அத்தியாயம் 9
கல்யாணம் முடிந்து முதல் நாள் இரவு யாரென்று தெரியாத ஒருவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கவி நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சோழன் தான் கொஞ்ச நேரம் தூங்காமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான் பின்னர் அவனும் தூங்கி விட்டான்.
அதிகாலையிலேயே ஒரு ஐந்து மணி போல் ஃபோன் வந்தது ராஜனுக்கு. அதில் கூறிய செய்தியில் அதிர்ந்து போய் நின்று இருந்தார் ராஜன். பின்னர் நான் உடனே அவங்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். சோழனின் அறைக்கு வேகமாக சென்று கதவைத் தட்டினார்.
சோழனும் இந்த நேரத்தில் என்ன என்று வந்து கதவைத் திறந்தான். அங்கே அவனின் ஐயா பதட்டத்துடன் நிற்கவும் என்னங்க ஐயா இந்த நேரத்தில் என்று கேட்டான். அதற்கு அவர் கவி என்று கேட்டார். அவனும் அவள் தூங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று கூறினான். சரிப்பா நீங்கள் ரெண்டு பேரும் உடனே மும்பை போகனும்னு சொல்றார்.
இப்போ எதுக்கு ஐயா மும்பை போகனும் அப்படின்னு கேட்கிறான். அதற்கு அவர் கவி அம்மாவை சீரியஸாக இருக்கிறாராம். அதனால் நீங்கள் உடனே கிளம்புங்க. அப்புறம் கவிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் அங்கே போய் தெரிஞ்சுக்கிட்டும் என்று கூறினார். அவனும் சரிங்க ஐயா நாங்கள் கிளம்புறோம் என்று கிளம்பினான்.
முதலில் அவன் சென்று குளித்துக் கிளம்பி வந்து கவியை எழுப்பினான். அவளின் அருகில் அவனுடைய ஃபோனில் ஒரு பாட்டை சத்தமாக வைத்து விட்டு பெட்டில் சென்று அமர்ந்து இருந்தான். அவளும் என்ன இது இந்த நேரத்தில் இவ்வளவு சத்தமாக பாட்டு கேட்கிறாங்க என்று எழுந்து பார்த்தாள்.
சோழனைப் பார்த்ததும் என்ன இவரு இந்த நேரத்தில் கிளம்பி இருக்கார் என்று பார்த்தாள். அவனும் அவளிடம் வந்து நம்ம மும்பை போகனும் போய் சீக்கிரமா கிளம்பி வா என்று கூறிவிட்டு கீழே சென்று விட்டான். அவளும் ஒரு வேளை அம்மாவை பார்க்கப் போகிறோம் என்று 15நிமிடத்தில் ரெடியாகி ஒரு சுடிதாரில் கிளம்பி வந்தாள்.
ராஜனும் சோழனும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அவள் வந்ததும் சரிப்பா இரண்டு பேரும் பார்த்துப் போய்ட்டு வாங்க என்று கவியை எதுவும் பேச விடாமல் அனுப்பி வைத்தார். அவர்களும் தலையை மட்டும் ஆட்டி விட்டு கிளம்பினர். வீட்டில் இருந்து காரில் சென்று ஏர்போர்ட் போய் ஃபிளைட்டில் செல்வதாக இருந்தது.
இருவரும் காரில் செல்லும் போதும் பேசிக் கொள்ளவில்லை. ஃபிளைட்டில் செல்லும் போதும் வேறு வேறு சீட்டில் கொஞ்சம் தள்ளி இருந்ததால் பேசிக் கொள்ளவில்லை. கவி தான் என்ன இவர் பேசவே மாட்டுறார் என்று மட்டும் ஒரு தடவை பார்த்தாள். பின்னர் அம்மா எப்படி இருக்காங்கன்னு தெரியலையே என்று ஃபோன் பண்ணினாள். ஆனால் ஃபோன் எடுக்கவில்லை.
அப்புறம் அம்மாவைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தாள் இனி எப்படி அம்மா தனியா இருப்பாங்க கூட யாரையும் வேலைக்கு வச்சிட்டு தான் வரனும் அப்படின்னு நிறைய யோசித்துக் கொண்டு சென்றாள். ஏனென்றே தெரியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதையும் துடைத்துவிட்டுக் கொண்டு இருந்தாள்.
மும்பையும் வந்து விட்டனர். ராஜன் ஃபோன் செய்து பேசினார். இப்போது தான் ஏர்போர்ட் வந்ததாக கூறினான்.
அதற்கு அவர் கவி அம்மா கொஞ்சம் நேரத்திற்கு முன் தான் இறந்ததாக ஃபோன் வந்தது என்று சொன்னார். அதைக் கேட்ட சோழனுக்குமே கவலையாக தான் இருந்தது. அவரே கவியை பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட வைத்து கூட்டிட்டுப் போக சொன்னார். சரிங்க ஐயா என்று ஃபோனை வைத்தான்.
ஒரு டாக்சியை அழைத்து அவன் முன் சீட்டில் ஏறினான் கவியும் பின்னால் ஏறி அமர்ந்தாள். பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு போகச் சொல்லி ஹிந்தியில் சொன்னான். இவருக்கு ஹிந்தி தெரியுமா என்று கவி தான் ஆச்சரியமாக பார்த்தாள். ஹோட்டல் சென்று இருவரும் பேருக்காக கொஞ்சம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள்.
கவியின் வீட்டு அட்ரஸை டாக்சி டிரைவரிடம் காட்டி அங்கே போய் இருவரும் இறங்கினர். வீட்டின் வெளியவே மிகவும் கூட்டமாக இருந்தது. அதைப் பார்த்தவுடன் கவிக்கு பயமாக இருந்தது. உடனே பக்கத்தில் நின்று இருந்த சோழனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைப் பார்த்து ஒன்னும் இல்லை வா உள்ளே போகலாம் என்று கூட்டிச் சென்றான்.
உள்ளே சென்றதும் அவளின் அம்மா கீதாவை நடு ஹாலில் படுக்க வைத்து இருந்தனர். அதைப் பார்த்தவுடன் அம்மா என்று கத்திகொண்டே கீதாவின் அருகில் ஓடினாள். அவள் கத்தியது அங்கே இருந்த அனைவரையும் கலங்க வைத்தது. அப்படி கத்தி கதறினாள். சோழனுக்கும் அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. அவனால் அவளை அப்படி கதறுவதையும் பார்க்க முடியவில்லைய வெளியே சென்று விட்டான்.
ஆனால் அவளின் கதறல் சத்தம் வெளியேயும் கேட்டது.
கீதா எப்படி திடீரென இறந்தார். கவியின் நிலை என்ன ஆகும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.