தேனிலும் இனியது காதலே 01

5
(2)

காதல்-01

பல கரகோசத்திற்கு மத்தியில் கையில் மைக்கைப் பிடித்தான் நிதிஸ் சரன்   அவனுடைய இனிய குரலோ அனைவரையும் கட்டிப் போட்டது.”  தேடிக் கிடைப்பதில்லை  என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே ” எனும் பாடல் வரிகளை உணர்ந்து  பாடினான் போலும் அவன் குரலிலும் தேடல் கூடியது.

 

அவன் குரல் குழைந்து ,வழிந்து உயிரை உலுக்கியது. பாடல் முடிந்ததும் , மைக்கை அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்து விட்டு மேடையை விட்டு இறங்கி ஓய்வறையினுள் நுழைந்தான்.

 

அதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர் அடுத்து அனைவரும் எதிர்பார்த்த பாடல்  இதோ…..என அழைத்த நொடி மேடை  ஏறிய  வேதா கரகோசத்திற்கு மத்தியில்  “
சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா…
ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா…
சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா…
நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா…
 டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…
ப்ளாக்பஸ்டர் சாங்குமா…
 டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…
திருப்பி போட்டு வாங்குமா…
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…ஏரியா தான் தாங்குமா…
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா… குலேபா…என பாடலை பாட அரங்கமோ உற்சாகத்துடன் ஆரவாரித்தனர்.

 

ஓய்வறைக்கு வந்த நிதிஸ் சரன் தண்ணீரைக் குடித்து தன்னை ஓரளவு சரிப்படுத்திக் கொண்டான்.” ஆர் யூ ஓகே  சார்…ம்ம் நவ் ஓகே” என்றான்.
அதனைத் தொடர்ந்து நிதிஸ் சரன் மற்றும் ஹரிணியும் இணைந்து  டூயட் சாங் பாட அனைவரும் அலைபேசியில் டார்ச் லைட்டை ஆன் செய்து அப் பாடலுக்கு லைஃப் பண்ணத் தொடங்கினர்.

 

இரவு எட்டு மணி போல் தொடங்கிய இசை நிகழ்ச்சி நள்ளிரவை தாண்டி தான் முடிவடைந்தது. அறிவிப்பாளர்  இந்நிகழ்விற்கு  ஸ்பான்சர் வழங்கியவர்களுக்கும், பாடகர்கள் மற்றும் வாத்திய குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து இசை நிகழ்ச்சியை முடித்து வைத்தனர்.
நிதிஸை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ராம். “நிதிஸ்..ம்ம் வீட்ட என்ன பதில் சொல்லப் போற”….” தெரியல ரொம்ப டிஸ்டர்பா இருக்குடா கெஸ்ட் ஹவுஸ்க்கு போ” என்றான் நிதிஸ் தனது தம்பியான ராமிடம். அவனும் காரை திருப்பி கெஸ்ட் ஹவுஸ் நோக்கி செலுத்தினான்.

 

கெஸ்ட் ஹவுஸ் அடைந்ததும் “நிதிஸ் இறங்கிக்கோ”…. என்றான் ராம். நிதிஸும் காரை திறந்து இறங்கி வீட்டினுள் நுழைந்தவன்  ஹாலில் சோபாவில் சரிந்தான். காரை பார்க்  செய்துவிட்டு உள்ளே நுழைந்த ராம் நிதிஸை பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் நிதின்.”காபி போட போறேன் உனக்கு….”  “யா ப்ளீஸ் “என்றான்  நிதிஸ் அதனைத் தொடர்ந்து ராம் சமையல் அறையினுள் நுழைய மேலே சுற்றிய மின்விசிறியை பார்த்தபடி இருந்த நிதிஸின் அலைபேசியோ “யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே நாம் சென்று வாழ்வோமா வா காதலே….” எனும் குரலில் பாட தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தவன் அலைபேசியை ஆன் செய்து காதில் வைக்க மறுபுறம் தாய் தான் அழைத்திருந்தார்.

 

 ” நிதிஸ் …..அம்மா நீங்க இன்னும் தூங்கலையா? எத்தன தடவ சொல்றது நேரத்துக்கு சாப்பிட்டு தூங்குங்கனு”….மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ  “ஆமா காலைல வாரம் என அழைப்பைத் துண்டித்தான்.”

