ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6)

5
(3)

அவனுக்கும் உறக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர மெல்ல கண்ணயர்ந்தான் வித்யுத் அபிமன்யு.

 

அதிகாலை அந்த பேருந்து மதுரையை வந்தடைந்தது. முதலில் கண் விழித்த யாழிசை தான் அவனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்து ஐய்யய்யோ ராத்திரி முழுக்க அவரோட தோளில் தான் சாய்ந்து தூங்கினேனா அவரும் என்னை தள்ளி விடலையா என்று நினைத்தவளது உள்ளமோ குத்தாட்டம் போட ஆரம்பித்தது.

 

சரி அவரு நல்லா தூங்குறாரு பஸ்லையும் இன்னும் யாரும் கண் விழிக்க வில்லை பேசாமல் ஒரு ஃபோட்டோ எடுத்தால் என்ன இதெல்லாம் பொக்கிஷமான நினைவுகள் என்று நினைத்தவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டு தன் மொபைலில் இருவரையும் ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டாள்.

 

 

மெல்ல அவனது கையை தன் கையால் அணைத்துக் கொண்டு அவள் மீண்டும் கண்களை மூடினாள். தன் கையை அவளது கை அணைத்ததை உணர்ந்தவன் உறக்கம் கலைந்து கண்களை திறந்தான். அவளது கைக்குள் இருந்து தன் கையை உருவிக் கொண்டவன் வெளியே பார்த்திட மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது.

 

கேர்ள்ஸ் ஊர் வந்திருச்சு எழுந்திரிங்க என்று அவன் கூறிட ஒவ்வொருவராக கண் விழித்து குட்மோர்னிங் சார் என்றனர்.

 

பேருந்தில் இருந்து இறங்கி அவர்கள் தங்க ஏற்பாடு செய்த விடுதிக்கு சென்றனர். எல்லோரும் குளிச்சிட்டு ரெடியாக இருங்க ப்ரேக் ஃபாஸ்ட் முடிஞ்சதும் அந்த காலேஜ் போகிறோம் என்று கூறி விட்டு தனக்கு ஒதுக்கப் பட்ட அறைக்குள் நுழைந்தான் வித்யுத் அபிமன்யு.

 

 

இசை ஆடிருவ தானே என்று அவன் கேட்டிட அவளோ புன்னகைத்து விட்டு கண்டிப்பா சார் என்றாள். உனக்கு காயம் என்று அவன் கேட்டிட அது வலிச்சாலும் ஆடி ஃபர்ஸ்ட் ப்ரைஸ் அடிப்பேன் சார் என்றாள் யாழிசை.

 

ஏன்டீ அப்படி என்னடி உன் தங்கச்சி கூட போட்டி மத்த எல்லா போட்டியையும் நல்லா தானே பண்ணி இருக்க அப்பறம் ஏன் இந்த டான்ஸ் அவசியம் நீ ஆடனுமா என்ற உத்ரா விடம் யாரு சொன்னா என் தங்கச்சியை ஜெயிக்க தான் நான் ஆடுறேன்னு அந்த பல்லியோட டான்ஸ் லட்சணம் எனக்கு நல்லாவே தெரியும் அவள் எல்லாம் ஆறுதல் பரிசு கூட வாங்க மாட்டாள் அப்படி இருக்கும் போது அவள் கூட நான் போட்டி போடுவதா நான் ஆடுறது வித்யுத் சாருக்காக அவர் முயற்சியால தான் இப்போ இந்த காம்பெடிசன்ல நாம கலந்துக்கிறோம். நாம நல்லா பண்ணி ஓவரால் சாம்பியன்ஷிப் ட்ராஃபி நமக்கு கிடைத்தால் அது சாருக்கு தானே பெருமை அதான் என்று அவள் புன்னகைக்க இது காதலுக்கு மரியாதையா இல்லை வாத்திக்கு மரியாதையா என்றாள் மிதுனா. வாத்திக்கு தான் என்று சிரித்தாள் யாழிசை.

