என் தேடலின் முடிவு நீயா 28

4.8
(40)

தேடல் 28

அபின்ஞான் ஸ்விம்மிங் பூலுக்கு வெளியே ஷார்ட்ஸுடன் கடலை வெறித்தபடி நின்று இருந்தான்…

அவனுக்கு மகிமாவை அந்த கோலத்தில் பார்த்ததிலிருந்து தாறுமாறாக உணர்வுகள் கிளர்ந்து எழ ஆரம்பித்து விட்டன…

அந்நேரம் இரு கரங்கள் அவனை பின்னாலிருந்து அணைத்து தன் உடல் முழுவதும் அவனுடன் உரச ஒட்டி நின்றிருந்தாள் மகிமா…

கண்ணை மூடி திறந்தவன் அவள் கைகளை விலக்கிய படி, “மகி இங்க என்ன பண்ற போய் தூங்கு” என்றான்…

அவன் முன்னால் வந்து நின்றவள் காலை நிலத்தில் ஊன்றி அவன் உயரத்துக்கு எழும்பியவள் அவன் டைமண்ட் டேட்டுவில் முத்தமிட்டு விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க… அடுத்த கணம் அவள் இடையை ஒற்றைக் கையால் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் மற்றைய கையால் அவள் கன்னத்தைப் பற்றி உயர்த்தியவன் அவள் இதழ்களில் ஆழமாக முத்தமிட ஆரம்பித்து விட்டான்…

அவளும் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்…

அவனுக்கு அவளது இந்த நெருக்கம் புதிது…

ஆனால் அவனுக்கு புடித்தும் இருந்தது…

அடுத்து இருவரும் கட்டிலில் தஞ்சம் அடைந்து விட்டனர்…

அடுத்த நாள் மகிமா எழும் போது அவன் அறைக்குள் இல்லை…

வேலை அதிகமாக இருப்பதால் காலையிலே எழுந்து சென்றிருப்பான் என்று புரிந்தது…

ஹீட்டரை போட்டு அவளை நன்றாக போர்த்தி விட்டு சென்றிருந்தான்…

தனக்குள் சிரித்தபடியே எழுந்தவள் கட்டிலில் அருகில் இருந்த கபோர்டை பார்த்தாள்…

சுடச்சுட காபி மூடி வைக்கப்பட்டிருந்தது…

மகிமாவுக்கோ மனதில் பறக்கும் உணர்வு…

காலையிலே அவள் மனதை குளிர்வித்துவிட்டு சென்று விட்டான் அல்லவா…

“ஐ லவ் யூ அபி… என்ன லவ் பண்ண வெச்சுட்டே இருக்க” என்றவள் அந்த காபியை தூக்க, காபி கப்பின் அடியில் ஒரு பேப்பர் இருந்தது…

இதழ்களில் மலர்ந்த புன்னகையுடன் அதை எடுத்துப் பார்த்தாள், “பிரஷ் பண்ணாம காபியா வாயில மட்டும் வச்சுடாதே… மீட்டிங் இருக்கு ஃபாஸ்ட்டா ரெடியாகி மீட்டிங் ரூமுக்கு வா” என்று எழுதி இருந்தவன், சிறிய இடைவெளி விட்டு, “சொல்ல மறந்துட்டேன் நேத்து நைட் நான் நல்லா என்ஜாய் பண்ணேன்… நீ நல்லா கம்பெனி கொடுத்த” என்றவன் என்று இரு கண்ணடிக்கும் இமோஜிகளுடன் முடித்து இருந்தான்…

இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டவளுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு… , “என்ன வெட்கப்பட வெச்சிட்டே இருக்க அபி” என சிவந்த முகத்துடன் சொன்னவள் வேகமாக தயாராகிக் கொண்டு மீட்டிங் அறைக்குள் சென்றாள்…

அவள் வரும் போது பேசிக் கொண்டிருந்தவன் ஒரு கணம் தன் பேச்சை நிறுத்தி அவளை ஊன்றி பார்த்துவிட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தான்…

மகிமா தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…

“நாம இங்க வந்து கம்ப்ளீட்லி ஒன் அண்ட் ஹாப் மந்த் முடிஞ்சிருச்சி… நாளைக்கு எங்க பயணத்த ஸ்டார்ட் பண்றோம்… எக்ஸ் த்ரீ பொக்ஸ் கிட்ட போறோம்… அத எடுக்கிறோம்” என்றான் அபின்ஞான்…

