சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 28 ❤️❤️💞

5
(11)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 28

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“நான் வேணா சுந்தர் கிட்ட ஒரு தடவை நீ அவனை விரும்புறேன்னு சொல்லி உன்னை கட்டிக்க சொல்லி கேட்கவா? ஒருவேளை நான் சொன்னா அவன் அதை பத்தி யோசிச்சு பார்ப்பான்… உனக்காக இல்லனாலும் அவனுக்காக நீ அவனை விரும்பறங்கறதை நான் அவன்கிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி  சொல்லத்தான் போறேன் சுந்தரி..” என்று பாட்டி சொல்ல அதைக் கேட்ட சுந்தரி ஒரு நொடி பதறிப் போனாள்..

“ஐயோ வேணாம் பாட்டி.. ப்ளீஸ்.. அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க.. அப்படி செஞ்சீங்கன்னா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகமாயிடும்.. அவர் மனசுல இப்போ ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒரு எண்ணம் வந்திருக்கு.. ஒரு வேளை நீங்க சொல்றதுக்காக அவர் என்னை கட்டிக்கிட்டார்னா காலம் முழுக்க அவரு கனவு கண்டபடி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியலயேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பார்.. அப்படியே அவர் என் மேல கோவப்படாம என்னை சந்தோஷமா வச்சுக்கிட்டு இருந்தாலும் உள்ளுக்குள்ள அவர் வருத்தப்படுறதை பார்க்கும் போது நான் அவர் கூட நிம்மதியா சந்தோஷமா வாழ முடியுமா பாட்டி? வேண்டாம் பாட்டி.. அதுக்கு அவர் அந்த ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் தள்ளி நின்னு அவரு சந்தோஷமா இருக்கிறதை பார்த்துக்கிட்டு நிம்மதியா இப்படியே இருந்துருவேன்.. ப்ளீஸ் பாட்டி.. எனக்காக நீங்க அவர்கிட்ட ஒன்னும் கேட்கக் கூடாது..” சுந்தரி கெஞ்சினாள் பாட்டியிடம்..

“சுந்தரி.. ரொம்ப உயிருக்குயிரா நெனச்சது கிடைக்கலைன்னா மனசு ரொம்ப வருத்தப்பட்டு உடைஞ்சு போயிடும் டி.. உன்னால அந்த வலியை தாங்கமுடியாது.. சொல்றதை கேளு.. நான் ஒருவாட்டி அவன்கிட்ட கேட்டு பார்க்கிறேன்.. அவன் வேண்டாம்ன்னு சொல்லிட்டான்னா அதுக்கப்புறம் அவன் இஷ்டப்படியே அந்த ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கட்டும்.. நான் அவனை வற்புறுத்த மாட்டேன்..”

“இல்ல பாட்டி.. வேண்டாம்.. அவருக்கா தோணி என்னை கல்யாணம் பண்ணிக்கிறது வேற.. நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக அவர் முடிவை மாத்திக்கிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாளை பின்ன கல்யாணத்துக்கப்புறம் ஏதோ ஒரு நேரத்துல கூட நம்ம தப்பான முடிவு எடுத்துட்டோம்னு ஃபீல் பண்ணாருன்னா அந்த வலியை என்னால தாங்கவே முடியாது பாட்டி.. வேணாம் பாட்டி.. எனக்கு நீங்க நிஜமாகவே நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா சுந்தர் கிட்ட இது பத்தி பேசாதீங்க..” மீண்டும் இறைஞ்சினாள் சுந்தரி..

“சரி போ.. உன் தலையெழுத்துப்படி நடக்கட்டும்.. நான் என்ன செய்யறது? அந்த ஆண்டவன் கிட்ட இந்த சுந்தருக்கு நல்ல புத்தியை கொடுன்னு வேண்டிக்கிறேன்.. அவ்வளவு தான் என்னால பண்ண முடியும்..” 

