என் தேடலின் முடிவு நீயா – 10

4.8
(33)

தேடல் 10

ட்ரெஸ்ஸிங் டேபளின் முன்னாள் அமர்ந்திருந்தாள் மகிமா…

அவளுக்கு தன்னைப் பார்க்கும்போதே கோபம்… அபின்ஞானை எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைக்கும் போதே கண்களில் இருந்து மல மலவென கண்ணீர் கொட்டியது…

தான் அணிந்திருந்த நகைகளை கழட்டத் தொடங்கினாள்…

 அவள் கோபத்தை அதில் காட்டினாள். கழுத்தில் இருந்த நெக்லஸ்சை கழட்ட பார்த்தாள்… ஆனால் முடியவில்லை…

காலையில் மேக்கப் செய்யும் பெண்கள் தான் அதை அவள் கழுத்தில் இறுக்கி அணிவித்து விட்டு சென்றிருந்தனர்… அதை கழட்ட யாரிடமாவது ஹெல்ப் கேட்க வேண்டும்…

அவள் இருந்த மனநிலைக்கு யாரிடமும் உதவி கேட்கவும் விரும்பவில்லை…

அதை கழட்ட முடியாத கோபமும் சேர்ந்து கொள்ள… கோபத்தில் அதன் கொக்கியை கழட்ட முடியாமல் தன் கழுத்துடனே சேர்த்து இழுத்து எடுத்தாள்…

“ஸ்ஸ்” என்று முனகியவளின் பின் கழுத்தில் மெல்லிய இரத்த கசிவு ஏற்பட்டது…

 அந்த வலியை விட அவள் மனதில் இருந்த வேதனை அதிகமாக இருந்தது…

 கழட்டி எடுத்த நெக்லஸ்சை பார்த்தவள் அது அபின்ஞான் வாங்கித் தந்த நகை என்பதால் அழுதபடியே, “நீயும் உன் நெக்லசும்” என்று பல கோடிகளை விழுங்கிய அந்த நெக்லஸ்சை தூக்கி அடிக்க…

அப்போதுதான் அறைக்குள் வந்து கொண்டிருந்த அபின்ஞானின் காலடியில் சென்று விழுந்தது…

அபின்ஞான் முக்கியமாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு ஃபைலில், மகிமா அறியாமலே அவள் கை பட்டு அதில் இருந்த தாள்கள் அனைத்துமே அவ்அறை முழுவதிலும் சிதறி போய் இருந்தன…

அவளோ அவன் வந்ததை கவனிக்காமல் தான் அணிந்திருந்த ஒவ்வொரு நகைகளையும் கழட்டி கோபத்தில் அதை கண்டபடி போட்டுக் கொண்டிருந்தாள்… அந்த நகைகளைப் பற்றி அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை… அவள் வாழ்க்கை அல்லவா இப்பொழுது கிழிந்த நாராக தொங்கிக் கொண்டிருக்கின்றது.

அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு தன் காலடியில் இருந்த நெக்லஸ்சை தூக்கி பார்த்தான்….

அதிலோ பல கீறல்கள்… எவ்வளவுதான் உறுதியா செய்திருந்தாலும் அவள் தூக்கியடித்த வேகத்தில் சில டயமண்ட்ஸ் அதிலிருந்து கழண்டு போய் இருந்தன…

நிலத்திலிருந்த தாள்களையும் பார்த்ததுமே அவனுக்கோ கோபத்தின் உச்சம் தொட்டது…

இந்த பைலை அவன் எவ்வளவு பத்திரமாக வைத்திருந்தான்…

அவன் கஷ்டப்பட்டு அடுத்த ப்ரொஜெக்ட்டுக்காக சேர்த்து வைத்திருந்த தகவல்கள்…

அதற்காக அவன் போட்ட உழைப்பு அவனுக்கு தான் தெரியும்…

எத்தனை வருடங்கள் இந்த தேடலை தொடர்ந்து கொண்டிருக்கிறான்…

பொறுப்பில்லாமல் அதையும் தூக்கி வீசி இருந்தாள்…

அபின்ஞானோ ஒவ்வொரு நகைகளையும் பார்த்து பத்திரமாக வைப்பவன்…

அவனது கம்பெனியிலிருந்து லேட்டஸ்ட் மொடல் நெக்லஸ் இது…

 இதை விற்க கூட முடியாது… அந்த அளவு பெறுமதி வாய்ந்தது…

ஏனென்றால் அதை அபின்ஞானே பார்த்து பார்த்து தன் கையாலே வடிவமைத்திருந்தான்…

உலக நகைகளில் முதலாம் இடத்தை பெற்ற நெக்லஸ் தான் இது… எத்தனையோ வகை வைர வைடூரியங்கள் மற்றும் மாணிக்கங்களை வைத்து அவன் பல மாதங்களாக கஷ்டப்பட்டு செய்த நகை இது…

வேறு ஏதாவது நகை என்றால் எவ்வாறு எடுத்திருப்பானோ தெரியாது…

 பல நாட்களின் உழைப்பை ஒரு செகண்டில் சிதறடித்து விட்டாளே என்ற கோபம் அவனுக்கு…

முக்கியமாக அவன் பாதுகாத்திருந்த இரண்டு விஷயங்களை தன் கவனஈனத்தால் நாசமாக்கி விட்டிருந்தாள்.

