தேவை எல்லாம் தேவதையே…

4.9
(31)

தேவதை 10

தர்ஷினி மாடிக்கு செல்ல அவளை தொடர்ந்து தேவாவும் ஜெய்யும் சென்றனர்..

ஜெய் அங்கிருக்கும் திண்டில் ஏறி அமர்ந்து,நடப்பதை வேடிக்கை பார்த்தப் படி, வடையை சாம்பாரில் தொட்டு வாயில் அமுக்கி கொண்டிருந்தான்…

என்ன தான் டா பிரச்சனை உனக்கு நேத்து எத்தனை முறை கால் பண்ணேன், எதுக்கு கட் பண்ணி விட்ட? என மூக்கு விடைக்க கேட்டாள் தர்ஷினி…

தேவா புரியாப் பார்வையுடன், நீ எப்ப கால் பண்ண? நா எப்ப கட் பண்ணி விட்டேன்,,

சும்மா நடிக்காத? நா செம கடுப்புல இருக்கேன். அத்தனை முறை கால் பண்ணேன், நீ கட் பண்ணி விட்டுட்ட.. அதுக்கு பிறகு என் தொல்லை தாங்காம போனையே சுவிட்ச் ஆப் பண்ணிட்ட.. என்ன நெனச்சிக்கிட்டு இருக்க? என பல்லைக் கடித்துக் கொண்டே அவனை நெருங்க…

இரு டி, இரு டி கொஞ்சம், நீ கால் பண்ணதே எனக்கு தெரியாது, இதுல கட் பண்ணி, சுவிட்ச் ஆப் பண்ணி, என முழித்தவன், அதன் பிறகு யோசனை வந்தவனாய் இடுப்பில் கை வைத்து ஜெய்யை பார்க்க, தர்ஷினியும் அவன் பார்வையில் ஓரளவு நடந்ததை யூகித்தவள்  திரும்பி அவளும் ஜெய்யை பார்த்தாள்..

அங்கு பொங்கலின் ருசியில் விரலை சப்புக் கொட்டியிருந்த ஜெய் என்ன அமைதியாகிட்டுங்க என அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான்…

ஐயோ ரெண்டும் நம்மள தான் பாக்குதுங்க, நா பண்ண வேலை தெரிஞ்சிருச்சோ! சமாளிப்போம் என எண்ணியவன் தட்டுடன் திண்டில் இருந்து கீழே இறங்கி,, நம்ம யார் வம்பு தும்புக்கும் போறது இல்ல,, நா உண்டு என் சாப்பாடு உண்டுன்னு இருப்பேன், என்றவன் புலம்பியப்படி படி இறங்கப் பார்க்க,, இருவரும் ஓடி சென்று அவனை பிடித்து இழுத்தனர்… தர்ஷினி அவன் மண்டையில் நான்கு கொட்டுகளை வைத்தாள்…

ஏய் ச்சே சே விடுங்கல என்னய,, இப்ப எதுக்கு என்ன அடிக்கிறீங்க… நீ நைட் முழுக்க அந்த சீனியர் பையன் கூட பேசிட்டு இருந்த.. நா உனக்கு 10 தடவைக்கு மேல தேவா நம்பர்லந்து அடிச்சி பாத்து நீ எடுக்கல, அதான் காண்டுல இருந்தேன்… அப்றம் தேவா தூங்குன பிறகு, நீ கால் பண்ணா? அதான் கட் பண்ணி விட்டேன்.. ஆனா நீ திரும்ப திரும்ப அடிச்சதும் கடுப்புல  போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன்..

