குழந்தையை மீண்டும் தொட்டிலில் போட்டவன் இனியாளின் அருகில் வந்து அவளை பரிசோதித்தான்.
பல மணி நேரமாக அவளை அறித்துக் கொண்டிருந்த கேள்வியை அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தடுமாற்றத்தோடு தன் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளின் உடல் மொழியை வைத்தே அவள் தன்னிடம் எதுவோ கூற வருவதை யூகித்தவன், “எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மிஸ்…” என்று இழுத்தவனுக்கு அவள் பெயர் கூட தெரியவில்லை.
அந்த காகிதத்தில் தந்தையின் பெயர் மதன் என்று எழுதி இருந்ததை பார்த்தவனிற்கு மூளை வேளை நிறுத்தம் செய்து விட்டது.
தாயின் பெயரையும் பார்த்திருந்தால் இப்படி தடுமாறி இருந்திருக்க மாட்டான்.
அவன் தடுமாற்றத்தை உணர்ந்து, “இனியாள்” என்றாள் அவசரமாக.
ஆனால் அவனின் ‘மிஸ்’ என்ற விளிம்பை ‘மிஸஸ்’ என்று அவள் சரி செய்யவே இல்லை. அதிலிருந்தே அவனுக்கு விளங்கி விட்டது இவள் இன்னும் யாரையும் திருமணம் முடிக்கவில்லை என்று.
“சொல்லுங்க இனியாள்” என்றான் ஒருவித உரிமையோடு.
அவளுக்கோ அப்படி ஒரு தயக்கம்.. தன்னிலையை எண்ணி பெரும் அவமானமாகவும் இருந்தது.
ஆனால் என்ன செய்ய முடியும்.. சூழலை கடந்து தானே ஆக வேண்டும்.
தயக்கத்தோடு, “டாக்டர்.. அது வந்து.. பில் எவ்வளவு கட்டணும்?”.
அவளின் கேள்வியில் அவளை கூர்ந்து பார்த்தவன், “ஏன்?” என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கேள்வியாக.
உரிமையாய் அவளிடம் வேண்டாம் என்று மறுக்க முடியாமல், “ரம்யா இவங்க கேட்கிற டீடைல்ஸை சொல்லுங்க” என்றவாரே அவளை பரிசோதித்து கொண்டு இருந்தான்.
பரிசோதனை ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும் அவளின் மனதில் இருப்பதை படிக்கவும் முயற்சித்துக் கொண்டிருந்தான்.
“40 டூ 50,000 ஆகும் மேடம்” என்றவளின் வார்த்தையை கேட்ட இனியாளுக்கோ தலை சுற்றுவது போல் ஆகிவிட்டது.
அவளின் முகமே பேய் அறைந்தது போல் அரண்டு போய்விட்டது.
“என்னாச்சு மேடம் ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க”.
“ஒ.. ஒன்னும் இல்ல..” என்றவளுக்கோ இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.
உதவிக்காக இருந்த மதனையும் அனுப்பி வைத்து விட்டாள். கையில் குழந்தையை வைத்துக்கொண்டு பணத்திற்கு என்ன செய்வது கையில் ஒரு குண்டுமணி தங்கமும் இல்லை மொத்தத்தையும் அவள் அண்ணி வாங்கி விட்டு தானே வெளியே அனுப்பினார்.
இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தோடு அமர்ந்திருந்தவளை பார்த்த பாரிவேந்தன், “என்ன ஆச்சு.. திடீர்னு உங்களுக்கு பிபி இவ்வளவு ரைஸ் ஆகுது எனி ப்ராப்ளம்?” என்றான் அவளின் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தவாறு.
அவளுக்கு இவனிடம் இப்படி கேட்கவும் முடியவில்லை.. கேட்காமல் இருக்கவும் முடியவில்லை..
தன் நிலையை எண்ணிய கழிவிரக்கத்தோடு, “சார் இவ்வளவு பில் வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல சார். என்கிட்ட இப்போ அவ்வளவு பணமும் இல்லை”.
