தேவை எல்லாம் தேவதையே…

4.6
(32)

தேவதை 9

உன்ன பத்தி கேட்டா அதுல முக்கால்வாசி உன் பிரெண்ட் தேவா தான் இருப்பான் போல என்றான் வசி..

   ஆமா பின்ன சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்,, சோ என் லைஃப திரும்பி பார்த்தா, சந்தோசம் மட்டும் தான் இருக்கும், அதுக்கு பின்னாடி எல்லாமே தேவா தான் என்றாள்…

   ஹ்ம்ம் கூட இன்னொரு பையன் இருப்பானே அவன் பேரு என்ன? என வசி கேட்க..

    அவன் பேரு ஜெய், அவனும் எங்க பிரெண்ட் தான்.. என்றாள் தர்ஷினி..

    அவனும் சின்ன வயசுலேந்து உங்க கூட தான இருக்கான்.. அது என்ன அவனை விட உனக்கு தேவா பெஸ்ட் என்றதும் தர்ஷினிக்கே அது என்னவென்று தெரியவில்லை…

   அது தெர்ல, அப்டி தான் என்றதும்

ஹ்ம்ம்ம் நீ ரொம்ப லக்கி தெரியுமா? என வசி தர்ஷியிடம் சொல்லவும்

   எதுக்கு இப்டி சொல்றிங்க? நா என்ன லக்கி என சந்தேகத்துடன் கேட்டாள்

ஆமா தேவா மாதிரி ஒருத்தன் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் என வசி ஏதோ புரிவது போல் பேச,, அங்கு தர்ஷி தான் குழம்பி போனாள்…

எதுக்கு தேவா கிடைக்க நா குடுத்து வச்சிர்க்கணும், புரியிற மாதிரி சொல்லுங்க….

    அது போக போக உனக்கே புரியும் என்றவன், சரி நாளைக்கு காலேஜ் லீவ் நீ என்ன பிளான் போட்ருக்க.. என வசி கேட்க…

ஒரு பிளானும் இல்ல, எப்பவும் நாங்க மூணு பேரும் தேவா வீட்டுக்கு போயிருவோம், இல்ல என் வீட்டுக்கு வருவானுங்க, நாளைக்கு என்னனு காலைல தான் தெரியும் என்றவள் சரி நீங்க என்ன பிளான் போட்ருக்கீங்க எனத் தர்ஷி கேட்கவும்

     நா என்ன பசங்களோட சேர்ந்து சும்மா ரைடு போவோம்,, இல்லனா மூவி, பீச், பப் னு சுத்துவோம்

    ஹ்ம்ம் சரி வேற ஒன்னும் இல்லல. நா வைக்கட்டா? தேவா வேற 10 தடவ கால் பண்ணிட்டான் என்றதும்

    லூசு அப்ப என்ன கட் பண்ணிட்டு பேச வேண்டிதான என்றான் வசி…

    அது ஒன்னும் பிரச்சனை இல்ல, அவன் சொன்னா புரிஞ்சிப்பான்.. சரி தூங்குங்க குட் நைட் என்றாள் கொட்டாவி விட்டப் படியே….

     அதில் சிரித்து வைத்த வசியோ.. ஹ்ம்ம் குட் நைட் டி தூங்கு என்றதும்
என்னது டி யா? என மூக்கை சுருக்கி கேட்க..

