சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 38 ❤️❤️💞

4.9
(15)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 38

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“இல்ல டார்லிங்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா.. என் லைஃப்ல உன்னை தவிர எந்த பொண்ணும் கிடையாது..”

மாதேஷ் தன் கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அவன் பேசியதை கேட்ட ஷாலினியோ அப்படியே உறைந்து போய் நின்றாள்..

“நேத்து நைட்டு ஃபுல்லா ஆஃபீஸ் வொர்க் இருந்ததும்மா.. அதனாலதான் வர முடியல.. நான் இவ்வளவு தூரம் சொன்னப்புறமும் நீ கோச்சிக்கிட்டே இருந்தா நான் என்ன பண்றது சொல்லு.. இப்ப கூட சிஸ்டம்ல மெயில் அனுப்பிச்சுக்கிட்டே தான் உன்னோட பேசுறேன்.. சொன்னா கேளு டார்லிங்.. என் பிசினஸ்க்கு அப்புறம் நீ தான் என் உயிரே.. நான் எவ்வளவு தடவை உன் கிட்ட சொல்றது.. நீ தான் எப்ப பாரு என்னை ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருக்கே..”

தொடர்ந்து அவன் பேச பேச அவன் பேசிய வார்த்தைகள் அவள் இருதயத்தை கிழித்து இரண்டாய் பிளந்து போட்டது..

பேசிக்கொண்டே திரும்பியவன் எதிரில் ஷாலினி தன்னை முறைத்துக் கொண்டு நிற்பதை பார்த்து “சரி.. நான் அப்புறம் உன்னோட பேசுறேன்” என்று கைப்பேசியில் சொல்லி இணைப்பை துண்டித்தான்..

எதுவுமே நடக்காதது போல மிகவும் சாதாரணமாக அவள் அருகில் வந்தவன் “ஹாய் ஷாலு பேபி.. குட் மார்னிங்.. என்ன நல்ல தூக்கமோ..?” என்று கேட்க அவளுக்கோ பற்றி கொண்டு வந்தது..

தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டி நின்றவள், “அப்போ சார் ஒரு வாரமா பாத்த ஆஃபீஸ் வேலை இதுதானா? என்னை ஏமாத்தறியா மாதேஷ்..?”

அவனை தீவிரமாய் முறைத்தபடி கேட்டவள் அவன் சட்டை காலரை பிடித்து “யார் அந்த பொண்ணு..? உனக்கு எப்படி என்னை ஏமாத்த மனசு வந்தது? உன்னை எவ்வளவு உயிரா நேசிச்சேன்‌… நீ சொன்னன்கிற ஒரே காரணத்துக்காக அந்த சுந்தரை ஏமாத்த அவனோட ஆஃபீஸ்ல போய் சேர்ந்தேன்.. நீ என்னடான்னா அது எதை பத்தியுமே யோசிக்காம இன்னொரு பொண்ணோட சுத்திகிட்டு இருக்கியா? எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது?”

அவள் கையை தன் சட்டையில் இருந்து மெதுவாக விலக்கி விட்டவன் “கூல் ஷாலு டியர்..  இப்ப நான் யாரோட பேசிட்டேன்னு நெனைச்சு நீ இவ்ளோ கோபப்படுற?” அவள் கன்னத்தை பிடித்து அவன் கேட்டான்..

அவன் கையை தட்டிவிட்டவள் “இன்னும் என்ன எனக்கு சந்தேகம்..? அதான் இந்த காதால நானே கேட்டேனே…  யாரையோ டார்லிங் டார்லிங்னு கொஞ்சிக்கிட்டு இருந்தியே.. நீ இப்படி ஒருத்தனா இருப்பேன்னு சத்தியமா நான் நினைக்கவே இல்லை.. என்னை நம்ப வச்சு கழுத்தறுத்திட்டியே.. எங்கப்பா அப்பவே சொன்னாரு.. உன்னோட பழக்கம் வேண்டாம்னு.. நான்தான் கேக்கல..”

சரவெடியாய் பொரிந்து கொண்டிருந்தவளை “இப்ப என்ன..? நான் யாரோ ஒரு பொண்ணோட பேசிட்டு இருந்தேன்.. அவளை நான் லவ் பண்றேன்னு நினைச்சிட்டு இருக்கியா..?”

