உணவை மேசையில் வைத்தவள் அதை திறந்து பார்க்க, சுடச்சுட பரோட்டாவும் குருமாவும் இருந்தது…
“வாவ்” என்றவள் வாயில் எச்சில் ஊற… சாப்பிட தயாராக, அபின்ஞானும் இடையில் டவலுடன் வெளியே வந்தான்…
மகிமா சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்தவன் அவள் அருகே நெருங்கி அமர்ந்தான்…
அபின்ஞான் பொதுவாக இரவில் கடினமான உணவு எடுப்பதில்லை…
ஏதாவது இலகுவான உணவுடனோ அல்லது பழங்களுடனோ சாப்பாட்டை முடித்துக் கொள்வான்…
அவன் அவள் அருகே அமரவும், “நீங்களும் சாப்பிட போறீங்களா?” என்று மகிமா கேட்க,
அவன் கையில் இருந்த ஆப்பிளை காட்டியவன், “எனக்கு இது போதும்… உனக்கு தான் ஆர்டர் பண்ணேன் சாப்பிடு” என்றான்…
இருவருக்கிடையே இருந்த நெருக்கத்தை பார்த்தவள், “அப்போ கொஞ்சம் தள்ளி உட்காரலாமே” என்று மகிமா நெளிந்தபடி கூற,
“ஏன் இப்படி இருந்தா உனக்கு என்ன பிரச்சின” என்று புருவம் உயர்த்தி கேட்டவன், அவளுடன் மேலும் நெருங்கி அமர்ந்து தன் இடது கையை அவள் நைட் ஷர்டினுள் விட்டு அவள் வெற்று இடையை வருடியபடியே ஆப்பிளை கடித்தான்…
“ஏன்டா கேட்டோம்” என்ற நினைத்துக் கொண்டாள் மகிமா…
அவளுக்கோ தொண்டைக் குழியைத் தாண்டி உணவு இறங்க மறுத்தது…
அவன் ஓயாமல் அவளிடம் எல்லை மீறிக் கொண்டிருக்கும் அவளால் எங்கனம் உண்ண முடியும்…
அவள் உண்ணாமல் அலைந்து கொண்டிருப்பதை கண்டவன், கொஞ்ச நேரத்திற்கு அவளை பாவம் பார்த்து சற்று விலகி அமரவும் தான் மகிமா பெருமூச்சு விட்டபடியே வேகமாக உண்ணத் தொடங்கினாள்…
அபின்ஞானும் அவளை புன்னகையுடனே பார்த்துக் கொண்டிருந்தான்…
அவள் கை கழுவி விட்டு எழும்பவும், அபின்ஞானும் அவளுடனே எழுந்து கொள்ளவும், “இப்போ என்ன?” என்பது போல் அவனை பார்த்தாள்.
அவனோ அவளை நெருங்கி முத்தமிட்டபடியே தூக்கிக் கொள்ள… அவளும் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டாள்…
வானில் தெரிந்த நிலவு மகளோ அவர்களைப் பார்க்க வெட்கப்பட்டு மேகங்களுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது நெருக்கம் இருந்தது…
காலையில் அவள் அவன் கைவளைவுக்குள் தான் கண் விழித்தாள்…
தூக்கத்திலும் அவன் இதழ்கள் இறுகிப் போயிருந்தன…
அவன் சிகையோ கலைந்து இருந்தாலும் அவனுக்கு அது எடுப்பாகவே இருந்தது…
முரட்டு குழந்தை போல் இருந்தான்.
