ஸ்விம்மிங் பூல் அருகே திடகாத்திரமான மேனியுடன் நின்றிருந்தான் அவன்… மகாதேவ்…
தட் தட் என்ற ஹீல்ஸ் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான்…
இளம் ரோஜா வர்ண…நீண்ட கைகளையுடைய தொடை வரையுள்ள லேஸ் ப்ராக்கொன்று அணிந்திருந்தாள்…
அவள் தோற்றத்திலே ஒரு பெண் சிங்கத்துக்குரிய கம்பீரம் இருந்தது…
அவள் பார்வையிலே திமிர், கம்பீரம் இருந்தது…
தோள்பட்டை வரையுள்ள சுருள் சுருளான கூந்தல்…
நவ நாகரீக மங்கையாக திகழ்ந்தாள்…
நீச்சல் தடாகத்தை அவள் நெருங்கியதும் அவளை கீழிருந்து மேல்வரை பார்த்த மகாதேவ், “வெல்கம் மிஸ் தேவகன்யா…” என்று சிரித்தபடி கூற…
மகாதேவ் அருகே வந்து நின்றவள் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி அவனை அழுத்தமாகப் பார்த்தவள், “உங்க வரவேற்புக்கு தேங்க்ஸ் மிஸ்டர் தேவ்… நாம போட்ட எக்ரிமெண்ட் படி வேலய முடிச்சிட்டேன்… நீங்க எப்போ நான் கேட்டத செய்ய போறீங்க” என்று கேட்டாள்.
“ஹேய் கூல் மகி… சும்மா அந்த பேர்ல கூப்பிட்டேன்… டென்ஷன் ஆகாதே…” என்றவன், “வெல்கம் டு அவர் ஹோர்ம் மை பிரின்சஸ்” என்று அவளை அணைத்துக் கொண்டான் மகாதேவ்…
அவள் மகிமா…
மகாதேவின் தங்கை…
அவனை விட ஐந்து வயது சிறியவள். இப்போது அவளுக்கு இருபத்தைந்து வயது…
அவர்கள் வீட்டின் இளவரசி…
மகிமாவுக்கு தாய் கிடையாது… அவள் பிறக்கும் போதே இறந்து விட்டார்…
அவர்களுக்கு தந்தை சத்யதேவ் மட்டுமே…
அவர்தான் இருவரையும் தாய்க்குத் தாயாக இருந்து வளர்த்தார்…
ஆனால் அவரும் மகாதேவின் பல்கலைகழக பட்டப் படிப்பு முடியும் தருவாயிலே இறந்து விட, அதற்குப் பிறகு அவளைத் தாய்க்குத் தாய் தந்தைக்குத் தந்தையாக இருந்து பார்த்ததென்னவோ மகாதேவ் தான்…
மகாதேவும் (Archaeology) தொல்பொருள் ஆய்வில் தான் பட்டப்படிப்பை முடித்ததன் பிறகு தந்தையின் கம்பெனியை நடத்துவதற்காக ஜெமோலஜியில் பிஎச்டியை முடித்தான்…
மகிமாவும் தானும் தொல்பொருள் ஆய்வியல் கற்கையே படிக்க வேண்டும் என்று வந்து நிற்க…
மகாதேவ் அது அவளுக்கு பொருத்தமான படிப்பில்லை…என்று எவ்வளவு எடுத்துக் கூறியும்,
அதை மீறி கெஞ்சிக் கூத்தாடி படித்து முடித்து… இப்போது அதில் மாஸ்டர் செய்து கொண்டிருக்கிறாள்…
அவன் அணைப்பிலிருந்து வெளியே வந்த மகிமா, “எங்கடா புடிச்ச இந்த ராட்சஷன? என்னமா ஏசுறான் தெரியுமா? பைலை தூக்கி மூஞ்சிலே வீசி அடிக்கிறான்டா… யாருமே எனக்கு இப்படி ஏசினதே கிடையாது… என்ன பேருடா அது… ஞானின்னு பெயர் வெச்சா ஞானியாகிட முடியுமா?? அவன் பேரு கூட வாய்க்கு சரியா வரமாட்டேங்குது” என்று மகிமா அங்கே காட்ட முடியாத கோபத்தை இங்கே காட்டிக் கொண்டிருக்க,
“ரொம்ப சூடா இருக்க போல… இப்ப நீ எதுக்கு கோபப்படணும்… நீ செஞ்ச வேலைக்கு அவன் தான் எரிமலயா கொதிச்சிட்டு இருப்பான்” என்று சிரித்தபடி அவள் தோலை தட்டிக் கூற…
“அது சரிதான்…” என்று சிரித்து கொண்டவள், “இந்த பதினஞ்சி நாளா நான் அங்க பட்ட பாடு எனக்கு தான் தெரியும்… நீ இங்க கூலா ஜாலியா தான் இருந்திருப்ப…” என்று மகிமா உதடு சுழித்துக் கூற…
