என் தேடலின் முடிவு நீயா – 07

4.8
(25)

தேடல் 07

அபின்ஞான் ஷார்ட்ஸ் மாத்திரம் அணிந்து வெற்று மார்புடன் கட்டிலில் அமர்ந்து, ஒரு ஆங்கில புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்…

அவளுக்கு அவனது வெற்று மேனியை பார்க்க சங்கடம்…

தலையை குனிந்தபடி வந்தவள் தயக்கமாக அவன் அருகே அமர, “ஏய்” என்று கத்தியப்படியே கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தான்.

 மகிமாவோ அவனை புரியாமல் பார்க்க, கை நீட்டி கட்டிலை காட்டியவன், “இங்க என்ன பண்ற” என்று கேட்டான்.

“இங்க என்ன பண்ண… படுக்கத்தான் வருவாங்க” என்றாள் நக்கலாக…

“அது எனக்குத் தெரியாதா?” என்றவன், “என் கட்டில்ல உனக்கு இடமெல்லாம் தர மாட்டேன்… போய் சோபால படு டி” என்றான்.

அவனை விசித்திர ஜந்து போல் திரும்பி பார்த்தவள்… “என்னடா இவன் பொண்ணுங்க சொல்ற டயலாக்கே சொல்லிட்டு இருக்கான்…” என்று நினைத்தவள், “என் உயரத்துக்கு அந்த சோபா பத்தாது” என்று சோபாவை கைகாட்டி கூற…

சோபாவை ஒரு கணம் பார்த்தவன், “சரி நிலத்தில் படுத்துக்கோ” என்றான்.

“நான் இதுவர நிலத்தில படுத்ததே இல்ல…” என்றாள் மகிமா.

 “ஐ டோன்ட் கெயார்… புருஷனுக்காக நீ கொஞ்சம் எஜெஸ்ட் பண்ணி வாழலாம் தப்பில்ல” என்றான் அபின்ஞான்.

 அவனைப் பார்த்து சிரித்தவள், “பொண்டாட்டிக்காக நீங்களும் கொஞ்சம் எஜெஸ்ட் பண்ணி வாழலாம் அதுவும் தப்பில்ல” என்றாள்.

“என்னால உனக்கு எல்லாம் விட்டுத் தர முடியாது” என்று அவன் முறுக்கிக் கொள்ள,

“ஹலோ மிஸ்டர்… நான் ஒன்னும் இங்க வரல… நீங்க தான் பெரிய ட்ராமா போட்டு என்ன வர வச்சீங்க… அது மட்டும் இல்லாம நீங்க இவ்ளோ பெரிய பணக்காரன்… இங்க எட்டடி பெட் வெச்சி இருக்கீங்க… நான் ஒரு ஓரத்தில தான் படுக்க போறேன், எனக்கு நிறைய இடமும் போகாது, கொஞ்சம் இடம் தாரதுல உங்களுக்கு என்ன பிரச்சன…” என்று தூக்கம் வந்தும் அவன் தூங்க விடாத கோபத்தில் எகிறி கொண்டுவர..

“சரி படுத்து தொலை” என்றவன் கையில் இருந்த புத்தகத்தை வைத்து விட்டு அவளுக்கு மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டான்…

“திமிர பாரேன்” என்று நினைத்த மகிமாவும் விடி விளக்கை ஒளிர விட்டு படுத்தாள்…

அபின்ஞான் தன் திருமண நாள் மட்டும் தான் வீட்டில் இருந்தான்.

 அதன் பிறகு அலுவலகத்துக்கு சென்றால் அவன் வரவே ஒன்பது மணி தாண்டிவிடும்.

மகிமாவின் முழு நேரமும் அன்னபூரணி அம்மாளுடனே கழிந்தது…

 சனி ஞாயிறு மற்றும் தான் மேற்படிப்புக்காக பல்கலைக்கழகத்துக்கு சென்று வருவாள் மகிமா.

