சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 26
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
யாரோ ஒருவன் வந்து ” உன்னோட பாய்ஃப்ரெண்ட் மாதேஷ் எங்க? ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணா லவ் பேர்ட்ஸ் மாதிரி தானே சுத்திக்கிட்டு இருப்பீங்க?” என்று கேட்க அவன் கேட்ட கேள்வியில் அப்படியே திடுக்கிட்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்..
ஷாலினியும் இதை எதிர்பார்க்காதவள் பயத்தில் தொண்டைக்குள் எச்சிலை விழுங்கியபடி சுந்தரையும் அந்த இளைஞனையும் மாற்றி மாற்றி பார்த்திருந்தாள்..
பிறகு சுதாரித்தவள்.. “பாய் ஃப்ரெண்டா..? மாதேஷா..? ஏன் சதீஷ்.. ஒரு ஆம்பளையும் பொம்பளையும் ஒன்னா பழகுனா உடனே அவங்களுக்குள்ள பாய் பிரண்ட் கேர்ள் ஃபிரண்ட் லவ்வுனு கதை கட்டி விட்டுடுவீங்களா?.. நானா இருக்கவே உனக்கு பதில் சொல்லிட்டு இருக்கேன் பொறுமையா.. நீ சொன்னதை மாதேஷ் கேட்டிருந்தான்னா இத்தனை நேரம் இங்க பெரிய ரணகளமே நடந்திருக்கும்.. உன்னை அடிச்சுட்டு தான் அப்புறம் பேசி இருப்பான்..” என்றாள் கோபமாக..
சதீஷோ “ஆமா சாதாரண ஃப்ரெண்ட்ஸ் தான் வாய் மேலே வாய் வச்சு முத்தம் கொடுத்துட்டு இருப்பாங்க.. இவ என்ன இப்படி பேசுறா.. நாங்கள்லாம் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு தெரியாத்தனமா சொன்னா கூட நாங்க லவ்வர்ஸ்னு சொல்லி சண்டை போடுவாங்களே.. இவ என்ன இப்போ இப்படி சொல்றா? ஒருவேளை ப்ரேக் அப் ஆயிடுச்சா..?” என்று நினைத்தவன் அவள் கொஞ்சம் திருதிருவென விழிப்பதை பார்த்து ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டான்..
” ஓ.. நீங்க ரெண்டு பேரும் வெறும் ஃபிரண்ட்ஸ் தானா.. ஓகே ஓகே.. ஆமா.. சார் யாரு..?” என்று சுந்தரை காட்டி கேட்க “அது.. இவரு என்னோட பாஸ் சுந்தர்.. இவர் கம்பெனில நான் காஸ்டியூம் டிசைனரா இருக்கேன்..” என்றாள் ஷாலினி..
“ஓ அப்படியா.. ஆக்ச்சுவலா நீ மாதேஷ் கம்பெனில தானே இருந்த..?” என்று அவன் கேட்க “இவனுக்கு ஏன் தான் இவ்வளவு ஞாபக சக்தி இருக்குதோ?” என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாள்..
ஆனால் அதை வெளியே காண்பிக்காமல் புன்னகைத்தவள் “ஆமா அங்க தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்.. ஆனா சுந்தர் அவங்க கம்பெனிக்கு காஸ்ட்யூம் டிசைனர் வேணும்னு சொன்னதுனால மாதேஷ் என்னை இங்க ஒர்க் பண்ண அனுப்பிச்சாரு.. ” ஒரு வழியாக அவனை சமாளித்தாள்..
“இந்த மாதேஷ் அப்படி எல்லாம் அவனோட லவ்வர்ரை இன்னொருத்தன் கம்பெனிக்கு அனுப்ப மாட்டானே.. கண்டுபிடிப்போம்.. இதிலிருந்து நமக்கு எவ்வளவு கிடைக்குதுன்னு பார்ப்போம்..” என்று நினைத்தவன் “ஓகே ஷாலினி.. என்ஜாய் யுவர் டின்னர்.. நான் இப்ப கிளம்புறேன்..” என்று சொல்லி சுந்தர் பக்கம் திரும்பி “நைஸ் மீட்டிங் யூ டு சார்” என்று கைகுலுக்கியவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..