“நான் உன் ரிசேர்ச்க்கு (research) சம்மதிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்…” என்று மகாதேவ் கூற, கண்ணை விரித்து மகாதேவை பார்த்தவள், “தேங்க்ஸ் டா… நீதான் இந்த உலகத்திலே பெஸ்ட் அண்ணா” என்று சிரித்தபடி அவனை அணைத்து கொண்டாள்…
“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன யாரோ என்னவோ பேசினாங்க” என்று மகாதேவ் அவளை அழுத்தமாக பார்த்து கேட்க,
“அப்படி பேசினவ லூசா இருப்பா… அதெல்லாம் நீ கணக்கெடுக்க கூடாது அண்ணா”என்றவள், ” நான் ரெஸ்ட் எடுக்க போறேன்… ஹாஸ்டல்ல நின்னு அலுத்து போய் வந்திருக்கேன்” என்றபடி சத்தம் இல்லாமல் அங்கிருந்து சென்றாள்…
இரு பக்கமும் தலையாட்டி சிரித்துக் கொண்டான் மகாதேவ்…
மகிமாவுக்கோ தன் இலட்சியம் நிறைவேறிவிடும் என்ற மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை…
அதற்காகத்தானே இவ்வளவு ரிஸ்க் எடுத்து மகாதேவ் கூறிய வேலையை செய்து விட்டு வந்திருக்கிறாள்…
“மிஸ்டர் அபின்ஞான்… உன்ன ரொம்ப புகழ்ந்தாங்க… பட்… நான் நெனச்ச அளவுக்கு நீ வேர்த் இல்ல…” என்று நினைத்தவளுக்கோ பதினைந்து நாட்களுக்கு முன் நடந்ததே தன் மனகண் முன்னால் வந்து நின்றது…
காலை ஐந்து மணிக்கே எழுந்து கொண்ட மகிமா தன் அறைக் கதவை திறந்து கொண்டு பேல்கனியில் வந்து நின்றாள்…
இன்னும் வெளிச்சம் பரவவில்லை… வெண்ணிலவு மங்கலான ஒளியை வீசிக்கொண்டிருந்தது…
இதமான குளிர் காற்று அவள் மென் தேகத்தை தழுவிச் சென்றது…
அக்காற்றை ஆழ்ந்த சுவாசித்தவள், உடற்பயிற்சி செய்வதற்கு தயாராகி ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டி-ஷர்டை அணிந்து கொண்டு உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்தாள் மகிமா…
மகாதேவும் அங்கே தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்…
அவள் ஜிம்மினுள் நுழைவதை கண்ட மகாதேவ், “குட் மார்னிங் மகி…” என்றான் தானாக அரும்பிய புன்னகையுடன்…
“குட் மார்னிங் அண்ணா” என்றவள், அவன் அருகில் இருந்த ட்ரெட்மில்லில் ஓட தொடங்கினாள்…
இடையிடையே அவனைப் பார்த்து… ஏதோ கூற பார்ப்பதும்… பின் தயங்குவதாக ஏதோ யோசனையுடன் மகிமா ஓடிக்கொண்டிருக்க…
அவள் அருகே வந்த மகாதேவ் அவளோடுவதை நிறுத்தி, “சொல்லு மகி… என்ன விஷயம்” என்று நேரடியாகவே கேட்டு விட்டான்…
“அண்ணா…” என்று அவள் இழுக்க,
அவளை அழுத்தமாக பார்த்தபடியே அமைதியாகவே நின்றிருந்தான் மகாதேவ்…
“அண்ணா நான் ரிசர்ச் செய்யணும்” என்னாள் மகிமா…
“படிச்ச கிட்ட ரிசர்ச் செஞ்சு தானே ஆகணும்… அதுக்கு என்ன… செய்ய வேண்டியது தானே” என்று அவள் கேட்கப் போகும் விடியத்தை அறியாது கூற,
கண்கள் மின்ன அவனை பார்த்தவள், “அண்ணா எனக்கு ஷிப் ஒன்னு ரெடியாக்கி தர முடியுமா?” என்று ஒரே போடாக போட…
அவளை அதிர்ந்து பார்த்தவன், “கடலுக்கு தனியா போக போறியா… அது எவ்ளோ ரிஸ்க் தெரியுமா?” என்றான்.
