தேவதை 12
சார் எங்க மீன் வாங்க வந்திங்களா? என கிண்டலாக ஜெய் கேட்க
வசி சுத்தி சுத்தி கண்களை அலைய விட்டு வேடிக்கை பார்த்தவன், ஜெய் கேட்ட கேள்வியில் அவன் முகம் பார்த்து..
ச்ச ச்ச இல்ல உங்க கூட தான் போட் ரைடுக்கு வந்தேன் போலாமா!? என திரும்பி தர்ஷியைப் பார்த்து கேட்க.. ஹ்ம்ம் போலாம் என தலையாட்டினாள்…
ஜெய் உச்சகட்ட கோவத்திற்கு சென்றவன், தர்ஷியைப் பார்த்து முறைக்க… தேவா தான் மனதில் வலியோடு ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றிருந்தான்…
டேய் சப்பை இந்தா புடி, என 5 பெரிய வஞ்சரை மீனை எடுத்து பையில் போட்டு கொடுத்தவர்… புள்ளைங்களுக்கு நல்லா சுத்தம் பண்ணிட்டு வறுத்துக் குடு என மைக்கேல் அவன் கையில் கொடுக்க அவனும் வாங்கிக் கொண்டு முன்னே நடந்தான், அவனை தொடர்ந்து வசியும், தர்ஷியும் செல்ல.. ஜெய்யும், தேவாவும் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை…
டேய் இவளுக்கு எவ்ளோ திமிரு இருக்கணும்… ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை என்கிட்ட பர்மிஷன் கேட்டாளா டா, ஒரு இன்பர்மேஷனும் குடுக்காம இவ பாட்டுக்க இழுத்துட்டு வந்தா என்ன அர்த்தம்! என ஆதங்கமாய் ஜெய் தேவாவிடம் கேட்டான்…
ஜெய் பேசியது ஏதும் தேவாவின் காதில் ஏறவில்லை.., காலைல தான டி கொஞ்சம் சந்தோசமா இருந்தேன்.. அதுலயும் மண்ணள்ளி போட்டுட்டு எம்புட்டு சந்தோசமா போறா பாரு என்றெண்ணி அப்படியே நின்றான்…
உன்கிட்ட தான பேசுறேன்.. எப்போமே அமைதியா இருந்து என்ன புடுங்கப் போற.. என கத்தினான்
டேய் மச்சான் எனக்கு எப்படி தெரியும் உன்கூட தான நானும் உலாத்துறேன்.. ஏற்கனவே செம மனசு கஷ்டத்துல இருக்கேன்… இதுல ஏண்டா நீ வேற என்ன கடுப்பேத்துற,, அவர்கள் இருவரும் ஒன்றாக சிரித்தப் படி பேசி நடப்பதை கோவமாக பார்த்துக் கொண்டிருந்தான்…
அவன் முக மாற்றத்தை கண்டு கொண்ட ஜெய், சரி விடு டா இன்னைக்கு அவளுக்கு இருக்கு நா என்னனு கேட்குறேன்…
அதெல்லாம் வேணாம் டா விடு, இதுக்கு பிறகு கேட்டு என்ன ஆகப்போகுது.. ப்ளீஸ் வேணாம் என்றான் தேவா
ஏலே ஜெய்யு வா டா, அங்கேயே நின்னுக்கிட்டு பேசிட்டு கடக்காவ.. வாடா என சப்பை சத்தம் போடவும்
ஜெய் தேவாவை வாடா, விட்டுட்டு போயிர போதுங்க என இழுத்து சென்றான்…
சப்பை முதலில் படகில் ஏறியதும், பின்னால் வசி ஏறிக் கொண்டான்.. வசி தர்ஷியிடம் கை நீட்ட, தர்ஷியும் வசியின் கையை பிடிமானமாக நினைத்து பிடித்து ஒரு வழியாக படகில் சிரித்தப் படி ஏற…
அவர்கள் இருவரையும் தேவா ஏக்கமும், பொறாமையும் கலந்த கண்களுடன் பார்த்தான்… எப்போதும் தேவா தான் அவள் படகில் ஏற உதவுவான்,,. இன்று தான் நிற்க வேண்டிய இடத்தில் இன்னொருவனா! என நொந்தவன் படகில் ஏறி அமர, ஜெய்யும் அவர்களை முறைத்தப் படி ஏறிக் கொண்டான்….
படகு ஓரளவு பெரிதாக தான் இருந்தது… நடுவில் வெயில் தடுப்பானும்,, ஒரு பக்கம் மோட்டாரும், அதற்கு கீழ் சிறிய குடோன் போலும் இருக்க… ஒரு 8 பேர் பயணிக்கும் அளவு இடம் இருந்தது…
தர்ஷியின் அருகில் அமர்ந்த வசி,, சப்பையுடன் பேசிகிட்டு கொண்டே வந்தான்..
