சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 39 ❤️❤️💞

4.6
(18)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 39

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“என்ன சுந்தரி.. நான் கேட்டுட்டே இருக்கேன்.. பதிலே சொல்ல மாட்டேங்குற? யாரோட ஃபோன்ல பேசிட்டு இருந்த..?” என்று மறுபடியும் வனிதா கேட்க அதற்கு மேல் அவளிடம் மறைக்க வேண்டாம் என்று தோன்றியது சுந்தரிக்கு..

“அது.. நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல..? சுந்தர்னு ஒருத்தர‌ பத்தி.. அவர் தாண்டி ஃபோன் பண்ணாரு.. முன்னாடி டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல படிக்கிறதுக்காக ஒரு யூனிவெர்ஸிட்டில அப்ளை பண்ணி இருந்தாரு.. அதுக்கு அட்மிஷன் கார்டு வந்து இருக்கு.. அவரே செலவு பண்ணி என்னை படிக்க வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு.. உனக்கு தான் தெரியும் இல்ல.. எங்க ரெண்டு பேருக்கும் நடந்த பிரச்சனை.. அதான் வேண்டான்னு சொல்லிட்டேன்..” என்றாள் அவள்..

“அடி யாருடி இவ..,? இவ்ளோ பைத்தியக்காரியா இருக்க.. ஊரு ஏதாவது அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு தாண்டி இருக்கும்.. ஊரு வாயை மூட முடியாது.. அதுக்காக நம்ம வாழ்க்கைல முன்னேற ஒரு சான்ஸ் கிடைக்கும்போது அதை இப்படி மிஸ் பண்ண கூடாது சுந்தரி.. அவர் உனக்கு பணம் கட்டுறேன்னு தான சொன்னாரு.. நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்க போறதில்லை. அவர் பணம் கட்டி உன்னை சேர்த்துட்டார்னா நீ உன் பாட்டுக்கு அங்க படிச்சிட்டு இருக்க போற.. இதுல எல்லாரும் எப்படி உன்னை தப்பா நினைப்பாங்கன்னு நினைக்கிறே..” என்று கேட்டாள் வனிதா..

“வேண்டாம்டி.. ஒரு இடத்தில பிரச்சினை இருக்குன்னா ஒதுங்கி போய்டறது தான் பெட்டர்.. நான் அவர்கிட்ட வேண்டான்னு சொல்லிட்டேன்.. அப்படியே இருக்கட்டும்.. சரி.. விடு.. அடுத்த கஸ்டமர் வராங்க பாரு.. போய் வேலையை பார்க்கலாம்..” என்று சொல்லி வேலையை தொடர்ந்தாள்..

இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டே சென்றாள் அந்த கடை முதலாளி ராகினி தேவி..

சிறிது நேரத்தில் அவர் சுந்தரியை அழைக்க சுந்தரி கல்லாவில் போய் பார்த்தவள் அவர் அங்கு இல்லாமல் இருக்கவும் அங்கு இருந்த இன்னொரு பெண்ணிடம் “லலிதா.. மேடம் எங்க?” என்று கேட்க “கடைக்கு பின்னாடி ஒரு ஆஃபீஸ் ரூம் இருக்குல்ல..? சில சமயம் அங்க இருப்பாங்க.. நீ அங்க போய் பாரு..சுந்தரி” என்று சொன்னாள் அந்த பெண்..

அவள் போய் ராகினி தேவியை பார்த்தாள்.. கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்று ” மேடம்.. கூப்பிட்டீங்களா?” என்றாள்..

“ஆமாம்மா.. முதல்ல ஒக்காரு..” என்ற ராகினி தேவி “இங்க நீ வந்து சேர்ந்த இந்த ஒரு வாரத்துல உன் வேலை எல்லாம் நான் பாத்துகிட்டு தான் இருக்கேன்.. ரொம்ப நல்லா ஒர்க் பண்ற.. உன் வேலையில இருக்கிற டெடிகேஷன பார்த்து எனக்கு ஆச்சரியமா இருக்கு.. ஆக்சுவலா உனக்கு சேலரி ஏதாவது ஏத்தி கொடுக்கலாமான்னு தான் யோசிச்சேன்.. ஆனா இப்போ அதைவிட வேற ஒன்னு பண்ணா உனக்கு அது யூஸ்ஃபுல்லா இருக்குமோன்னு தோணுச்சு.. அதான் உன்னை கூப்பிட்டு கேட்கலாம்ன்னு கூப்பிட்டேன்..” என்றார் ராகினி தேவி..

