எல்லாம் பொன் வசந்தம்…(26)

5
(2)

அத்தியாயம் 26

 

காதல் எப்பேர்பட்ட பிரிவுகளையும் சேர்த்து வைக்கும் பாலம். பாலத்திலே பிளவு ஏற்பட்டால் அந்த காதல் சேர்வது தாமதமாகும்

 

ஒரு வருடத்திற்கு பின்:

 

முன்பெல்லாம் தினம் தினம் வைஷியா வைஷியா என்று உளறிக் கொண்டிருக்கும் திலீப் குமார் தான் இப்பொழுதெல்லாம் என்ன மன்னிச்சிடு சில்வியா என்ன மன்னிச்சிடு சில்வியா என்று உலறிக் கொண்டுள்ளான்.

 

அழகாக ஹேர் மற்றும் தாடியை ட்ரிம் செய்து வைத்திருக்கும் அவன் இப்பொழுதெல்லாம் தாடி கொண்டுள்ளான். முடியும் ஒரு வருடமாக வெட்டாமல் காடு போல வளர்ந்து இருந்தது. 

 

சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த கணமே மோகன் மற்றும் செல்வி அவர்களின் வீட்டிற்கு சென்றான். 

 

அவர்களின் வீடோ பூட்டு போட்டு இருக்க தன் வீட்டிற்கு புறப்பட்டான். 

லோகேஷிற்க்கு அழைத்துப் பார்க்க அவனது மொபைலோ தவறான எண் என்று வந்தது. மதிக்கு அழைத்தான் அவள் மதிக்கவில்லை. தருணுக்கு அழைத்த போது தான் அவன் அழைப்பு ஏற்கப்பட்டது. 

 

தருண் நான் திலீப் பேசுறேன்.  

 

சொல்லுங்க திலீப்,

 

மதி கிட்ட கொஞ்சம் ஃபோன் கொடுக்க முடியுமா? 

 

மதி இங்கே இல்லை திலீப்,

 

எங்க போனாங்க அவங்களை எப்படி காண்டாக்ட் பண்றது, 

 

மதி அமெரிக்கா போயிருக்கா…

 

அவ்வளவு தூரம்…

 

அவங்க அக்கா சில்வியாவை பார்க்க போய் இருக்கா,

 

இத்தனை நாள் தன் மனைவி எங்கு உள்ளாள் என்பதை தெரியாமல் பரிதவித்தவனுக்கு அமெரிக்காவில் உள்ளால் என்பது தெரியவும் சந்தோஷப் பட்டான்.

 

தருண் ப்ளீஸ் அவளோட அட்ரஸ் தற்ரியா நானும் போய் பாக்குறேன்.

 

சாரி மிஸ்டர் திலீப். உங்களுக்கும் சில்வியாக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்களுக்கு டிவோர்ஸ் ஆகி ஆறு மாசம் ஆயிடுச்சு. இதுல எந்த சம்பந்தத்துல அவங்க அட்ரஸ் நீங்க கேக்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 

 

எனக்குத் தெரியாமல் எப்படி இதெல்லாம் நடந்தது. 

 

உங்ககிட்ட வக்கீல் போன் பண்ணி கேட்டு இருப்பாரே நீங்க சொன்னதை ஃபாலோ பண்ணிடலாமான்னு, 

 

ஆமாம் பண்ணாரு. பட் அவர்கிட்ட என்னை சீக்கிரம் வெளியே எடுக்க சொல்லி தானே பேசினேன். 

 

ஆனால் அந்த வக்கீல் இப்படி குதர்க்கமா பேசினது கூட உன்னால கண்டு பிடிக்க முடியலையா? அதுவே நான்தான்டா. அந்த பொண்ணை எத்தனை சித்ரவதை பண்ணின ? இப்ப எதுக்கு அவளோட நம்பர் அட்ரஸ் உனக்கு வேணும். நீ உன் வேலைய போய் பாரு அவங்க அவங்களோட வேலைய பார்க்கட்டும்.

