அத்தியாயம் 25
காதல் என்ற மூன்றெழுத்தின் முத்துக்கள் என்னவென்றால் குழந்தை என்ற நான்கெழுத்து தான்.
மாலினி அவள் நினைத்த காரியத்தை முடிக்காமல் அந்தப் பென்டிரைவை கொடுக்க மாட்டேன் என்று தன் உடையுள் ஒழித்து வைத்து கொண்டாள்.
சரி நீயே ரெக்கார்ட் பண்ணிக்கோ நான் பேசி முடிச்சிடுறேன்.
மாலினியின் கேமரா மேன் வேகமாக வந்து தற்போது திலீப் குமார் பேசுவதை பதிவு செய்து கொண்டிருந்தான்.
நான் யாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும் என் மேல மாலினி போட்ட வழக்கு அனைத்தும் உண்மை. இப்ப அதை நான் என் வாயாலே ஒத்துக்குறேன் மக்களே என்று சொன்னான்.
அவள படத்துக்கு வர சொல்லி பணம் பிடுங்குனது உண்மை தான் என்றவன் அவளை முறைத்தபடியே இப்போது அந்த பென்டிரைவரை கொடு என்றான்.
அவளும் தராமல் அவனை சீண்ட அவனும் அவளை கன்னத்தில் அறைவதை கூட அந்த கேமரா மேன் பதிவாக்கிக் கொண்டான். எவிடன்ஸோட சிக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தார்கள். திலீப்பும் அவர்கள் நினைத்தபடியே அவளை அறைந்து விட இந்த காட்சியை தான் வழக்கு பதிவு செய்ததற்காக தன்னை அறைந்து விட்டான் என்று மொத்தமாக அவனை மாட்டி விட்டாள்.
அதான் உன்னுடைய இன்ஸ்டாகிராமை youtubeலயும் என்னை பத்தின இந்த வீடியோவை அப்லோட் பண்ணிட்டீங்களா முதல்ல அந்த பென் டிரைவை கொடு மாலினி என்று பொறுமையாக ஆரம்பித்தவன் இப்போ கொடுக்கப் போறியா இல்லை மறுபடியும் நான் அறையட்டுமா என்று கேட்டான்.
இந்த பென் டிரைவில் அப்படி என்ன இருக்கு ரொம்ப ஓவரா பில்டப் போட்டுட்டு இருக்க.
அது என்னோட பர்சனல் விஷயம் மாலினி. யூ டோண்ட் கிராஷ் யுவர் லிமிட் என்றான்.
பின் மாலினி தனது உடையில் மறைத்து வைத்திருந்த பென் டிரைவை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு அடுத்த படத்துக்காக நீங்க என்னை புக் பண்ணுவீங்களா?
இனிமேல் இந்த திலீப் குமார் பட லிஸ்ட்ல ஒன்னுல கூட நீ வர மாட்ட என்று சொன்னவன் திரும்பிப் பாராமல் தனது காரினை எடுத்துச் சென்றுவிட்டான்.
வீட்டினுள் சென்று இந்த பென்டிரைவை அடாப்டரில் செறுகி டிவியில் ஒளிபரப்பாக்கினான்.
அது அன்றைய தினம் ஏற்பட்ட விபத்திலிருந்து ஆரம்பித்து முடிவு வரை அனைத்தும் இருந்தது.
நன்றாக உற்றுப் பார்த்தால் நாய் குட்டியை தூக்கி ஃபர்ஸ்ட் எய்டு செய்து கொண்டிருந்த வைஷியாவை இடித்த காரினை ஒட்டி வந்தது மதி தான்.
இதை பார்த்த பின்பு திலீப்பின் கண்கள் நுங்கு போன்று பெரியதாக விரிந்தது.
மதியா என்ற குரலும் சொல்லும் அவன் வாயில் இருந்து வந்தது .
அப்போ சில்வியா இல்லையா?
ப்ளீஸ் அக்கா, நீ தான் மாமா கிட்ட இருந்து கார் ஓட்ட கத்துக்கிட்ட இந்த டைம் நான் ஓட்டுறேன் நீ எப்படின்னு மட்டும் எனக்கு சொல்லிக் கொடு என்று சில்வியா விடம் கெஞ்சி கூத்தாடி அன்றைய தினம் கார் ஓட்டிக்கொண்டு வந்தாள் மதி.