“என்ன விஷயம்?” என்பது போல் சுந்தரி அவரை பார்க்க “அது.. ஆக்சுவலி ஐ அம் சாரி.. நீ அந்த வனிதா கிட்ட பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.. உனக்கு ஏதோ யூனிவர்சிட்டில அட்மிஷன் கிடைச்சிருக்குன்னு நீ சொல்லிட்டு இருந்ததை நான் கேட்டேன்.. ஆனா அதை வேண்டாம்ன்னு நீ சொன்னதும் என் காதில விழுந்துச்சு.. பரவால்ல.. நீ ஏன் அங்க அட்மிஷன் வேணாம்னு சொன்னேங்கறது உன்னோட பர்சனல் விஷயம்..  அதை பத்தி நான் உன்கிட்ட ஒண்ணுமே கேட்க போறது இல்ல.. ஆனா இங்க பக்கத்துல இருக்குற காலேஜ்ல உன்னை நான்  நீ ஆசைப்படுற அந்த கோர்ஸ்ல  சேர்த்து விடுறேன் .. நீ அங்க போய் படிச்சிட்டு மதியத்துக்கு மேல வந்து கடையில வேலை செய்.. ஆனா நைட் 9 மணி வரைக்கும் இங்க வேலை செய்ய வேண்டி இருக்கும்.. உனக்கு அது பரவாயில்லையா..?” என்று கேட்டார்..

“அய்யோ.. ப்ராப்ளமே இல்ல மேடம்.. நான் பத்து மணி வரைக்கும் கூட வேலை செய்றேன்.. நான் காலேஜ் போய் படிச்சேன்னா அங்க இருக்குற நேரத்துலயே எல்லா பாடத்தையும் படிச்சுக்குவேன்.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியல.. நீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா..?”

அவள் திரும்பவும் நம்பாமல் கேட்க “நிஜமாத்தான் சொல்றேன்.. அந்த பிரின்ஸ்பலை எனக்கு தெரியும்.. நான் எப்பவுமே வருஷத்துக்கு ரெண்டு மூணு பேருக்கு ஸ்பான்ஸர் பண்ணுவேன்.. இந்த வருஷம் உனக்கு ஸ்பான்சர் பண்றேன்..” என்று அவர் சொல்ல அவரை நன்றியோடு பார்த்தாள் சுந்தரி..

“அப்புறம் இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. திங்கள்கிழமையே அந்த காலேஜுக்கு போய் அட்மிஷன் போட்டுட்டு வந்துடலாம்.. நீ எவ்வளவு சீக்கிரம் காலேஜுக்கு போக ஆரம்பிக்க முடியுமோ போக ஆரம்பிச்சிடு..” என்றார் ராகினி தேவி..

“ஓகே மேடம்.. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுனே எனக்கு தெரியல மேடம்..” என்று முகம் முழுக்க புன்னகையுடன் மறுபடியும் தான் விற்பனை செய்யும் பகுதிக்கு வர அங்கிருந்த வனிதா “என்னடி.. மேடம் திடீர்னு உன்னை கூப்பிட்டாங்க?” என்று கேட்க “மேடம் என்னை காலேஜ்ல சேர்த்து விடுறேன்னு சொல்லி இருக்காங்க டி.. திங்கள் கிழமை  போலாம்னு சொல்லி இருக்காங்க‌.‌ மதியத்திலிருந்து நைட் ஒன்பது மணி வரைக்கும் இங்க வேலை செய்ய சொல்லி இருக்காங்க.. நானும் ஓகே சொல்லிட்டேன்..” என்றாள் சுந்தரி..

“பரவால்ல.. ஒரு கதவு மூடினாலும் உனக்கு இன்னொரு கதவு திறந்திருச்சு.. நீ படிக்கிறதுல எனக்கும் சந்தோஷம்தான்.. இங்க வேலைக்கு சேர்ந்ததிலிருந்து ரெண்டு வருஷமா நான் படிப்பை பத்தி எல்லாம் யோசிக்கறதே இல்லை.. நானும் ப்ளஸ்டூ தான் முடிச்சிருக்கேன்.. இப்படியே வேலை பார்த்துட்டு போயிடலாம்னு பார்க்கிறேன்..”