 

இப்போது திலீப்பிற்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அவன் மட்டும்தான். அவனையும் விட்டு விட்டால் சில்வியா எங்கு உள்ளாள் என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக கண்டறிய முடியாது.

 

ப்ளீஸ் தருண் அது நான் சில்வியா தப்பு பண்ணிட்டாள்னு அவ மேல கோபமா இருந்தேன். அந்த சமயத்துல அவள் மேல எனக்கு வெறுப்பு அதிகபட்சமா இருந்தது. நான் உண்மை தெரிஞ்ச அப்புறம் அவள் இல்லாமல் நான் வாழ முடியாது என்கிற அளவுக்கு வந்துருச்சு. 

 

இவ்வாறு இவன் பேசவும் இதெல்லாம் போலி மாதிரி எனக்கு தெரியுது. 

 

இல்லை தருண் சில்வியா மேல சத்தியமா சொல்றேன் இனிமே அவள் கூட நான் சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன் என்று சொல்லவும் தான் அவளது முகவரியை அவனுக்கு அனுப்பி வைத்தான்.

 

எதற்கெடுத்தாலும் லோகேஷ் லோகேஷ் என்று அவனுக்கு இப்போது அவன் இல்லாமல் வேறு போய்விட கை, கால் இழந்ததை போன்றானது. தன் தந்தை கிருஷ்ணரிடம் சொல்லி அமெரிக்காவிற்கு ஒரு விசா போட சொல்ல அதை தயார் செய்தார் பதினைந்து நாட்களில்.

 

ஏன்பா நீ கண்டிப்பா போய் தான் ஆகணுமா கிருஷ்ணர் கூட அந்த சமயத்தில் கரிசனமாக கேட்க, 

 

கண்டிப்பா அவன் போய் என்னோட மருமகள கூட்டிட்டு தாங்க வரணும் என்றார் கிருஷ்ணரின் மனைவி.

 

அவர் திலீபிடம் கை கூப்பி வணங்கி அன்னைக்கு அந்த பொண்ண நான் தான் பா ரொம்ப ஓவரா பேசிட்டேன். உன்னை விட்டு போ அப்படின்னு நான் தான் அந்த பொண்ண சொன்னேன். என் பையன் நிம்மதியா இருக்கணும்னா நீ இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொன்னேன். அதுக்காகவோ என்னமோ அந்த பொண்ணு இந்த வீட்ல மட்டும் இல்ல ஊர்ல மட்டும் இல்லாமல் போகும்னு கனவுல கூட நினைச்சு பாக்கலப்பா.

 

அம்மா அவள் நீங்க பேசுனதுக்காக எல்லாம் போயிருக்க மாட்டாங்க. உங்களை விட நான் அவளை ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணிட்டேன். அவளால தான் எனக்குன்னு இருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சுன்னு அன்னைக்கு நான் கை கட் பண்ணிக்கிட்டதனால அவள் என்னை விட்டு போயிருப்பாமா என்று அவரை சமாதானப்படுத்தினான்.

 

தாயும் மகனும் உரையாடி ஃப்லைட்ட மிஸ் பண்ணிடாதீங்க என்று நினைவு படுத்திய கிருஷ்ணரை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்பினான். 

 

அனைத்து செக்கப் களை முடித்துவிட்டு பிளைட் ஏறியவனுக்கு இப்போது தனது மனைவியை காணப் போகிறோம் என்று ஆர்வமாக இருந்தது. 

 

ஒரு நான்கு மணி நேர டிராவல் அரை நாள் தேடல் என்று அன்றைய நாள் அவனுக்கு கழிந்தது. அமெரிக்காவில் அவளை கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்ல. 

 

அட்ரஸ் மட்டும் வைத்துக்கொண்டு அவன் தேடுவது கண்மூடி கொண்டு நட்சத்திரத்தை எண்ணுவதற்கு கணக்கு. 