“ஏன் பாட்டி.? அவர் புத்திக்கு என்ன வந்துச்சு..? அவர் நல்லாத்தான் இருக்காரு பாட்டி.. அவர் வாழ்க்கையில அவங்க ஃப்ரெண்ட்ஸால பட்ட அடிதான் அவரை இப்படி ஒரு முடிவு எடுக்க வச்சிருக்கு.. அவரை பொறுத்த வரைக்கும் அது சரிதானே பாட்டி..? அவர் ஷாலினியோட நல்லபடியா வாழட்டும் பாட்டி .. நீங்க அவங்க ரெண்டு பேரையும் மனசார ஆசீர்வாதம் பண்ணுங்க.. சுந்தர் சார் எப்போவும் வாழ்க்கைல சந்தோஷமா நிம்மதியா இருக்கணும்..” 

பாட்டியோ அவள் நல்லெண்ணத்தை நினைத்து வியந்து போனாள்.. தான் விரும்பியது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எண்ணும் இந்த உலகத்தில் இப்படியும் கூட ஒரு பெண் இருக்கிறாளே என்று மனதிற்குள் அவள் வாழ்க்கையை நினைத்து மருகிப் போனார்..

சுந்தரி தான் சுந்தரை விரும்புவதை அவன் ஷாலினியை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்ன அந்த நொடியில் இருந்து உணர்ந்தவள் இப்போது மனம் உடைந்து கண்களில் அருவி பொங்கிக் கொண்டிருக்க தூக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்திருந்தாள்.. இரவு முழுவதும் கண்ணீரோடு கழித்தவளின் துணைக்கு அன்று இரவு முழுவதும் வானமும் அழுது கொண்டே இருந்தது..

பெருமழை பொழிந்து மறுநாள் காலையில் ஊரெல்லாம் வெள்ளக்காடாக இருந்தது.. ஆனால் மழையோ நின்ற பாடாய் இல்லை.. 

காலையில் எழுந்த சுந்தர் கீழிறங்கி வந்து சுந்தரியிடம் “சுந்தரி நான் ஆஃபீஸ்க்கு போய் ஆகணும்.. ஆனா கார் எடுக்க முடியுமான்னு தெரியலை.. ஊரெல்லாம் ஒரே வெள்ளமா இருக்கு.. நான் அப்படியே மெயின் ரோடுக்கு இந்த தண்ணில நடந்து போயிட்டு அங்கே ஏதாவது டாக்ஸியை பிடிச்சு ஆஃபீஸ்க்கு போறேன்.. நம்ம ஆஃபீஸ் மேடான  இடத்துல இருக்கறதுனால அங்க தண்ணி வந்து இருக்காது.. நம்ம ஒர்க்கர்ஸ் சில பேர் வீட்ல தண்ணி வந்துருக்கும்.. அவங்க சில சமயம் இந்த மாதிரி நேரத்துல ஆஃபீஸ்ல வந்து தங்கி இருப்பாங்க.. அவங்களுக்கு கொஞ்சம் ஏதாவது சாப்பிடறதுக்கு அரேஞ்ச் பண்ண வேண்டி இருக்கும்” 

” ஒரு நிமிஷம் இருங்க சார்..” என்றவள் சமையல் அறைக்கு சென்று காலையில் அவர்கள் உண்பதற்காக செய்த இட்லியையும் சாம்பாரையும் இரண்டு பாத்திரங்களில் போட்டு ஒரு பையில் வைத்து அவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள்..

“சார் இன்னைக்கு காலைல நம்மளுக்காக செஞ்ச இட்லி சார்.. இதை எடுத்துட்டு போய் அங்கே இருக்கிறவங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் குடுங்க.. ஒரு மணி நேரம் கழிச்சு நான் இன்னும் கொஞ்சம் ஏதாவது செஞ்சு கொடுத்தனுப்புறேன் சார்.. யாரையாவது அதை வாங்கிட்டு போக அனுப்பி வெக்க முடியுமா?” 