ஷாலினிக்கோ அவன் பார்வையே சரியில்லையே என்று உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம் இருக்கத்தான் செய்தது..
ஆனால் தான் வந்த வேலை முக்கியம் என்று எண்ணியவள் “சாரி சுந்தர்.. இவங்க எல்லாமே இப்படித்தான்.. சாதாரணமா நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்டா பழகுறதையே இப்படித்தான் சொல்லி ஓட்டிக்கிட்டே இருப்பாங்க.. ஆனா நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே ஃப்ரெண்டா தான் பழகுறோம்.. அதை தாண்டி எங்க லிமிட்டை நாங்க க்ராஸ் பண்ணதே இல்ல..”
பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்..
“ஐயோ ஷாலினி.. நீங்க எதுக்கு இவ்வளவு எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்துட்டு இருக்கீங்க.. யாரோ வந்து ஏதோ சொன்னா அதுக்காக எல்லாம் நான் உங்களை பத்தி தப்பா நினைக்க மாட்டேன்.. நான் உங்களை தினமும் பாத்துட்டு இருக்கேன்.. உங்களை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அதனால டென்ஷன் ஆகாம உட்கார்ந்து உங்க ஐஸ்கிரீமை என்ஜாய் பண்ணுங்க..” என்று சொன்னவன் “கவலைப்படாதீங்க.. எல்லா இடத்திலுமே இந்த மாதிரி சில பேர் இருக்கத்தான் செய்வாங்க” என்றான் சிரித்துக் கொண்டே..
அதன் பிறகு ஷாலினி உள்ளுக்குள் கொஞ்சம் சதீஷை பற்றிய சிறு யோசனையோடு அங்கு நேரத்தை கடத்தினாள்..
இப்போது ஒரு வாய் ஐஸ்கிரீம் எடுத்து அவள் வாய்க்கு நேரே நீட்டிய சுந்தர் “ரொம்ப டென்ஷனா இருக்கீங்க.. இந்தாங்க கொஞ்சம் கூல் பண்ணிக்கோங்க..”
அவளைப் பாரத்து கண்களால் ஐஸ்கிரீமை காட்டியபடி அவளை அவளின் வாயை திறக்க சொல்லி ஊட்டிவிட்டான்.. அந்த ஐஸ்கிரீமை ருசித்தவள் அப்படியே தலையை குனிந்து புன்னகைத்தபடி வெட்கப்பட்டு சிரித்தாள்..
“ஓகே.. கூல் ஆயிட்டீங்க போல இருக்கு..” என்று சுந்தர் சொல்லவும் “அதான் என்னை கூலாக்குற டெக்னிக் எல்லாம் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்களே..”
ஷாலினி சொல்ல அவனுக்கு அந்த ஐஸ்கிரீமை விட அவள் பேச்சு மிகவும் இனித்தது.. அவள் பேசுவதெல்லாம் ஒரு இனிமையான விஷம் என்று அறியாதவன் அந்த விஷத்தை அள்ளி அள்ளிப் பருக ஆசையோடு இருந்தான்..
அதன் பிறகு ஒரு மணி நேரம் அங்கு உணவையும் அவள் அழகையும் பேச்சையும் மாறி மாறி ரசித்து ரசித்து உண்டவன்.. “ஷாலினி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே..” என்றான்..
“எதுக்கு சுந்தர் என்கிட்ட கேக்கறதுக்கு இவ்ளோ பர்மிஷன்.. நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்.. நீங்க தப்பா எதுவும் என்கிட்ட கேட்கமாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. கேளுங்க” என்றாள் ஷாலினி..
இப்படி பேசினால் அவன் தன்னிடம் மயங்குவான் என்று அறிந்தே வைத்திருந்தாள் அவள்.. அவள் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவன் நெஞ்சில் போய் அம்பென பாய்ந்து அவனை வீழ்த்தியது..
ஆனால் அவன் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவை எதுவுமே நிஜமான காதல் அம்புகள் இல்லை.. அவை எல்லாமே விஷ அம்புகள் என்பதுதான்..