“ஆனா அண்ணா… நான் ஃபுல் பிராக்டீஸ்… எடுத்து தான் இருக்கேன், கடல்ல நான் ரிசர்ச் பண்ணியே ஆகணும்… அதுக்கான எல்லா டேட்டாவும் கலெக்ட் பண்ணிட்டேன்” என்று தயங்கிய படி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்…
அவன் முகத்தில் எந்த உணர்வும் பிரதிபலிக்கவில்லை…
“அண்ணா ப்ளீஸ் டா…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க…
அவனுக்கோ மெல்லவும் முடியாத… துப்பவும் முடியாத நிலை…
அவள் ஆசைப்பட்டதை மகாதேவ் ஒருநாளும் மறுத்ததில்லை…ஆனால் அவள் இப்போது கேட்பது கடலுக்கு அடியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று….
இந்தப் படிப்போ அவள் ஆசைக்காக மட்டும் என்று கூறி விட்டு,
இப்போது அதன் ஆய்வுக்காக கடலுக்கு அடியில் செல்ல வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.
வேறு எத்தனையோ இலகுவான ஆய்வுகளை தெரிவு செய்யலாம்… ஆனால் அவளுக்கு கடலுக்கு அடியில் செல்வதில் என்ன தான் ஆசையோ என்று தெரியவில்லை…
அவள் சோகமாக இருப்பதை கண்டு பொறுக்க முடியாத மகாதேவ், “சரி ஓகே… நீ எனக்கு ஒரு விஷயம் பண்ணனும்… அத சரியா பண்ணினா… உன் ரிசர்ச்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்று மகாதேவ் கூற,
சந்தோஷத்தில் கண்களை விரித்தவள், “ஓகே.. ஓகே… என்ன விஷயம்ன்னு சொல்லு… நீ சொல்றத பன்னிட்றேன்” என்றாள் கூலாக…
“இது சின்ன விஷயம் இல்ல…” என்றான் மகாதேவ்.
“என்ன விஷயமா இருந்தாலும் பரவால்ல… நான் பார்த்துப்பேன்… என்ன விஷயம்ன்னு மட்டும் சொல்லு” என்று அவள் இறுமாப்புடன் கூற…
“ம்ம்” என்றவள்… “அந்த கம்பெனி சம்பந்தமா ஃபுல் டீடைல்ஸ எனக்கு மெயில் பண்ணு” என்று மகிமா இலகுவாக கூற…
“ஏய் நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் சிம்பளான விஷயம் இல்ல… அவனை நெருங்குறதே கஷ்டம்… அதைவிட அங்கிருந்து கொட்டேஷன திருடுறது கனவிலும் நடக்காத காரியம்… சும்மா பைத்தியக்காரத்தனமா கனவு கானாம போய் வேலய பாரு” என்று மகாதேவ் கடுப்பாக கூற,
“முதல்ல நான் கேட்ட டீடைல்ஸ்ஸ தா… மத்த விஷயத்தை பிறகு பார்க்கலாம்…” என்றாள் மகிமா ஒரு உறுதியுடன்,
“ஆர் யூ ஷுவர்” என்று அவளை சந்தேகமாக பார்த்தபடி கேட்டான்,
“ம்ம்” என்றாள்.
