விக்ரமன் தனக்கு முன்னாள் ஸ்டைலாக கண்ணில் கண்ணாடியுடனும் முகத்தில் திமிர் வழிய தனது கலரிங் செய்யப்பட்ட சிகையை கோதியவாறே நிற்கும் தனது அருமை மகன் ரகோத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். பின்னே முறைக்க மாட்டாரா என்ன கிட்டத்தட்ட அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது..
இந்த ஒரு வாரமும் அவரை ஒரு வேலையையுமே செய்ய விடாமல் எரிச்சல் படுத்திக்கொண்டு அல்லவா இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் அவர் பின்னாலையே பாடிகாடுக்கு டஃப் கொடுப்பது போல வந்துக் கொண்டிருந்தவனை முறைக்காமல் கொஞ்சவா செய்வார்கள்.
ஆம் விக்ரமனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கூட்டி வந்து விட்டான் வினையன். ஆனால் வந்தவனோ அவரை ஒரு வேலையும் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டும், அவரை எப்போதும் உறக்கத்திலேயே வைத்திருப்பதில்லையே முதன்மையாக சுற்றிக் கொண்டிருந்தான்.
முதலில் அமைதியாக அவனுக்கு கட்டுப்பட்டுக்கொண்டிருந்த விக்ரமோ இறுதியாக அவனிடம் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார்.”கண்ணா கட்சி வேலை ஜாஸ்தியா இருக்குப்பா.. ஏகப்பட்ட நலத்திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்து அப்படியே பெண்டிங்ல போட்டாச்சு.. ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல ரெஸ்ட் எடுத்தாச்சு வீட்ல வந்து அந்த ரெஸ்டையே எடுக்க சொல்றியேப்பா..”என்று கெஞ்சியவறோ.. “சரி போன போகுதுன்னு ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தாச்சுல்ல.. இப்பயாச்சும் என்னை வேலை பார்க்க விடேன்..”பாவமாக கெஞ்சலாக கேட்ட தனது தந்தையை இரக்கமில்லாமல் பார்த்துவானோ..
“ம்ச் அதெல்லாம் முடியாது டேட் நீங்க கண்டிப்பா ரெஸ்ட் எடுத்தே ஆகணும்.. உங்க கை இன்னும் சரியாகல ஞாபகம் இருக்கு இல்ல.. உங்களால எந்த வேலையும் தனியா செய்ய முடியாது.. ஃபல்ஸ் தானே அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்..” என்றவனோ அவருடைய பிஏவை கூட இப்போதெல்லாம் அவரது அருகிலேயே விடுவதாக இல்லை.
தன் முன்னால் வந்து நின்ற விக்ரமனின் பிஏவை கண்களில் அனல் கூட்டி முறைத்தவனோ.. “அட அதுக்குள்ள வந்துட்டீங்களா கொஞ்ச நாளாவது அவர நிம்மதியா விடுவீங்களா மாட்டீங்களா… இன்னும் அப்பாவுக்கு சரி ஆகல.. சரியானதுக்கப்புறம் வாங்க..”கடுமையாக பிஏவை அடித்து துரத்தாத குறையாக விரட்டி கொண்டிருந்தான்.
ரஞ்சித்திற்கு இதை எல்லாம் பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது.. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவருக்கு எப்படிப்பட்ட வேலை எல்லாம் இருக்கும் என்று நன்றாக அறிந்தவன் தான் வினையன்.. ஆனாலும் அவனுக்கு தன்னுடைய தந்தையின் உடல்நிலைக்கு தான் இப்போது அதிக முக்கியத்துவமாக தெரிந்தது..
ஆனால் ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா என்பதற்கிணங்க.. இவ்வளவு நாள் கட்சி கட்சி என்று ஓடிக்கொண்டிருந்தவறால் இப்போது அமைதியாக இருக்க முடியவில்லை.. “கண்ணா நீ சொன்னன்னு ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுத்தாச்சுப்பா இன்னும் ரெஸ்ட் எடு, ரெஸ்ட் எடுனா வேலையெல்லாம் யாருப்பா பார்க்கிறது.. இன்னும் ரெண்டு மாசத்துல மிகப்பெரிய எலக்சன் வருது உனக்கு தெரியும்ல.. அந்த எலக்சனுக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கு தெரியுமா? எல்லாத்தையும் நான் தான பாத்துக்கணும்..” கெஞ்சலாக கெஞ்சு கொண்டிருந்தவரை பார்த்து மறுப்பாக தலையசைத்தவனோ..