அன்று சனிக்கிழமை எல்லோரும் வீட்டில் தான் இருந்தார்கள்…

அபிஞ்ஞான் ஷார்ட்ஸ் ஒன்றுடன் சுற்றிக் கொண்டிருந்தான்…

 அவனைப் பார்த்த மகிமாவுக்கோ பற்றி கொண்டு வந்தது… “இவனுக்கு போட்றதுக்கு வேற டிரஸ்ஸே இல்லையா… எப்ப பார்த்தாலும் அரைகுறையா சுத்திட்டு இருக்கான்” என மகிமா தனக்குள் முணுமுணுத்துக் கொள்வாள்…

ஆரம்பத்தில் அவளுக்கு சங்கடமாக இருந்தது…

ஆனால் அவன் வீட்டில் இருக்கும் முழு நேரமும் இவ்வாறே இருப்பதால் அவளுக்கு இப்போது பழகி விட்டிருந்தது…

தினமும் காலையில் எடுக்கும் வெறித்தனமான உடற்பயிற்சியில் அவன் உடல் கட்டுக்கோப்பாக, கிரேக்க சிற்பம் போல் இருந்தது…

மார்பில் டயமண்ட் டேட்டு குத்திருந்தான்…

அபின்ஞான் முகத்தை தாண்டி சிக்ஸ் பேக் தேகத்தை நோக்கி செல்லும் பார்வையை கட்டுப்படுத்த மகிமா படாத பாடு படவேண்டி இருக்கும்… அவளுக்கோ அவன் மார்பில் இருக்கும் டேட்டடூவை தொட்டுப் பார்க்க அலாதியான ஆசை…

அபின்ஞான் திருமண வரவேற்பு பற்றி அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க,

“ஐ… டேட்டூவ டச் பண்ண சான்ஸ் கிடைச்சிடுச்சு…” என்று நினைத்தவள், கண்கள் மின்ன அவன் அருகே சென்று… டேட்டூவை தொட பார்க்க சட்டென்று அவள் கையை பற்றிக் கொண்டான் அபின்ஞான்.

அவளை முறைத்து பார்த்தபடி, “ஐ வில் கால் யூ பெக்” என்று கூறி அழைப்பை துண்டித்தவன்… “என்னடி பண்ற” என்று அதிர்ச்சியாக கேட்டான்…

“உங்க டேட்டூ கிட்ட ஏதோ இருக்கு” போல என்று மகிமா கூற.

“உனக்கு கண்ணும் ஒழுங்கா தெரியாதா? டேட்டூ மட்டும் தான் இருக்குடி… மரியாதயா போய் உன் வேலய பாரு” என்று அவள் கையை விட,

“இல்ல இல்ல… ஏதோ இருக்கு” என்று மீண்டும் கையை நீட்டி டேட்டூவை மகிமா தொட பார்க்க,

“அடிங்… கைய வச்சா சாவடிச்சிடுவேன்டி” என்றவன் வாசலுக்கு சென்று ஒரு கணம் திரும்பி அவளை பார்த்தான்…

மகிமாவோ அவன் மார்பையே பார்த்தபடி இருக்க, அவளை முறைத்தபடி திரும்ப வந்து ஹேங்கரில் மாட்டியிருந்த ஷேர்ட்டை எடுத்து போட்டுக் கொண்டே அவ்வறையை விட்டு வெளியே சென்றான்…

அவன் சென்றதும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த மகிமா, “எப்படி உன்ன ஷேர்ட்ட போட வெச்சேண்டா… ஆனாலும் உன் மேல கை வைக்க கூடாதா… இதுக்காகவே ஏதாவது பண்ணனும் போல இருக்கே” என்று நினைத்துக் கொண்டாள்…

மகிமா கீழே வரும் பொழுது ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது…

அங்கே சஞ்சனா தயங்கியபடி நின்று கொண்டிருக்க யாரோ ஒரு பெண்மணி நின்று ஏதோ கத்தி சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்…

அவரைப் பார்த்ததுமே “சஞ்சனாவோட அம்மாவா வந்திருக்காங்க” என நினைத்தபடி கீழே இறங்கி வர, “இதோ வர்றாளே… அபிய மயக்கி முந்தானையில முடிஞ்சு வெச்சிட்டா இவ…” என்று அவர் அபின்ஞான் தனக்கு மருமகனாகவில்லை என்று கோபத்தில் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.