 

முகவரியை தெரிவிக்கும் ஒரு ஆபீஸில் சென்று அதை காட்டிய பின்பு தான் ஒரு ஆட்களை அவனுக்கு அந்த வீட்டினை காட்டும் படி சொல்லி அனுப்பியிருந்தான் அந்த ஆபீஸர். 

 

இதோ இன்னும் இருபது நிமிடத்தில் தனது மனைவியை காணப் போகிறான். காதல் மனைவியை காணப் போகிறான். முதல் காதலை அல்ல இரண்டாம் காதல் மனைவியை. இப்பொழுதெல்லாம் முதல் காதலை விட இரண்டாவதாக வரும் காதலுக்கு தான் பாசமும் அன்பும் அதைக் காட்டிலும் ஆயிலும் அதிகம் என்கிறார்கள். 

 

இதுதான் சார் அவங்க வீடு என்று காட்டிவிட்டு அவன் புறப்பட்டு விட கேட்டினை திறந்து கொண்டு பேக்கோடு உள் நுழைந்தான்.

 

குட்டை பேண்ட் மற்றும் குட்டை ஷர்ட்டோடு கழுத்து வளைவிற்கு மட்டும் முடியை விட்டு கட் செய்து இருந்த அந்தப் பெண்மணியிடம் ஹலோ மேடம் என்று அழைத்தான். 

 

இதோ ஒரு வருடத்திற்கு முன்பாக கேட்ட குரல் இது என்ற யோசனையில் திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண்ணும். 

 

சாட்சாத் அது சில்வியாவே தான். 

 

சில்லு…

 

என்ற அவன் அவளை கட்டி அணைக்க செல்ல அவளோ

 

நில் 

 

என்ற ஒற்றைச் சொல்லால் நிறுத்தினாள் அவனை. 

 

ஸ்டுப்பிட் ஹூ ஆர் யு? ஒய் ஆர் யூ கம் டு மை க்ளோஸ்னஸ் என்ற அவள் நுனி நாக்கில் பேசவும் இவள் சில்வியா தானா என்று சந்தேகித்தான். 

 

நான் திலீப் குமார் என்ற அவன் சொல்லவும் அதை அறியாதவளா என்ன அவள்.  

 

அப்படின்னு எனக்கு யாரும் தெரியாது என்று தமிழிலும் சற்று ஆங்கிலம் வார்த்தை பேச அறிந்த பெண் போல பேசினாள்.

 

அட்ரஸ் இதுதானே என்று ஒரு முறை செக் செய்து கொண்டவன் அவளின் உருவம் மாற்றத்தை அப்போதுதான் கவனித்தான். 

 

நான் இந்த ஊருக்கு புதுசு. சில்வியான்ற ஒருத்தவங்கள தேடி வந்தேன். உங்கள மாதிரி இருப்பாங்க பட் நீங்க இந்த மாதிரி மாடலா இருக்கீங்க பட் அவங்க ட்ரடிஷனலா இருப்பாங்க. ஹய் ப்ரோ இந்த மஸ்காரா ஹேர் கலரிங் அதெல்லாம் அவங்களுக்கு சுத்தமா புடிக்காது. 

 

தனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை இப்பொழுதாவது இவன் அறிந்து கொண்டான் என்று தனது மனதில் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள் அந்த அப்பாவி ஜீவன். 

 

சாரி இந்த வீட்ல இப்ப நான் தான் இருக்கேன் யூ டோன்ட் கம் அகைன் லிவ் மி என்றாள்.

 

மதியும் அச்சமயம் பார்த்து சில்லு என்று அழைத்துக் கொண்டு வெளியே வர சரியாக இருவரும் திலீப்பிடம் மாட்டிக் கொண்டார்கள்.

 

மதியை பார்த்த பின்பு கன்ஃபார்மாக இது சில்வியா தான் என்று கன்ஃபார்ம் செய்து கொண்டான் அவன்.

