தேவை எல்லாம் தேவதையே….

5
(22)

தேவதை 18

   வசி மற்றும் அவனின் நண்பர்களின் கார் தியேட்டரை அடைந்ததும், ஒவ்வொருவராக இறங்கி உள்ளே சென்றனர்… வசியும் தர்ஷியும் சேர்ந்தே செல்ல, அவர்கள் பார்க்காதவாறு பின்தொடர்ந்து சென்று பைக்கை பார்க் செய்து விட்டு டிக்கெட் வாங்கிய தேவாவும், ஜெய்யும் முகத்தில் கர்ச்சீப்பை கட்டி கொண்டு தியேட்டரின் உள்ளே நுழைந்திருந்தனர்…

      வசி க்ரூப் அமர்ந்திருந்த சீட்டின் பக்கவாட்டில் உள்ள சீட்டில் ஜெய்யும், தேவாவும் அமர..

        வசியின் அருகில் தர்ஷினி அமர்ந்திருந்தாள்.. படம் போட ஆரம்பித்ததிலிருந்து தேவாவின் கண்கள் தர்ஷியை விட்டு நகரவில்லை.. பேய் படம் என்பதால் ஒவ்வொரு முறை பயங்கரமான கத்தும் சத்தம் கேட்கும் போதெல்லாம் பயந்து அவள் வசியின் பக்கம் சாய்ந்து கொள்வதும்,, வசி அவள் கை விரல்களை பிடித்துக் கொள்வதுமாக இருக்க.. இங்கு தேவா தான் செத்து உயிரற்ற ஜடமாய் இருந்தான்.. தான் இருக்க வேண்டிய இடம் என ஏக்கமாய் பார்த்தவனுக்கு, இன்னொரு ஆடவன் தன் தேவதையிடம் நெருக்கம் காட்டுவதை பார்க்க திராணி இல்லை அவனுக்கு….

    ஜெய் அனைத்தையும் கண்டவன் இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல வாடா போயிருவோம் என எழப் பார்க்க… தேவா ஜெய்யின் கையை பிடித்து அழுத்தி உட்கார வைத்தான்.. ப்ளீஸ் டா எனக்காக போகாத கொஞ்ச நேரம் டா என கெஞ்சி கேட்க..ஜெய் தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்…

   ஷில்பா அங்க பாரு டி இந்த தர்ஷினி நம்ம வசி கைய இறுக்கி புடிச்சிருக்கா என ஒருத்தி ஏத்தி விட.., ஷில்பா இருவரையும் கவனித்தவள்,, ஆத்திரத்தில் கண்கள் ரத்த வெளிறிப் போய் அமர்ந்திருந்தாள்.. ப்லடி பெக்கர் ஷி ஸ்… எவ்ளோ தைரியம் இருந்தா வசி கைய பிடிச்சிருப்பா!? பிச்சைக்கார நாய்.. இவ இனிமேல் வசி பக்கம் திரும்பவே கூடாது.. ஏதாவது பண்ணனும் கைஸ்… என்றவள் மற்ற நண்பர்களிடமும் காதில் ஏதோ அந்த சைத்தான் ஓத அவர்களும் சரி என்றனர்..

      ஷில்பாவை பொருத்தவரை வசி நண்பன் அல்ல, அவள் மனதில் வசியின் மேல் காதல் இருக்க.. இப்போது வசி தர்ஷினியுடன் அதிக நேரம் செலவிடுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதன் காரணமாக தான் தர்ஷியை பழி வாங்க துடிக்கிறாள்..

      இன்டெர்வல் விட்டதும், அனைவரும் எழுந்து வெளியே சென்றனர்.. தர்ஷியும் ரெஸ்ட்ரூமிற்கு ஷில்பா மற்றும் அவள் தோழிகளுடன் சேர்ந்து பாத்ரூம் சென்றாள்..