எவ்ளோ நாள் மீன் புடிக்க போவீங்க,? யாருக்காச்சும் உடம்பு சரி இல்லாம போச்சுன்னா என்ன பண்ணுவீங்க? உங்க வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி செய்திலாம் சொல்லுவீங்க என கேள்வி கேட்டப்படி வர.. சப்பை அதற்கு புன்னகைத்தப் படியே பதில் சொல்லிக் கொண்டு வந்தான்…
எண்ணோவ் ஆழிப்புயலும், அடங்காத அலை சீற்றமும், ஒவ்வொரு நொடியும் மரணத்தின் பிடியில வாழுறோம்… வாழ்வா, சாவா பாத்துரலானு…
கரை வந்து சேர்ந்தா எங்களுக்கு மீனு உணவு ,, இல்லனா நாங்க அந்த மீனுக்கு உணவு என சாதாரணமாக சொல்லிக்கொண்டே வலையை எடுக்க… வசிக்கு தான் ஒரு மாதிரியாகிப் போனது….
எவ்ளோ ஆபத்து, தினமும் உயிர பணயம் வச்சி… ஷ்ஷ்ஷ்ஷ் ப்பா பெரு மூச்சி விட்டு கடலை சுற்றிப் பார்த்தான்….
நீல நிற விரிந்த கடல்
அலைகளின் ஓசை
மெல்லின வீசும் காற்று
அலையின் சீற்றம்…
கடல் அன்னை பார்க்க எவ்ளோ அழகு… மனதிற்கே அவ்வளவு இதமாய் இருந்தது…. ஆனால் அழகு தான் ஆபத்து நிறைந்தது…
தேவாவிடம் நீங்க இங்க எப்போமே வருவீங்களா? டா என வசி கேட்க
ஆமா சீனியர்.. வார வாரம் வர முடியாது ,, ஆனா மாசத்துக்கு 2 முறையாச்சும் வந்திருவோம்…
டேய் செமையா இருக்கு டா.. என்றவன் தர்ஷினியிடம் திரும்பி,, தர்ஷி அங்கப் போடி நா படுத்துக்க போறேன் என்றதும் தர்ஷி எழுந்து தேவா அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்…
கால் நீட்டி படுத்து காற்றை சுவாசித்து ஒரே நிறத்தில் இருக்கும் வானத்தையும், கடலையும் ரசித்துக் கொண்டிருந்தான்…
தேவாவும், ஜெய்யும் வசி தர்ஷியை டி போட்டு பேசியதை காதில் வாங்கியிருந்தனர்… அதுவே இருவருக்கும் கோவம் பொத்துக் கொண்டு வர.. எதையும் பற்றி அவளிடம் கேட்கப் போவது இல்லை…
டேய் தேவா வா டா வலை போட்டு பாப்போம் என்றவன் தேவாவை இழுத்து சென்றான்… தர்ஷியும் அவர்கள் பின்னால் செல்ல.. இருவருமே அவளை கண்டுக்கொள்வதாய் இல்லை…
தேவா இந்த முறை வலையை நா இழுக்குறேன் டா என்றதும்…
அதெல்லாம் வேணாம் டி வண்டு.. உன்னால முடியாது., கீழ விழுந்துருவ என உண்மையான அக்கறையில் சொன்னான் தேவா…
அதெல்லாம் விழுந்தா காப்பாத்த தான் ஆள் கூப்டு வந்திருக்காங்களே! அந்த பாடிகாட் பரமேஸ்வரம் அவரு பாத்துப்பாரு டா நீ ஏன் கவலைப்படுற! நம்மலாம் அவங்க கண்ணுக்கு தெரியுவோமா என்ன? என்ற ஜெய்யை முறைத்து தள்ளினாள்…
என்னடா பிரச்சனை உனக்கு எதுக்கு ஜாடையா பேசுற எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு என பல்லைக் கடித்தாள்
ஓஹ் இதுவே மேடம்க்கு ஜாடையா பேசுறதா? இந்த அளவுக்கு யாராலயும் நேரடியா குத்திக் காட்ட முடியாது டி நக்கலாக ஜெய் சொல்லவும் அவனை நெருங்கினாள் தர்ஷினி
என்னடா இப்ப சொல்ல வர… எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு…
ஓஹ் மேடம்க்கு தெளிவா சொல்லனுமா! யார கேட்டு டி இவன கூப்டு வந்த?
தேவாவும், சப்பையும் ஜெய்யை அடக்க முயன்றனர்… ஆனால் அவன் அடங்கியப் பாடு இல்லை….
யார டா கேட்கணும்… இப்ப அவன் வந்ததுல உனக்கு என்ன பிரச்சனை? இங்க என்ன இடமா பத்தல!
எங்கள கேட்கணும் டி, எப்போதும் நாம 3 பேரு தான போவோம்.. இப்ப இவன் என்ன எக்ஸ்டிரா பிட்டிங்..
டேய் வரணும்னு ஆசைப்பட்டான் கூப்டு வந்தேன் அவ்ளோ தான் இத எதுக்கு டா பெருசு படுத்துற… பாவம் டா அவன் ரொம்ப நல்லவன் எல்லார்கிட்டயும் எம்புட்டு சகஜமா பேசுறான் பாரு… எவ்ளோ பெரிய பணக்காரன் தெரியுமா?