அவன் கேட்க “இப்ப நீ பேசுனதை கேட்ட யாரா இருந்தாலும் அப்படித்தான் நினைப்பாங்க.. இல்லன்னு வேற சொல்லுவியா நீ..?” என்று கேட்டாள் ஷாலினி..

“நிச்சயமா இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. ஏன் தெரியுமா? ஏன்னா அது என்னோட கேர்ள் ஃபிரண்ட் தான்.. நான் பொறந்ததிலிருந்து என் கூட இருக்குற என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்.. அது என்னோட அம்மா.. அவங்களோட தான் ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்தேன்..” என்று அவன் சொல்ல “பொய் சொல்லி சமாளிக்காத.. நான் பாத்துட்டேன்னு தெரிஞ்ச உடனே..”

ஷாலினி முடிக்கும் முன் “இல்ல ஷாலு பேபி.. சொன்னா புரிஞ்சுக்கோ.. சரி.. உனக்கு அவ்வளவு சந்தேகமா இருக்கு இல்ல..? இந்தா என் ஃபோன்.. எடுத்து லாஸ்ட்டா எனக்கு யாரு கிட்ட இருந்து கால் வந்து இருக்குன்னு நீயே பாரு…” என்று கொடுக்க அந்த கைபேசியில் கடைசியாய் அவனுக்கு அழைத்திருந்த எண்ணை பார்த்தாள்.. அதில் மை டார்லிங் அம்மா என்று இருந்தது..

பொதுவாகவே நமக்கு பிரியமான ஒருவர் மேல் சந்தேகம் வரும்போது நியாய தர்மங்களை அவர்களுக்கு சாதகமாக யோசித்து அவர் தனகாகுரியவராய் மட்டுமே இருக்கிறார் என்று முழுமையாக நம்புவது தானே மனித இயல்பு.. இங்கே ஷாலினியும் அதற்கு விதி விலக்கல்ல.. முழுமையாய் நம்பி இருந்தாள் அவன் சொன்னதை..

அசடு வழிந்தபடி அவனிடம் கைபேசியை திரும்ப கொடுத்தவள் தலையை சொரிந்து கொண்டு “ஓ.. அப்படின்னா.. உங்க அம்மாவோட தான் நீ பேசிகிட்டு இருந்தியா..?” என்று கேட்டாள்..

“ஆமா.. எங்க அம்மாவோட தான் பேசிகிட்டு இருந்தேன்.. ஒரு வாரமா என் வீட்ல இருந்து தான் நான் வேலை செஞ்சிட்டு இருந்தேன்.. நேத்து நைட் டைம்ல நான் வெளியே தங்கி இருக்கேங்கறதுனால எங்கம்மா காலைல எனக்கு ஃபோன் பண்ணி எங்க போயிட்டன்னு கேட்டாங்க.. அம்மாக்கு நம்ம லவ் பண்ற விஷயம் தெரியாது.. அதான் இப்போதைக்கு நம்ம லவ் பண்ற விஷயத்தை சொல்ல வேண்டாம்னு நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன்.. அம்மா இந்த லவ்வு கிவ்வு இதெல்லாம் நான் ஒரு நிலைமைக்கு வந்த பிறகு தான் வரணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காங்க.. இப்போ நாம ரெண்டு பேரும் இப்படி இருக்கிறது தெரிஞ்சா அதோட என்னை தாளிச்சு எடுத்துடுவாங்க..” என்றான் மாதேஷ்..

அவன் கழுத்தை சுற்றி கைகளை போட்டு அணைத்துக் கொண்டு அவன் இதழில் இதழ் பதித்த ஷாலினி “சாரி மாதேஷ்.. உன்னை பத்தி தெரிஞ்சிருந்தும் நான் உன்னை சந்தேகப்பட்டது தப்புதான்.. இனிமே இப்படி பண்ணவே மாட்டேன்..”

“இந்த மாதிரி நீ கிஸ் கொடுப்பேன்னா அடிக்கடி நீ சந்தேகப்படுற மாதிரி நான் ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்கேன்” கண்ணடித்து சொன்னான் மாதேஷ்..