    ஆமா,  டி தான் போடுவேன் ஏண்டி தப்பா டி, டி போட்டு பேசக்கூடாதா டி என அத்தனை டி போட்டு பேச,,

    சரி சரி போதும் பா…..எத்தன டி போடுறீங்க? சரி பை என போனை வைக்கவும்,

    வசி தனது மஞ்சத்தில் விழுந்தவன் புன்னகைத்த படியே தன் நெஞ்சை நீவி கொண்டான்…

     தர்ஷி தேவாவிற்கு அழைத்துப் பார்க்க தேவா அங்கு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

     ஆனால்  அன்னேரம் செல் போனில் இன்ஸ்டாவை பார்த்தப் படி இருந்த ஜெய் அவள் கால் செய்ததை பார்த்ததும் கோவத்தில் கட் செய்து வைத்து விட்டான்…

     என்ன கட் பண்றான், இப்டிலாம் பண்ண மாட்டானே! திரும்ப ட்ரை பண்ணுவோம் என மீண்டும் தேவாவிற்கு கால் செய்ய ரிங் போனதும்,, மீண்டும் ஜெய் கட் செய்து விட்டான்…

     இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சி? எப்போதும் நா கால் பண்ணா ஒரே ரிங்ல எடுப்பான்.. இன்னைக்கு என்ன கேடு வந்துச்சாம் என யோசித்தப் படி கால் செய்தவாறு இருக்க,, ஜெய் உச்சக்கட்ட கோவத்துக்கே சென்றுவிட்டான்..

     இம்புட்டு நேரம் அவன்கூட பேசி முடிச்சிட்டு, இப்ப தேவாகிட்ட பேசலானு வரியா? போடீங்க… என தேவாவின் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, அமைதியாக படுத்து பால் வடியும் தனது நண்பனின் முகத்தை பார்த்தப் படியே கண் அசந்து தூங்கி விட்டான்

     என்ன போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது! ஏதும் கோவமோ! அவன் அடிச்சப்ப எடுக்கலன்னு, ச்ச ச்ச என் தேவாக்கு கோவமே என் மேல வராது,, ஒரு வேள சார்ஜ் இல்லாம கூட சுவிட்ச் ஆப் ஆகியிருக்கலாம்.. நாளைக்கு கேட்டுப்போம்,, ஆனா கட் பண்ணி விட்டானே! ஹ்ம்ம் ஒரே குழப்பமா இருக்கே! சரி மார்னிங் அடிச்சிப் பார்ப்போம் என்றவள் போனை சார்ஜில் போட்டு விட்டு உறங்கினாள்..

    ( அம்மணி ஒரு நைட் அவன் போன எடுக்காம இருந்ததுக்கே இந்த பொலம்பு பொலம்புறீங்க ) ஒரு நேரத்தில் தேவா முற்றிலும் அவள் மீது கோவப்பட்டு, வெறுப்பின் உச்சத்தில் அவளிடம் பேசாமால் இருக்கப்போவது தெரிந்தால், தாங்குவாளா!

     தூங்கி எழுந்து தேவா தனது செல்லைப் பார்க்க அது சுவிட்ச் ஆபில் இருப்பதை பார்த்துவிட்டு, ச்ச சார்ஜ் போட மறந்துட்டேனா! தர்ஷி கால் பண்ணிருந்தா சுவிட்ச் ஆப்ன்னு வந்திருக்குமே!

       ஐயோ என தலையில் அடித்துக் கொண்டு வேகமாய் எழ, அப்போது தன் இரு கால்களையும் கைப்புள்ளை போல் சுவரில் முட்டுக் கொடுத்து,, வாயை பிளந்து தூங்கிக் கொண்டிருக்கும் ஜெய் மீது தடுமாறி விழுந்தான் தேவா..

     அய்ய்ய்ய்ய்யோ! என பெரும் சத்தத்தில் ஜெய் கண் விழித்து தன் வயிற்றின் கீழ் இரு கைகளால் பொத்தி கால்களை குறுக்க, தேவா சிறு பிள்ளை போல் செய்வதறியாது தவித்தான்…

     அங்கும் இங்கும் புரண்டு ஆர்ப்பாட்டம் செய்து விட்டு தேவாவை பார்க்க, திருட்டு முழியுடன், ம மச்சான் அடி ரொம்ப பலமோ! சாரி டா என் போன் சுவிட்ச் ஆப் னு வந்துச்சி தர்ஷி கால் பண்ணிருப்பாலோன்னு பயத்துல வேகமா எழுந்தேனா உன் மேல தெரியாம விழுந்து, படக்கூடாத இடத்துல அடிப்பட்டு…… என இழுத்தவன் ஈஈஈ என அசடு வழிந்தான்…