 

கையில் இரண்டு காஃபி கப்புடன் வந்தான் ராம் ஒன்றை நிதிஸிடம் நீட்ட அவனும் அதனைப் பெற்றுக் கொண்டான்.” ராம் ஏதும் தகவல் கிடைச்சுதா???தமையின் நிலை புரிந்தாலும் தான் இதற்கு என்ன  செய்ய முடியும்”இல்லை எவளோ ரை பண்ணியும் முடியல ஒரு மாதமா அதுல எந்த  அப்டேட்ஸ்ஸிம் புதுஷா வரல ,சில வேளை இப்போ வரலாம்ல என்றான் ராம்…..தனது அலைபேசியில் ” தேனிலும் இனியது காதலே எனும் யுடியுப் சேனலைத திறந்து  பார்வையிட்டபடி அதிலோ புதிய புதிய அப்டேட்ஸ் எதுவும் இல்லை “ம்ம் பார்ப்போம் என்றான் ராம்”.

 

இருவரும் அன்று இரவு அங்கு தான் தங்கினர்.மறு நாள் காலையில் சூரியன் தன் பொற் பாதங்களை பூமியியல்  பதிக்க மெல்ல பொழுதும் மலர்ந்தது.நிதிஸிம் ராமும் வீட்டிற்கு முறப்ப்ட்டனர்.

 

தேவ் பிரதாப் மற்றும் கல்யாணி தம்பதியின் மூத்தவன் நிதிஸ் சரன், இளைய மகன் ராம் சரன் ராம் பிரதாப் பெரிய பிஸினஸ் மேன்,தேவ் பிரதாப்பின் தாய் சத்தியதேவி பழம் பெரும் முன்னனிப் பாடகி முதுமை காரணமாக அவர் பாடுவது  குறைந்தாலும்  அவரது  பாடல்கள் என்றும் மனதை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

 

தேவ் பிரதாப்பின் மனைவி கல்யானி வீணை வாசிப்பதில் கை தேர்ந்தவர்.இவ்வாறான இசைக் குடும்பத்தின் மூத்த பையன் நிதிஸ் சரன் இசைத்துறையில் ஆர்வம் கொண்டதால் அப் பிரிவையே தெரிவு செய்து அதில் முன்னேர.இளைய பையன் ராம் சரன் தந்தையின் தொழிலை கையில் எடுத்துக்  அதனை நிர்வகிக்கிறான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தைக்கு தொழிலில் உதவுவதை வழக்கமாக கொண்டான் நிதிஸ்.

 

இரண்டு மாடி கட்டடத்தின் முன் வந்து நின்றது.அவ்விலையுயர்ந்த கார் அதிலிருந்து இறங்கினான் நிதிஸ் சரன் அவனது ஸ்டூடியோ தான் அது தனது வேக எட்டுக்களுடன் உள்நுழைந்தவனை ரிசப்ஷனிஸ்டில் இருந்த செரா “குட் மார்னிங் சார்” என காலை வணக்கத்தை கூறினாள். அவனது அதனை சிறு தலையசைப்புடன் ஏற்று தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

அவனைப் பின் தொடர்ந்து அறையினுள் நுழைந்தான் நிதிஸின் பெர்சனல் அசிஸ்டன்ட் கௌதம் “குட் மார்னிங் சார் ஓஓ….குட் மார்னிங் கௌதம் எல்லாரும் ரெடியா ?””ஆமா சார் ” ” ஓகே அப்போ கிளம்பலாம் என இருவரும் ரெக்கார்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.அனைவரும் தத்தபது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.” த லயன் கிங்” எனும் கார்டூன் திரைப்படத்திற்கே டப்பிங் பேசவுள்ளனர்.

 

கௌதம் அனைவருக்கும் ப்ரின்டட் செய்யப்பட்ட டயலாக்கை கொடுக்க ஒவ்வொருவரும் குழந்தைகளை  ஈர்க்கும் வகையில் கிள்ளை மொழியில்  அழகாகப் பேசத் தொடங்கினர்.ஒரு மணி நேரம் அங்கு செலவிட்டவன் ” டப்பிங் பிரிவிற்குரியரைப் பார்த்த நிதிஸ் அங்கிருந்து அகன்று தனது அலுவலக அறைக்குள் வந்தவன் வேலையில் மூழ்கிப் போனான்.” எக்ஸ்கியூஸ் மீ சார் என உள்ள வந்த கௌதம் இதக் கொஞ்சம் பாருங்க என தன் கையில் இருந்த  டஃப்பைக் காட்ட அதிலோ ஒரு பெண்ணின் குரல் எந்தவித பிண்ணனி இசையுமின்றி ” நீயும் நானும் ஓருயிர் தானே ,உன் பிரிவால் வாடுதே என் இதயம் தேம்புதே” என ஒலித்தது. கௌதம் அடுத்த பாடலை ஒலிக்க விட அதிலோ  ” உயிரே உயிரே உன்னைச் சேர  என் மனம் ஏங்குதே, கண்ணீரில் வாடுதே  என சோகமான பாடல் சிறு பிசிரும் இன்றி ஒலித்தது.
அந்தக் குரல் தந்த மயக்கத்தில் கண்மூடி, ஒரு சில நிமிடம் ,இருந்த  நிதிஸ் கண்விழித்து ….. “நைஸ் வாய்ஸ் யாருன்னு தெரியுமா????”
“இல்ல சார் தேனிலும் இனியது காதலே என்ற யுடியூப் சேனல்ல தான் போட்டிருக்கு,  பாட்டுக்கு ஏத்த போல  ஏதோ ஒரு படம் போட்டிருக்கு” எனக் காட்டினான். “யாருனு பாருங்க” என்றான் நிதிஸ்.