“ஏண்டி.. அப்படி சொல்ற..? பேசாம மேடம் கிட்ட கேட்டு நீயும் என்னோட வந்து காலேஜ்ல சேர்ந்துக்கோயேன்..  நீ வரேன்னா சொல்லு.. நானே கேட்கிறேன் மேடம் கிட்ட..”

“ஏய்.. ஏதோ உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னா அவங்க கிட்ட போயி எனக்கும் ஸ்பான்சர் பண்றதுக்கு கேட்டேன்னா அவங்க உனக்கு பண்றதையே நிறுத்திட போறாங்க.. வேணாம்டி..”

“இல்லடி.. அவங்க வருஷத்துக்கு ரெண்டு மூணு பேருக்கு ஸ்பான்சர் பண்ணுவாங்களாம்.. எதுக்கும் கேட்டு பார்க்கலாம்..” என்று சொன்னவள் அவளையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பெண்ணை அந்த பகுதியின் விற்பனையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ராகினி தேவியின் அறைக்கு சென்றாள்..

அவரிடம் அனுமதி வாங்கி உள்ளே சென்றவள் வனிதாவுடன் வந்திருப்பதை பார்த்தவர் “என்னம்மா..? ஏதாவது வேணுமா..?” என்று கேட்க அவள் “மேடம்.. நீங்க சொன்னீங்களே.. வருஷத்துக்கு ரெண்டு மூணு பேருக்கு ஸ்பான்சர் பண்ணுவேன்னு.. இந்த வருஷம் என்னோட சேர்த்து வனிதாக்கும் உங்களால ஸ்பான்சர் பண்ண முடியுமா?” என்று கேட்டாள்..

“அவ்வளவுதானே.. இதை கேக்குறதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்..? படிக்கணும்னு இன்ட்ரஸ்ட்டோட இருக்கீங்கன்னா எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல.. ஆனா ரெண்டு பேரும் மார்னிங் போயிட்டீங்கன்னா இங்க சேல்ஸ் பாக்குறதுக்கு யாராவது வேணுமே..” என்று யோசித்தவர் “சரி.. ஒரு பொண்ணு ரொம்ப நாளா இங்க வேலை வேணும்னு கேட்டுட்டு தான் இருக்கா.. அவளை வேணா காலையில வர சொல்லிடுறேன்.. வனிதா நீயும் வாம்மா.. மண்டே உனக்கும்  அந்த காலேஜ்லயே அட்மிஷன் போட்டுடலாம்..” என்று சொன்னார் ராகினி தேவி..

சுந்தரிக்கு முகம் எல்லாம் வெளிச்சம் பரவியது.. தன்னோடு தன் தோழியும் கல்லூரியில் படிக்க வருகிறாள் என்று அவள் சந்தோஷமாய் இருந்தாள்..

வீட்டுக்கு சென்றவுடன் இந்த விஷயத்தை ரதியிடம் பகிர்ந்து கொண்டாள்.. அப்போதுதான் அவளுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.. அவளுடைய சான்றிதழ்கள் எல்லாம் சுந்தர் வீட்டிலிருந்து அங்கிருந்து வரும்போது எடுத்து வர மறந்திருந்தாள்..

இப்போது அவற்றை எப்படி வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சுந்தரி..

வெகு நேர யோசனைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை சுந்தரின் வீட்டுக்கே போய் சான்றிதழ்களை வாங்கி வந்து விடலாம் என்று முடிவு செய்தாள்.. ஆனால் வேறு வழி இல்லாமல் தான் அங்கே போகப் போகிறாள் என்றால் கூட அவளுக்கு ஏனோ மனம் உறுத்தி கொண்டே தான் இருந்தது..

#################

சுந்தருக்கு சுந்தரியோடு பேசியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும் அவள் அவனிடம் பணம் வாங்கி படிப்பதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததில் அவன் மனம் வலித்தது..

என்னதான் அவள் சொல்வது நியாயம் தான் என்று தெரிந்தாலும் சுந்தருக்கு  சுந்தரியை படிக்க வைப்பது தன்னுடைய உரிமை என்றும் அதை எப்படி அவள் வேண்டாம் என்று சொல்லலாம் என்றும் கோபம் வந்தது..