அன்னபூரணி அம்மாளோ என்ன சொல்வதென்று தெரியாது நின்றார்.

  அபின்ஞான் அமைதியாக இருந்து அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்…

“சும்மா பார்த்துட்டு இருக்குறத பாரு” என நினைத்தபடி சஞ்சனா அம்மா மீனாட்சி அருகே வந்த மகிமா, “ஐயோ ஆன்ட்டி… உங்க மருமகன நான் முந்தானைல முடிஞ்சு வச்சுக்கறதுக்கு நான் சாரியே கட்றது இல்ல… இன்னைக்கு அத்த சொன்னதுக்காகத்தான் சாரியே உடுத்திருக்கேன் …” என்று குனிந்து தன்னை பார்த்தபடி கூறியவள், அவர் கண்களை உற்றுப் பார்த்து, “உங்க மருமகன் என்ன நாய்க்குட்டியா? கவுறு போட்டு கட்டி வெச்சிக்கிறதுக்கு…” என்று கேட்டு விடவே,

 “ஆத்தி” என்ற அன்னபூரணி அம்மாளோ, நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அபின்ஞானை திரும்பி பார்த்தார்.

அவள் பேச்சால் அபின்ஞானுக்கோ கோபம் சுர்ரென்று ஏறியது…

 அவளருகே வந்தவன் அவள் சேலையூடு தெரிந்த வெற்று இடையில் கையை வைத்து, தன்னருகே இழுத்தவன் மீனாட்சியை பார்த்து, “ஆமா மகி என்ன மயக்கிட்டா… இப்ப கூட அந்த மயக்கத்தில் இருந்து விடுபடவே விட மாட்டா…” என்று அவனும், அவள் கூறியதால் ஏற்பட்ட கோபத்தில் அவள் இடையில் அழுத்தத்தை கூட்டியபடி கூற… மகிமாவோ திரும்பி அவனை அனல் பொதிந்த பார்வை பார்த்தாள்…

இவர்களது பேச்சாலும் நெருக்கத்தாலும் மீனாட்சிக்கு தான் சங்கடமாகிவிட்டது, “என் முன்னாலே அவனை பார்க்கிற பார்வையை பாரு… இப்படி பார்த்து பேசி பேசியே அவன மயக்கிட்டா… சரியான மோகினி பிசாசா இருப்பா போல” என்று முறைத்தபடி கூற,

“ச்சே…நான் இவன மயக்கியா வெச்சிருக்கேன்…இந்த அம்மாவுக்கு கோபத்துல கண்ணு தெரியாது போல” என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

அன்னபூரணியை பார்த்த மீனாட்சி, “அண்ணி நீங்களும் இவ பேசுறத பார்த்துட்டு இருக்கீங்க… என்னமா வாய் அடிக்குறா… இப்பவே இவள கட்டுப்படுத்தலன்னா பிறகு உங்களையே அடக்க வந்துடுவா” என்று அவருக்கும் இலவச ஆலோசனை வழங்க,

அன்னபூரணி அம்மாளுக்கு எதுவும் சொல்ல முடியாத நிலை… மீனாட்சி பேசுவது அதிகப்படி என்றும் தெரியும்… அதே நேரம் அவருக்கு பதிலடி கொடுத்த மருமகளை எதுவும் சொல்லவும் அவருக்கு பிடிக்கவில்லை… “கொஞ்சம் அமைதியா இரும்மா” என்று மகிமாவை பார்த்து கூற,