“போடா டர்ட்டி பாய்..” வெட்கப்பட்டு அவன் மார்பில் குத்தினாள்..

“யாரு நானா? அங்கே இருந்து வந்து முத்தம் கொடுத்து உசுப்பேத்தி விட்டுட்டு நான் டர்ட்டி பாயா.. காட்டறேன்  டர்ட்டி பாய் என்னவெல்லாம் பண்ணுவான்னு” என்று சொன்னவன் அவளை அணைக்க போக அவளோ அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு ஓடிப்போய் இருந்தாள்..

ஒரு பெருமூச்சை விட்டவன் “ஊஃப்.. க்ரேட் எஸ்கேப்” என்று முணுமுணுத்தபடி ஒரு சிரிப்போடு அவள் பின்னாலேயே சென்றான் மாதேஷ்..

################

சுந்தருக்கும் ஷாலினிக்கும் இரண்டு மாதங்களுக்கு பிறகு நிச்சயதார்த்தம் என முடிவு செய்யப்பட்டது..

மாதேஷ் ஷாலினியிடம் “நிச்சயதார்த்தம் நடக்கும் படி நடக்கட்டும்.. கல்யாணத்திற்குள் ஏதாவது செய்து எல்லாவற்றையும் அவர்கள் நினைத்தது போலவே அடைந்து விட்ட பிறகு பெரியவர்கள் சம்மதம் வாங்கி தாங்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம்..” என்று சொல்லி இருந்தான்..

சுந்தரோ எந்திரம் போல் தினமும் அலுவலகம் போய்விட்டு வந்தானே தவிர சுந்தரி சென்றதிலிருந்து அவன் வாழ்க்கையில் இருந்த உற்சாகமே வடிந்துவிட்டது போலிருந்தான்.. தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று அவனுக்கே விளங்கவில்லை..

ஏனோ சுந்தரி காலையில் படுக்கை விட்டு எழுந்திருக்கும் போதே மணக்க மணக்க சுட சுட தரும் காப்பிக்கும்.. எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து கொண்டு வேலை செய்யும்போது ஒலிக்கும் அவள் கொலுசொலிக்கும்.. தான் அலுவலகம் கிளம்பும் போது தனக்கு மதிய உணவு செய்து கொடுத்து அனுப்பும்போது அவள் முகத்தில் எப்போதும் உறைந்து இருக்கும் அந்த அழகான மெல்லிய புன்னகைக்கும்.. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சார் சார் என்று அவள் அவனை அழைத்துப் பேசும் இனிமையான கனிவான பேச்சுக் குரலுக்கும் அவன் மனம் ஏங்கித் தவித்தது..

ஷாலினியுடன் வெளியே செல்லும்போது கூட பேருக்காக அவளுடன் சென்று வந்தானே தவிர அப்போதும் அவன் மனம் அமைதி இல்லாமலேயே இருந்தது..

ஒரு நாள் வீட்டுக்கு வந்து சுந்தரை அழைத்த மேகலா “அப்பா சுந்தர்.. இது ஏதோ லெட்டர் ஒன்னு வந்திருந்தது பா.. நேத்து தான் வந்துச்சு.. உன்கிட்ட கொடுக்க மறந்துட்டேன்..” என்று சொல்லி சுந்தரிடம் அந்த காகித உரையை தர அதை வாங்கி பிரித்து படித்தான்..

அவன் சுந்தரிக்கு தொலை தூர கல்வி மூலம் படிப்பதற்காக பாட்டி இறப்பதற்கு முன் ஒரு பல்கலை கழகத்தில் விண்ணப்பித்திருந்தான்.. சுந்தரி  விரும்பிய பிரிவில் அவளுக்கு இடம் கிடைத்து விட்டது என உறுதி செய்யும் கடிதம் தான் வந்து இருந்தது..

“இதை கொண்டு போய் சுந்தரி கிட்ட கொடுக்கணுமே.. ஆனா அவங்க இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியலையே.. சரி.. அவங்க ஃபோனுக்கு பேசி பார்ப்போம்..” என்று எண்ணிக்கொண்டவன் அவள் கைப்பேசிக்கு அழைத்தான்..