 

இவள் பேசிக் கொண்டிருந்த உரையாடலை கேட்காமல் மதி வந்து காரியத்தினை கெடுத்துவிட்டாள்.

 

ஷ்ஷ் என்று விரல் நீட்டி அவள் மிரட்டவும் சரியாக இருந்தது.  

 

அப்போது அவள் நடிக்கிறாள் என்று தெரிந்து கொண்டான் திலீப்குமார்.

 

படபடவென்று வீட்டினுள் நுழைந்தான்.

 

அவன் பின்னே இரு பெண்களும் ஓடினார்கள். 

 

சென்று அங்க இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவன் கால்களை நீட்டி கழுத்தை சோபாவினோடு சாய்த்து படுத்தான்.

 

எழுந்திரு திலீப். வெளியே போ. உனக்கு இங்க என்ன வேலை – சில்வியா 

 

என்னடி உன் புருஷன் திலீப் அவன் பொண்டாட்டிய தேடி வந்து இருக்கேன்.  

 

அவன் பொண்டாட்டியா? ஆல்ரெடி உனக்கும் எனக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சுன்னு உனக்கு தெரியும் தானே. இந்த அட்ரஸ் கொடுத்த தருண் அந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லலையா? 

 

அவனுக்கு எப்படி முகவரி தெரிந்திருக்கும் என்பதை அறிந்ததனால் அவள் சரியாக யோசித்தாள்.

 

சொன்னான் சொன்னான் பட் எனக்கு அதுல சம்பந்தமில்லையே. என்ன மறுபடியும் இந்த டிவோர்ஸ் எனக்கு வேண்டாம் வழக்கு போட்டால் என்ன பண்ணுவ.

 

நீ தேவை இல்லாத வேலை பண்ணிட்டு இருக்க. இப்ப என்ன உனக்கு வேணும். 

 

நீ தாண்டி செல்லம் வேணும்..

 

இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லை..

 

இல்லை. என்னோட பொண்டாட்டி கிட்ட நான் அவளை வேணும்னு கேக்குறேன் இதுல என்ன தப்பு. 

 

வாய் கூசாமா இப்படி நீ பேசின உன்னை நான் அறைஞ்சிடுவேன். 

 

எப்படி பார்த்தாலும் நீ தான் சில்வியா என்னோட வைஃப் அண்ட் லைஃப். இது வைஷியாவிற்காக மட்டுமே நான் சொல்ற வார்த்தை என்று எத்தனை முறை சொல்லி இருப்பான் இப்போது சில்வியாவிற்காகவும் சொல்லிவிட்டான்.

 

நான்தான் உன்னை பிடிக்கலைன்னு அங்கே இருந்து இங்கே வந்துட்டேன்ல ஏன் என் பின்னாடியே வர. 

 

ஒரு காலத்தில் நீ எனக்குன்னு மட்டுமே வாழ்ந்தவடி. என் தவறை நான் புரிஞ்சுகிட்டேன். தயவு செஞ்சு என்னை ஏத்துக்கோ என்று அவளது காலில் விழுந்து கெஞ்சினான். தவறு செய்துவிட்டு நான் தவறே செய்யவில்லை என்று ஏமாற்றும் ரகம் அவன் இல்லை.

 

எவ்ளோ பெரிய ஆக்டரா இருந்துகிட்டு இந்த மாதிரி சீப்பா பிகேவ் பண்ற…

 

ஆக்டரா இருந்தா காதல் வராதா? கல்யாணம் பண்ண கூடாதா? இல்ல அவன் பொண்டாட்டிக்கு காலில் அவன் விழுக கூடாதா?

 

காதல் வரலாம் கல்யாணம் பண்ணலாம் ஏன் அவன் பொண்டாட்டி காலில் கூய விழலாம்‌. இந்த சில்வியா காலில் இல்லை.

 

என்னை மன்னிச்சிடு சில்லு இனிமே நான் அந்த மாதிரி பேச மாட்டேன். 