“ரொம்ப தேங்க்ஸ் சுந்தரி..  நீங்க இப்போ இதுல எவ்ளோ இட்லி வச்சிருக்கீங்க? என கேட்க “ஒரு 15 இட்லி இருக்கு சார்..” என்று அவள் சொல்ல “சரி அப்படின்னா இன்னும் 25 இட்லி செஞ்சு வச்சு பேக் பண்ணிடுங்க.. நான் அதை எடுத்துட்டு போய் அங்க கொடுக்கிறேன்.. எப்படியும் ஒரு இருபது பேராவது ஆபீஸ்ல வந்திருப்பாங்க இத்தனை நேரம்… ஆளுக்கு ரெண்டு இட்லியாவது கொடுக்க வேண்டாமா?” 

“ஆமா சார்.. அவங்க தனியாவா வந்து இருப்பாங்க..  அவங்க வீட்டுல தண்ணி வந்திருச்சுன்னா ஃபேமிலியோட தானே வந்திருப்பாங்க.. சார்.. பத்து நிமிஷம் வெயிட் பண்ணா போதும் சார்.. ரெடியாயிடும்..” என்று சொன்னவள் பத்தே நிமிடங்களில் 30 இட்லிகளை செய்து அவனிடம் கொடுத்து அனுப்பினாள்.. அவனும் அதை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றவன் அலுவலகத்தில் ஷாலினி வராமல் இருக்கவே அவளை அழைத்தான்..

“ஹலோ ஷாலினி.. என்ன நீ இன்னிக்கி ஆஃபீஸ்க்கு வரவே இல்ல…?” என்று கேட்க அதுவரை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள் தூக்கம் கலையாமலே “இல்ல சுந்தர்.. அது ஒரே மழையா இருந்துச்சு.. அதான்..” சோம்பல் முறித்த படியே சொன்னாள் ஷாலினி..

“ஒரு டாக்ஸி பிடிச்சு வந்து இருக்கலாமே ஷாலினி..?” 

“இல்ல சுந்தர்.. எனக்கு வேற ஒரே ஃபீவரிஷ்ஷா இருந்தது.. அதான்..” 

“ஃபீவரா..? உடம்பை பாத்துக்கோ ஷாலினி..  ஆமா.. உனக்கு ஏன் அடிக்கடி ஃபீவர் வருது.. அன்னைக்கும் ஃபீவரிஷ்ஷா இருக்குன்னு சொன்ன.. டாக்டர் கிட்ட போய் ஒரு ஃபுல் மெடிக்கல் செக்கப் பண்ணிக்கோ.. வேற ஏதாவது ப்ராப்ளமா இருக்க போகுது.. என்ன ஃபீவர் இது..? அடிக்கடி வருது.. பாத்துக்க..” 

அவள் பொய் சொல்கிறாள் என்று தெரியாமல் அவள் மேல் அக்கறை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான் சுந்தர்..

“ஊரு முழுக்க தண்ணி.. இந்த தண்ணியில நீந்திக்கிட்டு எவ ஆஃபீஸ் போறது.. என்னால எல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆஃபீஸ்க்கு எல்லாம் போக முடியாது..” என்று எண்ணியவள் 8.30 மணி ஆகியும் இன்னும் அவள் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் இருந்தாள்.. மழையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் சுந்தர் அவளை கைபேசியில் அழைக்கும் போது..

“சரி.. ஷாலினி.. இங்க ஒர்க்கர்ஸ் எல்லாம் பாவம்.. அவங்க வீட்ல தண்ணி வந்துருச்சுன்னு இங்க வந்து தங்கி இருக்காங்க.. நான் அவங்களை பாக்கணும்.. நான் ஃபோனை வைக்கிறேன்..” 

கைபேசி இணைப்பை துண்டித்தான்..

“இந்த மழைக்கு மத்தியானம் 12:00 மணி வரைக்கும் எனக்கு படுக்கையை விட்டு எந்திரிக்கணும்னே தோணாது.. இவன் என்னடான்னா இந்த மாதிரி என்னை காலையில எழுந்து வேலை செய்ய சொல்றான்..?! அங்க ஆஃபீஸ்ல வேற அத்தனை பேரையும் குடும்பத்தோட கூட்டிட்டு வந்து உட்கார வெச்சிருக்கான்..  அவங்களுக்கு போய் யார் உட்கார்ந்து சேவை பண்ணறது..? அட போங்கடா..” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள் ஷாலினி..