இரண்டு முறை மணி அடித்தவுடன் சுந்தரி அந்த அழைப்பை ஏற்க “ஹலோ சுந்தரி..” என்று அவன் பேச ஆரம்பித்த உடனேவே அவன் குரலை கேட்ட ஆனந்தத்தில் சுந்தரிக்கு பேச்சே வரவில்லை..

சிறிது நேரம் அவள் மௌனமாய் இருக்கவும் “ஹலோ சுந்தரி.. நான் சுந்தர் பேசுறேன்.. நீங்க லைன்ல தானே இருக்கீங்க?” என்று கேட்க அவள் மெதுவாக “ஹலோ சுந்தர் சார்..” என பேசிய அந்த நொடி அவனுக்கு யாரோ தன்னை விட்டுப் போயிருந்த உயிரைக் கொண்டு வந்து மீண்டும் உடலுக்குள் புகுத்தியது போல் ஒரு உற்சாகம் பிறந்தது..

“ஹலோ சுந்தரி.. எப்படி இருக்கீங்க..? இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?”

“நல்லா இருக்கேன் சார்.. இப்போ ஒரு துணி கடையில சேல்ஸ் கர்ளா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்.. நீங்க எப்படி சார் இருக்கீங்க? அத்தை, மாமா எல்லாம் நல்லா இருக்காங்களா? ஷாலினி மேடம் எப்படி இருக்காங்க?”

அனைவரையும் அவள் விசாரிக்கவும்.. “எல்லாரும் நல்லா இருக்காங்க சுந்தரி..” என்ற சுந்தர் மனதிற்குள் “நீங்க போனதிலிருந்து நான் தான் நல்லாவே இல்ல சுந்தரி..” என்று சொல்லிக் கொண்டான்..

“சந்தோஷம் சார்.. ஆமா இப்ப எதுக்கு சார் கால் பண்ணினீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?”

சுந்தரி கேட்க அவள் அன்று ரதி வந்தபோது நடந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை என்று புரிந்து கொண்டான் சுந்தர்..

“அது ஒன்னும் இல்ல சுந்தரி.. நாம உங்களோட ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ்காக அப்ளை பண்ணி இருந்தோம் இல்லையா..? அந்த யுனிவர்சிட்டில இருந்து உங்களுக்கு அட்மிஷன் கன்ஃபார்ம் பண்ணி லெட்டர் வந்திருக்கு.. அதான் அதை உங்ககிட்ட கொண்டு வந்து கொடுக்கணும்.. அதுக்கு நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியணும்.. நீங்க இன்னும் அந்த வீட்டிலேயே தான் இருக்கீங்களா?”

அவன் கேட்க “அந்த வீட்டிலேயே தான் இருக்கோம் சார்.. ஆனா நான் இப்படி சொல்றேனேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க சார்.. நீங்க வீட்டுக்கு வந்துறாதீங்க சார்.. அங்கே ஏற்கனவே ரொம்ப பிரச்சினையா இருக்கு.. நம்ப விஷயமா ராசாத்தி அக்கா அங்க ஒரே பிரச்சினை பண்ணி விட்டுட்டாங்க.. இப்பதான் கொஞ்சம் எல்லாரும் சகஜமா இருக்க ஆரம்பிச்சிருக்காங்க.. இப்ப மறுபடியும் நீங்க அங்க வந்தீங்கன்னா திரும்பவும் பெரிய பிரச்சனை ஆயிடும்..” என்றாள் சுந்தரி..

“அப்படின்னா நீங்க வேலை செய்ற இடத்துக்கு வந்து நான் இந்த லெட்டரை கொடுக்கட்டுமா?” என்று கேட்டான் சுந்தர் எப்படியாவது அவளை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில்..