    எழக் கூட முடியாமல் கீழே கையை வைத்து பொத்தியவன், உன் போன சார்ஜ் போட, என் போன சுவிட்ச் ஆகிட்டியே டா,!நேத்து தான டா ஒரு பொண்ணு பேசிச்சு அதுக்குள்ள இப்டி பண்ணுனா என்ன டா அர்த்தம்? என ஆத்திரமாய் கேட்க

     ஹீஹீஹீ சாரி டா மச்சான், என்றவனை அட  ச்சை முதல்ல எழுந்து போடா போய் ஐஸ்கட்டிய கொண்டு வா ஓடு என வலியில் கத்தவும்

    சாரி சாரி டா இதோ கொண்டு வரேன், என்றவன் வேகமாய் கீழே ஓடினான்..

    சும்மா இருந்த என்ன,, மனசு சரி இல்லனு வர வச்சி, என் குட்டி கு… நெஞ்ச மிதிச்சி, குடு டா அந்த ஐஸ் கட்டிய என புலம்பியப் படி, அவனிடம் இருந்து ஐஸ் கட்டியை வாங்கி பெட்ஷீட்டுக்குள் கை விட்டு,, தன் இன்னருக்குள் போட்டுக் கொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டான்…

     அவன் அருகில் அமர்ந்த தேவா பயத்துடன் அவன் தொடையில் கை வைத்து, இப்ப எப்படி மச்சான் குளு குளு னு இருக்கா டா எனக் கேட்கவும்

     ஜெய்யிக்கு பத்திக் கொண்டு வந்தது,, ராசா நீ என்ன வர வச்சி உன்னால என்ன பண்ண முடியுமோ, அத பண்ணிட்ட மரியாதையா இறங்கி கீழ போயிரு.. போடா என கத்த,, தேவா நொடியும் அங்கு நிற்காமல் இறங்கி தனது அறைக்கு சென்று விட்டான்…

    அத்தை அத்தை என வாசலில் இருந்து கத்தியப்படி தேவாவின் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள், தேவாவின் தேவதை…

     ஹே வா டா தர்ஷி எப்படி இருக்க? வா வா என அவளின் தோளில் கை வைத்து உள்ளே அழைத்தார் தேவாவின் தந்தை செல்வம்…

  மாமா எங்க மாமா தேவா? கண்களை சுழட்டியப் படி கேட்க, குளிச்சிட்டு இருக்கான் மா.. நீ உட்காரு

     வா டா குட்டி எப்படி இருக்க? அம்மா, அப்பாலாம் நல்லாருக்காங்களா? என ஓடி போய் அவள் கை பிடித்து அழைத்து டைனிங் டேபிளில் தேவாவின் தாய் கலாவதி அமரவைத்தார்…

    எல்லாரும் நல்லாருக்காங்க அத்தை.. அம்மா இந்த பணியாரத்த குடுத்து விட்டாங்க, என ஒரு வாலியை கலாவதியிடம் கொடுத்து, என்ன அத்தை பொங்கலா? நெய் வாசம் தூக்கலா இருக்கு என மூச்சை நன்றாக இழுக்க…

    சிரித்தவர் ஆமா டா குட்டி,, சரி டா இத கொடுக்கவா இவ்ளோ காலைல வந்த? என குறும்பு மின்னக் கேட்டார் கலாவதி…

    ச்ச உங்க பொங்கல சாப்டுட்டு,, அப்டியே தேவாவ பாத்துட்டு போலாம்னு வந்தேன்….