“ஓ இதுதான் நீ உன் மருமகள கட்டுப்படுத்துற இலட்சனமா… என்னோட நல்லா வாய் அடின்னு சொல்ற மாதிரி இருக்கு… உன் பையனுக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே எங்கள ஒதுக்கீட்டீங்க இல்ல… என் அண்ணா வந்தவுடன் பேசிகிறேன்’ என்றவர்… “நீ வாடி நீ எதுக்கு இங்க இருக்க” என்றவர் சஞ்சனாவின் கையைப் பிடித்து இழுத்தபடியே அவ்வீட்டை விட்டு சென்றார்…

மீனாட்சி சென்றதுமே, அவள் இடையில் இருந்து கையை எடுத்த அபின்ஞான் எதுவும் நடக்காதது போலவே தன் லெப்புடன் அமர்ந்து கொண்டான்…

ரெண்டும் ஜாடிக்கேத்த மூடி தான் என்று மகிமா மற்றும் அபின்ஞானை பற்றி நினைத்தபடி அன்னபூரணி அம்மாள் வேலையை பார்க்க சென்றார்.

ரிசப்சனுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தன…

அவர்களது வீட்டுக்கே வித விதமான உடைகள் வரவழைக்கப்பட்டன… மாமியாரும் மருமகளும் தங்களுக்கு விருப்பமான உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்…

மகாதேவும் நேரம் கிடைக்கும் போது மகிமாவை பார்க்க வருவான். அந்நேரம் அபின்ஞான் வீட்டில் இருக்க மாட்டான்…

அவர்களது ரிசெப்ஷன் நடப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன…

தான் செய்யவேண்டிய ஆய்வை பற்றிய விடயங்களை தேடிக்கொண்டிருந்தாள் மகிமா… அந்நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அபின்ஞான்… மகிமா நேரத்தை பார்த்து விட்டு, ” அட இன்னக்கி ஆறு மணிக்கே வந்துட்டான் போல” என்று நினைத்தவள் தன் வேலையில் கவனமாக… அவள் அருகே ஒரு கவரை வைத்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்…

 மகிமா அந்தக் கவரைப் பிரித்துப் பார்க்க அதற்குள் ஒரு ரெடிமேட் சாரி இருந்தது…

லைட் பிங்க் நிறத்தில் சில்வர் போடர் போட்ட சில்க் சாரி… அத்தனை அழகாக இருந்தது… அதை மென்மையாக வருடி கொடுத்தவள், “கலா ரசிகன் தான்…” என சொல்லி இதழ்களுக்குள் மென்மையாக சிரித்துக்கொண்டாள்.

அப்புடவையை கபோர்டில் வைத்து விட்டு படுத்துக்கொண்டாள்…

சிறிது நேரத்தில் அபின்ஞானும் அவள் அருகே படுப்பது தெரிந்தது…

“தேங்க்ஸ் புடவை ரொம்ப அழகா இருக்கு” என்று அவனை நோக்கி திரும்பி படுத்தபடி கூற… “ம்ம்… பட் இந்த புடவை நான் வாங்கல, கரண் தான் வாங்கினான்… சரியா பார்த்தா நீ அவனுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் மகிமா” என்று கூற, அவள் சந்தோஷமோ சட்டென்று வடிந்துவிட்டது…

“ஓஹ்… இந்த தேங்க்ஸ்ஸ நீங்க கரனுக்கே சொல்லிடுங்க” என்றவள் கண்களை மூடி கொண்டாள்…

அடுத்த நாள் அவள் எழும் போது அபின்ஞான் அலுவலகத்துக்கு சென்று விட்டான்…

ஆனால் அதிசயமாக மாலையிலே வீட்டுக்கு வந்திருந்தான்… அலுவலகத்தில் அவனுக்கு பெரிதாக வேலை இருக்கவில்லை போலும்…

இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பசுபதி அபின்ஞானை பார்த்து, “ரிசப்ஷன் வேல எப்படி போயிட்டு இருக்கு அபி” என்று கேட்க, “எல்லா வேலயும் கிட்டத்தட்ட முடிஞ்சிருச்சுப்பா…. மீதி வேலயையும் முடிச்சிடலாம்…நோ ப்ரோப்லம்” என்று கூற,

“சரி எல்லாத்தையும் பார்த்து செய்” என்று பசுபதி கூறிக் கொண்டிருக்கும்போது, அன்னபூரணி அம்மாளோ, “பேசினது போதும்… சாப்பிடுங்க” என்று பசுபதியின் தட்டில் உணவை பரிமாறினார்…

அபின்ஞானும் மகிமாவை பார்க்க… அவளும் அவனுக்கு உணவை பரிமாறினாள்…

“அத்த எப்ப மாமாக்கு சாப்பாடு போட்றாங்களோ இவனுக்கு நானும் சாப்பாடு போடணும்… சொந்த அப்பாவையே போட்டியா பார்க்குறான்… சரியான சைக்கோ… என் ரிசர்ச் முடியுற வர எப்படித்தான் இவன் கூட குப்பை கொட்ட போறேனோ” என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு பரிமாறி விட்டு அவளும் உண்ண தொடங்கினாள்.

சாப்பிட்டு முடிந்ததும் மகிமா கட்டிலில் அமர்ந்து தன்னிடம் இருந்த நகைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்…

 அபின்ஞானோ சோபாவில் அமர்ந்து தன் மடிக்கணனியில் நகைகளுக்கான டிசைன்களை வரைந்து கொண்டிருந்தான்.

தன் வேலையை முடித்துவிட்டு கையை உயர்த்தி சோம்பல் முறித்தவன், எதேர்ச்சையாக மகிமாவின் கையில் இருந்த நகைகளை பார்த்தான்…

 தன் தொழிலில் நகைகளை ஆராய்வது போலவே அவள் கையில் இருந்த நெக்லஸ்சை உற்று பார்த்தவன், “நைஸ் டிசைன்… ஆனா ஏன் கவரிங் ஜுவல்ஸ் வச்சிருக்க” என்று அந்த நகையை பார்த்த படியே கேட்டான்…

அபின்ஞான் அவளது கணவன் என்றாலும், மகிமாவின் விஷயத்தில் தலையிடுவதோ கருத்து சொல்வதோ இல்லை… அட்லீஸ்ட் அவள் அந்த அறையில் இருப்பதை கூட கண்டு கொள்ள மாட்டான்… பொம்மை ஒன்றை பார்ப்பது போலத்தான் அவளை பார்த்து வைப்பான். அவள் தான் வழிய சென்று அவனுடன் பேசுவாள்.

அவன் தொழிலே நகை தொடர்பானது என்பதாலோ அல்லது அவள் கையில் இருந்த நகை அவனது கவனத்தை ஈர்த்துவிட்டதோ என்னவோ அவளுடன் இவ்வாறு பேசியிருக்கின்றான்.

கண்களை உயர்த்தி மகிமா அவனை அதிர்ச்சியாக பார்க்க… அவனோ அணிந்திருந்த ஷேர்டை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு, அவள் அருகே கட்டிலில் இலகுவாக அமர்ந்தபடி போன் பார்க்க தொடங்கினான்…

 “இது கவரிங்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று மகிமா கேட்க,

“லூசா நீ… என் தொழிலே இதுதான்… இந்த சிம்பிள் விஷயத்த கூட என்னால கண்டுபிடிக்க முடியாதா?” என்று அவளை முறைத்தபடி கேட்க,

ஓஹ்… அது சரிதான்… ஆனா இது கவரிங்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க… நான் பொய் சொல்லி ஏமாத்துறதா தான் சொல்வாங்க” என்று மகிமா சோகமாக கூற,

“நீ கவரிங் ஜுவல்ஸ்சா யூஸ் பண்ற… ஒரிஜினல் யூஸ் பண்ண மாட்டியா” என்று அவளை அதிர்ச்சியாக பார்த்தபடி கேட்டான்.