 

எப்படி ஒரே வருஷத்துல இப்படி மாறிட்ட திலீப். நீ எப்பேர்ப்பட்ட நாடகக்காரனா இருப்பன்னு எனக்கு தெரியாதா என்ன. நீங்க என்னை முதல்ல போ உன் மூஞ்சிலேயே நான் முழிக்க கூடாது.  

 

மதி உன் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி எதுக்கு இவனுக்கு அட்ரஸ் கொடுத்தாங்கன்னு கேக்கணும் என்று அவள் பேசவும் தருணிற்கு தேவையே இல்லாத அட்ரஸை கொடுத்ததே இவள்தான் என்பது நினைவு வந்தது. 

 

சரி திலீப்பிற்கு ஏதோ பாடம் புகட்டி இருக்கிறாள் என்று அமைதி காத்து நின்று கொண்டிருந்தாள் மதியும் .

 

கண்ணு உன் குழந்தை ரொம்ப அழுவுது வந்து என்னன்னு பாரு சாமி என்றபடி குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தால் செல்வி.

 

மாப்பிள்ளை நீங்க எப்படி இங்க என்று அவரை கண்டதும் மரியாதையா பேச ஆரம்பித்தார். அச்சச்சோ, இது என்ன அவ காலில் நீங்க விழுந்துட்டு இருக்கீங்க.

 

இல்லம்மா நான் பண்ண தப்புக்கு அவ காலில் கண்டிப்பா விழுந்து தான் ஆகணும். அவளை ஒரு ஒரு நாளும் ஏன் ஒரு ஒரு நொடியும் கூட கஷ்டப்படுத்தி அவ முகம் மாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவன் நான் .இந்த கஷ்டம் கூட படவில்லை என்றால் எப்படிம்மா.  

 

நான் அத்தனை பேசியும் கூட எனக்கு உடம்பு சரியில்லைன்னு ஒரு நாள் என்னை எப்படி கவனிச்சுக்கிட்டா தெரியுமா அம்மா. அப்படிப்பட்ட அவளை என் மரமண்டை ஏன் தான் புரிஞ்சுக்கலியோ தெரியல.

 

உன்னோட நிலைமை அப்படிப்பா அதையே போட்டு குழப்பிட்டு இருக்காத.

 

உன் குழந்தைய பாரு என்று அவன் நீட்டவும் எங்களுக்கென்று குழந்தை பிறந்துள்ளதா என்று சந்தோசம் தான் அந்த சமயம் பட்டான். 

 

திலீப்பைப் போன்று அக்குழந்தைக்கும் வலது கையில் மச்சம் இருந்தது. 

 

தங்கம் அப்பா மாதிரியே உனக்கும் வலது கையில் மச்சம் இருக்கா சாமி என்று அவன் குழந்தையை வாங்கும் போதே குழந்தையின் கையை கவனித்து விட்டான் அவன். 

 

வந்ததும் என்கிட்ட வாய் அடிச்சான். இப்ப பிள்ளைய உடனே வாங்கிக்கிறான். இத்தனை நாள் நான் எவ்ளோ கஷ்டப்பட்டு பெத்தேன். என்னை கண்டுக்குறானா பாரு…

என மனதில் பொறுமிக் கொண்டிருந்தாள் சில்வியா.

 

அவளுக்கு நன்றாக தெரியும் தருண் இந்த முகவரியை மறக்காமல் திலீப் குமாரிடம் கொடுத்து விடுவான் என்று.  

 

திலிப் என்னதான் தவறு செய்து இருந்தாலும் காதல் மனது அவனை விட்டுப் பிரிய முடியாமல் தவித்தது. அன்றோடு அவள் இந்தியாவிற்கு மீண்டும் வரக்கூடாது என்று முடிவெடுத்திருந்த போதும் கூட மீண்டும் அவளை வர வைப்பதற்கான அறிகுறி அன்றே அவளுக்கு தொடங்கியது. பிளைட்டில் ஏறி அமர்ந்தவளுக்கு ஏனோ மயக்கம் தாளவில்லை. 