“எல்லாத்தையும் நீயே பாக்குறனா… அப்புறம் ஏன் உனக்கு தொண்டனுங்க இருக்கானுங்க.. ஏன் உங்களோட தொண்டர்கள் எல்லாம் எங்க போயிட்டாங்க..”ஆத்திரமாக கத்தியவனோ… “டேட்.. சும்மா தொண்டன் தொண்டனு ஊரு முழுதும் சொல்லிட்டு சுத்துறதுக்கா நீங்க கூட வச்சிட்டு இருக்கீங்க.. இது எல்லாத்தையும் அவங்கள பண்ண சொல்லுங்க.. எல்லா இடத்திலும் நீங்களே போய் நிக்கணும்னா அப்புறம் எதுக்கு நீங்க முதலமைச்சரா இருக்கனும்…”அதிகார தோணியில் கத்தியவன்…
“சீ டேட்.. நீங்க சொல்றதையே தான் நானும் சொல்றேன் உங்களுக்கு பொறுப்புகள் அதிகமா இருந்தாலும் தொண்டர்கள் அதிகமில்லையா.. அப்போ வேலைகளை கம்மி பண்ற அளவுக்கு தொண்டர்கள் தான் எல்லாத்தையும் செய்யணும் டேட்.. உங்க தொண்டர்களை எல்லாத்தையும் செய்ய சொல்லுங்க நீங்க வேணும்னா இந்த ரூம்லயே உட்கார்ந்து அதுக்கு என்ன என்ன பண்ணனும்னு பிளான் மட்டும் போட்டு கொடுங்க..”உறுதியாக கூறியவனோ தனக்கு தந்தையை கூர்மையாக பார்த்தவன்… “பட் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க டாட்.. உங்களுக்கு நடந்த இந்த ஆக்சிடென்ட் ஒரு திட்டம் போட்ட சதியா இருக்குமோன்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கு.. நீங்க சொல்றதுதான் எலக்சன் வர்றதுக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு அதுக்குள்ள உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஆக்சிடென்ட் ஆகுதுன்னா இது என்னமோ நார்மலா எனக்கு தெரியல.. இட்ஸ் சம்திங் ஃபிஷி டேட்.. அதுக்காக தான் சொல்றேன்.. கொஞ்சம் வெளியில போறதெல்லாம் கம்மி பண்ணிட்டு வீட்ல இருந்தே உங்களுக்கு என்ன வேலை செய்யணுமோ அதை செய்யுங்க.”கூறியவனை கடுப்பாக பார்த்த விக்ரமன்…
“அது எப்டி கண்ணா முடியும்.. எலக்ஷனுக்கு நிறைய பிரச்சாரம் செய்யனுமே… அத விட சொல்றியா…”என்றார்
“ம்ச் ஐ டோன்ட் கேர் டேட்… ஒழுங்கா வீட்ல இருங்க,, அத விட்டுட்டு வெளியில வெளியில ஓட நிக்காதீங்க டேட்.. நீங்க என்னதான் இந்த ஸ்டேட்டோட முதலமைச்சரா இருந்தாலும் நீங்க எனக்கு எப்போதுமே என்னோட அப்பா தான் எனக்கு என் அப்பா ரொம்ப முக்கியம்,, புரிஞ்சுகிட்டு வேலைய பாருங்க..” என்று முகத்தை கடுமையாக வைத்து ஏசிக் கொண்டிருந்தான்.
ரஞ்சித் இதனை எல்லாம் கையை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவனுக்கு நன்றாக தெரியும் வினையனுக்கு அவனது தந்தையின் விஷயத்தில் மட்டும் எப்போதும் கறாராக தான் இருப்பான் என்று. அதில் ரஞ்சித்தை கூட அவன் சாதாரணமாக விட்டு விட மாட்டான்..
விக்ரமன் பாவமாக ரஞ்சித்தை பார்க்க அவனும் உதட்டை பிதுக்கியவன்.. “என்னால முடியாதுப்பா உங்களோட பையன் கிட்ட என்னால மாரடிக்க முடியாது.. எதுனாலும் நீங்களே பேசிக்கோங்க..” என்று கையை விரித்தவனை பார்த்து ரகோத்தோ முறைத்தவாறே நின்று கொண்டிருந்தான்..