“அண்ணா யூஸ் பண்ண விடமாட்டான்… நான் உடச்சி வெச்சுடுவேனாம்… அப்படி இல்லன்னா எங்கேயாவது போடுவேன்னு சொல்லி தர மாட்டான்” என்றாள் கண்களை உருட்டி…

“உண்மயா சொல்ற மகிமா… நீ இதுவர யூஸ் பண்றது முழுக்க கவரிங் ஜுவல்ஸ்சா?” என்று மீண்டும் அபின்ஞான் கேட்க,

“ம்ம் ” என்று வேகமாக தலையாட்டினாள் மகிமா.

 ‘ஓஹ் மை காட்… சரியான கஞ்ச பிசுனாரியா இருக்கான்… சொந்தத் தங்கச்சிக்கு வாங்கி கொடுக்க கணக்கு பார்க்கிறானா ராஸ்கல்” என்று அவனுக்கு மனதினுள் திட்டிக் கொண்டவன்,

 “சரி கவலப்படாதே நான் உனக்கு வாங்கி தரேன்” என்று ஒரு வேகத்தில் சொன்னவன் பின் மானசீகமாகவே தன் தலையில் தட்டிக் கொண்டான்.

“நீங்க எப்படி எனக்கு வாங்கி தரலாம் நாம தான் டிவோஸ் ஆயிடுவோம்ல, அதனால நீங்க எனக்கு வாங்கி தர தேவல்ல” என்று மகிமா கூற,

“நீ தேவ் தங்கச்சியா எதை வேணாலும் போட்டுக்கலாம்… ஐ டோன்ட் மைண்ட், ஆனா என் பொண்டாட்டியா பெஸ்ட் ஜுவல்ஸ் தான் நீ போடணும் புரிஞ்சதா” என்றான் அதிகாரமாக,

“ம்ம் புரிஞ்சது… நான் கவரிங் போட்டாலும் எல்லாருமே உண்மையான ஜுவல்ஸ்ன்னு தான் நினைக்கிறாங்க… நான் உண்மைய சொன்னாலும் அவங்க நான் பொய் சொல்றேன்னு தான் நினைக்கிறாங்க” என்றாள் மீண்டும் கவலையாக,

அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன், “நீ கவரிங் போட்டாலும் அது ஒரிஜினல்ன்னு தான் நினைப்பாங்க, ஏன்னா… நீ பிறந்த இடம் அப்படி… ஜுவல்லரி கம்பெனி வச்சிருக்கவன்ன தங்கச்சி கவரிங் ஜுவல்ஸ் போட்டு சுத்திட்டு இருப்பான்னு யாரு நினைச்சிருப்பாங்க?” என்று அவன் பெருமூச்சுடன் மூச்சுடன் சொல்ல…

“அது சரிதான்” என்றவள் தன் கையில் இருந்த பெட்டியை மூடி வைத்தாள்…

அவள் அருகே மூடி வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட நகைப்பெட்டிகளை பார்த்தவன், “இது எல்லாமே கவரிங் செட்டா” என்று கேட்க,

“நோ… இது அவ்ளோம் ஒரிஜினல் ஜுவல்ஸ் தான்… அண்ணா எனக்கு கல்யாணத்துக்கு சீதனமா அனுப்பி இருக்கான் போல” என்று அவள் கூற,

அபிஞானுக்கு கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்பின. “ராஸ்கல் என்ன வேல எல்லாம் பார்த்திருக்கான்” என கைகளை மடக்கி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான் அபின்ஞான்…

மகிமாவும் நகை பெட்டியை கவனமாக கபோர்ட்டில் வைத்து விட்டு வந்து அவன் அருகே படுத்துக்கொண்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!