பிரேக் போட சொன்னபோது பிரேக்க்கு அருகில் உள்ள க்லட்க்சரை அவள் அழுத்தவும் கார் வெகு வேகம் எடுத்து வந்து அங்கிருந்த கூட்டங்களை எல்லாம் இடித்துக் கொண்டு வந்து வைஷியாவினை தூக்கி வாரி இறைத்தது வரை ஒளிப்பறப்பாகிக் கொண்டிருந்தது.
அதே நேரம் கேசவை ரத்த பரிசோதனை செய்த மருத்துவமனையில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.
ஹலோ சார் நாங்க நகுல் ஹாஸ்பிடல்ல இருந்து பேசுறோம்.
போன வருஷம் உங்க தம்பியை வந்து இங்க செக் பண்ணப்ப எச்ஐவி பாசிட்டிவ்னு ரிசல்ட் கொடுத்து இருக்காங்க. நீங்க இன்னுமா அந்த ட்ரீட்மென்ட் கன்டினியூ பண்றீங்க.
நோ என வெறும் ஒற்றை எழுத்தை பதிலாக கூறியவன் அதற்கு இப்போது என்ன என்று கேட்டான்.
இது எங்களோட தவறு தான் சார். உங்க தம்பி கேசவ்க்கு எச்ஐவி நெகட்டிவ் தான். ஒரே டைம்ல கேசவ்னு ரெண்டு பேரும் வந்ததால கே கேசவ் பாசிட்டிவ் ஆர் கேசவ் நெகட்டிவ்னும் எங்க ஸ்டாப் தப்பா சொல்லிட்டாங்க.
நேத்திக்கு தான் வந்து சில்வியாங்கிற உங்க ரிலேட்டிவ் எங்க கிட்ட இத பத்தி விசாரிச்சிட்டு போனாங்க.
நாங்க மறுபடியும் ரீசெட் பண்ணிட்டு ரிசல்ட் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து அப்பதான் புரிஞ்சது உங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல் தவறு என்று.
அதான் சார் உங்களுக்கு இன்பார்ம் பண்ணலாம்னு கால் பண்ணேன்.
நேத்து செக் பண்ணி இன்னைக்கு சொல்றீங்க என்று அவன் அழுத்தமாக கேட்க, உங்க ரிலேடிவ் சில்வியா தான் இந்த டைம் கால் பண்ணி என்னனு சொல்லுங்கனு என்று சொன்னாங்க.
சில்வியா அவள் செய்யாத தப்பிற்கு தண்டனையையும் தான் தன் மீது தான் தவறு உள்ளது என்று தப்பாக புரிந்து கொண்டதையும் ஒரு சேர சரி செய்து விட்டாள்.
ஆனால் நான் அவளை எப்படிப்பட்ட வார்த்தைகளால் எல்லாம் காயப்படுத்தி உள்ளேன் என்று நினைத்து பார்த்தான்.
நீ ஒரு கொலைகாரி, நீ ஒரு பேராசைக்காரி, நீ என் முகத்திலேயே முழிக்காத, என்ன பொறுத்த வரைக்கும் நீ இந்த வீட்ல இருக்கிற ஒரு வேலைக்காரி, என் திரைப்படத்தில் நடிகையா நடிக்கிற நடிகை மட்டும்தான் நீ இப்படி எத்தனை வார்த்தைகள் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
வரிசையாக அவனது என்ன அலைகள் அனைத்தும் அவளை பேசியதையே நினைவு கூர்ந்தது.
தான் தவறு செய்து விட்டேன் என்று தந்தை கிருஷ்ணனையும், தாயையும் அழைத்து இந்த வீடியோவினை போட்டு காட்டினான்..
அத்தோடு மட்டும் நிறுத்தி விடாமல் நகுல் என்ற மருத்துவமனையின் மீது வழக்குப்பதிவும் மேற்கொண்டிருந்தான்..
இது அவன் ஏற்கனவே எச்சரித்தது தான் .இதுக்காக நீங்க கண்டிப்பா தண்டனை அனுபவிப்பீங்க என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவனின் மனதில் இப்போது சில்வியாவை தேடச் சொன்னது.