     அப்டி சொல்லுடி என் அழகு பொண்ணு தர்ஷியின் கன்னம் கிள்ளி கொஞ்ச…

     அடியே புள்ளய்க்கு ஒரு தட்டுல பொங்கலும், வடையும் வச்சி கொண்டு வா பேசிக்கிட்டே இருக்காத, என சோபாவில் அமர்ந்த செல்வம் கத்த….

     இதோங்க வந்துட்டேன் என புன்னகைத்தவாறே அடுப்படிக்கு சென்றார்… கலாவதி க்கு தன் மகனைப் போல் தர்ஷி என்றால், அவ்வளவு உயிர்…

     ஒரு தாயாக, நல்ல தொழியாக தேவாவிடம் பழகும் கலாவதிக்கு தெரியும், தர்ஷி மேல் தன் மகன் எவ்வளவு உயிராய் இருக்கிறான் என்று… அவருக்கும் தர்ஷினி தன் வீட்டுக்கு மருமகளாய் வந்தால், போதும் என்ற எண்ணம் இல்லாமல் இல்லை… பார்ப்போம்….

     அப்போது தேவாவின் அறையில் இருந்து வெளி வந்த ஜெய் யும், தேவாவும்,, டைனிங் டேபிளில் அமர்ந்து பொங்களை விழியை உருட்டி வாயில் திணித்து கொண்டிருக்கும் தர்ஷினியை பார்த்து இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது…

     ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்,, அவளுக்கு எதிர் முனையில் இருக்கும் சேரில் அமர,, தர்ஷினி அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தப் படி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்….

     ஜெய் அவளை பார்த்து, நீ எங்க இங்க? என தெனாவெட்டாக கேட்க,,

     ஹ்ம்ம் பொங்கல் போடுறதா சொன்னாங்க, சாப்பிட்டு போலாம்னு வந்தேன்., என தட்டில் இருக்கும் வடையை எடுத்து தேவாவை முறைத்தப் படி ஆக்ரோசமாக கடிக்க…

     தேவா அவளின் கோவத்தை பார்த்து எச்சில் விழுங்கினான்…

     இருவருக்கும் சாப்பாடு வைக்க ஜெய்யும், தேவாவும் அமைதியாக உண்டனர்… தனது செல் போனை பார்த்தப் படி ஜெய் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. காக்கையை விட மோசமாக பறந்து வந்து அவன் தட்டில் இருந்த வடையை தூக்கி தன் வாயில் வைத்திருந்தாள் தர்ஷி….

     உண்மையாகவே ஜெய்யிக்கு கோவம் வந்துவிட்டது,,( சாப்பாட்டுல கை வச்சா யாருக்கு தான் கோவம் வராது 🤭🤭) இப்போ தான டி முழுங்குன, திண்ணிப் பண்டாரம்…

     அசருவாளா, போடா எரும,, ஆயில் அய்ட்டமா சாப்பிட்டு தொப்பை போடுது பாரு, உடம்பை குறை டா என்றவள், தேவா சாப்பிட்டு முடித்து தட்டை சிங்கில் போட அடுப்படிக்கு செல்ல.. அவன் பின்னால் பறந்து சென்றவள்,, தேவாவின் காதை திருகி மாடிக்கு வா உன்கிட்ட பேசணும் என ஹாலுக்கு வந்து விட்டாள்…

     தேவாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை, என்ன பேசணும்? என்பது போல் மாடிக்கு செல்ல,, அவன் பின்னால் தர்ஷி செல்லவும்,, நானும் வருவேன் என பொங்கல் தட்டுடன் அவர்களை தொடர்ந்தான் ஜெய்…..

 தொடரும்ம்ம்ம்…….

    நிறைய பேர் படிக்கிறிங்க, பட் ஸ்டார்ஸ் குடுக்க மாட்றிங்க… ப்ளீஸ் ப்ளீஸ் ஸ்டார்ஸ் குடுத்துட்டு போங்க 🥰🥰

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!