தேவை எல்லாம் தேவதையே….

4.5
(31)

தேவதை 11

 

ஒரு வழியாக சாவியை கண்டுபிடித்த தர்ஷினி கப்போர்டு பூட்டின் சாவியாக இருக்குமோ! என்றெண்ணி ஐயத்துடன் தான் அந்த பூட்டில் சாவியை விட, அது கச்சிதமாக பொருந்தியது,, கண்கள் மின்ன அதை திறக்க

அதற்குள் தேவா குளித்துவிட்டு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தவன்,, தர்ஷி அந்த கப்போர்டு பூட்டை திறந்த அதிர்ச்சியில் தர்ஷி….. என கத்தியவாறு அவள் அருகில் ஓட,

அவன் கத்தலிலே அவளுக்கு திட்டுக்கென்று தூக்கி வாரிப் போட்டது, வேகமாய் திரும்பிப் பார்க்கவும், தேவா ஈரத்துடன் ஓடி வந்ததால் கால் வழுக்கி அவள் மீதே மோத…

நொடிதனில் நடந்துவிட்ட மோதலில் தர்ஷி தடுமாறி கீழே விழ சென்றாள்,, சட்டென தன்னவளின் இடையில் கை வைத்து தாங்கி இருந்தான் தேவா…

தர்ஷியும் ஒரு கையை அவன் நெஞ்சில் வைத்தும், மறு கையை அவன் கழுத்தில் மாலையாக போட்டு இறுக்க பிடித்திருந்தாள்…

தர்ஷி விக்கித்து போய் அவன் முகம் பார்க்க, தேவாவும் அவள் கண்களை தான் பார்த்திருந்தான்… இரு கண்களும் நேர் கோட்டில் பயணிக்க, இருவரையும் அது ஈர்க்க தான் செய்தது… தேவா இமைக்காது இருக்கும் அவள் கண்களின் கரு விழிகளின் கதிர்வீச்சில் கைதாகி போனான்…

கண்கள் பட படக்க தே தே வா என திக்கித் திணறி தன்னவள் அழைக்கவும் தான், அவள் கண் சிமிட்டில் உயிர் பெற்றவனானான்… உடனே அவளை தூக்கி நேராக நிற்க வைத்தவன்,,

சூழ்நிலையை சரி செய்யும் பொருட்டு, சட்டென அந்த கப்போர்டை பூட்டி சாவியை எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டான்…

அது வரை அவனை உறைந்த நிலையில் நின்று பார்த்த தர்ஷினியை, புன்னகைத்த படி தலையில் தட்டி, சரியான திருட்டு பூனை டி நீ , என இயல்பாக பேச…

ஈ ஈ ஈ என இளித்து வைத்தாள்..

வண்டு வெளில போடி ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என்றதும் தான் தேவா வெறும் டவலுடன் நிற்பதையே கவனித்தாள்,, தலையில் அடித்துக் கொண்டவள்.. ஐயோ சாரி சாரி டா என தலை தெறிக்க வெளியில் ஓட,,

அவள் செய்கையை பார்த்து, பின் தலை கோதி, கீழ் உதட்டை கடித்து சிரித்தவாறு கண்ணாடி முன் நின்றவன், அவளை அணைத்த கையால் தன் நெஞ்சை தடவி கொண்டான்.. இப்பவும் ராட்சசி டி நீ என முனுமுனுத்தபடி உடை மாற்றினான்…

வெளியில் வந்து பித்து பிடித்தவள் போல் சோபாவில் அமர்ந்தவளுக்கு மனம் ஒரு நிலையாய் இல்லை.. இது வரை அவனை தீண்டாத நாள் இல்லை, அவனை பார்க்காத நாளும் இல்லை.. சகஜமாக தான் பழகுவாள்.. காதை திருகுவாள், ஒன்றாக பைக்கில் சைக்கிள், பைக் என இது வரை அவனுடன் ஒட்டுண்ணி போல தான் கூடவே அலைந்து திரிவாள்..

சாப்பாடு ஊட்டிக் கொள்வதும், ஒரே ஜுசை இருவரும் மாத்தி குடிப்பது வரை நடந்திருக்கிறது.. அப்போதெல்லாம் இல்லையே இந்த உணர்வு.. இன்று மட்டும் என்ன?! அவன் கண்கள் ஆயிரம் கதை சொல்வது போல் இருக்க, என்ன தான் புதிதாக உள்ளது! என்ன சொல்ல வேண்டும் என்னிடம்! என்ற பல கேள்விகள் எழாமல் இல்லை… அவனின் தொடுகையும் புது உணர்வை கொடுத்தது., இன்னும் அவனின் கை தன் இடையை அழுத்தி பிடித்து இருப்பது போன்ற குறு குறுப்பை கொடுக்க என்ன சொல்வதென தெரியவில்லை… இது தவறு அவன் நண்பன் அவனை பற்றி நான் இப்படி நினைப்பது தவறு,, அவனுக்கு இது தெரிந்தால் என்னை விட்டு விலகவும் துணிவான், ஏதேச்சையாக நடந்த விஷயம், இனி இதைப் பற்றி நினைக்க கூடாது, என எண்ணியப்படி அமர்ந்திருந்தாள்…

தேவா அறையை விட்டு வெளியே வந்து தர்ஷியை பார்க்கவும், ஒரே இடத்தை வெறித்து பார்த்திருந்தாள்… தேவா அவளை கவனித்தவன், ஐயோ ரூம்ல நடந்தத நினைச்சி என்ன தப்பா நினைச்சிட்டாளோ! என்ற பயம் அவனை சூழ்ந்துக் கொண்டது….