 

மச்சி உன் தங்கச்சி பரதநாட்டியம் காஸ்டியூம் எல்லாம் போட்டு கலக்குறாள். நீ என்னடான்னா ஜஸ்ட் ஒரு அனார்கலி சுடி தான் போட்டிருக்க என்று கூறிய தோழி மிதுனாவிடம் அந்த பாட்டுக்கு படத்திலே எல்லா பொண்ணுங்களும் இந்த காஸ்டியூம் தானே டீ போட்டுப்பாங்க என்று சிரித்தாள் யாழிசை. யாமினி அலங்காரம் எல்லாம் அழகாக பண்ணி இருந்தாலும் முதல் முதலாக ஸ்டேஜை பார்த்து பயந்து விட்டாள் போல நடனத்தில் நிறைய மிஸ்டேக் செய்ய ஆரம்பித்தாள்.

 

மச்சான் என்னடா கோபமா இருக்க என்ற தோழன் விக்னேஷிடம் இவளை யாருடா டான்ஸ்க்கு ரெகமென்ட் பண்ணினது பாரு ஆடுறேங்கிற பெயரில் எப்படி சொதப்பிட்டு இருக்கிறாள்னு என்று பற்களைக் கடித்தான் விகாஷ்.

 

 

மச்சி விடு க்ரூப் டான்ஸ்ல பார்த்துக் கொள்ளலாம் என்று தோழனை சமாதானம் செய்தான் விக்னேஷ். அந்த நேரம் அடுத்த பாடல் இசைக்க ஆரம்பித்தது.

 

 

“உன்னைக் காணாது நான் என்றும் நான் இல்லையே ” என்று பாடல் இசைக்க யாழிசை ஆட ஆரம்பித்தாள். அவளது முக பாவமும் நடன நெளிவுகளும் பார்க்கும் அனைவரையும் கை தட்ட வைத்தது.

 

அவளது நடனத்தை கண்ட வித்யுத் அவளது பாதத்தை தான் பார்த்தான். அவள் வலியோடு ஆடுவதைக் கண்டவனுக்கு தான் இதயம் லேசாக வலித்தது.

 

அவள் ஆட ஆட விகாஷிற்கு சில வருடங்களுக்கு முன்பு பள்ளியில் ஆடிய பெண் என்று நியாபகம் வர அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இல்லை இல்லை ரசித்துக் கொண்டே இருந்தான்.

 

 

 

அவள் ஆடி முடித்து ஸ்டேஜை விட்டு இறங்கியதும் அவளருகில் வந்த வித்யுத் காலை பாரு என்று கூறிட‌ அப்பொழுது தான் உத்ரா, மிதுனா இருவரும் கூட அவளது காலை பார்த்தனர். யாழி உன் காலில் இரத்தம் டீ என்று வகுப்பு தோழி அம்பிகா கூறிட அம்பிகா ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வா என்றான் வித்யுத் அபிமன்யு.

 

சரிங்க சார் என்று கூறி விட்டு அம்பிகாவும் அதை கொண்டு வர உட்காரு இசை என்று அவளை அமர வைத்து அவளது காலில் மருந்து போட்டு கட்டுப் போட்டு விட்டான் வித்யுத் அபிமன்யு.

 

சார் நானே போட்டுக்கிறேன் சார் நீங்க போயி என் காலை பிடித்து என்று அவள் ஏதோ சொல்ல வர அவளை முறைத்தவன் பேசாமல் இருக்க மாட்டியா இசை என்று கூறவும் அமைதியாகினாள்.

 

 

அவனும் அவளுக்கு மருந்து போட்டு விட்டு க்ரூப் டான்ஸ் நீ ஆட வேண்டாம் என்று கூறினான். சார் ப்ளீஸ் என்று அவள் கெஞ்சிட என்ன விளையாடுறியா திரும்பவும் காலில் இரத்தம் வந்தால் என்ன பண்ணுவது என்று அவன் கேட்டிட சார் யாழி தான் சென்டர்ல நிக்கனும் அவள் ஆடலைனா எப்படி என்று மற்ற மாணவிகள் கூறிட அவன் மறுத்தும் யாழிசை பிடிவாதமாக ஆடியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்திட அவளை திட்டி விட்டு ஆட அனுமதித்தான்.

