தேவதை 6
கல்லூரிக்கு கிளம்பி சென்றவன்,, தர்ஷினியை அழைப்பதற்கு அவள் வீட்டிற்கு செல்ல.. அவனுக்கு முன்பே வீட்டின் வாசலில் கிளம்பி நீல வண்ண சுடிதாரில்,, அழகாய் நின்றிருந்தாள் அவன் தேவதை…
அவளைப் பார்த்ததும் ஹாய் வண்டு, கிளம்பிட்டியா? என புன்னகைக்க
ஹ்ம்ம் டா போலாமா? என அவன் பைக்கில் ஏறி அமரவும் … வீட்டினுள் இருந்து அவள் தாய், மஞ்சுளா வெளியே ஒரு லன்ச் பையுடன் வந்தவர்,,
எப்பா தேவா,, இதுல உனக்கும் ஜெய்யிக்கும் சேர்த்து பிரியாணி இருக்கு மதியம் சேர்ந்து சாப்பிட்ருங்க.. என நீட்ட சரிங்க த்தை என வாங்கி வைத்துக் கொண்டான்… பார்த்து போங்க என வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்….
ஏய் வண்டு இன்னைக்கு என்ன டி பிரியாணிலாம்,, எனக்கு தெரியாம என்ன விஷேசம்?
சும்மா டா காலைல சீக்கிரம் முழிச்சிட்டேன்… பாத்தா சிக்கேன் வாங்கி வச்சிருந்தாங்க…நா போர் அடிக்குதேனு கொஞ்சமா எடுத்து வீடியோ பார்த்து பிரியாணி காலைல செஞ்சேன்.. அப்பா, அம்மானு யாருமே சாப்பிடல,, அது அப்படியே இருந்துச்சி அத தான் அம்மா உனக்கு குடுத்து விட்டாங்க.., என்றதும் வண்டியை சட்டன் பிரேக் போட்டு நிறுத்தினான்….
வேகமாய் பிரேக் போடவும் அவன் முதுகில் போய் சாய்ந்து,, மீண்டும் தள்ளி அமர்ந்தவள் அவன் முகத்தை என்ன என்பது போல் பார்க்க…
அதிர்ச்சியுடன் அவளை திரும்பிப் பார்த்தவன்…ஏதேய் நீ செஞ்சியா? ஏண்டி சரியான கொலை கார குடும்பமா இருப்பீங்க போல! அப்டி என்னடி அத்தைக்கு கோவம் எங்க மேல? என்று அவளை சீண்டிப் பார்க்க…
டேய் போதும் ரொம்ப பேசாத… நா எங்கம்மா உனக்கு எடுத்துட்டு போக சொன்னப்பவே வேண்டாம்னு பாக்ஸ மறச்சி வச்சிட்டு உன்ன காப்பாத்த பாத்தேன்.. ஆனா எங்கம்மா அத கண்டு பிடிச்சி கொண்டு வந்து உன் கைல குடுத்துட்டாங்க.. அதுக்கு நா என்ன பண்ண? என உதடு பிதுக்க…
அவளின் பஞ்சு மிட்டாய் உதடுகளின் கீழ் உதட்டை பிடித்து கொஞ்ச வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.. தலையை திருப்பி உலுக்கி கொண்டவன்,, பைக்கை ஸ்டார்ட் செய்திருந்தான்…
சரியான பிளான்னிங் குடும்பமா இருக்கும் போல.. நா என் லவ்வ சொல்றதுக்குள்ள என்ன கொன்றுவா போலயே! வேண்டாம் டா மறந்தும் அந்த பிரியாணிய தொட்டுறாத.. அவ கட்டாயப் படுத்தினாலும் சரி எதுவா இருந்தாலும் அந்த டைரிய குடுத்த பிறகு எந்த விஷ பையிற்சியா இருந்தாலும் வச்சிக்கலாம் என எண்ணியப் படியே கல்லூரிக்கு சென்றிருந்தனர்…
வண்டு க்ளாஸ் போ,, பைக்கை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்.. என செல்லப் பார்க்க…
