அத்தியாயம் 10
கவியின் கல்யாணம் முடிந்த பிறகு கீதாவும் ராமும் கிளம்பி விட்டனர். கீதா கவியை அவளின் சொந்தத்துடன் சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக சென்றார். அவரின் ஊருக்கு செல்லவே நள்ளிரவு 12 ஐ நெருங்கிவிட்டது. சென்றதும் அலைச்சல் காரணமாக படுத்ததும் தூங்கி விட்டார். ராமும் பக்கத்து வீட்டில் தான் அவரின் மகள் வீடு இருப்பதால் அங்கே சென்று தங்கினார்.
காலையிலேயே 5 மணி போல் ராம் பிரசாத் சென்னை கிளம்புவதால் கீதாவிடம் சொல்லி விட்டு போகலாம்னு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினார். ஆனால் கதவு திறந்து தான் இருந்தது. கதவு கூட பூட்டாமல் தூங்கிட்டாங்களா என்று உள்ளே சென்று பார்த்தார். அங்கு ரூமும் பூட்டாமல் தான் இருந்தது. உடனே உள்ளே சென்று அவரை அழைத்துப் பார்த்தால் கீதா எழவில்லை.
பின்னர் தன் மகளை அழைத்து வந்து அவரை எழுப்பினர். ஆனால் அவர் எழவே இல்லை. பக்கத்தில் இருக்கும் மருத்துவரை அழைத்துப் பார்த்தனர். அவரும் கீதா இறந்ததாகவும் இறந்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்று கூறினார். ஆக அவர் படுத்த கொஞ்ச நேரத்திலே இறந்து விட்டார். உடனே ராம் ராஜனுக்கு ஃபோன் பண்ணி கூறிவிட்டார். ராஜனுக்கு தெரியும் கீதா இறந்தது ஆனால் அவர் சோழனிடம் கூட சொல்லவில்லை.
இப்போது கவி கீதாவைக் கட்டிக்கொண்டு அழுவதை அங்கே இருந்த யாராலும் பார்க்க முடியவில்லை. அம்மா அம்மா என்று கத்திகொண்டே இருந்தாள். வெளியே நின்ற சோழனுக்கும் அவள் கதறுவதைக் கேட்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் கத்திக் கத்தி கவி மயங்கி விழுந்தாள். சோழனுக்கு கவியின் சத்தம் வராமல் போனதும் வேகமாக உள்ளே வந்து பார்த்தான்.
அங்கே கவி மயங்கி இருந்ததைக் கண்டதும் அவளை டக்குன்னு தன் கையில் தூக்கிக் கொண்டு உள்ளிருக்கும் அறைக்கு சென்று படுக்க வைத்தான். பின்னர் ஒரு பெண் வந்து தண்ணீர் தெளித்து எழுப்பப் பார்த்தார். சோழன் அவரைத் தடுத்து நிறுத்தி வேண்டாம் எழுந்தால் மறுபடியும் கத்திக்கொண்டு தான் இருப்பாள். அதனால் கொஞ்சம் நேரம் இப்படியே மயக்கத்தில் இருக்கட்டும் என்று கூறினான்.
சரி என்று அந்த பெண் சென்று விட்டார். இவனும் அவளின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்தான். அப்போது ராஜன் ஃபோன் செய்தார். ஃபோன் எடுத்ததுமே என்னப்பா கவி எப்படி இருக்கா என்று கேட்டார். அழுது அழுது மயங்கிட்டாள் ஐயா என்று சொன்னான். சரிய்யா ரொம்ப கவலையாக இருக்கும் கொஞ்சம் பாத்துக்கோயா என்று கூறிவிட்டு வைத்தார்.
ஒரு ரெண்டு மூணு மணி நேரம் கழித்து கவி எழுந்தாள். எழுந்ததும் அனைத்தும் நியாபகம் வந்தது உடனே வெளியே ஓடினாள். அங்கு கீதாவை அனுப்புவதற்கு எல்லாம் ரெடியாக வைத்து இருந்தனர். கவி வந்ததுமே பொண்ணு வந்து விட்டது தூக்கலாம் தானே என்று கேட்டார்கள். கவி ஓன்னு கதறினாள். சோழனும் பின்னாடியே வந்து விட்டான். அவளைப் பிடித்துக் கொண்டான்.
என்ன பண்ணாலும் இறந்தவரைத் திரும்ப கொண்டு வர முடியுமா. கீதாவும் அப்படித்தான் அவரின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு மகிழ்ச்சியோடு கண் மூடி விட்டார். அவரின் உடலை எடுத்துக் கொண்டு மின் தகனத்திற்கு சென்றனர். பின்னாடியே சோழன், கவி, ராம் பிரசாத் அவரின் மகள் குடும்பம் மட்டுமே அங்கே சென்றனர்.
அங்கு போயும் கவி அம்மா அம்மா என்று கதறிக் கொண்டு தான் இருந்தாள். கீதாவின் உடலை அந்த மின் தகனத்தில் வைத்து அனுப்பினர். அவரின் உடலை நெருப்பு விழுங்கி சாம்பலாக்கியது. பின்பு திரும்பி பார்க்காமல் கவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்த விட்டனர். அப்புறம் கீதாவின் அஸ்தியை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை வாங்க கவியின் கைகள் அப்படி நடுங்கியது.
சோழன் தான் கவியின் கைகளை தன் கைகளால் பிடித்துக் கொண்டு இருவரும் சேர்ந்து வாங்கினர். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டனர். குளித்து விட்டு ஹாலில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள் கவி. சோழன் அப்போது தான் குளித்து விட்டு வந்தான். ராம் பிரசாத்தும் சாப்பாட்டுடன் உள்ளே வந்தார். இருவரையும் சாப்பிட அழைத்தார். ஆனால் கவி அதை கவனிக்காமல் இருந்தாள்.
சோழன் தான் கவியை அழைத்து வந்து சாப்பிட வைத்தான். ஏதோ இரண்டு வாய் மட்டும் சாப்பிட்டு விட்டு சென்று படுத்துக் கொண்டாள். சோழன் சாப்பிட்டு விட்டு சோஃபாவில் வந்து அமர்ந்தான். ராம் பிரசாத் அவனிடம் வந்து தம்பி கீதா ரொம்ப சந்தோஷமா இருந்து நான் பார்த்தது நேற்று தான் அதுவும் உங்கள் கல்யாணத்தால் தான்.
கவி ரொம்ப நல்ல பொண்ணு அம்மாவைத் தவிர அவளுக்கு எதுவுமே தெரியாது. நீங்க நல்லா பார்த்துக்குவிஙகன்னு தெரியும் இருந்தாலும் சொல்றேன். கவியை சந்தோஷமாக பார்த்துக்க்கோங்க தம்பி அப்படின்னு சொல்லிட்டு போய்டுறார். இவனும் கதவை சாற்றி விட்டு வந்து கவியைப் பார்த்தான்.
அழுது அழுது முகமே வீங்கியதோடு தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து இனிமே எதுக்கும் நீ அழுகக் கூடாது என்று நினைத்துக் கொண்டு அவனும் சென்று படுத்துக் கொண்டான்.
இனி என்ன ஆகும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.