அங்கே இருந்தவர்களும் அதை எடுக்கும் உறுதியுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அனைத்து கருவிகள், கேமரா, சேஃப்டி ஜாக்கெட், எக்ஸ்ட்ரா ஆக்சிஜன் மார்க்ஸ் நாளைக்கு தேவையான எல்லாமே தயார்படுத்தி நீர் மூழ்கிக் கப்பலில் (சப்மெரின்) வைத்து விட்டனர்…

நாளைக்கு செல்வதற்கு தேவையான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் தூங்க சென்றனர்…

நாளை காலை ஏழு மணிக்கு புறப்பட வேண்டும்…

1500 மீட்டர் அடி ஆழத்துக்கு செல்ல வேண்டுமே…

அபின்ஞானுக்கு தூக்கம் வரவில்லை நாளை என்ன நடக்குமோ என்ற யோசனைதான்… மகிமாவை இறுக்கமாக அணைத்த படியே படுத்திருந்தான்.

அவளுக்குத்தான் அவன் அணைப்பில் மூச்சு முட்டியது, “அபி எதுக்கு என்ன டெடி பேர் மாதிரி போட்டு இறுக்கிட்டு இருக்கீங்க” என்றபடி அவனை தள்ளிவிட, அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் இறுக்கமாக அனைத்தவன், “சும்மாதான் உன்னை கைக்குள்ளே வச்சுட்டு இருக்கணும் போலவே இருக்கு” என்றான்.

அவன் தலையை கோதியவள், “நாளைக்கு மார்னிங் கிளம்பனும் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க” என்றபடி விலகப் பார்க்க, அவனோ அவளிடம் இருந்து பிரியாமல் அவளை தன் கை வளைவுக்குள்ளே வைத்துக்கொண்டே தூங்கிப் போனான்..

கூடல் இல்லாத ஒரு நிம்மதியான பரவசமான ஆழ்ந்த உறக்கம்…

அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு அலாரம் அடிக்க, கண்விழித்த மகிமாவால் அசைய முடியவில்லை…

அபின்ஞானின் இறுக்கமான அணைப்பில் தான் இருந்தாள்…

மெதுவாக தலை தூக்கி அவன் மார்பில் நாடியை குற்றியவள், “அபி” என்று மென்மையாக அழைத்தாள்…

தூக்க கலக்கத்திலே அவளை தூக்கி கட்டிலில் போட்டவன் அவள் மேல் படர்ந்து அவள் இதழ்களை அழுத்தமாக முத்தமிட்டு விட்டே எழுந்து கொண்டான்…

இரவு முழுவதும் ஒரே மாதிரி படுத்து இருந்ததால் அவள் கை கால்களோ விரைத்து போய் இருக்க… காலை தேய்த்தபடியே எழும்பாமல் கட்டிலிலே அமர்ந்திருந்தாள்…

அவளைப் புருவம் சுருக்கி பார்த்தவன், “நீ எழும்பலயா…” என்று கேட்டான்…

“நேத்து நைட் ஒரே மாதிரி படுத்து இருந்ததால என் கை கால அசைக்க முடியல” என்றாள்…

அவள் அருகே வந்தவன் அவள் கால்களை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு, அவள் காலை அழுத்தி மசாஜ் பண்ண ஆரம்பித்தான்…

சிறிது நேரம் மசாஜ் பண்ணியவன், “இப்போ ஓகேயா” என்று தன் பழுப்பு நிற விழிகளை உயர்த்தி அவளை பார்த்து கேட்டான்…

அவனையே அவள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க,

“என்னடி இப்பிடி பார்க்கிற” என்று கேட்டான் சிரித்தபடி,

“அபி… நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டே இருக்கீங்க… உங்களுக்கு எப்படியோ தெரியல…. ஆனா எனக்கு உங்கள ரொம்ப புடிச்சு போச்சு… கல்யாணத்துக்கு பிறகு நான் இவ்ளோ சந்தோஷமா அதுவும் உங்க கூட இருப்பேன்னு நினைக்கவே இல்ல… எல்லா இடமும் நீங்க மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சிட்டு இருக்கீங்க” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ அபி” என்றாள் உணர்ச்சி வசப்பட்டு…