இல்ல நா மரத்தடிக்கு கீழ நிப்பேன்.. நீ வா சேர்ந்து போலாம் என ஓடி சென்று மரத்தடியில் நின்றுக் கொண்டாள்…
பைக்கை பார்க் செய்து விட்டு வந்தவன் கண்ட காட்சியில் திகைத்து அப்படியே உறைந்து போய் நின்று விட்டான் தேவா…
அந்த சீனியர் மாணவன் தான் தர்ஷியினியிடம் நின்று பேசிக் கொண்டு நின்றிருந்தான்…
தேவாவிற்கு கோவம் பொத்துக் கொண்டு வரவும் அவர்கள் அருகில் செல்ல மனமின்றி நேராக தனது களாசிற்கு ஒதுங்கி சென்றுவிட்டான்… அவளுக்கு பிடிக்காமல் யாரேனும் ஒருவர் வந்து நின்று அவளிடம் பேச்சு கொடுத்திருந்தால் நடப்பதே வேறு… ஆனால் அவளும் அல்லவா சிரித்து பேசிக் கொண்டு இருக்கிறாள்… பார்க்கவே மனம் வலிக்க.. அங்கு நிற்க முடியாமல் சென்று விட்டான்…
தர்ஷினி தனியாக நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த அந்த சீனியர் அவள் அருகில் சென்று…
ஹாய் மா உங்க பேரு என்ன? எந்த கோர்ஸ்? என ஏதார்த்தமாக பேச்சுக் கொடுக்க…
முதலில் தர்ஷிக்கு ஷாக்கிங்காக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவள், இயல்பாக தான் பேசினாள்…
நா தர்ஷினி.. கம்ப்யூட்டர் சயின்ஸ்… ஆமா நீங்க என்ன க்ரூப்? என அவள் பதிலுக்கு கேட்க…
அழகாய் சிரித்தவன் நா வசீகரன்… எல்லாரும் வசினு கூப்பிடுவாங்க.. செகண்ட் இயர் பிபிஏ.. என தன்னை அறிமுகம் செய்துகொண்டான் அவன்….
ஹ்ம்ம்… வசீகரன் உனக்கு ஏத்த பேரு தான் என நினைத்துக்கொண்டாள்…
ஆமா இங்க எதுக்கு நிக்குற? கிளாஸ் போகலையா? என வசி கேட்க….
நா என் பிரெண்ட்க்காக வெயிட் பண்றேன்.. இப்போம் வந்திருவான்.. என்றதும்..
சரி அப்புறம்…. என அழகாய் புருவம் உயர்த்தி கேட்டவனிடம்,, ஒரு நொடி விழாமல் இல்லை அவள்….
அப்புறம் வேற என்ன? என அவள் விழிக்க..
உனக்கு இந்த கலர் ட்ரெஸ் நல்லாருக்கு என அவன் சொல்ல…
தேங்ஸ் என்றாள்… அப்போது கொஞ்சம் மாடர்னான பெண் ஒருத்தி அங்கு வந்து வசியின் தோளில் கை வைத்து அழைக்கவும்..
சரி மதியம் கேண்டீன் வா, பேசலாம் என ஓடியவனை,, பார்த்தபடியே நின்றவள்.. பெல் அடிக்கும் சத்தம் கேட்டு பார்க் பண்ண போனவன இன்னும் ஆள காணும்? என தன் கண்களால் தேவாவை தேடி அலசியப்படி களாசிற்கு சென்று பார்க்க…
தேவா அவன் இடத்தில் தான் அமர்ந்து ஜெய்யிடம் பேசிக் கொண்டிருந்தான்… அதைப் பார்த்துக் கடுப்பானவள்…
பேகை அவன் முன் தூக்கி எறிந்து, அறிவு இருக்கா டா உனக்கு? நா அங்க உனக்காக தான நின்னுட்டு இருக்கேன்.. நீ இங்க வந்து எனக்கு முன்னாடி உட்காந்திருக்க என மூக்கு விடைக்க பேச….
