இது ஒரு மென்மையான காதல் கதை
நாயகன் : சூர்யாதேவ்
நாயகி : ஒளிர்மதி
இவர்களுக்கிடையேயான ஊடலும் காதலும் தான் கதை.. இனி டீஸர்
“சீனியர் ஐ யம் சாரி” என்றவளை..
கோபமாக பார்த்தவன், “இதையே நான் பண்ணிட்டு சாரி கேட்டா நீ அக்சப்ட் பண்ணுவியா.. படிக்கதான வந்த குடிச்சிட்டு கூத்தடிக்கிற ஒருவேளை என்னோட இடத்தில வேற யாராவது இருந்தா உன்னோட நிலைமை என்ன..?” என்றவனிடம்..
“நான் உங்களை லவ் பண்றேன் சீனியர்” என்று வரவழைக்கப்பட்ட தைரியத்தோடு குரல் நடுங்க கூறினாள் ஒளிர்மதி..
“ஓ” என்ற நக்கல் பார்வையோடு.. “நேற்று என்னை மயக்கதான் முத்தம் கொடுத்தியா பணக்காரன கல்யாணம் பண்ணினா வாழ்க்கைல செட்டிலாகிடலாம்னு நினைச்சுதான் என்ன லவ் பண்றேன்னு சொல்றியா.. இந்த பணத்துக்காகதான என்னை லவ் பண்றேண்ணு” சொல்ற என்றவன், தன் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து அதனை அவள் முகத்தில் விட்டெறிந்தவாறே “இது நேற்று எனக்கு தந்த முத்ததிற்கு” என்று அவளின் கண்ணீரையும் கண்டுகொள்ளாது அங்கிருந்து சென்றவனின் வார்த்தைகளின் வீரியத்தை தாங்க இயலாது மயங்கி சரிந்தாள்..