நண்பனின் முறைப்பை கண்டு “ஏண்டா ஏன் என்னை தொட்டதுக்கும் முறைக்கிற..” என்றவனோ அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் விடாமல் செக்யூரிட்டி டைட் செய்து வைத்திருந்தான்.. அதுவும் ரகோத்தின் வேலைதான்..
“ம்ச் என்னமோ பண்ணுங்க டா நீங்க.. சொல் பேச்ச கேட்கிறதில்ல.. இவன் அம்மாவ விட ரொம்ப மோசமா இருக்கான்..”வாயிற்குள் ரகோத்தை திட்டியவாறு விக்ரமன் தனது அறைக்குள் சென்று விட்டார்.. போகிறவரை பார்த்து ரகோத்திற்கு பெரும்மூச்சினை தான் விட முடிந்தது.
“ஏண்டா இப்படி..”அலுத்தவாறே ரஞ்சித் கேட்டவனுக்கு… “ரஞ்சித் நீ சும்மா இருடா அவர் இப்படித்தான் பொலம்பிட்டு போவாரு.. அடிபட்டுட்டு வந்து நின்னா அப்ப தெரியும்.. ம்ச் அவருக்கு என்ன வந்துது சும்மா அடிப்பட்டுட்டு போவாரு ஆனா நம்மதான் அனுபவிக்கனும்.. அவருக்கு அடிப்பட்டுட்டோனே நான் எப்படி தெரியுமா துடிச்சு போயிட்டேன்.. இப்ப வரைக்கும் இங்க படக் படக்னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு தெரியுமா..”தன்னுடைய இதயத்தை காட்டியவனை கண்டு பெரிதாக சிரித்து கொண்டான் ரஞ்சித்.
ரகோத்தின் இந்த பயத்திற்கும் ஒரு காரணம் இருந்தது.. அதுதான் அவனது அன்னை அபிராமியின் இறப்பு. கிட்டத்தட்ட சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருக்கும் அப்போது ரகோத்திற்கு எட்டு வயது இருக்கும்.. அப்போதும் விக்ரமன் முதலமைச்சர் ஆக இருந்தவர் தான். விக்ரமன் தன்னுடைய சிறுவயதில் இருந்து கட்சி கட்சி தொண்டன் தொண்டன் என்று தான் சுற்றிக் கொண்டிருப்பார். அப்படிப்பட்டவருக்கு அந்த இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவி கிடைத்தது ஒன்றும் அவ்வளவு பெரிய விடயம் இல்லை தான்.. அவரின் வாழ்க்கை அந்த அரசியலை சுற்றி தான் எப்போதும் இருக்கும்.
அரசியம் முதல் என்றால் இன்னொரு விஷயம் என்னவென்றால் அவரது மனைவி அபிராமி. விக்ரமன் அபிராமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால் அபிராமியின் மீது ஏகப்பட்ட காதலை வைத்திருந்தார் விக்ரமன். அவர் அபிராமி மூலம் ரகோத் பிறந்ததற்கு பிறகு தான் அவருக்கு முதலமைச்சர் பதவியே கிடைத்தது. ஒரு பக்கம் கட்சியையும், இன்னொரு பக்கம் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு சந்தோசமாக ஓடிக்கொண்டிருந்த விக்ரமனின் வாழ்க்கையில் இடியாக வந்து விழுந்தது தான் அபிராமியின் இறப்பு.
விக்ரமனின் வளர்ச்சி பிடிக்காத சில எதிரிகளின் தாக்குதலில் அபிராமி ஒரு நாள் மடிந்து போனார். ஆம் அபிராமி ஒரு நாள் மாலை தன்னுடைய மகன் ரகோத்தை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றிருந்தார்.. எப்போதும் அபிராமி தான் காரினை ஒட்டிக்கொண்டு செல்வார்.. அப்படி அவர் செல்லும் போது தான் ரகோத்தினை அழைக்க சரியாக காரினை சென்று பள்ளியின் வாசலில் நிறுத்த ரகோத்தும் சந்தோசமாக சிட்டுக்குருவியாக தனது அன்னையைப் பார்த்து ஓடி வந்த வேகத்தில் தான் அபிராமி ஓட்டி வந்த காரின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று அவரை அடித்து தூக்கியது.. அதில் காருடன் நிலைகுலைந்து போன அபிராமியும் தனது மகனை கண்ணுக்குள் நிரப்பி கொண்டு அப்படியே உயிர் நீத்து போனார்.