அவள் தலையை அதே புன்னகையுடன் வருடி அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், “சரி… நீ போய் குளிச்சிட்டு வா’ என்று கூற,

அவன் என்ன சொல்வான் என்று ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தவளுக்கோ சப்பென்றாகி விட்டது…

அவன் நெற்றி முத்தம் ஆயிரம் கதை பேசியதை அவள் உணரவில்லை…

அவனை முறைத்து பார்த்தவள், “உங்ககிட்ட போய் நான் உருகி உருகி லவ்வ சொன்னேன் இல்ல…என்ன சொல்லணும்” என்றவள் அவனை அழுத்தமாக பார்த்து, “பொண்டாட்டி கிட்ட லவ்வ சொல்லலாம் தப்பில்ல” என்று கூறி விட்டு செல்ல பார்க்க, அவள் கையை பிடித்தவன், “எனக்கு தோணுற நேரம் சொல்றேன்… எனக்கு உன்ன பிடிச்சிருக்கு… லவ்வா இல்லையான்னு தெரியல” என்றான்.

“சுத்தம்” என்றவள் அங்கிருந்து செல்ல பார்க்க அவளை நகர விடாமல் பிடித்தவன், “நாம சேர்ந்தே குளிக்கலாம்” என்றபடி அவளுடன் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்…

*******

எல்லோரும் சப்மெரினில் ஏறி விட்டனர்…

அதோ ஜெலி பிஷ் போன்ற அமைப்பில் வட்டமாக இருந்தது…

டிரான்ஸ்பேரன்டாக இருந்தது… ஆனால் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே ஒன்றும் தெரியாது…

ஆனால் உள்ளே இருந்து பார்த்தால் வெளிய அனைத்தும் விளங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது…

ராகவ் அதை ஓட்ட ஆயத்தமாக… கப்பலில் இருந்தே கரன் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தான்…

“ஓகே… நான் ஸ்டார்ட் பண்றேன்” என்ற ராகவ் அதை உயிர்ப்பித்து இயக்க ஆரம்பித்தான்…

சப்மெரினும் கொஞ்சம் கொஞ்சமாக கடல் பரப்பின் ஆழமான பகுதியை நோக்கி செல்லத் தொடங்கியது…

100m

200m

500m

“1000m ஆழத்துக்கு நாம் வந்துட்டோம்” என்றான் ராகவ்….

 உள்ளே இருந்தவர்களின் விழிகளோ சுற்றிலும் கூர்மையாக ஊன்றி அவதானித்துக் கொண்டிருந்தன…

இன்னும் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் பரப்பை அவர்கள் அடையவில்லை…

ஆழம் செல்ல செல்ல வெளிச்சம் படிப்படியாகக் குறைந்து தனி இருட்டாகவே இருந்தது…

அவர்களது நீர் மூழ்கி கப்பலில் இருந்த வெளிச்சம் தான் சுற்றிலும் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டு இருந்தது…

எந்த ஒரு உயிரினத்தின் நடமாட்டமும் அந்த பகுதியில் இருக்கவில்லை…

அதைப் பார்க்கும்போது மனதினுள் ஒரு பயம் ஊடுருவுவதை தவிர்க்க முடியவில்லை…

1500m அடி ஆழத்தை தாண்டியதும் தான் நிலப்பரப்பே இருந்தது…

 மிக மிக வித்தியாசமான ஒரு சூழலாக இருந்தது அந்த இடம்…

அவர்கள் வந்திருந்த பகுதியிலோ எந்த ஒரு பொருளுமே தவரமோ பாறைகளோ இருக்கவில்லை…

வெறுமையாக இருந்தது அந்த பகுதி…

இனி அந்தக் கப்பலை தேடி செல்ல வேண்டுமே…

ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்…

இன்னும் அந்தக் கப்பல் இருந்த இடத்தை நெருங்கவில்லை…

ஒரு எதிர்பார்ப்புடன் அனைவரது விழிகளும் சுழன்று கொண்டிருந்தன…

ஓரிடத்தை பார்த்தது மகிமாவின் கண்களோ மகிழ்ச்சியின் மின்னின…

தூற ஒரு இடத்தை கைநீட்டிக் கட்டியவள், “அங்க பாருங்க காய்ஸ்… ஷிப் மாதிரியே ஏதோ ஒன்னு இருக்கு” என்றாள்…