அவன் பார்வை அவளை விட்டு துளியும் நகரவில்லை.
அவன் தன்னை சந்தேகத்தோடு பார்க்கிறான் என்று எண்ணியவளோ அவசர குரலில், “உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நான் நினைக்கல சார். ஏதாவது கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவாங்கனு தான் நினைச்சேன்.
ஆனா என் பிரண்டு என்னை இங்க கூப்பிட்டு வந்து விட்டுட்டாரு. வேணும்னா எனக்கு இங்கேயே ஏதாவது வேலை போட்டு கொடுங்க வேலை பார்த்து பணத்தை கட்டிடறேன்” என்றவளுக்கு ஆற்றாமையில் விழிகளில் கண்ணீர் குளம் கட்டி விட்டது.
அதற்கு மேல் அங்கே அவனால் ஒரு நொடியும் நிற்க முடியவில்லை. அவளின் கண்ணீர் இவனின் இதயத்தை அப்படியே உயிருடன் வெளியே எடுப்பது போன்ற வலியை கொடுத்தது.
அவளது இந்த நிலைக்கு தான் தானே காரணம் என்று எண்ணியவனுக்கோ குற்ற உணர்வு ஆகிப் போக, “ரம்யா இவங்களுக்கு நம்ம ஹாஸ்பிடல் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பத்தி சொல்லுங்க அப்படியே இவங்களுடைய நேமையும் நம்ம டிரஸ்ட் பேஷன்ட் உடைய லிஸ்ட்ல சேர்த்திருங்க” என்று மட்டும் கூறியவன் விறுவிறுவென தன் அறையை நோக்கி சென்றுவிட்டான்.
அவன் சென்ற பிறகு ரம்யா இனியாளிடம் இவர்கள் ஹாஸ்பிடலின் விதிமுறைகளை பற்றி விளக்கி கூறிக்கொண்டு இருந்தாள்.
இவர்களின் மருத்துவமனை முத்துலட்சுமி டிரஸ்ட் சார்ந்த மருத்துவமனை. வசதி வாய்ப்பற்றவர்களுக்கு இங்கே இலவச மருத்துவமும் பார்ப்பார்கள். அதன் அடிப்படையில் இனியாளை பணம் கட்ட வேண்டாம் என்று விளக்கி கூறினாள் ரம்யா.
அதை கேட்ட பிறகு தான் இனியாளின் முகமே தெளிவடைந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்” என்று ரம்யாவை நோக்கி கண்ணீரோடு தன் கரம் கூப்பினாள்.
அவளின் கையின் மீது தன் கையை வைத்த ரம்யா, “ஐயோ! என்ன மேடம் பண்றீங்க நீங்க.. நான் இங்க ஒரு ஸ்டாப் மட்டும் தான். நானுமே முத்துலட்சுமி அம்மா டிரஸ்ல படிச்சவ தான்.
படிச்சிட்டு இவங்க ஹாஸ்பிடலிலேயே வேலைக்கு வந்துட்டேன். பாரி வேந்தன் டாக்டர் பேருக்கு தகுந்த மாதிரி உண்மையிலேயே பெரிய கொடைவள்ளல் தான்” என்று இன்முகமாக கூறியவளோ, “என்னை மாதிரி எத்தனையோ குழந்தைங்க இவங்க டிரஸ்ட் மூலமா தான் படிச்சிருக்காங்க.
இன்னைய வரைக்கும் வசதி வாய்ப்பு இல்லாது எத்தனையோ நோயாளிங்க இவங்க டிரஸ்ட் மூலமா இலவசமா இங்க வந்து மருத்துவம் பார்த்துக்கிறாங்க. இது எல்லாத்துக்குமே பாரி டாக்டருடைய குடும்பத்துக்கு தான் நாம எல்லாருமே நன்றி சொல்லனும்” என்றாள் நெகிழ்ந்து போய்.
இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்களா என்று எண்ணும் பொழுது இந்த நொடி இனியாளுக்குமே உள்ளம் நெகிழ்ந்து போய்விட்டது.