தொண்டையைக் கனைத்தவன் மெதுவாக “ஷாலினி.. என் லைஃப்ல ஒரு ஆம்பிஷன் இருக்கு..” என்று ஆரம்பிக்கவும் ஷாலினிக்கு மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது…
“அப்படி வாடா வழிக்கு.. சொல்லுடா சொல்லு.. நான் என்ன நீ சொல்லணும்னு எதிர்பார்க்கிறனோ அதை சொல்லிடு பார்ப்போம்..”
மனதில் எண்ணிக்கொண்டே ஆவலுடன் மேல் கண்ணால் அவனை பார்த்தபடி காத்திருந்தாள்..
அவனும் அவள் நினைத்ததை சொன்னான்..
“அது நான் நல்லா படிச்ச நாகரீகமான பர்டிகுலரா நல்ல ஃபேரா இருக்குற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழ்ந்து காட்டணுங்கறது என் லைஃப் ஆம்பிஷன் மட்டும் இல்லை என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நான் அப்படி ஒரு சவாலும் போட்டு இருக்கேன்.. இதுவரைக்கும் அந்த மாதிரி நிறைய பொண்ணுங்களை நான் பார்த்து இருக்கேன்.. ஆனா அவங்க யார்கிட்டயும் எனக்கு இப்படி கேட்கணும்னு தோணல.. ஆனா உங்களோட சில குணங்கள் நீங்க அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றது.. அன்னைக்கு பாட்டிக்கு ஹெல்ப் பண்ணது.. அப்புறம் நீங்க ஃபேராவும் அழகாவும் எனக்கு பிடிச்ச மாதிரியும் இருக்கிறது.. வெஸ்டர்னைஸ்டா இருக்கிறது.. இது எல்லாமே என்னோட சவால்ல நான் சொன்ன படியும் இருக்கு.. அதே சமயம் என் லைஃப்ல என் வைஃபா வர்றவங்களுக்கு நான் என்னென்ன குணங்கள் இருக்கணும்னு எதிர்பார்க்கிறனோ அந்த குணங்கள்ல நிறைய உங்ககிட்ட இருக்கு.. சின்ன சின்ன விஷயங்கள் சிலது இருக்கு.. அது போக போக மாறிடும்ன்னு நான் நம்புறேன்.. அது… அதனால.. நான் உங்ககிட்ட என்ன கேட்கணும்னா..” என்று இழுத்தவன் அமைதியாய் இருக்க ஷாலினிக்கு பொறுமை போனது..
“சொல்லுங்க சுந்தர்.. என்ன கேக்கணும்னு சொன்னா தானே எனக்கு தெரியும்..” என்று கேட்டாள் ஷாலினி..
அவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை பறந்து கொண்டு இருந்தது.. அவன் சொல்லவில்லை என்றால் தானே கேட்டு விடலாமா என்று கூட தோன்றியது அவளுக்கு..
“ஆக்ச்சுவலா நான் கூட அந்த சதீஷ் வந்து உங்க கிட்ட மாதேஷ் பத்தி அப்படி சொன்னப்போ ஒருவேளை அப்படி இருக்குமோ.. உங்களுக்கு என்னை மாதிரி கருப்பான ஆளை பிடிக்காதோன்னு நினைச்சேன்.. ஆனா அந்த சதீஷ் கிட்ட நீங்க அவ்வளவு தெளிவா உங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி எதுவும் இல்லைன்னு சொன்னது மட்டும் இல்லாம கோவப்பட்டதை பார்த்தப்போ தான் எனக்கு உங்களை இது பத்தி கேட்கணும்னு தைரியம் வந்தது.. ஷாலினி உங்களுக்கு என்ன பிடிக்குமா..?”
“என்ன கேள்வி இது சுந்தர்..? உங்களை யாருக்கு தான் பிடிக்காது..? உங்களை மாதிரி ஹார்ட் வர்க்.. கான்ஃபிடன்ஸ்.. இவ்ளோ டேலன்ட் இருக்குற ஒரு ஆளை யாராவது பிடிக்கலைன்னு சொல்லுவாங்களா? எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்..”