“கட்டாயம் இந்த டீல் எனக்கு தான் கிடைக்கணும்… அவன இந்த மொற ஜெயிக்க விடவே கூடாது… ரொம்ப திமிர்ல ஆடிட்டு இருக்கான்” என்று மகாதேவ் கூறிக் கொண்டிருக்கும்போதே
மகாதேவால் அவளை நம்பத்தான் முடியவில்லை… “நீ அங்க போக போறியா? என்று மீண்டும் கேட்டான்…
“ம்ம்… எனக்கு அந்த கம்பெனில வேலையொன்னு வேணுமே” என்று மகிமா யோசனையுடன் மகாதேவை பார்த்து கேட்க,
“வேலய எடுத்துடலாம்… அது பிரச்சின இல்ல… உனக்கு இந்த வேலய பத்தி ஒண்ணுமே தெரியாதே… அங்க போய் என்ன செய்வ?” என்று கேட்டான்…
“அதுதான் நீ இருக்கியே…” என்றாள் அவன் தோளில் தட்டி…
அவளை அதிர்ந்து பார்த்தவன், “என்னது நானா…?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்க,
“ம்ம்… எனக்கு தான் தெரியாது… ஆனா உனக்கு நல்லாவே தெரியுமே…” என்று இடைவெளி விட்டவள், “நான் எனக்கு தர வேலய உனக்கு ஷேர் பண்றேன்… நீ அத செஞ்சு எனக்கு மெயில் பண்ணிடு… மீதி வேலய நான் பார்க்கிறேன்… சிம்பல்.. இந்த விஷயத்துக்கா இவ்ளோ டென்ஷன் ஆகுற? நானெல்லாம்… எத்தன காப்பி கட், ஹெக் எல்லாம் பண்ணியிக்கேன்…” என்று அவள் இல்லாத காலரை உயர்த்திக் கொள்ள,
“அடிப்பாவி நீ இவ்ளோ பெரிய ஆளா…” என்பது போல் அவளை பார்த்து வைத்தான் மகாதேவ்…
மகிமாவும் “அபி ஜெம் & ஜூவலர்ஸ்க்கு” செல்ல ஆயத்தமானாள்…
அதற்காக அவளுக்கு மகாதேவ் வைத்த பெயர் தான் தேவகன்யா…
அவள் கல்விச் சான்றிதழ்களையும் பொய்யாகவே உருவாக்கினான்…
அவனிடம் இருக்கும் பணப்பலத்தையும் அதிகாரத்தையும் வைத்து இலகுவில் தன் காரியத்தை சாதித்து விட்டான்…
ஆனால் இறுதியில் அபின்ஞானிடமிருந்து வரும் பதிலடி எவ்வாறு இருக்கும் என்பதை யோசிக்க தவறவிட்டான் போலும்…
அலுவலகத்தில் அவளுக்கு வேலையும் கிடைத்தது…
அவள் ஹாஸ்டலுக்கு செல்ல இன்னும் இரு நாட்களே இருந்தன.
அங்கு செல்ல மகிமா உடைகளை தயார் படுத்திக் கொண்டிருக்க, அவள் அறைக்கு வந்த மகாதேவ், “என்ன டிரஸ் டி இது…” என்றவன் அவளை முறைத்தபடியே அவள் எடுத்து வைத்திருந்த நாகரிகமான ஆடைகளை ஒதுக்கி வைத்தவன்… தான் வாங்கி வந்திருந்த புடவைகளை அவளிடம் கொடுத்தான்.
அதைப் பார்த்துத் திடுக்கிட்டவள் “அண்ணா என்னால சாரி எல்லாம் கட்ட முடியாது” என்றாள்.