 

மதிய வேளை வீட்டிற்குக் கிளம்பினான்.நிதிஸ் வீட்டிற்கு வந்தவனை வரவேற்றதென்னவோ சத்தியதேவி தான் ” நிதிஸ் வா வா”  ,  எப்படி இருக்க கண்ணா   எனக் கேட்க,நிதிஸிம்  நான் நல்லா இருக்கன் நீங்க எப்படி இருக்கீங்க உங்கட பயணம் எல்லாம் எப்படி, எல்லாம் நல்லா தான் போச்சி  என இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது,வாங்க சாப்பிடலாம் என அங்கு வந்தார்  கல்யாணி , நீங்க சாப்பிடுங்க  நான் ப்ரஸ்சாகிட்டு வாரன் என  தனதறையினுள் நுழைந்தான்.
அனைவரும் மதிய உணவை பேசி சிரித்து ஒன்றாகவே உண்டனர்.மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பினான் நிதிஸ் அன்றைய பொழுது அலுவலகப் பணியிலேயே கழிய இரவு மொட்டை மாடியில் ஏகாந்த தனிமையில்  இதமான மெல்லிய காற்று  உடலைத் தழுவிச் செல்ல  முழு நிலவைத் தான் பார்த்தபடி படுத்திருந்தான் நிதிஸ்.

 

நிதிஸின் காதில் இருந்த கெட்போன்  இழுக்கப்பட தன்னிலை மீண்டவன் பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க  ராம் தான் நின்றிருந்தான். ” எத்தன வாட்டி கூப்பிடுறது ” என சலித்துக் கொண்டவன்.அவனது கெட்போனை  தனது காதில் மாட்டியபடி  நிதிஸிக்கு அருகில் படுத்துக் கொண்டான்.அதிலோ….” மௌனமாய் பேசும் உன் விழிகள் உன் நினைவில் வாழுதே  என் மனம் உன்னை தேடுதே ” எனும் பாடல் பெண் குரலில் ஒலித்தது.”ஹேய் ப்ரோ….. சாரி டூ சே திஸ் இந்த சாங் உன்னோட வாய்ஸ்ல கேட்கிறத விட இந்த பொண்ணு வாய்ஸ்ல கேட்கிறப்போ சூப்பரா இருக்குடா” என்றான்.
நிதிஸோ ராமை திரும்பிப்  பார்க்க……
என்ன ப்ரோ உண்மையத் தானே சொன்னன் என்றான்….நிதிஸிம் ” யாருனு பார்க்கனும் நல்ல ப்யூசர் இருக்கு அந்த பொண்ணுக்கு”  என்றான். அதனைத் தொடர்ந்து அண்ணனும் தம்பியும் வேறு கதைகளுக்கு பேசத் தொடங்கினர்.
இப்படியே நாட்களும் அதன் பாட்டில் செல்ல  அன்று ஞாயிற்றுக்கிழமை  தன் குரலுக்கான பயிற்சியினை மேற்கொண்டிருந்தான் நிதிஸ் இரண்டு நாட்களில் புதிதாக ஒரு ஆல்பம் சாங் வெளியிடவுள்ளான்  அதை தானே எழுதி ,தானே இசையமைத்து  பாடிய பாடல் அது அவ் நிகழ்விற்காகவே தற்போது குரலுக்கான பயிற்சியில்  ஈடுபட்டிருந்தான்.