ஆமா நீ எதுக்கு தேவாக்கு அடிச்ச? அப்டியே அவன்கிட்டயே பேசிட்டு இருக்க வேண்டி தான? என்றான் கடுப்புடன்

டேய் வசி கிட்ட நா பேசுனது உண்மை தான்.. ஆனா நா  தேவாகிட்ட எப்பவோ  நம்பர் ஷேர் பண்ணினத சொல்லிட்டேன்.. எனக்கு வெயிட்டிங் வந்ததும் அவன் புரிஞ்சிப்பான்னு நெனச்சேன்…

அதான் தினமும் அவன்கிட்ட பேசுறனேன்னு தான் போன எடுக்கல,, என்றதும் ஜெய் உடனே தேவாவை தான் பார்த்தான்,, தர்ஷினியின் இந்த வார்த்தை தேவாவை அதிகம் வலிக்கொடுத்து,,கலங்கவைத்தது…

தர்ஷினி நீ ரொம்ப பேசுற.. நேத்து வந்த அவன் முக்கியம் நாங்க அவனுக்கு அடுத்தது போயிட்டோம்ல! என ஜெய் ஆத்திரத்தில் கேட்டு விட…

டேய் நாயே அவனையும் உங்களையும் எதுக்கு கம்பேர் பண்ற..? நீங்களும் அவனும் ஒண்ணா எனக்கு? லூசு மாதிரி ஏதாவது உளறிக்கிட்டு,, தேவா புரிஞ்சிப்பான் அவன் புரிஞ்சிக்க மாட்டான்., நா அந்த அங்கெல்ல சொன்னேன் அவ்ளோ தான் என சமாளித்து வைத்தாள்…

தர்ஷினி இப்போது அறியாமல் விட்ட வார்த்தைக்காக பின்னால் அவதிப்படுவாள் என்பதை அறிந்திருக்கவில்லை…

சரி விடுங்க இன்னைக்கு எங்கேயும் வெளில போகலாமா? காலேஜ் விட்டா வீடுனு ரொம்ப போர் அடிக்குது டா.. என தேவாவிடம் கேட்க தேவா சரி என்பது போல் தலையாட்டினான்…

ஜெய் அதற்கும் தேவாவை முறைத்து வைத்தான்..

சரி எங்க போகலாம்!! என யோசித்தவள் ஹான் டேய் உங்கப்பா இன்னைக்கு வீட்ல தான இருப்பாரு.. உங்க போட்ட எடுத்துக்கிட்டு அப்டியே கடலுக்குள்ள போயிட்டு வந்துரலாம்.., நீ கால் பண்ணி உங்கப்பாகிட்டயும், அப்புறம் உன் பிரெண்ட் அதான் டா அந்த சப்பை அவன்கிட்டயும் இன்பார்ம் பண்ணிரு.. நா போய் மதியத்துக்கு எதுவும் செய்ய சொல்லி அத்தை கிட்ட சொல்லிட்டு வந்திடுறேன் என கீழே ஓடி சென்றாள்…

ஆனால் ஜெய்க்கு அவள் மேல் கோவம் அடங்கவில்லை.. டேய் மச்சான் பாத்தியா டா நேத்து நைட் அவ பண்ணின வேலைக்கு கொஞ்சம் கூட கில்டியா பீல் பண்ணவே இல்ல,, இப்போ கூட என்ன வார்த்தை சொல்லிட்டு போறா பாரு… தினமும் தான் உன்கிட்ட பேசுறாலாம் அதான், நேத்து வசிகிட்ட பேசுனாலாம்… அவனும் நீயும் ஒண்ணா டா? உனக்கு கோவமா வரலையா டா என்றதும்…

தேவா ஏற்கனவே வேதனையில் நின்றிருந்தவன், மீண்டும் ஜெய் அதை விளக்கி கூற இன்னும் வேதனையின் உச்சத்திற்கு அழைத்து சென்றது….

டேய் என்ன மனுஷன் டா நீ? எதையாவது எக்ஸ்பிரஸ் பண்ணு டா.. இப்டியே அமைதியா இருக்காத டா பயமாருக்கு.. அவள திட்டு, இல்ல என்ன திட்டு ஏதாவது பேசு டா என உண்மையான பயத்தில் கத்த.. தேவா அப்போதும் எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாமல் தான் இருந்தான்…

ரைட்டு டா இப்டியே இரு, கூடிய சீக்கிரம் பைத்தியம் ஆக போற, ச்சை என்ன ஜென்மமோ என்றவன் விறு விறுவென கீழே இறங்கி சென்று விட்டான்…

தேவா தான் வெறுப்பின் உச்சத்தில் நின்றிருந்தான்.. ஏக்கம், பொறாமை, கோவம் எல்லாம் ஒன்று சேர கண்ணீர் ததும்ப நின்றிருந்தான்..

