அத்தியாயம் 2
மும்பை,
காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான் நம்ம ஹீரோயின் கவிநிலா.
அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா பார்க்கவும் சின்னதா இருக்கா செய்வதும் சின்ன பிள்ளைத்தனமா இருக்கா இவள கட்டிக்கொண்டு யாரு தான் பாடுபட போறாங்களோ பாவம் அந்த பையன்னு பொலம்பிட்டு இருக்காங்க.
சரியாக 9 மணி ஆனதும் அவளது அறைக் கதவு திறந்தது. அங்கிருந்து ஜீன்ஸ் பேண்ட் குர்த்தான்னு மாடர்ன் மங்கையாக இறங்கி வந்தாள் கவி. அவளோட அம்மாவும் ஏன் கவி இப்படி பண்ற ஒரு நாளைக்காச்சும் சீக்கிரமா எந்திரிச்சு வரியா எப்போவும் இப்படி கிளம்பி லேட்டா போனா எப்படி இன்டர்வியூ கரெக்ட் டைம்க்கு அட்டென்ட் பண்ணுவ அப்புறம் வந்து வேலை கிடைக்கல ன்னு மட்டும் பொலம்புறது அப்படின்னு சொல்றாங்க.
அதற்கு அவள் அதனால் தான்மா இன்னைக்கு 12 மணிக்கு தான் இன்டர்வியூ நான் 9 மணிக்கே கிளம்பிட்டேன் இன்னைக்கு கண்டிப்பா வேலை கிடைச்சிடும்னு உறுதியா சொல்றாள். சரி சரி அதை நம்ம ஈவ்னிங் பார்ப்போம் இப்போ சாப்பிட்டுட்டு கிளம்புன்னு கீதா சொல்றாங்க. அவரும் ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை செய்ராங்க அதுவும் வீட்டில் இருந்து ஒரு ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கும்.
கவியும் சாப்பிட்டு விட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் இன்டர்வியூக்கு சென்று விட்டாள். கீதாவும் வீட்டை பூட்டி விட்டு ஸ்கூலிற்கு சென்றார். டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டு நின்று நின்று எப்படியோ 11.40க்கு ஆஃபிஸ் வந்துவிட்டாள். அது ஒரு ஐந்து மாடி கட்டிடம் அதில் ஐந்தாவது மாடியில் எஸ்.கே டிசைனிங் ஹவுஸ் அப்படின்ற கம்பெனியில் தான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்டர்வியூ இருந்தது.
நம்ம ஹீரோயின் ஃபேஷன் டிசைனிங் படிச்சி முடிச்சிட்டு ரெண்டு மூணு கம்பெனில கொஞ்ச நாள் வேலை செஞ்சிட்டு பிடிக்காமல் மாறி மாறி இப்போ இங்கே வந்திருக்கா. இவ்வளவு நாட்கள் அட்டென்ட் பண்ணுன இடம் எல்லாமே அவள் லேட்டா போனதுனால தான் கிடைக்காம போச்சு. ஏன்னா அவளோட டிசைன்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கும் அதே மாதிரி அவ படிப்புலையும் 91% வச்சிருந்தாள். அதனால் ஈஸியாக எங்கே வேணும்னாலும் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.
இப்போதும் அதே மாதிரி இன்டர்வியூ நல்லா அட்டென்ட் பண்ணிட்டு வேலையும் முடிவு செய்துவிட்டனர். அடுத்த மாதத்தில் இருந்து வந்து சேர்ந்துக் கொள்ள சொன்னார்கள். அவளும் சந்தோஷமாக ஸ்வீட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள். அங்கே சென்றால் ஆறு ஆகியும் அவளுடைய அம்மா வரவில்லை. அம்மா இன்னும் ஏன் வரவில்லைன்னு ஃபோன் பண்ணி பார்க்கிறாள்.