மென்மையாக அவன் தலை முடியை வருடியவள்… குனிந்து அவன் இதழ்களில் முத்தமிட, அவன் கண்களோ சட்டென விரிந்து கொண்டன…
அவன் எழும்பியதை கண்டதும் மகிமா அவனிடம் இருந்து விலக பார்க்க, அவன் அணைப்பிலிருந்து தான் அவளால் நகர முடியவில்லை…
அவளை உற்றுப் பார்த்தவன், “இப்ப நீ என்ன கிஸ் பண்ண தானே” என்று தூக்கம் கலையாத கரகரப்பான குரலில் அவள் கன்னத்தில் இதழ் உருசிய படியே கேட்க,
“ஆம்… இல்லை…” என்பது போல் நான்கு பக்கமும் தலையாட்டினாள்…
“சரி… என்ன கிஸ் பண்ணாததுக்கு உனக்கு தண்டன வேணாம்” என்று கேட்க,
அவனை அதிர்ந்து பார்த்தாள்… முத்தமிட்டாலும் குத்தம்… இல்லாவிட்டாலும் குத்தம் என்பது போல் அல்லவா அவன் கதை இருக்கிறது…
அவள் பார்வையை கண்டவன், “சரி போன போகட்டும்ன்னு உன்ன மன்னிச்சி விட்றேன்… என் கூட சேர்த்து குளிச்சா” என்று கூறிய படியே அவளை இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்…
அவனுக்கோ அவள் மீது எல்லையற்ற மோகம்…
தன்மோகம் எல்லை கடக்கும் போதெல்லாம் அவளை நாடி விடுவான்…
போதை இல்லாமலே இப்பேதை அவனுக்கு போதை ஏற்றிக் கொண்டிருந்தாள்…
இருவருக்குள்ளும் துளிர்ந்து மலர்ந்திருந்த காதலை இருவரும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாலும் தம் செயலால் தத்தம் துணைகளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தனர்…
யாரு முதலில் சொல்வார்கள் என்று காத்துக் கொண்டிருந்தனர்…
அடுத்த வாரம் முழுவதுமே கேமராக்கள் பொருந்துவதிலும் அதை கண்காணிப்பதிலுமே முழு நேரமும் கழிந்தது…
திரையின் முன்னே அமர்ந்து கடலில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர் அபின்ஞானும் கரனும்…
“நாம தேட்றது இன்னும் கிடைக்கலடா… ஒரு வாரமா தேடிட்டு இருக்கோம்…” என்றான் கரன்…
“உண்மையாவே இருக்கிற விஷயத்தயா நாம தேடிட்டு இருக்கோம்ன்னு எனக்கு இப்போ டவுட்டா இருக்கு அத்தான்…. எத்தன வருஷத்துக்கு முந்தி நடந்தது… இன்னும் இருக்குமா? இருந்தாலும் எங்கிருக்கும்ன்னு கெஸ் பண்றது கூட ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றாள் சஞ்சனா…
நெற்றியை நீவிக்கொண்ட அபின்ஞான் “கண்டிப்பா இருக்கணும்… ஆனா நாம தான் அந்த இடத்தை நெருங்கல… கிடைச்சிடும்… கட்டாயம் கிடைக்கணும்” என்றான் அழுத்தமாக…
“கிடச்சா சரி” என நினைத்த சஞ்சனா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
“மகிமா எங்க ஆளயே காணோம்” என்று கரன் கேட்க,
“இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தா… இப்பதான் போனா… நைட் கடல் உள்ளுக்கு வித்தியாசமான சவுண்ட் கேக்குதுன்னு சொல்லிட்டு இருந்தா” என்றாள் சஞ்சனா…
“ம்ம்…” என்கிட்டயும் சொன்னா என்ற அபின்ஞான்… “பகல்ல நம்மளால கடல்ல எந்த உயிரினத்தை அவதானிக்க முடியல… நைட்டுக்குத்தான் அதுங்களே உலாவுதுங்க போல… அதுங்க சவுண்டா இருக்கலாம்…ஆனா இட்ஸ் வெரி டிஃபரண்ட்” என்ற சந்தேகமாக முடித்துக் கொண்டான் அபின்ஞான்…