தேவா, தேவா என்ற அழைப்பில் சுயத்திற்கு வந்தவன், கண்களை துடைத்து கொண்டு, இ இதோ வந்துட்டேன், என கீழே இறங்கி செல்ல… கலா தான் அழைத்திருந்தார்…

தேவா மதியத்துக்கு ரைஸும், சிக்கென் கிரேவியும் பாக்ஸ்ல வச்சி தரேன் ஓகே வா என கேட்கவும்.. ஹ்ம்ம் என தனது அறைக்குள் நுழையும் முன் தர்ஷியை கடைக் கண்ணால் ஒரு பார்வை பார்த்து ராட்சசி என முனு முனுத்துக் கொண்டான்..

ஜெய் தேவாவின் அறையில் தான் இருந்தான்.. அவன் அருகில் சென்றவன் மச்சான் என்ன பிரெண்டா நினைக்கிறவள்ட்ட என்னடா எதிர் பாக்க சொல்ற.. நா இனி அவளை நினைக்க போறதா இல்லடா..

யாரு நீயு…என்பது போல் பார்த்தான் ஜெய்…

அவ எது சொன்னாலும் ரியாக்ட் பண்றதாவும் இல்ல.. இதோட விட்ருவோம்… சரியா

ஆமா இல்லனா மட்டும் ரியாக்ட் பண்ணி கிழிச்சிருவ! போடா போய் கிளம்பு,, இப்ப தான் சப்பைகிட்ட பேசுனேன்.. அவனும் தேவையான திங்க்ஸ்லாம் கொண்டு வரேன்னு சொல்லிட்டான்., ஓடு போய் குளிச்சிட்டு வா என்றதும் தேவா குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்…

தர்ஷினிக்கு போன் வரவும் எடுத்துப் பார்க்க,, வசி தான் அழைத்திருந்தான்.. ஐயோ இப்ப எப்படி பேசுறது என திருட்டு முழி முழித்தபடி அடுப்படியை எட்டிப் பார்க்க, கலாவதியும், செல்வமும் சேர்ந்து அவர்களுக்கு மதிய உணவை தயார் செய்துகொண்டு இருந்தனர்…

ஓகே இப்ப பேசலாம் என திண்ணைக்கு சென்றவள், போனை அட்டன்ட் செய்து காதில் வைக்க…

ஹாய் தர்ஷி எங்க இருக்க? எனக் கேட்க

நா தேவா வீட்ல இருக்கேன்,, நாங்க 3 பேரும் கடலுக்குள்ள போட் எடுத்துட்டு சும்மா ரைடு மாதிரி போவோம் என்றதும் வசிக்கும் ஆசை வந்தது…

வாட்? சூப்பர்ப் டி ப்ளீஸ் நானும் வரட்டா? எப்ப பாரு பப், மூவி னு கடுப்பா இருக்கு ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்ச…

ஹலோ ஹலோ இருங்க எதுக்கு இப்டி கெஞ்சிறீங்க! இப்ப என்ன உங்களுக்கு அங்க வரணும் அவ்ளோ தான? தாராளமா வாங்க.. பட் ஒரு கண்டிஷன் நீங்க மட்டும் தான் வரணும்.. உங்க பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்டு வந்துராதீங்க.. ஏனா அது பெரிய போட் இல்ல அதுக்கு தான் சொல்றேன், என்ன ஓகே வா

ஹ்ம்ம் டபுள் ஓகே சரி எங்க வரணும் அட்ரஸ் சொல்லு என்றதும்.. அவள் வாட்ஸப்பில் அனுப்பி வைக்க.. நாங்க கிளம்புனதும் சொல்றோம் அப்ப வாங்க என போனை அணைத்து வைத்து விட்டாள்….