“எந்த அளவுக்கு பிடிக்கும்?” என்று அவன் கேட்க “இப்படியே போனால் இவன் இந்த ஜென்மத்துக்கும் சொல்ல மாட்டான்..” என்று நினைத்தவள் “நான் சொன்னா என்னை தப்பா நினைக்க மாட்டீங்க இல்ல..? எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு பிடிக்கும்”
ஷாலினி சொல்ல கேட்க வந்ததை கேட்காமலேயே தான் எதிர்பார்த்த பதில் அவள் வாயில் இருந்து வந்துவிட்டதை எண்ணி அவன் அப்படியே ஆச்சரியத்துடன் விழிகளை விரித்தான்..
“நிஜமாத்தான் சொல்றீங்களா ஷாலினி? என்னோட கலர்.. என்னோட பேக்ரவுண்ட்.. இது பத்தி எல்லாம் உங்களுக்கு எந்த கவலையும் இல்லையா?”
“எனக்கு உங்க பாஸ்ட் பேக்ரவுண்ட் பத்தி எந்த கவலையும் இல்லை.. உங்க ஃப்யூச்சர் ரொம்ப நல்லா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. நான் இப்ப பார்க்கிற சுந்தரை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்..” அவள் தெளிவாக பேசினாள்..
அவள் கையை பிடித்தவன் “தேங்க்யூ ஷாலினி.. நீங்க எவ்ளோ சந்தோஷத்தை எனக்கு கொடுத்திருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது.. என்னை கிண்டல் பண்ண ஒவ்வொரு ஃபிரண்ட் கிட்டயும் நான் என் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன்.. பாருங்கடா.. இந்த மாதிரி அழகா ஃபேரா இருக்கற நல்ல குணங்கள் இருக்கற ஒரு மாடர்ன் பொண்ணை.. கல்யாணம் பண்ணி.. நான் எப்படி வாழறேன் பாருங்கன்னு சொல்லணும்னு ஒரு வெறின்னு கூட சொல்லலாம்.. அது ஒரு அடிபட்ட மனசோட ஆதங்கம்.. நீங்க அதை நிறைவேத்தறதுக்கு காரணமா இருக்க போறீங்க.. இதைவிட நீங்க எனக்கு ஒரு நல்ல மனைவியா இருப்பீங்கன்றதுக்கு வேற என்ன ப்ரூஃப் வேணும்?”
“அதான் கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு தெரிஞ்சுடுச்சு இல்ல.. இனிமே இந்த வாங்க போங்க வேண்டாமே.. வா போன்னே சொல்லலாமே..”
முதலில் அவனிடம் தன் மேல் அவனுக்கு உரிமை உள்ளதாக காட்டிக் கொண்டால் தான் அவன் மேலும் தன்னிடம் நெருங்கி வர.. தான் நினைத்தபடி எல்லாம் அவனை ஆட்டுவிக்க முடியும் என்று திட்டம் போட்டிருந்தாள் அவள்..
“தேங்க்ஸ் ஷாலினி..” என்றான் அவன்.. “சரி.. அப்போ கிளம்பலாமா?” என்று கேட்டாள் அவள்..
“இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்.. என் லைஃப்ல நீ வந்துட்ட இல்ல..” என்று சொன்னான் சுந்தர் அவன் வாழ்க்கையில் இனிமேல் அவளால் தான் நிம்மதியே இல்லாமல் போகப் போகிறது என்று தெரியாமல்..
அதன் பிறகு ஷாலினியை அவள் வீட்டில் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு வரும் வழியில் மழை பிடித்துக் கொண்டது..
அவனுக்கு இருந்த ஆனந்தத்தில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அதை விட்டு இறங்கி அந்த மழையில் நனைந்து கை இரண்டையும் விரித்துக் கொண்டு வானத்தை பார்த்து அந்த தூறல்களை அனுபவித்தவன் அப்படியே நடு சாலையில் கண்ணை மூடி சுற்றிக் கொண்டே இருந்தான்..
ஒரு 15 நிமிடங்கள் அப்படியே மழையில் நனைந்தவன் பிறகு துள்ளி குதித்துக் கொண்டு வந்து தன் காரிலேறி காரை வீட்டை நோக்கி செலுத்தினான்..
வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்க ஓடிவந்து கதவை திறந்த சுந்தரி.. சுந்தர் சொட்ட சொட்ட மழையில் நனைந்து கொண்டு வந்து நிற்பதை பார்த்தவள் “ஏன் சார்.. என்ன ஆச்சு..? நீங்க கார்ல வரலையா?” என்று கேட்க அவனோ பதில் சொல்லாமல் “ஹச்..” என்று தும்மினான்..
“என்ன சார்..? கோல்டு புடிச்சி இருக்கும் போல இருக்கே.. சரி உள்ள வாங்க.. முதல்ல தலையை துவட்டுங்க”
ஓடி சென்று அவன் அறையில் இருந்து ஒரு பூத்துவாலையை கொண்டு வந்தவள் அவன் தலையில் வைத்து பரபரவென உரிமையாய் துடைத்தாள்..
அவனும் சிறு குழந்தையை போல் தலையை அவளிடம் கொடுத்துவிட்டு “அது ஒன்னும் இல்ல சுந்தரி.. எனக்கு திடீர்னு மழை பெஞ்ச உடனே அதுல நனைய தோணுச்சு.. சின்ன குழந்தையாட்டமா ஒரு ஆசை..” என்று அவன் சொல்ல “அதுக்காக இப்படியா சார் பண்ணுவீங்க? நீங்க என்ன பச்சபுள்ளயா? உங்களை நம்பி எவ்வளவு வொர்க்கர்ஸ் இருக்காங்க? இப்படி மழையில நனைஞ்சுட்டு ஏதாவது உடம்பு சரியில்லாம படுத்துட்டீங்கன்னா அவங்களை எல்லாம் யாரு பாப்பாங்க.. சரி.. அப்படியே இருங்க.. சூடா ஒரு பூண்டு ரசம் போட்டு கொண்டு வந்து கொடுக்கிறேன்..” என்றவள் உள்ளே சென்று அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு குவளை நிறைய ரசத்தை கொண்டு வந்து கொடுத்தாள்..
“இந்தாங்க.. சூடா இருக்கு.. இதை குடிங்க.. கொஞ்சம் கோல்டுக்கு நல்லா இருக்கும்..”
அதை வாங்கி குடித்தவனுக்கு அந்த மழையில் அந்த சூடான ரசம் அவன் தொண்டைக்கு இதமாக இருந்தது..
“சுந்தரி.. ஆசம் சுந்தரி.. நிஜமா சொல்றேன்.. இந்த டைம்க்கு இந்த ரசத்தை வச்சு கொடுத்த உங்க கைக்கு மோதிரம் தான் போடணும்..” என்று சொன்னவன் அதை முழுவதுமாய் ரசித்து ரசித்து குடித்தான்..
“அப்புறம் இன்னிக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தது.. அது உங்க கிட்ட தான் ஷேர் பண்ணனும்னு எனக்கு தோணுது..” என்று அவன் சொல்ல “என்ன விஷயம் சார் சொல்லுங்க.. அதுவும் சந்தோஷமான விஷயம்னு சொல்றீங்க.. சீக்கிரம் சொல்லுங்க..” என்றாள்..
“எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப கிடையாது.. உங்களை தான் என்னோட உண்மையான ஒரு ஃப்ரெண்டா நினைச்சிட்டு இருக்கேன்.. சோ.. உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன்.. நான் டிவில கொடுத்த பேட்டியை நீங்க பாத்தீங்கள்ல..? நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஒரு சவால் போட்டு இருந்தேன்னு சொல்லி இருந்தேன் இல்ல..?” என்று அவன் கேட்கவும் அவள் புருவத்தை சுருக்கி அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்..
“அந்த சவால்ல நான் ஜெயிக்கிறதுக்கு நேரம் வந்துடுச்சு சுந்தரி.. நான் ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..” என்று அவன் சொன்னதை கேட்டு சுந்தரிக்கு கண்கள் ஏனோ குளமாகின..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை
தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️சுபா❤️”