“இருட்டா இருக்கிறதுனால நம்மளால அதைப் பார்க்கவும் முடியல” என சொல்லிக் கொண்டான் கரன்…
“ம்ம்ம் அது சரி தான்…”என்றபடி தன் அறைக்குள் சென்றான் அபின்ஞான்…
மகிமாவோ போர்த்தி மூடியபடி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்…
அவள் அருகே வந்து நெருங்கி படுத்தவன், “மகி…” என்று அழைத்த படி அவள் கழுத்து வளைவில் முகத்தை உரசினான்…
“சரியான கும்பகர்ணி” என்று மீண்டும் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கழுத்தில் முத்தமிட, அவன் தாடி மீசை குறுகுறுப்பில், “அபி தூங்க விடுங்க” என அவன் முகத்தை தள்ளி விட்ட படி முனங்கினாள்…
“மகி வேல பார்த்து சரியான ஸ்ட்ரெஸ் ஆகி வந்திருக்கேன்… எனக்கு ஸ்ட்ரஸ் ரிலீப் வேணும்” என்றான் அவள் இதழ்களில் முத்தமிட்டபடி…
“அதுக்கு நான் என்ன பண்ணனும்” என்றாள் தூக்கம் கலையாத குரலில்…
“நாம் என்ன பிக்னிக்கா வந்திருக்கோம்…இங்க சுத்திப்பார்க்க… இந்த குளிர்ல என்னால வெளியே சுத்த முடியாது” என்றபடி விட்ட தூக்கத்தை அவள் மீண்டும் தொடர பார்க்க…
அவளை அதட்டி… உருட்டி.. மிரட்டி… அழைத்துக் கொண்டு சென்றான்…
ட்ரவுசர் மற்றும் நீட்ட கை டி-ஷர்ட் அணிந்து… மேலால் ஸ்விட்டார் அணிந்து, காதுகளை மூடிய தொப்பியும் போட்டுக் கொண்டு முகத்தை தூக்கி வைத்தபடி மோட்டார் படகில் அமர்ந்திருந்தாள்.
“ரிசெர்ச் செய்யணும்ன்னு ஆளுக்கு முந்தி இங்க வந்தது நீ… ஆனா இங்க வந்து சோம்பேறி மாதிரி முழு நேரமும் தூங்கிட்டே இருக்க… எல்லாம் வெட்டி வீராப்பு மட்டும்தான்…” என்றான் ஓரிடத்தில் படகை நிறுத்தியபடி…
அவன் பேச்சில் அவனை முறைத்து பார்த்தவள், “நான் என்னடா செய்றது… சத்தம் இல்லாம இருந்த நீங்க ரெண்டு பேரும் தான் என்னென்னதோ செஞ்சுட்டு இருக்கீங்க… நான் என்னன்னு கேட்டா கூட சொல்ல மாட்டீங்க.. எல்லாத்தையும் ஒளிச்சு ஒளிச்சு வச்சுக்கிறீங்க… எனக்குத்தான் ஒண்ணுமே விளங்காம முழிச்சிட்டு இருக்கேன்… நீங்க எல்லாம் சேர்ந்து என்னமோ செஞ்சிட்டு இருக்கீங்க… நான் தான் தனியா நின்னுட்டு உங்களுக்கு எடுபிடி வேல பாத்துட்டு இருக்கேன்… பெருசா பேச வந்துட்டான்” என்று அவள் வாய்க்குள் முனக,
அது அவனுக்கு கேட்காமல் இருக்குமா என்ன…
“சரி… சரி… அத விடு… உன் ரிசேர்ச்க்கு நான் ஹெல்ப் பண்றேன்டி…” என்றவன் நீரினுள் பாய்வதற்கு ஆயத்தமாக… “இப்ப நீங்க கடல்ல நீந்த போறீங்களா?” என்று கேட்டாள்…
“ம்ம்… நான் மட்டும் இல்ல நீயும் தான்” என்று கண்ணுக்கு வாட்டர் கிளாஸை அணிந்தபடி கூறினான்…
“என்னது…” என்று அவள் அதிர…
“வா…” என்று அவளை அவசரப்படுத்தியவன், அவளை தயார்படுத்தி மகிமாவின் கையை பற்றிய படியே நீரினுள் குதித்தான்…
அபின்ஞான் இப்பகுதி பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்திய பின்னர் தான் மகிமாவை இங்கு அழைத்து வந்திருந்தான்….