ஆனால் இத்தனை நல்லவனாக இருப்பவன் தான் தன் வாழ்க்கையை அழித்திருக்கிறான் என்பது தெரிய வந்தால் இவளின் நிலை என்ன ஆகுமோ..
அடுத்த இரண்டு நாட்களும் பெரிதாக எந்த ஒரு சிரமமும் இல்லாமல் சென்று விட்டது.
பாரிவேந்தன் குற்ற உணர்விலேயே இனியாளை பார்க்க வரவில்லை.
இனியாளும் அடுத்து தன் வாழ்க்கையில் என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே மூழ்கிப் போனாள்.
யாரோ அவளின் அறைக் கதவை மெதுவாக தட்டி விட்டு உள்ளே நுழையும் அரவம் உணர்ந்து தன்னிலை அடைந்தவள். வாசலை எதிர்நோக்கவும் இவளுடன் கல்லூரியில் ஒன்றாக பயின்ற ஆஷா தான் புன்னகை முகமாக அறைக்குள் நுழைந்தாள்.
அவளை பார்த்த இனியாளும் மெல்லிய புன்னகையை உதிர்க்க.
அவள் அருகில் வந்து அமர்ந்த ஆஷா அவளை அணைத்துக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் இனி நீ மட்டும் சொல்லலைனா அவர் கண்டிப்பா காலேஜ்ல ஜாயின் பண்ணி இருக்கவே மாட்டார்”.
“ம்ம்.. ஆமா.. நான் சொல்லும் போது முடியவே முடியாதுன்னு மறுத்தவர் நீ சொன்னதுமே வந்து சேர்ந்துட்டார்”.
“எனக்காக சார் எவ்வளவோ செஞ்சிருக்காரு.. என்னுடைய கஷ்டகாலத்துல என் கூட துணையாக இருந்திருக்காரு.. அவருடைய வாழ்க்கையில் மேல மேல போறதை பார்க்கும் பொழுது எனக்குமே ரொம்ப சந்தோஷம் தான்” என்றாள் தன் குரலில் நன்றியை தேக்கியவாறு.
ஆஷாவும் அவளுக்கு ஆமோதிப்பாக தலையசைக்கவும், “சரி டிலே பண்ணாம உன் மனசுல இருக்குறதை சார் கிட்ட சொல்லி சீக்கிரமே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்ற நல்ல விஷயத்தை என்கிட்ட வந்து சொல்லு. வாழ்க்கையில் எது எப்போ நடக்கும்னு நம்ம எதையுமே நினைக்க முடியாது.
நாம நினைச்சு பார்க்காததெல்லாம் நடந்து நம்ம வாழ்க்கையே எப்போ வேண்டுமானாலும் தலைகீழா மாறும். நீங்க ரெண்டு பேருமே சந்தோஷமா வாழனும் சாரோட வாழ்க்கை சந்தோஷமா அமையனும்”.
மீண்டும் ஒருமுறை அவளை அணைத்து விடுவித்த ஆஷா, “கண்டிப்பா.. ஆனா அவரை சம்மதிக்க வைக்கிறது கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டம் தான்” என்று பெருமூச்சை வெளியிட்டவாறு, “என்னை மன்னிச்சிடு இனி உன்னை நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன்”.
“அதை பத்தி பேச வேண்டாம் விடு.. நீ எதுவும் வேணும்னு செய்யலையே.. என் தலையெழுத்து இப்படி எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு அதான் நடந்திருக்கு.. இதுக்கு நீ என்ன பண்ணுவ.. நீங்க ரெண்டு பேரும் உங்க லைஃபை பாருங்க இனிமே யாரை சார்ந்தும் நான் இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன். என் வாழ்க்கையை நான் பாத்துக்குறேன்”.
பிறகு, இவளுடன் சற்று நேரம் பேசி இருந்து விட்டு ஆஷா கிளம்பி விட.
இனியாளின் மனதிலோ வெறுமை மட்டுமே குடி கொண்டிருந்தது. எப்படி இருந்த அவளின் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறிவிட்டது.
