத்தி வாங்க … நான் வந்திருக்கவங்களுக்கு சாப்பாடு அரேஞ்ச் பண்ணிக்கிறேன் என்று அவள் நகர போக

 அத்தை ஒரு நிமிஷம் என்று சொல்லியவன் ராகினியின் கையில் தான் வைத்து இருக்கும் அந்த சாப்பாட்டிற்கான டோக்கனை கொடுத்தான்… 

 ஹோட்டலின் பெயரையும் சொல்லி சாப்பாட்டிற்கான டோக்கனையும் கொடுத்து விஜய குமாரை பார்த்துக்க சொல்லிவிட்டு இவன் எதுவும் பேசாமல் விஹிதா  கையைப் பிடித்துக் கொண்டு அந்த கோவிலை சுற்ற சென்றான் … 

 ஏன் இப்படி கையை அழுத்தமா புடிச்சிருக்கா …, எனக்கு எவ்வளவு வலிக்குது தெரியுமா …!! அதுவும் அந்த விரலில்  நான் மோதிரம் போட்டு இருக்கேன் வலிக்குது கைய விடு … என்று அவள் சொல்ல…  அவளை பார்த்து ஒரு முறை முறைக்க…  அந்த முறைப்பில் கப்சிப் என்று ஆக வேண்டிய அவளோ அவனைப் பார்த்து திரும்பி முறைத்தவள் அவன் அழுத்தமாக பிடித்திருக்கும் கையில் நறுக்கு நறுக்கு என்று கிள்ளி வைத்தாள்… ஆனால் அவள் கிள்ளுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் முகத்தில் எந்த ஒரு சலனமும் காட்டாமல் அவன் அந்த கோவிலை மூன்று முறை சுற்றி வந்தான். 

மணமகளாக நிற்க வேண்டிய பெண்ணவளோ கல்யாணம் பிடிக்கவில்லை என்று கல்யாணத்தை நிப்பாட்டி விட்டு சென்று இருக்க…..  சுற்றி திரிந்த  பாவையவள் புது மணப்பெண்ணாக இருக்க …, கல்யாணத்தில் சந்தோஷ முகத்துடன் இருக்க வேண்டிய ஆடவனோ சந்தோஷத்தை தொலைத்து முகம் இறுக இருக்க …கல்யாணத்தை பார்க்க  வந்த சொந்தமோ …, இப்பொழுது நெருங்கிய சொந்தமாகிறது பெரியவரின் ஆசியாள்…. 

மான் விழியால் வருவாள்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!