இங்கே வீட்டில் சுந்தரியின் கைபேசிக்கு ரதியின் அழைப்பு வந்தது..” ஹலோ சொல்லு ரதி..  என்ன ஆச்சு?” என்று சுந்தரி கேட்க “சுந்தரி.. எப்பவும் போல நம்ம வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி வந்துருச்சு சுந்தரி.. இப்போ குழந்தையை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியல எனக்கு.. முன்னாடி நீயும் இருப்ப.. ஓரளவுக்கு சமாளிச்சிடுவேன்.. இப்ப நான் மட்டும் தனியா இருக்கேனா.. என்ன செய்யறதுன்னே தெரியல..”  புலம்பினாள் ரதி..

“அய்யோ.. சரி ரதி.. நீ ஒன்னு பண்ணு.. பேசாம கிளம்பி சுந்தர் சார் வீட்டுக்கு வந்துரு..” என்று சொல்லிவிட்டு கைப்பேசி இணைப்பை துண்டித்தவள்  சுந்தரிடம் இதை பற்றி ஒரு வார்த்தை சொல்லி விட வேண்டும் என அவனுக்கு அழைத்தாள்..

அழைப்பை ஏற்றவன் “சொல்லுங்க சுந்தரி..” என்றான் “சார்.. அது எங்க வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி வந்துடுச்சாம்.. ரதி குழந்தையை வச்சிட்டு தனியா இருக்கா சார்.. நானும் துணைக்கு இல்லாததால ரொம்ப கஷ்டப்படுறா.. நான் அவளை இங்க வர சொல்லிட்டேன்.. ஆனா உங்க அனுமதியில்லாம..” 

சுந்தரி இழுக்க “என்ன சுந்தரி நீங்க? இதெல்லாம் என்கிட்ட கேக்கணுமா? அவங்களை நம்ம வீட்டுக்கு வந்து இருக்க சொல்லுங்க.. ஆக்சுவலா நானே உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு நெனச்சேன்” 

“எதுக்கு சார்..?” என்று சுந்தரி கேட்க “இல்ல.. நீங்க காலையில எல்லாருக்கும்  கொடுத்த இட்லியை எல்லாரும் சாப்பிட்டாங்க.. இப்போ மதியம் லஞ்ச் இவங்களுக்கு கொடுக்கணும்.. இங்க கடை எல்லாம் மூடி இருக்கு.. அதான் உங்களை லன்ச் செஞ்சு எடுத்துட்டு வர சொல்லலாமான்னு யோசிச்சேன்.. ஆனா நீங்க பாட்டியை பாத்துக்கணும் இல்ல..? அதான் எப்படி எடுத்துட்டு வருவீங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. இப்ப நீங்க ரதியும் வராங்கன்னு சொன்னதும் நல்லதா தான் போச்சு.. அவங்க பாட்டியை பாத்துக்கட்டும்.. நீங்க கொஞ்சம் லஞ்ச் செஞ்சு எடுத்துட்டு வந்து குடுக்குறீங்களா?” 

“அதுக்கு என்ன சார்? செஞ்சு எடுத்துட்டு வந்தா போச்சு.. எத்தனை பேர் சார் இருக்காங்க மொத்தம்?” 

“இங்க மொத்தம் ஒரு 40 பேர் இருக்காங்க சுந்தரி.. அவங்க காலையில் நீங்கள் கொடுத்த இட்லியை பங்கு போட்டுட்டு சாப்பிட்டாங்க.. அதான் இப்போ லஞ்சுக்கு கொஞ்சம் அதிகமா பண்ணி கொண்டு வர வேண்டி இருக்கும்.. உங்களுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே..?” 

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார்… நான் செஞ்சு எடுத்துட்டு வரேன்.. ரதி வந்தவுடனே அவ கிட்ட பாட்டியை பார்த்துக்க சொல்லிட்டு நான் கிளம்பி வரேன்..”

