பிழை – 41
“அழாத ஆஷா நான் மதன் சார் கிட்ட பேசுறேன்” என்றவளை உறுத்து விழித்தான் பாரி வேந்தன், “மதர் தெரசா எல்லாரையும் மன்னிக்கிறாங்க.. ஆனா, என்கிட்ட மட்டும் உர்ரென்று முகத்தை வச்சுக்கிட்டு இருப்பா” என்று உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு இருந்தான்.
“நீ மதன் கிட்ட பேசுறதுக்காக நான் இப்ப இதெல்லாம் உன்கிட்ட சொல்லல இனியாள். நான் பண்ண தப்பை எப்பவோ உணர்ந்துட்டேன். உன்கிட்ட அதுக்கு பல தடவை மன்னிப்பும் கேட்டுட்டேன். இருந்தாலும், மதன் ஒவ்வொரு நாளும் அதை பற்றியே திரும்ப திரும்ப பேசும் பொழுது கொஞ்சம் கொஞ்சமா குற்ற உணர்ச்சியில் செத்துகிட்டு இருக்கேன் இனியாள்.. ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு” என்று கூறி அழவும்.