அப்போது திடீரென ஜெய்க்கு அந்த மர்ம பெண்ணிடம் இருந்து கால் வரவும் எடுத்து காதில் வைத்தான்…

சொல்லுமா பரதேவதை என்ன விஷயமா கால் பண்ணீங்க?

சும்மா தான் சாப்டீங்களா? என எதிர்முனையில் கேட்க

ஓஹ் நா நல்லாவே கொட்டிகிட்டேன், நீ கொட்டிகிட்டியா? என கிண்டலாக கேட்க

ஹ்ம்ம் அதெல்லாம் அப்போவே சாப்டாச்சு.. அப்புறம் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்…

நீ என்ன கேட்க போறேன்னு எனக்கு தெரியுமே!

என்ன கேட்க போறேன் சொல்லு பாப்போம்

கைல காசு இல்ல.. ரீசார்ஜ் பண்ணனும் ஜி பே பண்ணுனு கேட்ப அதான? எப்படி கரெக்ட்டா என்றதும்..

அடச்சீ புத்தி எப்படி போகுது பாரு,, குண்டு பயலே.. உன் பிரெண்ட் தேவா தர்ஷினிகிட்ட லவ் பண்ற விஷயத்தை சொல்லிட்டானா இல்லையானு கேட்கலானு பாத்தேன் என்றதும் ஜெய் விழிகளை அகல விரித்தான்…

ஏய் இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? இது எனக்கும் என் நண்பனுக்கும் மட்டும் தெரிஞ்ச விஷயம்.. உனக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. நீ யாருனு சொல்லு என அதிர்ச்சியுடன் கேட்க…

ஏன் ராசா காலேஜ் வந்தாலே நீயும் அவனும் பேசுறதே தர்ஷி விஷயம் பத்தி தானே! நீங்க பேசுறது டோட்டல் கிளாஸ் க்கே தெரிஞ்சாலும் ஆச்சரியப் படுறதுக்கு இல்ல என்றாள் அசராமல் அந்த பெண்…..

ஏய் இரு டி உன்கிட்ட நிறைய பேசணும், லைன்ல இரு என்றவன் போனை எடுத்துக் கொண்டு வேகமாய் அறையிலிருந்து வெளியே செல்ல.. சோபாவில் அமரந்து டீவி பார்த்தப் படி சிப்ஸை கபளீகரம் செய்துகொண்டு இருந்த தர்ஷினியை பார்த்ததும்… இவளா என்பது  போல் ஒதுங்கி சென்றான்..

அவனை வெறித்துப் பார்த்தவள் இவன் எதுக்கு பதுங்கி பதுங்கி போறான்.. சரி இல்லையே என நினைத்தவாறு தேவாவின் அறையை எட்டிப் பார்த்தவளுக்கு சட்டென மின்னல் வெட்ட.. வேகமாய் சிப்ஸை வைத்து விட்டு கையை உதறியவள்,, தேவாவின் அறைக்குள் நுழைந்திருந்தாள்…

தேவாவின் அறையில் அவன் குளித்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டதும் இது தான் சரியான சமயம் என வேகமாக அந்த கப் போர்டை திறந்துப் பார்க்க துணிந்தாள்…

அது பூட்டி இருக்கவே சச நல்ல சான்ஸ் மிஸ் பண்ணக்கூடாது என டேபிள், ட்ரா என ஓரிடம் விடாமல் சாவியை தேட அது அகப்பட்டுக் கொண்டது…

    தேவாவின் பைக் சாவியுடன் சேர்த்து தான் ஒரு சின்ன சாவி மாட்டப் பட்டிருக்க,, இதுவா இருக்குமோ என்ற ஐயத்தில் ட்ரை பண்ணுவோம் என பூட்டில் சாவியை விட கரெக்ட்டாக தேவா குளித்து முடித்து கீழே டவலை கட்டிக் கொண்டு வெளியே வந்திருந்தான்..

    தொடரும்.,……

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!