எனை ஈர்க்கும் காந்தப்புயலே

4.4
(8)

புயல் – 7

காளிதாஸ் கூறியதை கேட்ட பிறகு தான் ரங்கராஜின் முகம் தெளிவடைந்தது.

“என்னடா சொல்ற.. நிஜமாவா.. பரிகாரம் செஞ்சா என் பேரனுடைய வாழ்க்கை சரியாகிடுமா?” என்று ஆர்வமான குரலில் கேட்டார்.

“எல்லாம் சரியாகிடும் டா நீ ஒன்னும் வருத்தப்படாத.. நாளைக்கு நாம போய் அந்த சாமியாரை பார்த்துட்டு வந்துடுவோம்”.

“இல்லடா வேண்டாம் நல்ல விஷயத்தை எதுக்காக தள்ளி போடணும் நாம இன்னைக்கே போய் அவரை பாத்துட்டு வந்துடுவோம். எனக்கு என் பேரனோட வாழ்க்கை சரியாகனும். எனக்குன்னு இருக்கிறது அவன் ஒருத்தன் மட்டும் தான். நான் போய் சேர்ரதுக்குள்ள அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துடனும் இப்போவே போகலாம் நீ உடனே கிளம்பி வா”.

“உடனேவா.. ஏன் டா இவ்வளவு அவசரப்படுற?”.

“தயவு செஞ்சு நான் சொல்றத கேளு தாஸ்.. அவன் வர வர ரொம்ப ரகடா நடந்துக்குறான் டா. எனக்கு அவனை இப்படி பார்க்கவே பயமா இருக்கு. நம்ம இன்னைக்கே போயிட்டு வந்துடுவோம்”.

“சரி சரி வரேன் நீ ரெடியா இரு”.

இவர் அழைப்பை துண்டிக்கவும் சூர்யா அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வரவும் சரியாக இருந்தது.

“என்ன தாத்தா எங்க கிளம்புறீங்க? ஏதோ இன்னைக்கே போயிட்டு வந்துடலாம்னு பேசிகிட்டு இருந்தீங்க”.

‘நான் என்ன பேசுறேன்னு ஒட்டு கேட்கிறதே இவனுக்கு வேலையா போச்சு. எல்லாத்தையும் கரெக்டா காதுல வாங்கிடுறான் சரியான பாம்பு காது இவனுக்கு’ என்று தனக்குள் புலம்பியவர்.

“அது ஒன்னும் இல்ல சூர்யா என் பிரண்டு காளிதாஸ் கோவிலுக்கு போகலாம்னு கூப்பிட்டான் அதான் எனக்கும் மனசு சரியில்ல இப்போவே போயிட்டு வந்துடலாம்னு சொன்னேன்”.

அவரை நம்பாத பார்வை பார்த்தவன், “சரி நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்”.

“சூர்யா ஒரு நிமிஷம்.. உனக்கு வேணும்னா என்னை பத்தி எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு என் பேரனுடைய வாழ்க்கையை நினைத்து நிறையவே கவலை இருக்குடா..

ஒத்த மகளை ஆசையா வளர்த்தேன் மொத்தமா அவளை பறி கொடுத்துட்டு நிக்கிறேன். இப்போ எனக்குன்னு இந்த உலகத்தில் இருக்கிறது நீ ஒருத்தன் தான். நீயும் இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறதை என்னால் பார்க்க முடியல.

அட்லீஸ்ட் நான் சாகுற வரைக்குமாவது ஒழுங்கா இருக்கலாம்ல.. நான் கண்ண மூடின பிறகு நீ உன் இஷ்டப்படி எப்படி வேணும்னாலும் இருந்துக்கோ அதை பார்க்க இந்த கிழவன் உயிரோட இருக்க மாட்டேன்”.