அவள் முகத்தை பார்த்த தேவா எதுக்கு இப்ப இவ்ளோ கோவப்படுற? நீ அந்த சீனியர் பையன்கிட்ட நின்னு மும்முரமா பேசிகிட்டு இருந்த.. சரி னு தான் வந்துட்டேன் என சாதாரணமாக சொல்லவும்….
ஆமா டா தேவா என முகத்தில் சந்தோசம் மிளிர அவன் அருகில் வந்து அமர்ந்தவள் .. அந்த பையன் என்கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தான்… பர்ஸ்ட் அவன் என்கிட்ட வந்து பேசுனப்ப ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சி… அவன் பேரு என்னனு தெரியுமா? என அவனின் தோளில் தன் தோளால் இடித்து கேட்க….
சொன்னா தான தெரியும் என கடுப்படித்தான் தேவா…
இப்ப எதுக்கு டா என்கிட்ட கடுப்படிக்குற? நீ என்ன விட்டுட்டு வந்ததுக்கு நியாயமா நா தான் உன்மேல கோவப்படணும்.. என்றவளை கண்கள் மூடி பெருமூச்சி இழுத்து விட்டு பார்த்தான்….
சரி சொல்லு அவன் பேரு என்ன? என சிறிது மென்மையான குரலில் கேட்க..
சிரிச்சிகிட்டே கேளு அப்ப தான் சொல்லுவேன்.. என முகம் சுருக்கி சொல்லவும்…
நீ சொல்லவே வேண்டாம் போடி என்றான் ஜெய்…
டேய் நா ஒன்னும் உங்கிட்ட பேசல… மூடிட்டு போடா.. என ஜெய்யிடம் வம்புக்கு சென்றிருந்தாள்… இருவரும் மாத்தி மாத்தி கத்தவும்..
அட ச்சை அடிச்சிக்காதீங்க,, என தேவா கடுப்படுத்திருந்தான்… தர்ஷினி பக்கம் திரும்பியவன் அவள் முகத்தை உற்று நோக்கி சரி அவன் பேரு என்ன சொல்லு என்றதும்
அவ்வளவு நேரம் இருந்த கோவம் அவள் முகத்தில் மறைந்து இருந்தது… அதையும் தேவா கவனித்து இருந்தான்…டேய் தேவா அவன் பேரு வசீகரன் டா.. நல்லாருக்குல்ல? பேருக்கு ஏத்த மாதிரி அவ்ளோ அழகா இருந்தான் டா.. அவன் முகத்தை ரொம்ப கிளோஸ் ல பாத்தேன்… பல்லுலாம் குட்டி குட்டியா செம க்யூட்… கன்னத்துல குழி வேற..
அப்புறம் இந்த ப்ளூ ட்ரெஸ்ல செமையா இருக்கேன்னு சொன்னான்.. எனக்கு அப்டியே மனசு முழுக்க பட்டாம்பூச்சி தான்.. என மூச்சை இழுத்துவிட்டு சிரித்தாள்…
நல்லா தான் பேசிகிட்டு இருந்தோம் ஆனா அதுக்குள்ள ஒரு பொண்ணு வந்து அவள கூப்டு போய்ட்டா..என ஏக்க பெருமூச்சு விடவும்… தேவாவின் இதயம் ரணமாய் வலித்தது…
இந்த அளவுக்கு அவனை ரசித்து இருக்கிறாளா! என்ற எண்ணமே போதும் அவனுக்கு.. உடலை விட்டு உயிர் சென்றிருந்த பிணமாய் அமர்ந்திருந்தான் அவன்… அவனை ஆயுதமின்றி கொன்றுக் கொண்டு இருந்தாள் அவனின் தேவதை….