எல்லோரும் அதை பார்க்க தொடங்கி விட்டனர்…

அது கப்பல் மாதிரி ஒரு அமைப்பில் தான் இருந்தது…

 ஆனால் கப்பல் என்றும் உறுதியாக சொல்லி விட முடியாது…

அதன் பாதி நிலத்தினுள் அமிழ்ந்து போய் இருந்தது…

 மீதி பகுதி கப்பல் மாதிரி ஒரு அமைப்பில் இருந்தது…

அது முழுக்க தாவரங்கள் வளர்ந்து… பாசி பிடித்து கடலில் இருக்கும் ஏதோ ஒரு பாறை போல் இருந்தது…

 தூர இருந்து பார்ப்பதால் உறுதியாக எதையும் தீர்மானிக்க முடியாது அருகில் சென்று பார்த்தாக வேண்டும்…

சப்மெரினை அந்த கப்பலை நோக்கி செலுத்த தொடங்கினர்…

அருகில் இருப்பது போல் தெரிந்தாலும் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தது…

அதன் அருகே செல்ல செல்ல அது அதே கப்பல் என்று உறுதியானது…

அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க வில்லை…

அவர்களது பல வருட உழைப்பு கண்ணெட்டும் தூரத்தில்…

நூற்றுக் கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த கப்பல் அது…

அது இன்னும் உவர் நீரில் அழியாமல் இருப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை அதே ஒரு அதிசயம் தான்…

அத்தனை உறுதியாக தயாரிக்கப்பட்டிருந்தது போலும்…

இந்த நவீன காலத்திலும் ஆங்கிலேயர்களின் தொழில்நுட்பத்தை பாராட்டியே ஆக வேண்டும்…

இனி எக்ஸ் த்ரீ பொக்ஸை எடுக்க சப்மெரினில் இருந்து வெளியே செல்ல வேண்டும்…

அது பாதுகாப்பு கவசத்தில் இருந்து வெளியே வருவதற்கு சமன்…

“நான் போய் எக்ஸ் த்ரீ பொக்ஸ எடுக்கிறேன்” என்ற அபின்ஞான் நீரின் அழுத்தத்தை தாங்கக்கூடிய ஆடைகளை அணிய ஆரம்பித்தான்..

“நீ போகப் போறியா” என்று கேட்டான் மகாதேவ்…

“ஓஹ் டா… நானே போறேன்” என்றவன் லைட் கேமரா போன்றவற்றை தன் உடையில் பொருந்திக் கொண்டிருந்தான்…

அவன் ஆக்சிஜன் மாஸ்க்கை அணிய முன்பு அவன் கன்னத்தை பற்றிய மகிமா, “கவனமா போய் வாங்க” என்றவள் அவனை உற்று பார்த்து விட்டு, “ நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஐ டோன்ட் கெயார் அபி… நான் சொல்லிட்டே இருப்பேன்… ஐ லவ் யூ அபி” எனக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்…

அவர்கள் அருகே யாரும் இருக்கவில்லை… இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு சென்றிருந்தனர்… புன்னகைத்தபடி “ம்ம்ம் ஓகே…” என்றவன் குனிந்து அவள் இதழை கவ்விக் கொண்டான்….

உயிர் குடிக்கும் முத்தம் அது… அவன் அவளிடமிருந்து விலகும் போது அவளுக்கு மூச்சு வாங்கியது… எதையோ உணர்த்துவது போல் இருந்தது அந்த முத்தம்…

அவள் இதயம் வேகமாக துடித்தது….

வித்தியாசமான ஒரு உணர்வு அவளுள்….

என்னவென்று புரியவில்லை…

தன் உணர்வை வெளிக்கட்டாது அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் ஆக்சிஜன் மாஸ்கை அவன் தலையில் அணிவித்தாள்…

இனி அவன் சப்மெரினிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.