“வேணாம் சார்.. இப்ப நான் படிச்சு என்ன பண்ண போறேன்.. இப்படியே இந்த வேலையிலேயே இருந்து காலத்தை ஓட்டிக்கிறேன் சார்.. அப்படியே அந்த யூன்வெர்ஸிட்டில எனக்கு அட்மிஷன் கிடைச்சாலும் அதுக்கு ஃபீஸ் கட்டறதுக்கு இப்ப எங்க கிட்ட பணம் கிடையாது சார் அதனால.. அந்த அட்மிஷன் வேண்டாம் சார்.. விட்டுடுங்க..” என்று வேறு வழி இல்லாமல் சொன்னாள் சுந்தரி..

“ஏன் சுந்தரி.. நான் உங்களுக்கு ஃபீஸ் கட்றேன்.. நீங்க நல்லா படிங்க.. நான் ஃபீஸ் கட்டினால் நீங்க படிக்க மாட்டீங்களா..?”

தனக்கு அப்படி செய்ய உரிமை இல்லையா என்று கேட்பது போல் ஏக்கத்துடன் கேட்டான் சுந்தர்..

“சார்.. ஏற்கனவே நான் உங்க வீட்ல இருந்து வேலை செஞ்சதுக்காக நம்ம இரண்டு பேரையும் இணைச்சு தப்பு தப்பா பேசுறாங்க சார்.. இதுல என் படிப்புக்கு நீங்க செலவு பண்றது யாருக்காவது தெரிஞ்சுதுன்னா எங்களை இந்த ஊரிலேயே இருக்க விட மாட்டாங்க.. சார் எனக்கு படிப்பு பணத்தைவிட மானத்தோட வாழறது ரொம்ப முக்கியம் சார்.. அதனால இந்த விஷயத்தை இதோட விட்டுடுங்க.. நான் இப்படியே இருந்துடறேன் சார்.. ஏதாவது ஒரு ஸ்டேஜ்ல எனக்கு கொஞ்சம் பணம் சேர்ந்ததுன்னா அப்ப நான் படிச்சுக்குறேன் சார்..” என்று சொன்னவள் “சரிங்க சார் நான் இப்ப கடையில இருக்கேன்.. கஸ்டமர் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. நான் ஃபோனை வைக்கட்டுமா?” என்று கேட்டாள்..

“சரி சுந்தரி..” என்று சொன்ன சுந்தரின் கண்கள் கலங்கி இருந்தன..

“சரி சார்.. நான் வச்சிடறேன்..” என்று சொல்லி இணைப்பை துண்டித்தவளின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வெளியேறி இருந்தன.. அதை துடைத்துக் கொண்டவள் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களை கவனிக்க சென்று விட்டாள்..

அந்த கடையில் வேலைக்கு சேர்ந்த நாள் முதலாய் சுந்தரியின் வேலையை பார்த்து பிரமித்து போயிருந்தார் அந்த கடையின் முதலாளி ராகினி தேவி.. எல்லோரிடமும் நட்பாய் பழகும் அவளின் குணமும் வாடிக்கையாளரை கவரும் அவளின் பேச்சும் ஓயாமல் வேலை செய்யும் அவளுடைய சுறுசுறுப்பும் அவரை மிகவும் கவர்ந்தது..

சுந்தரியுடன் வேலை செய்த அத்தனை பேரும் அவளுடைய அன்பான பேச்சைக் கேட்டு நட்பு பாராட்ட துவங்கி இருந்தனர்.. அவள் வேலை செய்த பகுதியிலேயே வேலை செய்து கொண்டிருந்த வனிதா அவளுடைய நெருங்கிய சிநேகிதியாகிவிட்டாள்.. அவளிடம் தன் வாழ்வில் நடந்த அத்தனையையும் பகிர்ந்து கொண்டிருந்தாள் சுந்தரி..

அவள் யாருடனோ கைபேசியில் பேசியதையும் அதன் பிறகு கண்கலங்கியதையும் கவனித்து விட்டிருந்தவள் அந்த வாடிக்கையாளர் சென்றவுடன் “சுந்தரி.. என்னாச்சு சுந்தரி? யார் ஃபோன் பண்ணாங்க? நீ அழுதுகிட்டு இருந்தியே..” என்று கேட்டாள்..

“அது..” என்று தயங்கியவள் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள்.. உண்மையை சொன்னால் தன்னை பற்றி தவறாக நினைப்பாளோ என்று யோசனையாய் இருந்தது சுந்தரிக்கு..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!