“ஏன் தாத்தா தேவை இல்லாத பேச்சு எல்லாம் பேசுறீங்க.. எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன். நீங்க என்னை பத்தி யோசிக்காதீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க.. கண்டதை யோசிச்சு என்னை தனி ஆளாக்கிடாதீங்க.. உங்க பிரண்டு வந்ததும் பார்த்து ஜாக்கிரதையா கோவிலுக்கு போயிட்டு வாங்க ஏதாவதுனா கால் பண்ணுங்க” என்று அவரிடம் விடைபெற்று அலுவலகம் புறப்பட்டான்.

சீதாவும் வேதவள்ளியிடம் எப்படியாவது சூர்யாவிடம் அவளின் நிலையைப் பற்றி நாள் கடத்தாமல் கூறும் படி கூறியிருந்தாள்.

‘இன்னைக்கு எப்படியாவது சார் கிட்ட இதை பத்தி சொல்லிடனும். அவர் என்ன நினைச்சாலும் சரி அவர் காலில் விழுந்தாவது காசை வாங்கி அந்த ஆள் முகத்திலேயே விட்டெறியனும். அதுக்கப்புறம் சூரியா சார் சம்பளமே இல்லாம வேலை பார்க்க சொன்னா கூட செஞ்சிடலாம்’ என்று ஏதேதோ எண்ணியபடி அவள் லிப்டில் ஏறவும்.

ராமும் அந்நேரம் சரியாக அவளுடன் லிப்டில் ஏறினான்.

வேதவள்ளியை பார்த்த உடனேயே அவனின் மனதிற்குள் மெல்லிய சாரல் வீசியது.

அவளை பார்த்து பளிச்சென்று புன்னகைத்தவன், “குட் மார்னிங் வேதவள்ளி”.

“குட் மார்னிங் சார்” என்று தடுமாற்றத்தோடு கூறியவளுக்கு அவனை எதிர் கொள்ளவும் சற்று சங்கடமாக இருந்தது.

“என்ன ஆச்சு உங்க முகமே டல்லா இருக்கு”.

“சாரி சார்.. நேத்து சரியா கவனிக்காம உங்கள பத்தி தப்பா புரிஞ்சுகிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க”.

“இட்ஸ் ஓகே வேதவள்ளி நீங்க என்ன வேணும்னா செஞ்சீங்க.. இன்பாக்ட் எத்தனையோ பொண்ணுங்க இந்த மாதிரி சிச்சுவேஷனை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியாம பயந்து தனக்குள்ளயே வச்சுப்பாங்க.. ஆனா நீங்க இவ்வளவு போல்டா அத்தனை பேரு முன்னாடி என்னை அடிச்சிருக்கீங்க.. உங்களுக்கு ரொம்ப தைரியம்.. பொண்ணுங்க எல்லாரும் உங்களை போல தான் இருக்கணும்”.

தன்னை பற்றி முழுதாக தெரியாமல் ராம் புகழ்வது வேறு வேதவள்ளிக்கு மேலும் சங்கடத்தை தான் கொடுத்தது.

அவள் முகம் இன்னமுமே தெளிவடையாமல் இருப்பதை பார்த்த ராம், “என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா?”.

“அது வந்து.. சார் சூரியா சார் கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கணும்”.

“என்ன ஹெல்ப்?”.

சூர்யாவிடம் கேட்பதற்கு முன்னர் இதைப் பற்றி ராமிடம் பகிர்ந்து கொள்வது தான் சரி என்று வேதவள்ளிக்கு பட்டது. ஒருவேளை இவள் எண்ணுவது தவறாக இருந்தால் அவன் வேறு ஏதாவது யோசனை கொடுப்பான் என்று எண்ணியவள் ராமிடம் சூர்யாவிடம் கேட்கப்போகும் உதவியை பற்றி கூற முடிவெடுத்தாள்.