    ஜெய்யும், தேவாவும் உட்காந்திருந்த இடம் விட்டு நகரவில்லை.. இங்கு ரெஸ்ட் ரூம் சென்றதும் ஷில்பா தர்ஷியை லாஸ்ட்டாக தான் ரெஸ்ட்ரூமிற்கு செல்ல விட்டாள்.. அதுவரை கொஞ்சம் இரு, அவ போயிட்டு வரட்டும், என ஒவ்வொருவராக உள்ளே அனுப்பியவள் தானும் கடைசியாக பாத்ரூம் சென்று வந்த பின் தான் தர்ஷினியே பாத்ரூமுக்குள் நுழைந்தாள்…

    அவள் உள்ளே நுழைந்ததும் வெளியே இருந்த படி மெதுவாக லாக் போட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி படம் பார்க்க சென்று அமர்ந்து விட்டனர்..

       இன்டெர்வல் முடிந்து படம் போடவும் வசி பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவன், தர்ஷினி அமர்ந்த இடத்தில் ஷில்பா இருப்பதை கண்டு புருவம் சுருக்கி,, ஹே ஷில்பா தர்ஷி எங்க டி..? என கேட்டான்

       அவ பின்னால நம்ம பிரெண்ட்ஸ் கூட தான் உட்காந்திருக்கா.. ஏன் நா இங்க உட்கார கூடாதோ! மூக்கை சுருக்கி கேட்க…

    வை நாட்…. பட் தர்ஷி….. என இழுக்க.

    கம் ஆன் வசி.. மூவி போட்டுட்டான் டிஸ்டர்ப் பண்ணாத என்றதும் ஓகே என தோள்களை குலுக்கியவன், ஷில்பா கூறுவதை நம்பி அமைதியாக அமர்ந்து விட்டான்…

   மச்சான் டேய் தர்ஷியை காணும்டா எல்லாரும் வந்துட்டாங்கடா என ஜெய்யின் தோளை பிடித்து தேவா உலுக்க

    டேய் அவ என்ன குழந்தையா? வந்துருவா… ஏதாவது அர்ஜெண்டா இருக்கும் போயிருப்பா டா பேசாம படத்தை பாருடா ப்ளீஸ் வந்ததுக்கு படத்தையாவது ஒழுங்கா பார்க்க விடுறா என தேவாவை பெரிதாக சட்டை செய்யவில்லை..

     தேவாவால் சீட்டில் உட்கார முடியவில்லை அவளை காணாமல் உடல் விட விடக்க அமர்ந்திருந்தவனுக்கு, அடி வயிற்றில் பய பந்து உருள அந்த ஏசி யிலும் வியர்த்து, இதற்கு மேல் பொறுக்க முடியாது என வெளியில் சட்டென எழுந்து செல்லவும்..,

    டேய் டேய் மச்சான்,என கத்திய ஜெய்… தலை எழுத்து மயிரு என பற்களை கடித்தபடி அவனை தொடர்ந்து சென்றான்…

      வெளியில் அனைத்து இடத்திலும் தேட அவளை காணாததால் தேவாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை…

      அண்ணா இன்டெர்வல்ல ஒரு பொண்ணு ஏதும் வீட்டுக்கு போச்சா னா என அங்கிருந்த சூப்பர்வைசரிடமும், ஸ்னாக்ஸ் ஷாப் உரிமையாளர்களிடம் கேட்டுப்பார்க்க அப்படி யாரும் போகவில்லை என உறுதி செய்தனர்..