தர்ஷினி வசிக்கு பரிந்து பேச பேச தேவாவிற்கு காதலுக்கே உரிய வலி வந்து சேர.. கடல் அலையை வெறிக்கப் பார்த்திருந்தான்….
ஏம்மா சும்மா நிறுத்து,, பணக்காரன் பணக்காரனு… அவன் தான் பணக்காரணச்சே அவன் கூடவே பிரெண்டா இருந்துக்க எங்கள மாதிரி ஏழைங்க கூட எதுக்கு பேசணும்? என கோவத்தில் வார்த்தையை விட…
தர்ஷினிக்கு அவன் பேசிய பேச்சில் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது… டேய் என்னடா இந்த அளவுக்கு மோசமா பேசுற!? நா பணத்தை பார்த்து பழகுறவனு நெனச்சிட்டில… இந்த அளவுக்கு கீழ் தனமா பேசிட்டல்ல! என அழ ஆரம்பித்தாள்..
அவள் அழுகையை பார்த்ததும் தேவா ஜெய்யை தான் முறைத்தான்…
என்ன ஏண்டா முறைக்கிற? என்றவன் தர்ஷினியை பார்த்து ஏம்மா நீ தான சொல்ற சும்மா சும்மா அவன் பணக்காரன், பணக்காரன்னு நாங்களா சொல்லிக்கிட்டோம்….
நா அந்த அர்த்தத்துல ஒன்னும் சொல்லல.. அவன் ரொம்ப ரிச், அவனுக்கு இதெல்லாம் புதுசு.. நா கடலுக்குள்ள போட்டிங் போறன்னு சொன்னதுமே அவன் யோசிக்காம நானும் வரேன்னு என்னையும் கூப்டு போனு கெஞ்சினான்.. அதுனால தான் கூப்டு வந்தேன்…நா எதுக்கு டா பர்மிஷன் கேட்கணும்,, நீ என் பிரெண்ட் இதுக்கெல்லாமா உன்கிட்ட பர்மிஷன் கேட்கணும்னு ஒரு உரிமைல இப்டி பண்ணிட்டேன்.. ஆனா நீ என்ன ரொம்ப மோசமா பேசிட்ட டா.. ரொம்ப கஷ்டமா இருக்கு என்றவள் ஓரிடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்….
டேய் மச்சான் ரொம்ப ஓவரா பேசிட்ட, அவ பணத்துக்காக பழகுறவளா? ஏண்டா உன் புத்தி வர வர இப்டி போகுது என பல்லைக் கடித்து ஜெய்யை திட்டவும்…
ஜெய்க்கே கஷ்டமாக இருந்தது… தர்ஷினியை பார்க்க அவள் கண்களை துடைத்த படி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க…
வசி ஒரு குட்டி தூக்கமே போட்டிருந்தான்…
போய் சாரி கேளு இல்ல உன்ன கொன்றுவேன்., தேவா மிரட்டவும்
சரி சரி போறேன்.. ஆனா அந்தோ படுத்திருக்கான் பாத்தியா? அவன அப்டியே கல்லை கட்டி கடல்ல தூக்கி போடலானு இருக்கு டா என ஆதங்கத்தில் பேசினான்…
அவன் இயல்பா இருக்கான் டா.. ரொம்ப நல்லவன்.. வந்து பேசுனப்பவே தெரிஞ்சிட்டு.. அவன் மேல தப்பு இல்ல.. தர்ஷி மேலயும் தப்பு இல்ல… போய் அவகிட்ட சாரி கேளு என்றான் தேவா….
சரி, சரி கேட்குறேன்… ஆனா அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்து உனக்கு வலிக்கலயா? டா
சில நேரங்கள்ள பிடித்ததாக இருந்தாலும், பிடித்து வைக்காம இருப்பது தான் டா நல்லது.. என்றவன் தர்ஷியை பார்க்க அவள் அழுகையை நிறுத்திய பாடில்லை….
நீ கிடைப்பாய் என்றெல்லாம் காதல் செய்யவில்லை..,பிடித்தது காதலித்தேன், காதலிக்கிறேன், நீ கிடைக்காத போதிலும் அது தான் எனக்கு தெரிந்த காதல் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்….
சாரி டி வண்டு, என அவள் அருகில் சென்று ஜெய் அமர… சே தள்ளி போடா, எம்புட்டு மோசமா பேச முடியுமோ பேசிட்ட…. இனிமேல் என்கிட்ட பேசாத என முகத்தை திருப்பிக் கொண்டாள்…
அதான் சாரி சொல்றேன்ல.. இனி இந்த மாதிரி பேச மாட்டேன்.. சரியா
போடா அடிச்சிட போறேன்…
அடிச்சிக்க எவ்ளோ வேணும்னாலும் அடிச்சிக்க ஆனா பேசுனத்துக்கு மன்னிச்சிரு… சாரி. என கெஞ்சிக் கொண்டிருக்க…
அதற்குள் வசி எழுந்து வாயை பொத்தியப் படி படகின் ஓரத்திற்கு ஓட,, தர்ஷி அதிர்ச்சியாக பார்த்தாள்…..
தொடரும்…….