சுந்தரியை படிக்க வைப்பதும் அவளுக்கு வேண்டியன செய்வதும் தன்னுடைய உரிமை என அவன் எப்படி நினைக்கிறான் என்று ஒரு புறம் அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டே கொன்று கொண்டு கொண்டிருந்தது.. ஆனால் மனசாட்சி கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கே விளங்கவில்லை..

இன்னொரு புறம் அவனால் சுந்தரியை அப்படி தள்ளி வைத்து பார்க்க முடியவில்லை.. ஏனோ தன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு எல்லாம் செய்வது போல் சுந்தரிக்கு செய்வதும் தன் கடமை என்றே அவனுக்கு தோன்றியது..

தனக்கு ஏன் இப்படி விசித்திரமாக சுந்தரியின் மேல் உரிமை எடுத்துக் கொள்ளும் மனோபாவம் ஏற்பட்டிருக்கிறது என்று விளங்காமல் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவன் கைப்பேசிக்கு ஷாலினியிடம் இருந்து அழைப்பு வந்தது..

“ஹலோ.. சொல்லுங்க ஷாலினி..” என்று சுந்தர் சொல்ல “சுந்தர்.. போர் அடிக்குது.. எங்கயாவது வெளியில போலாம் வரீங்களா?” என்று ஷாலினி கேட்க “சாரி ஷாலினி..  எனக்கு மூடு இல்ல.. இன்னொரு நாள் போலாம்..” என்றான் சுந்தர்..

“எப்பவும் இப்படித்தான்.. இந்த மாதேஷும் என் ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறான்.. இந்த சுந்தரும் என்னோட எங்கயும் வெளிய வர்றது கிடையாது.. இந்த சுந்தர் மேல என்ன தான் இன்ட்ரஸ்ட் இல்லனாலும் சும்மா ஊர் சுத்தலாம் இவனோட.. அவன் செலவில ஏதாவது வாங்கிட்டு வரலாம்னு பார்த்தா இவன் ரொம்ப போர் அடிக்கிறான்..” என்று மனதில் நினைத்தவள் “ஏன் சுந்தர்..? என்ன ஆச்சு..? ஏன் மூட் அவுட்டா இருக்கீங்க..” என்று கேட்டாள்..

யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்துக் கொண்டிருந்தவன் போல் சுந்தர் உடனே “அது இன்னைக்கு.. சுந்தரிக்கு யுனிவர்சிட்டியில் இருந்து அட்மிஷன் கன்ஃபார்ம் பண்ணி லெட்டர் வந்திருந்தது.. நான் சுந்தரி கிட்ட அந்த லெட்டர கொண்டு வந்து கொடுக்கிறேன்.. நீங்க காலேஜ் ஜாயின் பண்ணிக்கோங்கன்னு சொன்னேன்.. ஆனா அவங்க நான் ஃபீஸ் கட்டி அவங்க படிக்க முடியாதுன்னு சொல்லி வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.. அவங்க ஏன் அப்படி சொல்லணும் ஷாலினி? இப்போ நான் பணம் கட்டி அவங்க படிச்சா என்ன..? இங்க இருக்கும்போதே அவங்களை படிக்க வைக்கிறதாதானே நான் சொல்லி இருந்தேன்..” என்று புலம்பினான் சுந்தர்..

ஷாலினிக்கோ காதில் புகை வந்தது.. “அந்த சுந்தரி எங்கேயோ ஒழிஞ்சிட்டான்னு நிம்மதியா இருந்தேன்.. இன்னும் விட்ட குறை தொட்ட குறையா இவன் மனசிலே வாழ்ந்துகிட்டு தான் இருக்கா போல இருக்கு.. இந்த சுந்தர் ஏன் அவ நினைப்பிலிருந்து வெளிய வரமாட்டேங்கறான்.. இது சரி இல்லையே.. என்ன ஆனாலும் சரி.. என்னை அவமானப்படுத்தி பேசுன அந்த பிச்சைக்காரி தப்பி தவறி கூட சந்தோஷமா இருக்க விடமாட்டேன்.. எனக்கு சுந்தர் வேணாம் தான்.. ஆனா அதுக்காக அவளுக்கு சுந்தரோ அவனோட இந்த பணக்கார சொகுசு வாழ்க்கையோ கெடைக்க கூடாது.. அவ கடைசி வரைக்கும் பஞ்ச பரதேசியா கஷ்டப்பட்டுக்கிட்டே தான் வாழணும்” என்று வன்மத்தோடு யோசித்தவள்