தனது அன்னையின் இறப்பை கண்ணோடு கண்ட ரகோத்திற்கு உலகமே தட்டாமலை சுற்றியது.. “அம்மா…” என்று கதறியவாறே அப்படியே மயங்கி விழுந்தவனோ ஒரு வாரத்திற்கு காய்ச்சலில் தான் கிடந்தான். அபிராமியின் இறப்பு இயற்கையாக நடந்தது இல்லை என்று விக்ரமனுக்கு நன்றாகவே தெரியும்.. அவரது அரசியல் எதிரிகள் தான் அவரை மனதளவில் உடைய வைப்பதற்காக அபிராமியை கொலை செய்ய திட்டம் போட்டது,அதனை அரங்கேற்றம் செய்தது.. அனைத்தையும் கண்டுபிடித்த விக்ரமனும் தனது மனைவியை கொன்றவர்களை அடுத்த நாளே பழி வாங்கியது வேறு விடயம்.
அதன் பிறகு அன்னைக்கு அன்னையாக தந்தைக்கு தந்தையாக இருந்தது விக்ரமன் தான். அதனால்தான் ரகோத் தனது தந்தைக்கு இந்த அளவிற்கு கட்டுப்பாடு விதித்து கொண்டிருந்தான் என்று நன்றாகவே ரஞ்சித்திற்கும் தெரியும்.
“அப்புறம் டா மாப்ள.. என்ன யோசிச்சுக்கிட்டே இருக்க..”கூலாக ரஞ்சித்தின் தோளில் கை போட்ட ரகோத்தை திருப்பி பார்த்தவனோ…
“ம்ம் சொல்லுடா உனக்கு ஷூட் இல்லையா இன்னிக்கி..”ரஞ்சித் கேட்டான்..
“ம்ம் அதெல்லாம் இருக்கு இருக்கு.. இல்லாம எங்க போக போது.. முடி நரைக்கிற வர இந்த நடிப்புக்கு பங்கமில்ல தான்…“என்றவனோ.. “நான்தான் அப்பாக்கு இப்படி அடிப்பட்டுன்னு ஷூட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க சொல்லிட்டேன்.. அதுவும் என்னோட ஹாலிடே வேற செலபரேட் பண்ண முடியாமல் போயிடுச்சா அதனால கொஞ்சம் ஸ்ட்ரெஸ்சா வேற இருக்கு.. அதனாலதான் இந்த ஒரு வாரம் இப்படியே அப்பா கூட இருந்துட்டு அதுக்கப்புறம் மறுபடியும் சூட்டுக்கு போலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்…”உடலை வளைத்து நெட்டி முறித்தவாறே பேசியவன் ரஞ்சித்தை பார்த்து “அப்புறம் கேட்க மறந்துட்டேன் எப்படிடா இருக்காங்க அம்மாவும், அப்பாவும்.. அப்புறம் உன்னோட ஒய்ஃப் அப்புறம் இப்போ லேட்டஸ்ட்டா நீ டெலிவரி பண்ண உன்னோட ட்வீன்ஸ் எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்..” என்று அக்கறையாக ரஞ்சித்தை விசாரித்தான்.
ரஞ்சித்தோ அவனை அனல் பார்வை பார்த்தவனோ “நீ பேசாதடா எரும..” என்று எரிந்து விழுந்தான்.
அதனை கேட்ட ரகோத்திற்கு சிரிப்புதான் வந்தது.. “ஏன்டா என்னை பார்த்து பொசுக்குன்னு எருமன்ட்ட.. நான் அமேசிங் ஸ்டார்ட்டா.. இப்டி சொன்னது மட்டும் என் ஃபேன்ஸுக்கு தெரிஞ்சிது உன்ன வச்சி செஞ்சிடுவாங்க..” என்று கிண்டலாக கூறியவனுக்கு தனது நண்பனின் கோபம் எதனால் என்று தெரியாமல் எல்லாம் இல்லை..