சில்வியா,சில்வியா என்று அவளைத் தேடிக் கொண்டு தங்களது அறைக்கு ஓடினான் மாடிப்படி ஏறி,
தனது ரூமில் புகுந்து பெட் அதற்கு கீழே படுக்கும் அவளது இடம் பாத்ரூம் பால்கனி என்ற அனைத்து இடங்களிலும் துலாவி விட்டான்.
ஒருவேளை தோட்டத்தில் இருக்கலாம் என்று அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தையும் ஓடி சென்று நோட்டமிட்டான்.
அங்கு எங்கும் காணவில்லை.
சில்வியா எங்க போன என்று மீண்டும் அவனது அறையை நோக்க ஓடி சென்றான்.
மகன் இப்படி பரிதவிப்பதை பார்த்து பெற்றோர்கள் அவர்களும் உதவி செய்தார்கள் அவளை கண்டுபிடிக்க.
கிருஷ்ணனின் கையில் கிடைத்த ஒரு பேப்பர் அவள் இந்த ஊரினை விட்டு சென்றுவிட்டால் என்பதை உறுதி செய்தது.
கிருஷ்ணர் சாமியறையின் முன்பு ஒரு பேப்பர் இருப்பதை பார்த்து அதை எடுத்துப் பார்த்தார்.
நான் போறேன் திலீப். இந்த வீட்டை விட்டும், உன்ன விட்டும், உன் வாழ்க்கையை விட்டு நான் போறேன். நீயும் ,உங்க அம்மாவும் என் கிட்ட வேண்டிக்கிட்டது. எனக்கு விருப்பமான நீ இதை கேட்டு நான் செய்யாமல் போவனா? சைன் பண்ண டிவோர்ஸ் பேப்பர் என்னோட வாட்ரோப்ல இருக்கு. தயவு செஞ்சு அதை எடுத்துக்கோங்க.
நன்றி என்று மட்டும் சொன்னவள் யாரும் அறியாத வண்ணம் அதை சாமி அறையில் வைத்து விட்டு எங்கு சென்றாள் என்று கூட அறியாத வண்ணம் தொலைந்து சென்றுவிட்டாள். சொல்லப்போனால் திலீப்பிடம் இருந்து விலகிச் சென்று விட்டாள்.
அவன்தானே இதை அனைத்தையும் கேட்டவன். என் வைஷூ கால் தூசிக்கு நீ வருவியா? வைஷு மாதிரி ஒரு தேவதையை கொன்ற ராட்சசி நீ. நீ என்கூட இருக்கிறதே என்னை பொருத்தவரைக்கும் கேவலமான விஷயம். உன்ன நான் இனிமேல் பார்க்கவே கூடாது. என்னை பொறுத்த வரைக்கும் நீ இந்த வீட்ல இருக்க ஒரு வேலைக்காரி என்று திலீப் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் நினைத்தபடியே ஒரு பேருந்தில் அமர்ந்திருந்தாள் சில்வியா.
முந்தைய தினம் திலீப்பின் தாய் பேசியதன் பின்பு முடிவு எடுத்தவள் தனது தங்கையின் திருமணத்திற்காக காத்திருந்து அவற்றை சிறப்பாக செய்து கொடுத்தாள்.
தனக்கு திருமண ஏற்பாடு வேறு என்று சிரித்தவள் தனது தாலியை குனிந்து பார்த்து காலையில் திருமணம் நடைபெற்று மாலையில் டிவோர்ஸ் வாங்கும் ஒரே தம்பதியினர் நாங்களாக தான் இருப்போம் என்று நினைத்து வலியோடு கூடிய புன்னகை செய்தாள்.
எங்கம்மா போகணும் கன்டக்டர் கேட்கவும், ஏர்போர்ட் போகணும் ஐயா என்று சொல்லி காசினை கொடுத்தாள்.
அவளுக்கென்று ஒரு மொபைல் கூட வாங்கி தராத திலீப் அப்போதுதான் வெட்கப்பட்டுக் கொண்டான். எங்கு சென்று அவளை தேடுவேன். மொபைல் எண் இருந்திருந்தால் கூட அழைத்து பேசலாம் . அதுவும் அவளுக்கு நான் வாங்கி தரவில்லை.