ஏமா யாரு மா நீ? என்ன பத்தியும், என் கூட இருக்குறவங்க பத்தியும் இந்த அளவுக்கு தெரிஞ்சி வச்சிருக்க.. காலேஜ் படிக்க தான வர? இல்ல எங்கள கண்காணிக்க வரியா? என ஜெய் கடுப்பில் கேட்க…

எதிர் முனையில் அமைதி,,

ஹலோ லைன்ல இருக்கியா? உன்கிட்ட தான கேட்குறேன் அழுத்தமாக கேட்டான்…

லைன்ல தான் இருக்கேன் என்ன?

 

இங்க பாரு புள்ள, இந்த விஷயம் தர்ஷி காதுக்கு போச்சுன்னா தேவாவ விட்டு முழுசா விலகிருவா என சொல்லி முடிப்பதற்குள்..

நீங்க லவ் பண்றத சொன்னாதான அவ புரிஞ்சிப்பா, அத சொல்லாமலே அவ விட்டு போயிருவா, பிரிஞ்சி போயிருவானு சொன்னா என்ன அர்த்தம் என கரெக்ட்டாக கேட்க..

அவ்விஷயம் ஜெய்க்கும் புரியாமல் இல்லை.. இருந்தும் யாரென்றே தெரியாத ஒருத்தி அவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பதை அவன் விரும்பவில்லை.., அதனால் அவளிடம் கோவமாக பேசினான்…

இங்க பாரு இதெல்லாம் எங்க பர்சனல் நீ யாருன்னே தெரியாது, எதுக்கு இதுல தலையிடுற! உன் வேலைய பாத்துட்டு போ,, இனிமேல் எனக்கு கால் பண்ணின கண்டபடி பேசிருவேன் பாத்துக்க.. வை புள்ள என திட்டிவிட்டு இவனே இணைப்பை துண்டித்தான்…

வண்டு போலாமா? டி என நகத்தை கடித்து யோசனையுடன் அமர்ந்திருந்தவளை உலுக்கவும்..

ஹ்ம்ம் டா போலாம் என அத்தை மாமா நாங்க போயிட்டு வரோம் என கத்தவும் சாப்பாட்டுக் கூடையுடன் தேவாவின், தாய், தகப்பன் இருவரும் அடுப்படியில் இருந்து வெளியே வந்தனர்….

இந்தா டா தேவா, மதிய சாப்பாடு,, அப்புறம் பாத்து போயிட்டு வாங்க, இருட்டுறதுக்குள்ள வந்திரனும்.. பத்திரம் என அனுப்பி வைத்தனர்…

செல்வத்திற்கும், கலாவதிக்கு மட்டும் அல்ல, தர்ஷினியின் தாய் தந்தையருக்கு கூட இது பெரிய விஷயம் இல்லை.. நிறைய முறை ஜெய்யின் அப்பா மைக்கேல் மீன் பிடிக்க செல்லும் போதும் 3 பேரும் சேர்ந்து செல்வார்கள், பின் பத்திரமாக வீடு திரும்பி இருக்கின்றனர்… அதன் பிறகு நிறைய முறை இந்த மாதிரி படகு சவாரி செய்து சரியான நேரத்தில் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டிருக்கிறார்கள்… அதனால் யாரும் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது இல்லை….

வாசலுக்கு சென்றவர்கள் அங்கு ஜெய் போனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க டேய் போலாமா? என தேவா கேட்கவும்..

ஹ்ம்ம் டா என ஜெய் அவன் பைக்கை எடுக்க, எப்போதும் போல் தேவாவுடன் தர்ஷினி ஏறிக் கொண்டாள்… கண்ணாடியை சரி செய்து தன்னவளை பார்க்க ஆயுத்தமானான்….

வழி முழுதும் லொட லொட வென பேசிக்கொண்டே வருபவள், இன்று ஆளே அமைதியாக, யோசனையுடன் இருக்க, தேவாவிற்கு என்னமோ போல் இருந்தது…

எதிர்பாராத விதமாக நடந்த ஒரு நிகழ்விற்கே ஆளே பித்து பிடித்தது போல் யோசித்த வண்ணம் இருக்கிறாள், இதில் நான் அவள் மீது காதல் வயப்பட்டது தெரிந்து போனால், அவ்வளவு தான் என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை… என் காதல் மறை முக காதலாகவே இருக்கட்டும் என தீர்க்கமான முடிவே எடுத்துவிட்டான் அவன்…

 

கடலோர பகுதிகளில் மீன்பிடி தொழிலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது நாகை மாவட்டம்…..வரலாற்று சிறப்பு மிக்க நாகை துறைமுகம், இது மிகப்பெரிய மீன் பிடிக்கும் துறைமுகங்களில் ஒன்றாகும்.. சோழர் காலத்தில் வர்த்தக மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக இருந்தது…

பலரின் நல்வாழ்க்கைக்கு ஆணிவேராக இருந்து உதவி வரும் இந்த துறைமுகம் ,, அன்று மிக பர பரப்பாக காணப்பட்டது…

விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வந்து மீன், இறால், நண்டு, கருவாடு என அனைத்தையும் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தனர்..