      டேய் அவளுக்கு கால் பண்ணி பாரு டா என சொல்ல ஜெய் விதியே என கால் செய்துப் பார்க்க.. அவள் போனுக்கு கால் போகவில்லை…

     டேய் அவ உள்ள தான் டா இருப்பா இடம் மாறி உட்கார வாய்ப்பு இருக்குல்ல.. நீ ஏண்டா இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணி சாவடிக்குற… இடுப்பில் கை வைத்த தேவா இல்ல டா மனசு ஏதோ பட படனு இருக்கு.. சம்திங் ராங் டா என கண்களை அலை பாய விட்டான்…

     இங்கு தர்ஷினி கதவை தட்டி தட்டி பார்த்தவள் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.. கால் செய்யலாம் என்றால் போனையும் வசியிடம் கொடுத்துட்டு வந்தாச்சு ச்ச ச்ச யாரு இப்டி பண்ணது? தேவா இருந்திருந்தா என்ன இப்டி விட்ருப்பானா? எண்றெண்ணியவளுக்கு அவர்கள் இல்லாமல் இங்கு வந்ததுக்கு தேவை தான் என நினைத்துக்கொண்டாள்…தலை வேற வலிக்குது யாராவது வாங்க, ப்ளீஸ் ப்ளீஸ் என மீண்டும் கத்த ஆரம்பித்து இருந்தாள்…

     இங்கு தேவாவிற்கு சட்டென யோசனை வர, ஜெய்யும் வாடா என அவன் கையை இழுத்து கொண்டு லேடிஸ் டாய்லெட் வரை ஓடினான்… அங்கு வாசலுக்கு சென்றவர்கள் கையை பிசைந்து கொண்டு நின்றனர்…

    டேய் ரொம்ப ஓவரா போற டா… எவகிட்டயோ என்ன செருப்படி வாங்க வைக்காம விட மாட்ட போல.. என ஜெய் கடிந்துக் கொண்டான்

     தேவா இடுப்பில் கை வைத்து திரும்பி திரும்பி பார்க்க, அங்கே ஒரு தூய்மை பணியாளர் பெண் ஒருவர் நின்றிருக்க, அந்த பெண்ணிடம் ஓடியவன் அவர் கையில் ஒரு 100 ரூபாய் நோட்டை திணித்து.. அக்கா ஒரு உதவிக்கா எங்க கூட வந்த பொண்ணு ரெஸ்ட்ரூம் போனா இன்னும் வரல.. உள்ள தான் இருப்பான்னு நெனைக்கிறேன்.. லேடிஸ் பாத்ரூமா இருக்கு அதான் நாங்க போகல.. கொஞ்சம் போய் கூப்டு வாங்க கா…. ப்ளீஸ் கா என கெஞ்ச

    அந்த பெண்மணி இருவரையும் ஏற இறங்க ஒரு மாதிரி பார்த்தவர், போன் போட்டு பாத்துக்க வேண்டி தான பா என கேட்க…

    போன் ரீச் ஆகல கா கொஞ்சம் பாத்து சொல்லுங்க என தேவா கெஞ்சவும் சரி சரி என அந்த பெண்மணி ஆடி அசைந்து பாத்ரூமுக்குள் புகுந்துவிட, தேவா சட்டென ஜெய் கை பிடித்து ஓடி மேல் தளத்தில் ஒளிந்து கொண்டான்..

    அந்த பெண்மணி சென்று பார்த்தவர் இருக்கும் 4 பாத்ரூமை திறந்து பார்க்க செல்ல, அப்போது கடைசி பாத்ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டு ஓடி சென்று திறந்து விட்டார்…

       உடனே தர்ஷினி வெளியில் ஓடி வந்தவள் வியர்க்க நின்றிருந்தாள்.. முகம் சிவந்து கண்கள் கண்ணீரில் குளம் கட்டியிருந்தது… அந்த பெண்மணிக்கு தர்ஷினி முகம் பார்க்கவே பரிதாபமாய் இருக்க..