 

கண்களை மூடி படுத்தவளை அவ்வப்போது பயணிகளை கவனிப்பவர்கள் செக் செய்து பார்த்தார்கள்.  

 

பின்பு விமான நிலையத்திலேயே உள்ள மருத்துவ ஆலோசனை கூடத்தில் செக் செய்து பார்த்த போது தான் தெரிந்தது அவளுக்கு குழந்தை ஒன்று உருவாகி பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது என்று. 

 

கருத்தரித்த அடுத்த நொடி இதை கணவனிடம் அல்லவா கூற வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு இது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டாள் சில்வியா.

 

சில்வியாவின் படப்பிடிப்பு குழுவில் இருந்த சியாலினி என்ற தோழி தான் அமெரிக்காவில் உள்ளாள். அவளின் உதவியால் தான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தாள் இவள். யூ பி டி பாசிடிவ் ஆனதை சொல்லி சந்தோஷப்பட்டதோடு எனக்கு ஏதாவது வேலை ரெடி பண்ணி கொடு என்று சொன்னதும் ஐடியில் பணிபுரிய அவளுக்கு உதவியாக இருந்தவளும் அவள்தான். 

 

இப்போது கூட இவர்கள் சேர்ந்து விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதில் தவறுவதில்லை அவள். 

 

மனக்கசப்பு ஏற்பட்டவர்களை நாடு கடத்தி பிரித்து விட்டோமா என்று அவளுக்கும் எத்தனையோ முறை தோன்றுவிட்டது. அவ்வப்போது வந்து அவளிடம் பேசி செல்லும் அவளுக்கு ஏழாம் மாதத்தின் போது பெற்றோர்கள் நினைவு வர அழைத்திப் பேசி இருக்கும் இடத்தினை தெரிவித்தார்கள்.

 

அவளை வந்த பார்த்தபோது மற்றவர்களுக்கும் இதே போன்று தான் அதிர்ச்சி.

 

இப்போது திலீப் குமாரும் அதை அனபவித்தான்.

 

குழந்தையை செல்வியிடம் ஒப்படைத்தவன் சில்வியாவின் அருகில் சென்று அனைவரும் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவளது உதட்டோடு உதட்டாக வைத்து முத்தத்தை பரிசளித்தான்.

 

நான் ஒரு உயிரை தேடி இங்கு வந்தேன் டி. எனக்காக ரெட்டை உசுரா காத்திருப்பேனு நான் நினைச்சு கூட பார்க்கல. கன்சீவ் ஆனதை முதலில் கணவன் கிட்ட சொல்லி தானடி சந்தோஷப்படுவாங்க. அப்போ நீ என்னடி பண்ண? அழுதியா? கஷ்டப்பட்டியா? வலிச்சதா? என்று அவன் அவளது கன்னத்தினை பிடித்து கேட்கவும் மொத்தமாக கரைந்து விட்டாள் . கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு இருந்த சில்வியா. 

 

அவனை கட்டியணைத்து தழுவியவள் அமெரிக்க வந்து இறங்கின உடனே மறுபடி உன்னை வந்து பாக்கணும்னு தோணுச்சுடா. இந்த சந்தோஷமான செய்தியை உன்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுக்கணும்னு தோணுச்சுடா. ஆனால் நீ தான் என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருந்தியே என்று மீண்டும் அவள் ஆரம்பிக்க மீண்டும் அவனது உதட்டில் முத்தமிட்டு அதனை மறக்க செய்தான். 

 

செல்வி மற்றும் மதி வெட்கத்தில் வேறு அறைக்கு

சென்று விட, அவர்களின் வாழ்வும் இனிமேல் வசந்தத்தில் செழிக்க வேண்டும் என்ற கடவுளிடம் வேண்டிக் கொண்டதோடு நாமும் விடை பெறுவோம்.

 

 

…. முற்றும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!