“இதெல்லாம் நீ செஞ்சு தான் ஆகணும்.. எந்த ஒரு கேள்வியும் கேட்காதே” என்றவன் ஒரு பெண்ணை அழைத்து அவளுக்கு சேலை கட்டவும் பழக்கி கொடுத்தான்…
மகிமா அபின்ஞானின் கம்பெனிக்கும் வந்துவிட்டாள்…
கம்பெனியை சுற்றி பார்த்தவள் அதன் பிரம்மாண்டத்தில் “ரொம்ப பெரிய கம்பெனிதான் ” என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் நினைத்ததை விடவே அபின்ஞான் கரடு முரடானவனாகவே இருந்தான்…
அபின்ஞான் அவளுக்கோ அதிகமான வேலைகளை வழங்கிக் கொண்டிருக்க, உண்மையில் அவள் எங்கே வேலை செய்தாள்… அவளது வேலையை செய்தது என்னவோ மகாதேவ் தான்…
வேகமாக செய்தால் சந்தேகம் வந்துவிடும் என்று மெது மெதுவாக, அபின்ஞானிடம் ஏச்சு வாங்கியபடி மகாதேவ் செய்ததை அனுப்பி வைப்பாள்…
அதனால் தான் அபின்ஞான் அவள் வேலையில் எந்தக் குறையும் காணவில்லை… அவள் வேலை செய்ய தாமதிப்பதை தவிர…
அவளாகவே வேண்டும் என்று ஏதாவது பிழையை விட்டு அனுப்புவாள்… பின் அதை சரி செய்து திருப்பிக் கொடுப்பாள்…
இதுவரை யாருமே அவளை அபின்ஞான் அளவுக்கு கேவலமாக பேசியதில்லை… அதனாலயே அவள் வைராக்கியமும்… வெறியும் இன்னும் கூடியது…
கொட்டேஷனை எவ்வாறாவது எடுத்து விட வேண்டும் என்று பிளேன் போடத் தொடங்கினாள்…
அங்கே வந்ததில் எதிர்பாராமல் ஏற்பட்ட நட்புதான் சஞ்சனாவுடையது…
அவளோ வெகுளிப் பெண்… மனதில் பட்டதெல்லாம் உடனே பேசி விடுவாள்…
சஞ்சனா மகியிடம் ஜுவல்ஸ் டிசைன்ஸ் பற்றி கேட்கவே… அது அவளுக்குத் தெரியாது என்பதாலே தன் அண்ணனை தெரிந்த அண்ணனாக கூறி மாட்டி விட்டாள்.
அன்று ஹாஸ்டலுக்கு செல்ல முன்பே மகாதேவிடம் இருந்து பல மிஸ்கோல்கள் மகிமாவுக்கு…
வீட்டுக்கு வந்தவள் மகாதேவ்க்கு அழைப்பு எடுக்க… முதல் ரிங்கிலே அழைப்பை ஏற்றவன்… “யார கேட்டு என் நம்பர… அந்த லூசு கிட்ட கொடுத்த…” என்று மகாதேவ் கோபத்தில் கத்த,
“டேய் சரியா பார்த்தா நான் தான் உன்கிட்ட கத்தனும்… நான் தான் மாட்டிட்டு திண்டாட்டிருக்கேன்… இந்தப் பக்கம் சஞ்சு என்கிட்ட ஜுவல்ஸ் டிசைன் கேட்கிறாள்… நான் இங்க தனியா திண்டாடிட்டு இருக்கேன்… இவ்ளோ பெரிய பிசினஸ்மேன் உனக்கு இத கூட சமாளிக்க முடியாதா?” என்று அவனுக்கு பேச இடம் கொடுக்காமல் அவன் ஈகோவை தூண்டி அவன் வாயை அடைத்து விட,
“சரி செஞ்சி தொலைச்சிறேன்… வீட்டுக்கு வா… அதுக்கு பிறகு உனக்கு இருக்குடி… நான் இங்க உன் வேலய செய்யணும்… அவ வேலயும் இப்ப செய்யணும்… நான் என்ன உங்க வேலைக்காரனா?? ” என்று அவன் பொறுக்க முடியாமல் மீண்டும் கத்த,