டேய் தேவா மதியம் கேன்டீனுக்கு வர சொல்லிருக்கான் டா… ப்ளீஸ் ப்ளீஸ் போலாம் என அவனின் கையை பிடித்து ஆட்டவும்…
உனக்கு வேணும்னா நீ போ டி.. அந்த மூஞ்சியலாம் எங்களால பாக்க முடியாது என ஜெய் கடுப்படிக்க…
உனக்கு என்னடா பிரச்சனை.. வந்ததுலேந்து ஓவரா பேசுற. நா உன் பேச்சுக்கே வரல மரியாதையா இருந்துக்க.. அவன் மூஞ்சிக்கு என்ன குறை. ஆணழகன் டா அவன் என்றதும் தேவா கசந்த புன்னகை சிந்தினான்…
ஆணழகனா? அப்ப அங்கேயே போடி எதுக்கு எங்ககிட்ட பேசிட்டு இருக்க? டேய் தேவா மதியம் நீ போகாத டா.. நீயே போய் அவன்கிட்ட பேசிக்க டி.. தெண்டம் படிக்க வந்தியா? இல்ல சைட் அடிக்க வந்தியா? என கோவத்தின் உச்சத்தில் தனது நண்பனுக்காக பேசினான் ஜெய்….
தேவா அவன் என்ன எப்புடி பேசுறான்.. நீ கண்டுக்காம இருக்கல்ல.. என்றவள் கோவத்துடன் அந்த இடத்தை விட்டு எழுந்து தனது இடத்திற்கு சென்று அமந்துவிட்டாள்….
டேய் மச்சான் போதும் டா இப்டியே எல்லாத்தையும் மனசுல அடக்கி வச்சிட்டு பைத்தியமா போயிராத.. உன் காதல வெளிப்படையா சொல்லிரு..உன்ன நெனச்சா கவலையா இருக்குடா என்னையும் ஏதும் சொல்லக்கூடாதுனு மிரட்டி சத்தியம் வாங்கி வச்சிருக்க… ஏண்டா இப்டி பண்ற? உண்மையான ஆதங்கத்தில் கூறினான் ஜெய்…
டேய் அவனை பத்தி பேசுறப்ப அவ முகத்துல தெரிஞ்ச சந்தோசத்த பாத்தியா? மச்சான் அது என்கூட இருக்குறப்ப கூட நா பாத்தது இல்ல டா.. அவளுக்கு புடிச்சத அவ செய்யட்டும். இனி என் காதல பத்தின மூச்சி கூட விட மாட்டேன் டா.. நீயும் ஏதும் சொல்லக்கூடாது என்றவனுக்கு மனம் முழுக்க துடித்துக் கொண்டிருந்தது..
பைத்தியம் முத்திப் போச்சா டா.. நீ உசுரா நினைக்கிறவள எப்படி இன்னோருத்தனுக்கு விட்டுக் கொடுக்க மனசு வருது? நீ உண்மையா தான் அவளை லவ் பண்றியா? என அவனை வெறுப்பேத்த கேட்டவனை.. கண்களில் வலியுடன் பார்த்தவன்…
என்னடா நீயும் என்ன வெறுப்பேத்தி பாக்குறியா? இப்டிலாம் பேசுனா அவகிட்ட உண்மைய சொல்லிருவேன்னு பாத்தியா? அவளுக்கு இனி துணையா தான் டா இருப்பேன்.. அவ சந்தோசம் தான் எனக்கு நிம்மதிய தரும்.. அவ இன்னோருத்தன பத்தி பேசுறப்பவே எனக்கு தெரிஞ்சி போச்சி அவ மனசுல துளியும் நா இல்லனு… என் நம்பிக்கை எல்லாமே போயிட்டு மச்சான்….என்றவனை விழி அகலாது பார்த்த ஜெய்….
இன்னைக்கு இவன் பேக்ல உள்ள டைரிய எப்படியும் அவகிட்ட சேர்த்திரனும்,, இல்லனா எல்லாமே மோசமா போயிரும் என தீர்மானம் எடுத்துக்கொண்டான் ஜெய்….
தொடரும்…..