உன் கூட பேசி எனக்கு எந்த யூஸுப் இல்லை சோ உனக்கு மொபைல் எல்லாம் வாங்கி தர முடியாது என்று ஒரு நாள் சில்வியா மொபைல் கேட்டதற்காக இவ்வாறு சொன்னதும் நினைவு வர என்ற தலையில் அடித்துக் கொண்டான்.
நான் உன்னை வைஷூவை விட கேவலமுனு சொன்னேன்டி. நீ அவளை விட மூன்று மடங்கு அதிகமான நல்லவளா இருக்கடி.
பக்கத்திலேயே பொக்கிஷத்தை வச்சுட்டு இப்ப தொலைச்சுட்டு நிற்குறனே படுபாவி. வைஷு சில்வியாவை எப்படியாவது எங்கிட்ட கொண்டு வந்து கொடுத்துருடி. நீதான் இந்த உலகத்தில் இருந்து போயிட்டே உன் தங்கச்சி உன்னை விட நல்லவளா இருக்காள்.
பேசிய வார்த்தைகளும் அவளை வதைத்த செயல்களும் அவனை இப்போது ரணமாக கொன்றது. இப்படிப்பட்ட நல்லவளை போயி என்னென்னமோ சொல்லி காயப்படுத்தி அவளை உடல் அளவிலும் மனதளவையும் நோகடிச்சு அவளை கொன்னுட்டனே.
நேத்து கூட டிவோர்ஸ் பேப்பர்ல சைன் போட மாட்டேன்னு சொன்னாலே. இப்ப ஒரேடியா என்னை விட்டுட்டு போயிட்டா. எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும் என்று காவல் அதிகாரிகளிடம் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சென்ற அவனை மாலினி கொடுத்த வழக்கினால் கைது செய்திருந்தார்கள்.
இந்த வீடியோ நீங்கதானே ஒத்துக்கிட்டீங்க சோ, உங்கள நாங்க அரெஸ்ட் பண்ணி தான் ஆக முடியும் என்று சொன்னவர்கள் திலீப்பை அரஸ்ட் செய்து ஜெயிலில் போட்டார்கள்.
சார் நான் அரஸ்ட் ஆகிக்குறேன் பட் ஒரு ஒன் ஹவர் டைம் கொடுங்க.
எதுக்கு இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுப்பதற்காகவா?
இப்போதும் கூட இதுபோன்ற வார்த்தையால் சில்வியாவை இவன் காயப்படுத்தியது இவனுக்கு நினைவு வந்தது.
எதுக்கு இன்னொரு பையனோட வாழ்க்கையை கெடுக்கிறதுக்கா அந்த படம் ஓகே பண்ணி இருக்க என்று அவன் சொன்ன ஒரே காரணத்திற்காக அந்த படப்பிடிப்பையே தாமதப்படுத்தியவள் அவள்.
தாமதப் படுத்தியதோடு மட்டும் அல்லாமல் அந்தப் படத்தினை இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை என்று அழைத்து பேசி முடித்துவிட்டு தனக்கென்று லோகேஷ் வாங்கி கொடுத்த மொபைலையும் போட்டு உடைத்தவள் இவர்கள் யாரும் அறியாத வண்ணம் ஏறி பறந்து சென்று கொண்டிருந்தாள்.
மோகனுக்கும் செல்விக்கும் அழைத்து திலீப் முன்னமே தகவலை தெரிவித்து இருந்து போது அவர்கள் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஏர்போர்ட் நிலையம் என்று அனைத்திலும் செக் செய்த போது தான் தெரிந்து கொண்டார்கள் சில்வியா எங்கோ சென்று உள்ளாள் என்பது.
மதியின் கணவர் உதவியினால் அவள் சென்ற ஏரியாவினை கண்டுபிடித்தார்கள் இவர்கள்.
ஆனால் இதன் பலன் பூஜ்ஜியமாக இருந்தது.
திலீப்பின் மீது மாலினி கொடுத்திருந்த வழக்கு காரணமாக நீதிமன்றத்தில் அவனுக்கு 10 லட்சம் அபராதமும் ஒரு வருட ஜெயில் தண்டனையும் கொடுத்திருந்தார்கள்.
அத்தோடு மட்டுமல்லாமல் பெண்களை தவறாக எண்ணக்கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி இருந்தார்கள்