 

 

ஆட்டம் பாட்டு என்று மட்டும் இல்லாமல் அறிவு சார்ந்த போட்டிகளிலும் யாழிசை வென்று இருந்தாள். அவள் கலந்து கொண்ட அனைத்திலும் முதல் பரிசு தான். க்ரூப் டான்ஸ் தவிர.

கூடவே மற்ற மாணவிகளும் இரண்டாம் பரிசு என்று பரிசு இல்லாமல் இல்லை.

 

விகாஷ் யாமினியை முறைத்து விட்டு சென்றிட அவளுக்கு தான் அவமானமாக இருந்தது.

 

 

இசை என்று அவன் அழைத்திட அவனருகில் வந்தாள் யாழிசை. சொல்லுங்க சார் என்று அவள் கேட்டிட இந்தா என்று ஐஸ்கிரீமை அவன் கொடுத்திட எனக்கா என்று அவள் ஆசையாக வாங்கிக் கொண்டு தோழிகளை தேடி வர அவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

 

ஐஸ்கிரீம் ஏதுடீ என்று அவள் கேட்டிட சார் தான் வாங்கிக் கொடுத்தாங்க என்று அம்பிகா கூறிட அப்போ எல்லோருக்கும் வாங்கி கொடுத்ததால் தான் எனக்கும் வாங்கி கொடுத்தாரா என்று நினைத்தவளது மனம் சுனங்கியது.

 

ஹாய் என்ற குரலில் அவள் திரும்பிட விகாஷ் நின்றிருந்தான். உங்க பெயர் என்ன என்றவனிடம் யாழிசை என்றாள். நான் விகாஷ் என்று அவன் கை நீட்டிட அவளும் கை கொடுத்தாள்.

 

உங்க டான்ஸ் ரொம்ப சூப்பரா இருந்தது நீங்க அந்த ஸ்கூலில் தானே படிச்சீங்க என்று அவன் கேட்டிட ஆமாம் என்றாள் யாழிசை. நானும் அதே ஸ்கூல் தான் என்று பேச ஆரம்பித்தான். பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நண்பர்கள் போல இருவரும் பேச ஆரம்பித்தனர்.

 

இசை என்று வித்யுத் அழைத்திட பாய் விகாஷ் சார் கூப்பிடுறாங்க கிளம்பனும் என்று கூறிய யாழிசை கிளம்பிட அவன் தான் சோகமாகினான்.

 

அவள் கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு சீனியர் என்ற யாமினியிடம் அவன் கோபமாக ஏதோ சொல்ல வர ஏய் யாமி உன் அக்கா டான்ஸ் சூப்பரா ஆடுனாங்கடி என்றாள் யாமினியின் தோழி ஷாலினி.

 

அக்காவா என்ற விகாஷிடம் ஆமாம் சீனியர் நீங்க பேசிட்டு இருந்தீங்களே அவங்க யாமினியோட அக்கா தான் என்று ஷாலினி கூறிட அப்படியா என்றவன் யாமினியிடம் புன்னகை முகமாகவே பேச ஆரம்பித்தான்.

 

 

பேருந்தில் அவன் அருகிலேயே அவள் அமர்ந்து கொள்ள அவன் எதுவும் சொல்லவில்லை. கால் இப்போ பெயினா இருக்கா இசை என்று அவன் கேட்டிட மருந்து போட்டு விட்டது நீங்களாச்சே அப்பறம் எப்படி சார் பெயின் இருக்கும் என்று அவள் அசடு வழிய அவனோ அவளை முறைத்து விட்டு திரும்பினான்.

 

 

யாழி என்ற குரலில் அவள் திரும்பிட விகாஷ் அமர்ந்திருந்தான். ஏய் விகாஷ் நீயும் இதே பஸ் தானா என்று அவனுடன் அவள் பேச ஆரம்பித்தாள். அவர்கள் பேசிக் கொண்டே இருக்க இங்கே யாமினிக்கு தான் பொசு பொசுவென்று இருந்தது.

 

 

வித்யுத்திற்கே சற்று பொறாமையாக தான் இருந்தது அவள் வேறு ஒருவனுடன் பேசிக் கொண்டு இருந்தது.

 

 

 

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!