“டேய் கொஞ்சம் பொறுமயா இருடா.. வேலய சொதப்பாம… இன்னும் ஒரு கிழம தான் இருக்க போறேன்… அதுக்குள்ள எல்லா விஷயமும் நடந்துடும், அது வர கொஞ்சம் எங்க வேலையும் சேர்த்து பாரு” என்றவள் சட்டென போனை வைத்து விட்டாள் மகிமா. இதற்கு மேல் எகிரி கொண்டிருப்பவனுடன் பேசிக் கொண்டிருக்க அவளுக்கு பைத்தியமா என்ன…
தன் கையை மடக்கி கோபத்தில் தொடையில் குத்திக் கொண்டவன், “உங்க வேலய நான் பார்த்தா… என் கம்பெனிய எவன்டி பார்ப்பா…” என்று கத்தியவன் அடுத்த செய்தது என்னவோ அவர்களது வேலையை மட்டும் தான்…
நாட்கள் செல்ல செல்ல மகிமாவின் நடிப்பை அனைவரும் உண்மை என்றே நம்பி விட்டனர்… அவள் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை…
அவளுக்கு கோபப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை… அவள் கஷ்டப்பட்டு தன் கோபத்தையும் கட்டுப்படுத்துவது அபின்ஞானிடம் மாத்திரம் தான்…
அவனுக்கு பதிலுக்குப் பதில் சொல்ல அவள் இதழ்கள் துடிக்கும்… ஆனால் ஒரு வார்த்தையில் வேலை கெட்டுப் போய் விடுமே என்பதலே அவன் சொல்வதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பாள்…
அவள் அந்த கோபத்தையெல்லாம் சேர்த்து காண்பிப்பது மகாதேவ்விடம் தான்…
அபின்ஞானும் அவனது ப்ரொஜெக்டை சமர்ப்பித்து விட, அன்று இரவே அவர்களது கம்பெனியினுல் இரகசியமாக நுழைந்து விட்டாள் மகிமா…
அவளுக்குத்தான் அவர்களது நிறுவனக் கட்டமைப்பு மனப்பாடம் ஆகிவிட்டதே…
கருப்பு நிற நீட்ட கை டி-ஷர்ட்…. கருப்பு நிற ஜீன்ஸ்… தலையில் கருப்புத் தொப்பி… முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து… கூலஸைய்யும் போட்டுக் கொண்டவள், தான் திருடி வைத்திருந்த கீயை எடுத்துக்கொண்டு அவன் அலுவலகத்துக்குள் இரவில் வந்தாள்…
அவள் ஹெக்கிங் செய்வதில் வெகு திறமையானவள்…
அதன் மூலம் அனைத்து சிசிடிவிகளையும் செயலிழக்க செய்தவள் மிக இலகுவாகவே அவன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அபின்ஞான் தன் வேலைகளுக்கு மடிக்கணியை தான் பயன்படுத்துவான்… அதை வீட்டுக்கும் எடுத்துச் சென்று விடுவான்…
அன்று அவன் லெப்பில் அவனுக்கு தெரியாமலே தண்ணீரை கொட்டி விட்டு வந்து விட்டாள் மகிமா…
அதனால் அவனால் லெப்பில் வேலையை செய்ய முடியவில்லை… அன்று அவன் ப்ரொஜெக்டை சமர்ப்பித்தது என்னவோ அலுவலகத்தில் இருக்கும் கணனியில் தான்…
அது மகிமாவுக்கு வசதியாகிப் போனது…
அவன் அலுவலகத்துக்கு வந்தவள் தன் மடிக்கணனியை உயிர்ப்பித்து அவனது சிஸ்டம் அனைத்தையுமே ஹெக் பண்ணி விட்டாள்…
அபின்ஞான் தொடர்ந்து வேலை பார்த்த கலைப்பிலும் ப்ரொஜெக்டை முடித்து விட்டதாலும் அன்று இரவு நிம்மதியாக தூங்கி இருந்ததால் அவனது தொலைபேசிக்கு வந்த எமெஜென்சி அலெர்ட்’டை அவதானிக்கவில்லை….