ஏன், எதற்கு, எப்படி என்ற பல கேள்விகள் விடை தெரியாமல் அவளின் மனதிற்குள் அறித்துக் கொண்டிருந்தாலும் யாரிடம் விடை கேட்பது என்று தெரியாமல் அப்படியே அனைத்து கேள்விகளையும் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறாள்.
நாளை அவளுக்கு டிஸ்டார்ஜ் குழந்தையுடன் எங்கே செல்வது என்று ஒன்றும் விளங்கவில்லை. இந்த ஊரும் புதிது.. மதன் இருந்தவரை சமாளித்து விட்டாள். அனைத்தையும் அவனே பார்த்துக் கொண்டான்.
ஆனால் இனி தான் சுயமாக தானே அனைத்தையும் செய்தாக வேண்டும். என்ன செய்வது என்று தனக்குள்ளேயே குழம்பி போய் அவள் அமர்ந்திருக்கும் போது தான் பாரிவேந்தன் அறைக்குள் நுழைந்தான்.
“ஓகே டாக்டர்” என்று கூறும் பொழுதே மற்றொரு செவிலியர் அறைக்குள் அவசரமாக நுழைந்தவர், “டாக்டர் ரம்யாவை டாக்டர். லீலாவதி உடனே அழைத்து வர சொன்னாங்க” என்கவும்.
ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த ரம்யாவும் பாரிவேந்தனை நோக்கி தலையசைத்துவிட்டு அச்செவிலியருடன் வெளியேறினாள்.
குழந்தையை மடியில் வைத்திருந்தவளின் விழிகளில் சற்றும் உயிர்ப்பில்லை. முகமே சோர்ந்து போய் வருத்தம் மேலோங்கி இருந்தது.
“எங்க ஸ்டே பண்ணி இருக்கீங்க?” என்ற பாரி வேந்தனின் குரலில் கலைந்தவள் தடுமாற்றத்தோடு, “எனக்கு இந்த ஊரு புதுசு இனிமே தான் எங்க ஸ்டே பண்றதுன்னு பாக்கணும்”.
“தெரிஞ்சவங்க ரிலேட்டிவ்ஸ் யாரும் இல்லையா?” என்றான் புருவம் இடுங்க.
அவனுக்கு ‘இல்லை’ என்று தலை அசைத்தவள் தலை குனிந்து அமர்ந்திருக்கவும்.
அதற்கு மேல் அவளிடம் அவன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அவனுக்கு இப்பொழுது முதன்மையாக பட்டது அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான்.
இதுவரை அவள் எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்பது தெரியாமல் இருந்தான். ஆனால் இப்பொழுது தான் கிடைத்து விட்டாளே..
இனியும் அவளை தொலைக்க அவன் விரும்பவில்லை. அவளின் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி எல்லாம் பிறகு கேட்டு சரி செய்து கொள்ளலாம். முதலில் அவளை இங்கேயே இருக்கும் படி செய்தாக வேண்டும் என்பது மட்டும் தான் அவனின் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
“என்னுடைய அம்மாவை டேக் கேர் பண்ணிக்க நான் யாரையாவது அப்பாயின் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உங்களுக்கு ஓகேன்னா அந்த ஜாபுக்கு நீங்க பிட்டா இருப்பீங்கன்னு எனக்கு தோணுது.
நீங்க வேணும்னா எங்க வீட்டிலேயே வந்து ஸ்டே பண்ணி என்னுடைய அம்மாவை பார்த்துக்குறீங்களா.. நீங்க தங்க இடமும் எல்லா வசதியும் நான் பண்ணி தரேன்.
அம்மா வயசானவங்க இப்போ நடக்க முடியாம இருக்காங்க அவங்களை மட்டும் நீங்க பாத்துக்கிட்டா போதும்” என்று வெளியே சாதாரணமாக அவன் கேட்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஒரு பிரளயமே வெடித்து கொண்டு இருந்தது இவள் சரி என்று கூற வேண்டுமே என்று.
Wn pizhai nee writer name please
Competition story sis. Author Name solakudathu
Story number E2K18
Super waiting for ud
Thank you sis