அவனை மேலும் கீழும் பார்த்த ரஞ்சித்தோ.. “ம்ம் நான் எதுக்கு கோபப்படுறேன்னு உனக்கு தெரியாது அப்படித்தானே..” இடுப்பில் கை வைத்து கேட்டவனை கண்டு இதழ் விரிய சிரித்தவனோ “ஏன் தெரியாம அதெல்லாம் நல்லாவே தெரியும்…” என்றவன் “உனக்கே தெரியும் இல்லடா எனக்கு ஷூட் இருந்ததுனால தான்டா பார்க்க வர முடியல..” என்று கூற அதில் இன்னும் கடுமையாக முறைத்த ரஞ்சிதோ..
“ம்ச் லூசு பயலே ஏன்டா கிட்டத்தட்ட நீ நம்ம வீட்டுக்கு வந்து பத்து வருஷம் ஓடிப்போச்சுடா.. அப்பாவும், அம்மாவும் எப்ப பார்த்தாலும் உன்னை கேட்டுக்கிட்டே இருக்காங்க.. என்னப்பா இது இந்த புள்ள வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆகுது எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்னு கேட்டுகிட்டே இருக்காங்க.. அவங்க கேக்குறது மட்டும் இல்லாம இப்போ இந்த எட்டு வருஷமா இன்னொருத்தி கேட்டுகிட்டே இருக்கா..” என்றவனுக்கு கடைசியாக கூறியவளை நினைக்க அவன் முகம் பளபளப்பாக சிலாகித்து போனது.
அதனைப் பார்த்து ரகோத்திற்கு மெல்ல இதழ் விரிய சிரித்தவன் “என்னடா உன்னோட ஒய்ஃப் கனவுல வந்து டார்ச்சர் பண்றாங்களா..” என்றவனுக்கோ நன்றாக தெரியும் ரஞ்சித்திற்கு இருபது வயதில் திருமணம் முடிந்தது என்று.. ஆம் ரஞ்சித்திற்கு திருமணம் முடிந்து எட்டு வருடம் ஆகிப் போனது.. அப்போது ரஞ்சித்திற்கு இருபது வயது தான்..
ரஞ்சித் ஊட்டியை சேர்ந்த படுகர் இனத்தை சேர்ந்தவன். அவர்களின் சட்டதிட்டபடி அவர்களுக்கு மிகவும் குறைந்த வயதிலேயே திருமணம் முடிந்து விடும்.. அப்படிதான் ரஞ்சித்திற்கும் திருமணம் முடிந்தது. “சும்மா என்ன வெறுப்பு ஏத்தாதடா என்னோட கல்யாணத்துக்கும் வரல.. இப்போ எனக்கு குழந்தைங்க பிறந்து ஆறு மாசம் ஆகுது இப்பயும் அவங்கள பார்க்க வரல..” என்று ஆங்கிரி பேடாக கத்திக் கொண்டிருந்தவனை பார்த்த ரகோத்தோ அவன் தோளில் சமாதானமாக தட்டியவன்
“நீயே யோசிச்சு பாருடா உனக்கு கல்யாணம் ஆகும்போது நான் அமெரிக்காவில படிச்சுக்கிட்டு இருந்தேன் டா.. அப்ப என்னோட பைனல்ஸ் வேற.. நிறைய ப்ராஜெக்ட்ஸ் அது இதுன்னு ஓடிக்கிட்டு இருந்தது.. அதனாலதான் உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியல.. அதுக்கப்புறம் ஆக்டிங்னு பிஸியா ஆயிட்டேன்.. நீ கேட்கலாம் அதுக்காக ஒரு தடவை கூட வீட்டுக்கு வராம இருப்பியான்னு இந்த இண்டஸ்ட்ரில ஏதாவது ஒரு வகையில பெரிய ஆளா ஆகணும்னு அமைதியா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்டா.. அதனாலதான் உங்க வீட்டுக்கு வர முடியல.. அதுக்காக என்ன அதான் இப்போ உனக்கு குழந்தையே பிறந்துருச்சு கண்டிப்பா இந்த தடவை குழந்தைகளை பாக்குறதுக்கு வரனும்ல… அப்போ அப்படியே உன்னோட வைஃபையும் பார்த்துடலாம்…” என்று கூறியவனுக்கு தெரியவில்லை இந்த தடவை ரஞ்சித்தின் மனையாளை பார்க்கும் போது ரகோத்தின் வாழ்க்கையே திசை மாறி சென்று கொண்டிருக்கும் என்று.