“எனக்கு கொஞ்சம் பண உதவி தேவைப்படுது சார் அதான் சூர்யா சார் கிட்ட கேட்கலாம்னு நினைத்தேன்..” என்று தயங்கி தயங்கி ஒருவாறு கூறிவிட்டாள்.

“பண உதவியா.. எவ்ளோ?”

“10 லட்சம்”

“என்னது 10 லட்சமா.. வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பத்து லட்சம் பண உதவியா”.

“இல்ல சார் தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் இப்போ ரொம்பவே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கேன். அவசரமா 10 லட்சம் பணம் வேணும் யார்கிட்ட கேக்குறதுன்னு தெரியல.. எனக்கு நீங்க தான் எப்படியாவது சூர்யா சார் கிட்ட சொல்லி வாங்கி கொடுக்கணும்.

எத்தனை வருஷம் நீங்க இந்த கம்பெனியில் என்னை சம்பளம் இல்லாமல் வேலை செய்ய சொன்னாலும் நான் செய்றேன். ப்ளீஸ் சார்.. எனக்காக இந்த ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன்” என்று கெஞ்சலாக கேட்கும் வேதவள்ளியிடம் மறுக்க ராமிற்கு மனம் வரவில்லை.

பெருமூச்சை வெளியேற்றியவன், “சரி நான் சூர்யா கிட்ட பேசி பார்க்கிறேன். பட், கண்டிப்பா கிடைக்கும்னு என்னால் அஷுரன்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது. ட்ரை பண்ணி பார்க்கலாம் அவ்வளவு தான்..”.

அடுத்ததாக இருவரும் சென்று நின்றது என்னவோ சூர்யாவின் முன்னிலையில் தான்.

“என்னடா இவளை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்து இருக்க” என்று ராமிடம் சூர்யா சிடுசிடுக்கவும்.

“என்னோட அசிஸ்டன்ட் என் கூட தானடா இருப்பா” என்று சிரித்துக் கொண்டே கூறினான் ராம்.

அடுத்த இரண்டு நாட்களும் ராமின் பின்னோடே சுற்றிக்கொண்டு இருந்தாள் வேதவள்ளி.

ராமும் சூர்யாவிடம் பேசுவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அது தான் அவனுக்கு அமையவே இல்லை.

அன்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய சூர்யாவிற்காகவே காத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் தாத்தா.

இவன் வீட்டிற்குள் நுழைந்ததுமே, “சூரியா ஒரு நிமிஷம் இங்க வா”.

“என்ன தாத்தா?” என்றவாறு அவன் அவரை நோக்கி செல்லவும்.

அவனின் கையை வலுக்கட்டாயமாக பிடித்தவர் தன் கையில் இருந்த மஞ்சள் கயிற்றை அவன் கையில் கட்டினார்.

“தாத்தா என்ன பண்றீங்க நீங்க.. கையை விடுங்க என்ன இது?” என்று சிடுசிடுத்தவனிடம், “பாத்தா தெரியலையா கயிறு கட்டிக்கிட்டு இருக்கேன்”.

“அது தெரியுது இப்போ எதுக்கு இந்த கயிறு?”.

“நம்ம குடும்பத்துல நிறைய பிரச்சனை நடந்து போயிடுச்சு. உன்னுடைய வாழ்க்கையில் நாம எதிர்பார்க்காத நிறைய சம்பவங்கள் நடந்திடுச்சு. அதை எல்லாம் சரி பண்றதுக்கு ஏதாவது பரிகாரம் கிடைக்குமானு கேட்டு நானும் காளிதாசும் ஒரு சாமியாரை பார்க்க போயிருந்தோம்”.

“ஆரம்பிச்சுட்டீங்களா.. இப்போ தான் கொஞ்சம் நாளா இந்த பரிகாரம் எல்லாம் இல்லாம இருந்துச்சு. திரும்பவும் நீங்களும் உங்க ஃபிரண்டும் சேர்ந்து பரிகாரம் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா” என்று அவன் சிடுசிடுக்கவும்.