“ஏன் சுந்தர்.. அவங்க தான் வீட்டை விட்டு வெளியே போயிட்டாங்களே.. எந்த மாதிரி நிலைமையில அவங்க அக்கா உங்க வீட்டை விட்டு அவங்களை வெளியே கூட்டிட்டு போனாங்கன்னு உங்களுக்கு தெரியும் தானே..? அப்புறம் அவங்க படிப்புக்கு நீங்க செலவு பண்ண அவங்க எப்படி ஒத்துப்பாங்கன்னு நினைச்சீங்க? சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நீங்க சுந்தரி பத்தி ரொம்ப யோசிக்கிறீங்கன்னு எனக்கு தோணுது.. நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. இனிமே நம்ம வாழ்க்கையை பத்தி தான் நீங்க யோசிக்கணும்.. நீங்க இந்த மாதிரி எப்பவும் சுந்தரியை பத்தியே நெனச்சிட்டு இருக்கறது எனக்கு கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு..” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள் ஷாலினி..

“இல்ல ஷாலினி.. நான் சுந்தரியை ஒரு ஃப்ரெண்டா தான் பார்க்கிறேன்.. என்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ்க்கு படிப்பு செலவு பண்ற மாதிரி தான் சுந்தரியோட படிப்புக்கும் நான்  ஸ்பான்சர் பண்ணனும்னு நினைக்கிறேன்.. ஆனா அவங்க அதை புரிஞ்சுக்காம எங்கேயோ வேலைக்கு போயி கஷ்டப்பட்டுக்கிட்டு படிக்காமயே இருக்காங்க.. அவங்களும் வாழ்க்கைல செட்டில் ஆகணும் இல்ல ஷாலினி..? அதான் எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு..”

“இதை பாருங்க.. உங்களை விட அவங்களுக்கு தான் அவங்க படிப்பு மேல அதிக கவலை இருக்கணும்.. அவங்களே கவலை படல..  நீங்க எதுக்கு இவ்வளவு வர்றி பண்ணிட்டு இருக்கீங்க..? பேசாம படுத்து தூங்குங்க சுந்தர்.. நீங்க தேவை இல்லாம கவலைப்படாதீங்க..”

“நீங்க சொல்றதும் கரெக்ட்தான் ஷாலினி.. சரி.. ஓகே.. பாய்.. குட் நைட்.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. தூக்கமா வருது.. நாளைக்கு கார்மெண்ட்ஸ்ல மீட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்த சுந்தர் அப்படியே படுத்து உறக்கம் வராமல் சுந்தரியை நினைத்தபடி புரண்டு கொண்டிருந்தான்..

##############

அடுத்த நாள் தன் வேலைக்கு சென்ற சுந்தரி அங்கு பகல் முழுவதும் வேலையில் மூழ்கி இருந்தாள்..

அப்போது  லலிதா சுந்தரியை அழைத்து “சுந்தரி.. மேடம் என்னை அவங்க ரூமுக்கு ரெண்டு காஃபி கொண்டு வர சொல்லி இருந்தாங்க.. அவங்களை பார்க்க யாரோ ஒருத்தர் வந்திருக்காரு.. நீ கொஞ்சம் காஃபி கலந்து எடுத்துட்டு போறியா.. என் செக்ஷன்ல கஸ்டமர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. நான் அட்டென்ட் பண்ணனும்.. உன் செக்ஷன்ல தான் இப்ப யாரும் இல்லல்ல..? கொஞ்சம் போய் காஃபி கலந்து குடுத்துட்டு வர்றியா ..? ப்ளீஸ்..” என்று கேட்டாள்..

“அதனால என்ன..? அதுக்கு எதுக்கு கெஞ்சுற..? நான் போய் கொடுத்துட்டு வரேன்..” என்று சொல்லி காஃபியை கலந்து எடுத்துக்கொண்டு ராகினி தேவியின் அறைக்கு சென்றாள்..

கதவைத் தட்டி அனுமதி வாங்கி உள்ளே சென்றவள் அங்கே எதிரே அமர்ந்திருந்தவனை பார்த்து வியப்பில் ஆழ்ந்தாள்..

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அங்கே ராகினி தேவியோடு சுந்தர் பேசிக் கொண்டிருந்தான்.. சுந்தரியை பார்த்த அவன் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!