அவளருகே சென்றவன், அவள் இரு தோள்களையும் அழுத்தமாக பற்றி எழுப்பியவன்… தன் கையில் இருந்த நெக்லஸ்சை காட்டி, “இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா… நீ நெனச்ச படி நாசமாக்க…” என்று அவள் தோள்களை உலுக்கியபடி கேட்க,

 அவளுக்கோ அவன் இரும்புப் பிடியில் தான் தோல்கள் கலண்டு வந்து விடும் போல் வலித்தது.

“அபி… லீவ் மி ரொம்ப வலிக்குது…” என்று கண் கலங்க கூற,

“ஓஹ்… ஷிட் ட்ராமா இடியட்…” என்று அவளைப் பார்த்து கத்த…

“இதுக்கு எவ்ளோ பணம்ன்னு சொல்லுங்க நான் தரேன்” என்றாள் மகிமா.

“என்னடி தருவ…. இதுதான் எனக்கு உன்ன மாதிரி பொண்ணுங்ன்னாவே சுத்தமா பிடிக்காது… பணத்திமிர்ல ஆணவத்துல ஆடிட்டிருக்க” என்று அவன் பிடியை தளர்த்தாமலே கூறிக்கொண்டிருக்க,

“அபி மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்றாள் அவளும் கோபத்தில்,

“என்னடி மைண்ட் பண்ணி பேசுறது… உன் இஷ்டத்துக்கு நீ நெனச்சதெல்லாம் செய்வ… நீ செய்றதெல்லாம் பார்த்துட்டு இளிச்சவாய் மாதிரி இருப்பேன்னு நெனச்சியா?” என்றான் கர்ஜனையாக…

“அபி எனக்கு இப்போ உங்களோட பேசுற மூட் இல்ல…” என்றவள் அங்கிருந்து செல்லப் பார்க்க,

அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், “என்னடி மூட் இல்ல… இங்க நான் இவ்ளோ கத்திட்டு இருக்கேன்… கொஞ்சம் கூட கணக்கில்லாம போக பார்க்கிற…” என்றபடி கோபத்தில் அவள் கையை முறுக்க… அவளுக்கோ கைகளில் தாங்க முடியாத வலி…

 பல்லை கடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“இப்ப தானே சொன்னேன்… பணம் தரேன்னு… இப்ப எதுக்கு பிரச்சின பண்ணிட்டு இருக்கீங்க” என்று அவளும் பொறுமை இழந்து கேட்க,

“கிழிப்ப… உன் அண்ணாவோட பணம் இல்லாம, நீ சம்பாதிச்ச பணம் ஒரு சதமாவது உன்கிட்ட இருக்கா… இல்லைல… நீ போட்டிருந்தியே அந்த நெக்லஸ் வேர்ல்ட் ஜுவெல்ஸ்ல ஃபர்ஸ்ட் பிளேஸ் வந்தது… இந்த நகைக்கி விலயே அடிக்க முடியாது…. ப்ரைஸ் லெஸ் ஜுவல்…” என சீரியவன்.. அவள் கையை முறுக்கி அதில் தன் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தான்.

“ரூம் ஃபுல்லா பாரு… என் டாக்குமெண்ட்ஸ என்னபண்ணி வெச்சிக்க… இதெல்லாம் எவ்ளோ முக்கியமான டாக்குமெண்ட்ஸ் தெரியுமா? எத்தன வருஷமா இந்த விஷயங்கள தேடி எடுத்தேன்… ஒரு செகண்ட்ல எல்லா விஷயத்தையும் நாசமாகிட்ட…” என்று கூற மகிமாவுக்கோ இது அதிர்ச்சி…

உலக நகைகளில் முதலாம் இடத்தை பெற்ற நகையையா தான் இவ்ளோ நேரமும் அணிந்து கொண்டிருந்தது… அவளுக்கும் இது தெரியாதல்லவா…

வரவேற்புக்கு வந்தவர்கள் கூட அவள் நகையை பாராட்டிவிட்டு சென்றார்கள்…

எந்த நகை போட்டாலும் பாராட்டுக்கள் சகஜமாக வருவதால் அவள் இதை அலட்டிக் கொள்ளவில்லை…இவ்ளோ பெருமதியானது என்றும் தெரியவில்லை…

அவன் கூறிய பிறகுதான் இந்த நகைக்கு விலை நிர்ணயிக்க முடியாது என்றே புரிந்தது…

அந்த ஃபைலில் அவள் கை தவறி பட்டு விடுவே அது விழுந்ததை அவள் அறியவே இல்லை…

அவள் வேண்டும் என்று அதை செய்யவில்லையே… நகையை மட்டுமல்லவா அவள் கோபத்தில் வீசி எறிந்திருந்தாள்.