 

அவன் இருப்பது என்னவோ தனது வீட்டில்   பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ம்யூசிக் அறையில் அதுவோ பல இசைக்கருவிகள் தொடக்கம் ப்ராக்டிஸ் செய்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. அவ்வறையில்   சவுண்ட் ப்ருப் போடப்பட்டிருப்பதால் வெளிய சத்தங்கள் கேட்பதில்லை நிதிஸின்  கைகள்  “தேனிலும் இனியது காதலே எனும் யூடியூப் சேனலை  தேடி எடுத்து பார்த்தா….ஐம்பதிற்கும் அதிகமான  பாடல்கள் அனைத்துமே காதல் பாடல்கள்   அதில் ஒரு பாடலை ப்ளே செய்தான். மேலோட்டாமாக பார்த்த நிதிஸின் இதழ்களில் புன்னகை….  சொல்லப்போனால் அதில் இருந்த. பெரும் பாலான பாடல்கள் நிதிஸின்   பாடல்கள்.. அவன் கைகள் மேலெழுந்து ஒரு பாடலை ப்ளே செய்தது.  அதிலோ”
“ஓஓ ஒஹ்ஹ
வெண்ணிலவு சாரல் நீ ஓஓ
வீசும் குளிர் காதல் நீ ஓஓ ஒஹ்ஹ
வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ
மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ” என பாடல் ஒலித்தது பாடலின் இறுதியில்  ” இப் பாடல் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. என தன் தேன் குரலால் முடித்திருந்தாள்.
இறுதி அவள் குரலைக் கேட்டதும்  ஏதோ ஒரு வித சிலிர்ப்பு ……. அவ்வறையில் இருந்து வெளியே வந்தவன்.” ஹலோ கௌதம்…..  யா சார் சொல்லுங்க, தேனிலும் இனியது காதலே யூடியூப் சேனல் யார்ரனு கண்டுபிடிச்சதா?…..” சார் இல்ல யார்னு தெரியல அந்த அக்கவுண்டுக்கு மெசேஜ் கூட பண்ணிப் பார்த்தன்  பதில் இல்ல.  என்றவன் வேற வழில ட்ரை பண்ணுரன் சார் என்றான். நிதிஸும் அழைப்பைத் துண்டித்தான்.
தனதறைக்கு வந்தவன்  அவளது முதலாவது பாடலை ஒலிக்கச் செய்ய அதிலோ……நானும் காதலை உணர்ந்த தருணம் என தொடங்கியவள்  அவன் இரண்டு வருடங்கள் முன் பாடிய “
கண்ண காட்டு
போதும் நிழலாக கூட
வாரேன் என்ன வேணும்
கேளு குறையாம நானும்
தாரேன்
நச்சுனு காதல கொட்டுற
ஆம்பள ஒட்டுறியே உசுர
நீ நீ
நிச்சயமாகல சம்மந்தம்
போடல அப்பவுமே உறவு
நீ நீ
அன்புல வித விதைச்சு என்ன நீ பரிட்சாயே  ஐந்து பாடல்களைக் கேட்டிருப்பான் நிதிஸுற்கோ நிலை கொள்ள முடியவில்லை அந்த குரலில் தான் எத்தனை, ஏக்கமும், தவிப்பும்  எத்தனை எத்தனை அப்பப்பா. ப்ரொபஷனல் சிங்கர்ஸ் கூட இப்படி பாடியிருப்பார்கள்  என்பது  சொல்லமுடியாது.
நிதிஸும் மெல்ல மெல்ல அக் குரலிற்கு அடிமையாகத் தொடங்கினான்….” யாரிவள் ” எனும் எண்ணம் தான். தன்னை  அக் குரல் பலவீணமாக்குவதாகவே உணர்ந்தான்
நிதிஸ். பப்ளிசிட்டிக்காக செய்திருப்பாளோ எனும் எண்ணமும் எழாமல் இல்லை…… எவ்வளோ  பாடல்களைத் தான் தினமும் கேட்கிறோம்…..ஆனால் இக் குரலை நிதிஸால் இலகுவாக கடக்கவும் முடியவில்லை ஏதோ ஒன்று தன்னை அதில் ஈர்த்தது.

 

குரலுக்கான பயிற்சியை முடித்து விட்டு  கீழே செல்ல அனைவரும் அங்கு தான் அமர்ந்திருந்தனர். உணவும்  பரிமாறப்படும்  உணவினை உண்ணத் தொடங்கினர்.
” தம்பி ஜாதகம் ஒன்று பொருந்தி வந்திருக்கு என்ன பொண்ணு பார்ப்போமா,” என்றார் கல்யாணி ,உணவுண்ட ராமும் நிதிஸையே பார்க்க ”  கொஞ்ச நாள் போகட்டும்மா “என்றான். அந்த நொடி தேன் குரல்காரியின்  எண்ணம் எழாமல் இல்லை.
தேனியும் இனியது காதலே அத்தியாயம் 01
எப்படி இருக்குனு சொல்லுங்க டியர்ஸ்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!