மகிமா எந்த கஷ்டமோ சிரமமோ இல்லாமலே… ப்ராஜெக்ட் சம்பந்தமான அனைத்து டாக்குமெண்ட்ஸ்சை எடுத்து விட்டாள்…
ஹாஸ்டலுக்கு வந்த உடனே அதை மகாதேவ்க்கு அனுப்ப… அவனும் அன்றிரவே தன் ப்ரொஜெக்ட்டையும் சமர்பித்து விட்டான்…
அந்த அலெர்ட் டை அடுத்த நாளும் அபின்ஞான் பார்க்க தவறியது மகிமாவின் அதிர்ஷ்டமாகி போனது…
எதுவுமே தெரியாதது போலவே… அடுத்த நாள் ஆபீஸ்க்கு வந்த மகிமா தன் இராஜனாமா கடிதத்தை வழங்கி, அலுவலகத்தில் இருந்து விலகிக் கொண்டாள் …
யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில்… சதுரங்கத்தில் ராணியே தன் ஒவ்வொரு நகர்வையும் பார்த்து பார்த்து காய்களை நகர்த்தி ராஜாவையே தோற்கடித்து இறுதியில் ராணியே வென்று விட்டாள்.
******
அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு இனி தன் ஆய்வை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை… கடலைப் பற்றி நினைக்கும் போதே அவள் இதழ்கள் தானாகவே விரிந்து கொண்டன…
ஆனாலும் அபின்ஞான் அவளை அலுவலகத்தில் வைத்து வாங்கிய வதைக்கும்… அவன் பேசின பேச்சுக்கும் இப்பொழுது அவன் முகம் போகும் போக்கை பார்க்க மகிமாவுக்கு ஆர்வமாக இருந்தது.
“எனக்கு வேல தெரியாதுன்னு… நான் லேட்டா வேல செய்றேன்னு எப்படி வெச்சி செஞ்சான்… இப்போ உன் ப்ரொஜெக்ட்ட யாரு திருடினாங்கன்னு தெரியாம யோசிச்சு சாவுடா…” என்று நினைத்துக் கொண்டவள், “நம்ம கார் ரய்ட் போய் எவ்வளவு நாளாச்சு…” என்று நினைத்தவள்… தொடையுடன் இருக்கிப் பிடித்த நீல நிற ஸ்கேர்டும், கையில்லாத வெண்ணிற டி ஷர்டையும் அணிந்தவள் கண்ணாடி முன்பு வந்து நின்றாள்…
அவள் பளிங்கு கால்களை அந்த உடை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருந்தன…
தன் தோற்றத்தில் திருப்தி அடைந்தவள், தன் ஜாகுவார் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்…
ஆள் நடமாட்டம் இல்லாத பாதையில் காரை செலுத்த தொடங்கினாள்…
இரு பக்கமும் உயர்ந்த மரங்கள் பச்சைபசேல் என்றிருந்தது…
காரின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டினாள்…
காரின் வேகம் கூடும் போது அவளுக்கு மனதுக்கு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது….
“வாவ்” என்று கத்தியவள்
“செம்மையா இருக்கு இப்படி வந்து எத்தனை நாளாச்சு… அந்த அரக்கன் கிட்ட இருந்து ஒண்ணுமே செய்ய முடியல” என்ற எண்ணியபடி ஆக்சிலேட்டரை இன்னும் அழுத்தினாள்…
அவளுக்கு வானத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு…
வாயினுள் ஒரு பாட்டை ஹம் பண்ணியப்படியே காரை ஓட்டினாள்…
அவள் பயணித்துக் கொண்டிருந்த சாலையில் திடீரென அவளுக்கு நேர் எதிரே அவளை நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருக்கவும்… அதிர்ந்து பார்த்தவள் அந்தக் கார் தன்னை மோதும் வேகத்தில் வரவே, இவளும் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் வேகத்தை குறைக்க முடியாது காரை ஒடித்து திருப்பவும் அவள் காரோ அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது…
அவளை நோக்கி வந்த காரோ பலமுறை வட்டமடித்து அவள் காருடன் நெருங்கி நின்றது…
Interesting aa iku