மகாதேவும் அவனை அணைத்து விடுவித்தவன், “கவனமா போய் வா” என்று கூற ஒரு தலையசைப்புடன்… அவர்கள் இருந்த பகுதியிலிருந்து கடலுக்குள் செல்லும் சப்மெரினின் கதவை நோக்கி வந்தான்…

அது சிறிய நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது…

முதல் கதவு திறக்கப்பட அதிலிருந்து வெளியே வந்தான்…

 உள்ளே இருந்தவர்கள் அவன் செல்வதை கேமராவில் பார்த்துக் கொண்டிருந்தனர்…

அதிலிருந்து இரண்டாவது கதவு… அதைத் தாண்டினால் மூன்றாவது கதவு…

அடுத்த கதவை திறந்தால் கடலுக்குள் சென்று விடலாம்…

இத்தனை கதவுகள் அமைக்கப்பட்டிருப்பது கதவை திறக்கும் போது உள்ளே வரும் நீரை வெளியேற்றுவதற்காக தான்…

 நான்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்று முழுமையாகப் பிரிக்கப்பட்டு இருந்தன…

ஒரு பகுதி கதவு மூடினால் அடுத்த பகுதிக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்லாது… அத்தனை நவீன வசதிகளுடன் செய்யப்பட்டிருந்தது…

கடலுக்குள் போகும் பகுதி கதவில் இருந்த ஒரு பட்டனை அபின்ஞான் அழுத்த… கதவு திறந்து கொள்ள அபின்ஞான் வெளியே வர கதவும் தானாக மூடிக் கொண்டது…

சப்மெரினில் இருந்து வெளியே வந்தவன் அந்தக் கப்பலை நோக்கி நீந்த தொடங்கினான்…

அந்தக் கப்பலை ஒருமுறை முழுதாக சுற்றிப் பார்த்தான்…வெளியே ஏதாவது இருக்கின்றதா என்று ஒன்றும் இருக்கவில்லை…

அந்த ஷிப் உறுதியான இருப்பினால் செய்யப்பட்டிருந்ததால் தான் அது மட்டும் இன்னும் மிச்சம் இருந்தது என்று அதைத் தொட்டுப் பார்த்தவனால் புரிந்து கொள்ள முடிந்தது…

இங்கு வரும் வரையும் நவீன டெக்னாலஜிகள் அவனுக்கு உதவினாலும் சில விடியங்கள் மனிதனால் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது…

 நவீன தொழில்நுட்பம் என்ன அற்புதமாக உறுதியான சக்தியுடன் இருந்தாலும் அந்த சக்தியை விட கடவுளால் படைக்கப்பட்ட மனித சக்தி அந்த சக்திக்கு அப்பாற்பட்டது போலும்…

கப்பலில் உடைந்திருந்த ஒரு பகுதியை பார்த்து அதன் வழியாகவே கப்பலினுள் செல்லத் தொடங்கினான் அபின்ஞான்…

அவன் செல்வதை நீர் மூழ்கி கப்பலில் இருந்த திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் உள்ளே இருந்தவர்கள்….

அந்தக் கப்பலுக்குள் இடைவெளி குறைவாகவும், பார்க்கவும் சிரமமாகவும் இருந்தது…

கப்பலினுல் இருந்த நீர் கலங்களாகவும் மங்கலாகவும் இருந்தது…

“இங்கே எப்படி எக்ஸ் த்ரீம பாக்ஸை தேட்றது” என்று தான் அவனுக்கு யோசனையாக இருந்தது…

அவன் கப்பலுக்குள் சென்றவுடன் உள்ளே இருந்தவர்களுக்கு திரையில் அங்கே நடப்பது தெளிவாக விளங்கவில்லை…

அவன் சென்று இருபது நிமிடங்கள் கடந்து விட்டன…

இன்னும் அவன் வரவில்லை…

 திரை முழுக்க கருப்பாக இருந்தது…

 அனைவருக்கும் பதற்றம் கூடிக் கொண்டே இருந்தது…

“ஏன் இன்னம் அபி வரல்ல… உள்ள என்ன நடக்குதுன்னு நம்மளால பார்க்கவும் முடியல” என்று பயத்துடன் கூறினாள் மகிமா…

“ஒன்னும் இருக்காது பயப்படாதே மகி” என்ற மகாதேவுக்கும் இதற்கு மேல் இங்கே இருந்து, கைகட்டிய படி திரையை பார்த்துக் கொண்டிருக்க முடிய வில்லை…

மகாதேவும் வேகமாக தயாராகிக் கொண்டு அபின்ஞான் சென்ற வழியிலே கப்பலை நோக்கி செல்லத் தொடங்கினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!