அவள் கையை பிடித்தபடியே நீந்தினான்…
அவன் நீந்தும் வேகமோ அசாத்தியமான வேகமாக இருக்க மகிமா எவ்வளவு தான் பயிற்சி எடுத்திருந்தாலும் அவன் வேகத்துக்கு அவளால் ஈடுகட்ட முடியவில்லை…
அதை உணர்ந்தவன் அவள் வேகத்துக்கு ஏற்றவாரு நீந்தியபடி அவளை கடலின் ஆழப் பகுதிக்கு அழைத்து சென்றான்…
ஆழப் பகுதிக்கு வந்தவளது கண்களோ மகிழ்ச்சியில் மின்னின…
கடலின் அடிப்பகுதியாக இருந்தாலும் மிக மிக வெளிச்சமாகவே இருந்தது….
தெளிவான இளம் நீல நிற நீர்…
அப் பகுதியின் அடிபரப்பு முழுவதுமே பவளப்பாறைகள் நிறைந்து இருக்க… அப்பாறைகளுக்கு மேல் பச்சை பசேல் என்ற தாவரங்கள் நிறைந்திருந்தன…. அவை மினுங்கிக் கொண்டிருந்தன…
அப் பகுதி அத்தனை செழிப்பாகவும் வளமாகவும் இருந்தது… நிலப்பரப்பில் கூட இப்படி ரம்யமான ஒரு காட்சியை பார்க்க முடியாது… அற்புதமாக இருந்தது…
புல்லிருந்து பாறைகள் வரை அதில் தங்கி இருக்கும் ஒவ்வொரு உயிரினமுமே பல்வேறு நிறங்களில் மினங்கிக் கொண்டிருந்தன…
அவற்றின் பளபளப்பாலும் அவற்றால் உருவாகும் வெளிச்சத்தினாளும் தான் அவ்விடம் முழுவதும் சூரிய ஒளி படாமல் அவ்வளவு வெளிச்சமாக இருந்தது…
மகிமா மெதுவாக தன் கையால் புல் போன்ற இருந்த தாவரத்தை தொட்டுப் பார்த்தாள்…
சட்டென்று அது அவள் கையுடன் இறுக்கமாக பின்னிப் பிணைய ஆரம்பித்தன…
நல்ல வேலை அவள் உடல் முழுவதற்கும் பாதுகாப்பாக கவசம் போன்று உலர் உடை அணிந்து இருந்ததால் அவளுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை…
இல்லையென்றால் அதன் விஷத்தன்மையில்… தொட்டு இரண்டாவது நிமிடத்தில்லே பரலோகம் போய் சேர்ந்திருப்பாள்…
கடலுக்கு அடியில் அதிகமான விஷ சக்தியுள்ள உயிரினங்களே மினுங்கிக் கொண்டிருக்கும்…
சிரித்துக் கொண்டவள் மெதுவாக கையை அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள்…
அவள் கையைப் பிடித்த படியே அருகே வந்து கொண்டிருந்த அபின்ஞானை பார்த்து கண் சிமிட்டியவள்… மகிழ்ச்சியில் அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்…
நீண்ட நேரம் கடலுக்கு அடியில் நீந்தியவர்கள் உடற்கலைத்த பின்னரே தங்கள் படகு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்…
கடலில் உள்ளே இருக்கும்போது இல்லாத குளிர் வெளியே வந்ததும் தான் அதிகமாக உடலை தாக்கியது… அபின்ஞான் அதைத் தாங்கிக் கொண்டாலும், மகிமாவுக்கு சற்று சிரமமாகவே இருந்தது…
அவனை ஒட்டி அமர்ந்தவள் அவனிடமே குளிர் காய்ந்த படி கப்பலுக்கு வந்து சேர்ந்தாள்.