“சரி நான் செஞ்சது பிழை தான்… என் தப்ப ஒத்துக்கிறேன். உசுருள்ள மனுஷன விட…. நீங்க கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச இந்த டாக்குமெண்ட், மத்தது இந்த நகையா உங்களுக்கு அவ்ளோ முக்கியம்? நீங்க என் அண்ணாவ ஒரு மனுசனா கூட மதிக்கல… ரிசப்ஷனுக்கும் கூப்பிடல்ல… அது தப்பில்லையா? அதுக்கு என்ன சொல்ல போறீங்க?” என்று கேட்டாள்.

“அந்த நாய் எதுக்கு என் ஃபங்ஷனுக்கு வரணும்” என்றான் அகம்பாவமாக,

“அது உங்க ஃபங்ஷன் மட்டுமில்ல… எனக்கும் சேர்த்து தான்… நீங்க எப்படி என் அண்ணாவ நாய்ன்னு சொல்லலாம் நீங்க தான் சொரி புடிச்ச நாய்…” என்று அவள் அண்ணனை திட்டிய கோபத்தில் மகிமாவும் வார்த்தைகளை விட்டு விட,

அவளை அழுத்தமாக பார்த்தவன்,

“உன் அண்ணாவுக்கு பொருத்தமான தங்கச்சி தான் நீ… உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி… நீ ஒரு அடி முட்டாள், என்னோட பேசுற தகுதி உனக்கு கொஞ்சமே இல்லை… சொல்லப்போனா உன்ன கல்யாணமே பண்ணி இருக்க கூடாது… நான் லைஃப்ல எடுத்த முட்டாள்தனமான முடிவே நீ தான் ” என்றவன் அவளை முறைத்தபடி சொல்ல…

அவளுக்கோ அவன் வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது…

“நான் உங்கள என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேனா… நீங்கதான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க…” அவளும் மாறி வாய் அடிக்க,

“சும்மா நடிக்காதடி உனக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்…” என்றான் அபின்ஞான்.

“யாரு சொன்னா… எனக்கு உங்கள கொஞ்சம் பிடிக்காது” என்று அவளும் அவனுக்கு நிகராகவே பேசி விட்டாள் மகிமா…

இதுவரை அவனை யாரும் எதிர்த்துப் பேசியதில்லை. அவனுக்கு அவள் தன்னை தொடர்ந்து எதிர்த்து பேசிக் கொண்டிருப்பது கொஞ்சமுமே பிடிக்கவில்லை… தனக்கு அடங்கி போகும் ஒரு பெண் தான் அவனுக்கு வேண்டும்… அவனை எதிர்த்துப் பேசவோ கேள்வி கேட்கவோ கூடாது… அவன் ஆனாதிக்க மனநிலை மற்றும் ஈகோ அவள் இதுக்கு மேல் பேசுவதை கேட்க தயாரில்லை, “ஓஹ் அது சரிதான்… உனக்கு என் மேல லவ் இல்ல… லாஸ்ட் தான் இருக்கு… நீ என்ன பார்க்குற பார்வையும், என்ன தொட ட்ரை பண்ணது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? முதல்ல ஒன்ன டிவோஸ் பண்ணிட்டு அடுத்த வேலை பார்க்கணும்… அப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசியவன் கையிலிருந்த நகையை அவள் முகத்திலே தூக்கி எறிந்தவன், “இத நீயே வச்சுக்கோ” என்றவன் அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டான்…

மகிமாவுக்கோ தொண்டைக் குழியைத் தாண்டி வார்த்தைகளே வரவில்லை… அபின்ஞானின் அழுத்தமான பிடியின் வலியாலும் அந்த வார்த்தைகளின் வீரியத்திலும் விக்கித்துப் போய் நின்று இருந்தாள் மகிமா…

 கண்கள் எல்லாம் கலங்கி விட்டது… எவ்வளவு கீழ்த்தரமாக வார்த்தைகள் சொல்லி தன்னை அவமதித்து விட்டான்…

விளையாட்டாக செய்ததெல்லாம் சுட்டிக்காட்டுகிறான்…

அவன் வீசியதில் நெக்லஸில் வெளியே துரத்தி நின்ற ஒரு பகுதி அவள் நெற்றியில் கீறி விட்டிருக்க நெற்றியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது…

ரத்தத்தை தொட்டுப் பார்த்தவளுக்கு மேலும் மேலும் தன் நிலையை நினைத்தே வருத்தமாக இருந்தது…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!