    ஏமா யாருமா உன்ன உள்ளக்க வச்சி பூட்டினது? என அந்த பெண்ணும் அதிர்ச்சியாய் கேட்க…

 தர்ஷினி தெரியல என்பது போல் அவரை பார்த்தவள், பதில் ஏதும் பேசாமல் அவ்விடம் விட்டு வெளியே சென்று விட்டாள்…

    அந்த பெண் வெளியே வந்தவர் ஜெய்யயும் தேவாவையும் தேடிப் பார்க்க அங்கு அவர்கள் இல்லாததால் தனது வேலையை பார்க்க சென்று விட்டார்…

       தர்ஷினி தியேட்டருக்குள் சென்று பார்க்க முயல, அங்கு வசியின் அருகில் ஷில்பா அவன் கையை பிடித்து அமர்ந்து இருப்பதும், அவனும் அவளை பிடித்துக்கொண்டு இருப்பதையும் பார்த்தவளுக்கு மனம் வலிக்க, அதற்கு மேல் அங்கு நிற்க மனம் ஒப்புக்கொள்ள வில்லை.. திரும்பி விறு விறுவென வெளியே செல்ல, தேவாவும் ஜெய்யும் மேலே மறைந்து நின்று நடப்பதை பார்த்தனர்…

       டேய் அவ போறா டா என ஜெய் தேவாவிடம் சொல்ல.., போகட்டும் டா இப்ப அவ பின்னால் போனா மாட்டிப்போம்.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்றவன்.. தர்ஷி தியேட்டரை விட்டு முழுவதுமாக வெளியே சென்றதும் ஒரு ஆட்டோ பிடித்து அதில் ஏற.. அப்போது தான் ஜெய்யும் தேவாவும் வெளியே சென்று தனது பைக்கை எடுத்து அந்த ஆட்டோவை தூரமாக இருந்தப்படி பின் தொடர்ந்தனர்….

      தர்ஷிக்கு மனம் முழுக்க ரணமாய் இருந்தது… வசிய நம்பி தான வந்தோம், அவன் எப்படி என்ன பத்தி யோசிக்கவே இல்ல.. ஷில்பா பக்கத்துல உட்காந்து ஜாலியா படம் பாக்குறான்.. என்ன காணும்னு கூட தேடி பார்க்கல.. ச்ச என தொடையில் குத்திக் கொண்டவளின் கண் முன் தேவாவின் முகம் வந்து சென்றது… இந்நேரம் அந்த அக்கா வந்து கதவை திறக்கலைன்னா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்! ஒரு மணி நேரம் உள்ளேயே கிடந்திருப்பேன்., என்றெண்ணினாள்… அவள் அந்த பெண் ஏதார்த்தமாய் வந்து வந்து கதவை திறந்ததாய் நினைத்துக் கொண்டாள்…

    தேவா ஜெய் தர்ஷி மூவரும் சேர்ந்து பல முறை தியேட்டருக்கு சென்று இருக்கிறார்கள்.. அவள் ரெஸ்ட்ரூம் சென்றாலும் தேவா கொஞ்சம் தள்ளி அவளுக்காக காத்திருப்பான்.. அவள் வந்த பிறகு தான் சேர்ந்து சென்று ஸ்னாக்ஸ் வாங்குவார்கள்.. அதை எல்லாம் மனதில் அசை போட்டவள் கண்களில் கண்ணீர் தான் வந்தது…

     தேவா சாரி டா எனக்கு இதெல்லாம் தேவை தான்.. இனிமேல் உன்ன உதசினப் படுத்த மாட்டேன் என முனு முனுக்க இங்கு தேவாவுக்கு தான் அவள் தன்னை பற்றி நினைப்பளோ! என தோன்றவும்… எப்படி நினைச்சி பார்ப்பா, இப்டி எதிர்பார்த்து, எதிர்பார்த்து தான் டா எதுவும் நடக்காம போய் ரொம்ப நொந்து போய் இருக்கேன் என மூளை அவன் மனசாட்சியை திட்ட வேதனையுடன் அவளை பின்தொடர்ந்து  செல்ல.. தர்ஷினியின் வீடு வரைக்கும் சென்றவர்கள் அவள் தன் வீட்டிற்குள்  நுழைந்ததும் தான் அங்கிருந்து தேவா நகர்ந்தான்…..

    தொடரும்…..

 படிச்சி பாத்துட்டு மறக்காம staars குடுங்க 🙏🙏🙏🙏

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!