ஃபோன் போகவே இல்லை சரின்னு ஸ்கூலில் பார்க்கலாம்னு கிளம்பினாள் அப்போது ஒரு தெரியாத நம்பரில் இருந்து ஃபோன் வந்தது யாருன்னு எடுத்து பேசினாள். அதை எடுத்து பேசியதும் கண்ணீர் கண்ணத்தைத் தாண்டி ஓடியது. இப்போ எங்கே வரனும்னு கேட்டுட்டே வேகமாக போறாள்.
அந்த ஏரியாவில் உள்ள ஒரு பெரிய ஹாஸ்பிடலிற்கு சென்று ஸ்கூட்டியை சரியாக கூட நிறுத்தாமல் வேகமாக உள்ளே ஓடினாள். அங்கு ரிசப்ஷன் சென்று கீதான்னு அழுதுட்டே பேர் சொல்றா. அவங்களும் ரெண்டாவது மாடியில் ஐ.சி.யூவில் இருக்காங்கன்னு சொல்லி முடிப்பதற்குள் லிஃப்ட் கூட பார்க்காமல் படியில் ஓடினாள்.
அங்கே அவளோட அம்மா கூட வேலை செய்யும் டீச்சர் ஒருவர் இருந்தார். அவரிடம் அம்மாக்கு என்னாச்சு ன்னு கேட்கிறாள். அவரும் நல்லாத்தான் பேசிக்கொண்டு இருந்தார் தீடீர்னு மயங்கிட்டாங்கன்னு சொல்றாங்க. அப்போது டாக்டர் வெளியே வந்தார். அம்மா எப்படி இருக்காங்க இப்போ ஓ.கே தான டாக்டர் ன்னு கேட்கிறாள். நீங்க அவங்களோட பொண்ணா வாங்க உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க.
அவளும் டாக்டர் ரூம்க்கு போனாள். அவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்கிறார். இல்லை டாக்டர் அம்மா ஏதோ லோ பிரசரால தான மயங்கிட்டாங்க சரியாகிடும்ல னு சொல்றா. அதற்கு அவர் அவங்களுக்கு பிளட் கேன்சர் கடைசி ஸ்டேஜ் இன்னும் எத்தனை நாள் இருப்பாங்கன்னு சொல்ல முடியல இது உங்களுக்கு முன்னாலே தெரியும்னு நினைச்சேன். இனிமே நம்ம எதுவும் பண்ண முடியாது மா அப்படின்னு சொல்லிடுறார். (எல்லாம் ஹிந்தி தான் நமக்கு தமிழில்)
அவ அப்படியே ஷாக் ஆகி இருக்காள். அப்படியே அழுதுகொண்டே இதுலாம் அம்மாக்கு தெரியுமா னு கேட்கிறாள். அவங்களுக்கு இரண்டு வருடங்கள் முன்பே தெரியும் ஆனால் உங்களுக்கு தான் சொல்லல. அப்போது இருந்தே மருந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கிறாங்க னு சொல்றார்.
இன்னும் கொஞ்சம் நாள் இங்கே தான் இருக்கணும் அவங்களோட ஆசைகள் னு எதுவும் இருந்தால் கேட்டு நிறைவேற்ற பாருங்கள்னு சொல்லி விட்டு போய்டுறார். அவளும் அமைதியாக எழுந்து போய் ஐ.சி.யு. கண்ணாடி வழியாக அம்மாவ பாத்துட்டு வந்து அங்க போட்டு இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தாள்.
சோழபுரம்,
நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்புறமா எப்போதும் போல சோழன் தன்னுடைய வேலையை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கான். அவனுடைய அப்பாவும் தம்பியும் கல்யாண வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். பொண்ணோட நம்பர் கிடைக்குமா னு சோழன் தான் தேடிக் கொண்டு இருந்தான். ஆனால் அதை கிடைக்க விடவில்லை அவனோட அப்பா.
சோழனுக்கு ஃபோன் நம்பர் கிடைக்குமா கவியோட அம்மா கடைசி ஆசை என்னவா இருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்.