“ரொம்ப தேங்க்ஸ் சுந்தரி.. நீங்க இப்படி மழை நேரம் பார்க்காம ஹெல்ப் பண்ணறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எல்லாருக்கும் உங்களை மாதிரி மனசு வராது சுந்தரி..” 

“இதை நீங்க சொல்றீங்களா சார்..? உங்களால தான் நாங்க இன்னைக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்.. இல்லன்னா இன்னைக்கு வீட்ல தண்ணி வந்ததுக்கு நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்ன்னு எங்களுக்கு தான் தெரியும்..” என்றவள் “சரிங்க சார்.. நான் போய் சமையல் செஞ்சு வைக்கிறேன்.. ரதி வந்ததும் நான் கிளம்பி வரேன்..” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்..

சட்டென சமையலறை சென்று அவர்கள் அனைவருக்கும் உணவு சமைக்க தொடங்கினாள் சுந்தரி.. அவள் சமைத்து முடிப்பதற்கும் ரதி வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.. ரதியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு கட்டிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அந்த வீட்டை சுற்றி இருந்த தண்ணீரில் நடந்து சென்று  பிரதான சாலையை அடைந்தவுடன் ஒரு ஆட்டோ  பிடித்து ஏறி சென்றாள்..

கார்மெண்ட்ஸூக்கு சாப்பாட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தவள் எல்லோருக்கும் சுந்தரின் வீட்டு பின் தோட்டத்தில் இருந்து பறித்து வந்த வாழை இலையை போட்டு தானே சாப்பாட்டை பரிமாறினாள்..

மழையில் தண்ணீரில் நடந்து வந்திருந்ததினால் அவள் புடவை எல்லாம் நனைந்து இருந்தது.. சுந்தர் தன் அறைக்கு சென்று தன் கார்மெண்ட்ஸ்ஸில் விற்பதற்காக தைத்து வைத்திருந்த ஒரு புது சுடிதாரை எடுத்து கொண்டு வந்து அவளிடம் கொடுத்து “சுந்தரி இதை கொண்டு போய் என்னோட ரூம்ல கர்ட்டன்ஸ் எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு மாத்திக்கோங்க.. உங்க புடவை ரொம்ப நனைஞ்சு இருக்கு.. உங்களுக்கு உடம்பு சரி இல்லாம போயிட போகுது..” என்றான்..

அவளும் புன்னகைத்தபடி அதை வாங்கிக்கொண்டு சுந்தரின் அறையை நோக்கி நடந்தாள்.. அப்போது அந்த கார்மெண்ட்ஸில் வேலை செய்து கொண்டிருந்த பிரசாத் என்பவன் அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு சுந்தரி அந்த அறைக்கு உடைமாற்றப் போவதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

எல்லோருக்கும் வேறு ஏதும் பரிமாற வேண்டி இருக்குமோ என்று மற்றவர்களை கவனிக்க சுந்தர் சென்று விட பிரசாத் சுந்தரியின் பின்னேயே சுந்தரின் அறை வாசலுக்கு சென்றான்..

உள்ளே சென்று சுந்தரி அங்கிருந்து திரைச்சீலைகளை எல்லாம் மறைத்துவிட்டு உடைமாற்றிக்கொள்ள போக அவனோ அங்கிருந்த கதவிடுக்கின் வழியே அவள் உடை மாற்றுவதை பார்க்கும் எண்ணத்தோடு ஒரு கண்ணை மூடி மறு கண்ணை அந்த கதவிடுக்கில் வைத்தான்..

அப்போது வேகமாக அவன் தலையை யாரோ பிடித்து அந்தக் கதவிலேயே மோதினார்கள்..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! முதல்ல என்னை மன்னிக்கணும்.. நேற்று யூடி போட முடியவில்லை.. என் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை..  ஆனா அதுக்காக இன்னிக்கு கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

நேத்து யூடி போடாம இருந்ததற்காக இன்னைக்கு உங்களுக்கு நைட்டுக்குள்ள இன்னொரு யூ டி கொடுக்க முயற்சி பண்றேன்… அதையும் படிச்சு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.. நன்றி ஃப்ரெண்

ட்ஸ்..

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!