“நான் சொல்றத முதல்ல கேளுடா எல்லாம் உன் நல்லதுக்காக தானே நான் செய்றேன்”.

“சரி இப்போ உங்க சாமியார் என்ன பரிகாரம் சொன்னாரு?”.

“இந்த மஞ்ச கயிறை உன் கையில கட்டி வைக்க சொன்னாரு.. இனி உனக்கு எல்லாமே நல்லதா தான் நடக்குமாம்”.

“என்ன தாத்தா விளையாடுறீங்களா.. இதை கட்டிக்கிட்டு நான் எப்படி ஆபீஸ்க்கு போறது. பாக்குறவங்க எல்லாம் கேலி பண்ணி சிரிப்பாங்க” என்று தன் கையில் கட்டி இருந்த கயிறை வேகமாக அவிழ்க்க முற்பட்டவனின் கையை பிடித்த தாத்தா, “தயவு செஞ்சு எனக்காக இதை நீ கட்டிக்க மாட்டியா ப்ளீஸ் டா தாத்தாவுக்காக”.

சலிப்பாக தன் தலையை இரு பக்கமும் ஆட்டியவன், “நீங்க ஏன் தாத்தா இப்படி இருக்கீங்க.. இந்த கயிறை என் கையில் கட்டுறதால் என் வாழ்க்கையில் மேஜிக் நடந்திடுமா.. சரி உங்களுக்காக வேணும்னா இந்த கயிறை நான் என் கூடவே வச்சிருக்கேன். ஆனா என்னால் என் கையில் எல்லாம் கட்டிக்க முடியாது பாக்கெட்ல‌ வச்சிக்குறேன்”.

தன்னோடு அதை வைத்துக் கொள்கிறேன் என்று அவன் கூறியதே அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. மிகவும் கட்டாயப்படுத்தினால் அவன் வைத்துக்கொள்ளவே மாட்டேன் என்று திருப்பி கொடுத்தாலும் கொடுத்து விடுவான் என்று எண்ணியவர் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டார்.

இப்படியே ஒரு வாரம் கடந்து விட்டது.

தன் எதிரே கையை பிசைந்து கொண்டு நின்றிருக்கும் வேதவள்ளியையும் அவள் அருகே நின்றிருக்கும் ராமையும் உறுத்து விழித்த சூர்யா, “நான் தான் உன்கிட்ட அப்போவே சொன்னேன்ல இந்த பொண்ணு பணத்துக்காக தான் அன்னைக்கு கூட ஓவரா ரியாக்ட் பண்ணி இருக்கா.. நாம பணம் கொடுக்கலைன்னு சொன்னதும் இப்போ அடுத்த டிராமாவை ஸ்டார்ட் பண்ணிட்டா” என்றான் எரிந்து விழுந்தவாறு.

அவனின் சாடலில் வேதவள்ளிக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. அவனிடம் எதுவோ கூற அவள் வாயை திறக்கவும்.

அதற்குள் ராம், “சூர்யா இப்படி எல்லாம் பேசாத.. அவங்களோட சிச்சுவேஷன் இப்போ ஏதோ சரியில்லையாம் அதனால் தான நம்மகிட்ட ஹெல்ப் கேக்குறாங்க நாம வேணும்னா அவங்க கிட்ட காண்ட்ராக்ட் போட்டு அக்ரிமெண்ட்ல சைன் வாங்கிக்கலாம்”.

தன் நண்பன் வேறு அவளுக்கு பரிந்து பேசுவது சூர்யாவிற்குள் கோபத்தீயை மூட்டியது. அனைத்தும் சேர்ந்து வேதவள்ளியின் மீது தான் கடும் கோபம் எழுந்தது.

அவள் தனக்கானவள் என்பதை அறியாமல் அவளின் மீது தேவையற்ற வீண் கோபத்தை சுமந்து கொண்டிருக்கிறான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!