மைக்கேல் மீன் கூடையை மொத்தமாக பேசி விற்றுக் கொண்டிருந்தார்… அந்நேரம் மூவரும் அங்கு வருவதைப் பார்த்தவருக்கு புரிந்து விட்டது.. கடலுக்குள் செல்லப் போகிறார்கள் என்று….

ஜெய்யின் நண்பன் சப்பை ஏற்கனவே அவரிடம் விஷயத்தை கூறி இருக்க, படகில் அவர்கள் பாத்துகாப்பிற்கான அனைத்து ஏற்பாடும் செய்து விட்டு தான் வந்திருந்தார்….

 

வசியும் அப்போது தான் அந்த துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருந்தான்….. தர்ஷிக்கு கால் செய்து இடத்தை கேட்கவும்,, அங்கேயே இருங்க நா வரேன்  காதில் போனை வைத்தப் படி, ஒரு நிமிஷம் டா இதோ வந்திடுறேன் என ஓடியவளை, அடியேய் எங்க டி போற? வண்டு என கத்த தர்ஷி அவனை திரும்பியும் பார்க்க வில்லை….

ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து அவன் அருகில் செல்ல, கூட்டத்தில் துலைந்து போன சிறு பிள்ளை போல் விழித்துக் கொண்டிருந்தான்.. அவனை பார்த்து சிரிப்பை அடக்கியவாறு, ஹாய் சீனியர் என குரல் கொடுக்க, வசி திரும்பிப் பார்த்தான்…

ஹாய் டால், என அவள் அருகில் செல்லவும், போலாமா என கேட்க

அவனும் ஆர்வமாக ஹ்ம்ம் நா ரெடி என அவளுடன் நடந்தான்… வித விதமான மீன்களை பார்த்து வாவ் எவ்ளோ மீன் இருக்கு.. பட் என்ன வாடை தான் தாங்க முடியல, என மூக்கில் கை வைத்தான்…

ஆமா  டால், என் கார் சேபா இருக்கும்ல! ஒன்னும் பிரச்சனை வராதே! எனக் கேட்க

ஜெய் அப்பா இருக்காங்க அவங்ககிட்ட சொன்னா பாத்துப்பாங்க.. டோன்ட் வரி வாங்க என அழைத்து சென்றவள் தேவா ஜெய் இருக்கும் இடத்தை அடைந்தாள்…

தேவா,  ஜெய் இருவருக்குமே அங்கு வந்த வசியைப் பார்த்து பெரிய அதிர்ச்சியாக இருந்தது… ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…

காலையில் இருந்து சிறிது சந்தோசமாக இருந்த தேவாவின் முகம் வாடி வதங்கியது… புள்ளய கொஞ்சம் சந்தோசமா இருக்க விட மாட்டாளே!

இவன் எங்க டா இங்க? என தேவாவின் காதில் ஓதவும்

என்ன கேட்டா நானும் உன்கூட தான இருக்கேன்.. என கடுப்படித்தான்….

தேவா வசி என இன்ட்ரோ கொடுத்தவள், இது தேவா அப்புறம் ஜெய் இவங்க மைக்கேல் ஆங்கிள் ஜெய் உடைய அப்பா என அறிமுகப்படுத்த…

தான் போட்டிருந்த கூலர்ஸை கழட்டியவன், ஹாய் என தேவாவிற்கு கை கொடுக்க தேவாவும் புன்னகை முகத்துடன் கை கொடுத்தான்…

ஜெய்யிடம் கை கொடுக்க, வாயை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு வேண்டா வெறுப்பாய் கை கொடுத்தான்….

சிரித்த வசி திரும்பி மைக்கேலிடம், ஹாய் அங்கிள் என கை கொடுக்க, வேணாம் பா கை கவுச்சி வாடையா இருக்கும், என மறுக்க

அட பரவால்ல குடுங்க அங்கிள் என வழுக்கட்டாயமாக அவரின் கையை பிடித்து ஆட்டினான் வசி…

அப்புறம் எங்க இங்க மீன் வாங்க வந்திங்களா? என ஜெய் கேட்க

நோ நோ உங்ககூட போட் ரைடு போலாம்னு வந்தேன் என்றதும் ஜெய் கோவத்தின் உச்சிக்கே சென்றான்….

 

 

 

படிச்சி பாத்துட்டு ஸ்டார்ஸ் குடுங்க டியரஸ்…..

தொடரும்ம்ம்ம்…….

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!