கோபத்துடன் வீட்டிற்கு வந்த முத்துபாண்டி சகுந்தலாவை அழைத்தார்.
“என்னங்க…..?”
“என்ன என்னங்க…. இங்க என்ன நடக்குது என்று உனக்குத் தெரியுமா….?”
“எதுக்கு இப்பிடி கோவமா பேசுறீங்க….?”
“கோவப்படாம என்ன செய்ற….?”
“கடவுளே, முதல்ல என்ன நடந்தது என்று சொல்லுங்க….. ”
“சொல்றேன்… உன்னோட ரெண்டு காதும் குளிர நல்லாக் கேட்டுக்க.. உன்னோட அருமை மூத்த மகன் நம்மளோட வீட்டில வேலை செய்ற சரஸ்வதியோட மகள் சத்தியாவை கெடுக்கப் பார்த்தான்….. அப்போ அந்தப்பக்கம் போன ரகு அவனை அடிச்சி அந்த பொண்ணைப் காப்பாத்தியிருக்கிறான்…..”
“என்ன சொல்றீங்க…… சக்தி அப்பிடி பண்ணியிருக்க மாட்டானுங்க….. யாரோ உங்களிட்ட தப்பா சொல்லிருக்காங்க…..”
“யாரும் சொல்லலை…. நான் என்னோட கண்ணால பார்த்தன்…..”
“எ… என்ன….. நீ… ங்…. க… பார்…த்தீங்களா…..?”
“ஆமா, என் கண்ணால பார்த்தேன்….”
“என்னங்க எனக்கு சக்தி அப்பிடி பண்ணியிருக்க மாட்டான் என்று மனசு சொல்லுதுங்க……”
“அப்போ நான் பார்த்தது என்ன….? இங்க பாரு நீ நம்பு….. நம்பாமல் போ ஆனால் நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்….”
“என்னங்க முடிவு…. எதுக்கும் அவசரப்படாம விசாரிச்சி முடிவு எடுங்க…..”
“நான் முடிவு எடுத்தாச்சு.. வர்ற வெள்ளிக்கிழமை உன்னோட மூத்த மகனுக்கும் அந்த சத்தியாவுக்கும் கல்யாணம்…. “
“அம்மா சின்னையா எங்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தாரு… அப்போ பெரியையா வந்து காப்பாத்திட்டாரு.. ஆனால் முதலாளி ஐயா அதை தப்பா புரிஞ்சிக்கிட்டு பெரியையாவ திட்டிட்டு போனாருமா…. நான் சொன்னதைக் கூட கேட்கவே இல்லை…..”
“கடவுளே… சக்தி ஐயாவுக்கு ஏன் இப்படி நடக்குதோ தெரியாது…..”
“என்னம்மா சொல்ற…..?”
“சத்தியா உனக்கும் சக்தி ஐயாவுக்கும் வெள்ளிக்கிழமை கல்யாணம் பண்ணணும்னு சொல்றாருமா…..”
“என்ன அம்மா சொல்றீங்க….? பெரியையாவுக்கும் எனக்கும் கல்யாணமா…..? அவரு எங்க நாம எங்க அம்மா….? செய்யாத தப்புக்கு அவருக்கு எதுக்கும்மா இந்த தண்டனை……?”
“எனக்கும் என்ன செய்றதுனு தெரியல்லை சத்தியா… முதலாளி ஐயாவை மீறி நம்ம செய்ய முடியும் சத்தியா….?”
“அதுக்காக அவரோட வாழ்க்கையில நான் எப்பிடி அம்மா….?”
“பார்ப்போம்மா… எல்லாம் அந்த கடவுள் விட்ட வழி…..”
“ம்.. அம்மா நான் வேணும்னா பெரியையாகிட்டப் பேசிப் பார்க்கட்டும்……?”
“அப்போ எல்லோரும் நான் தப்பு பண்ணிருப்பன்னு நினைக்கிறீங்க.. அப்படித்தானே……”
“……….”
“சக்தி நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்….. இப்போ முடிவெடுக்க வேண்டியது நீதான்….”
“நீங்க கூட என்னை நம்பவில்லை தானே.. ரொம்ப சந்தோசம்… என்னோட மனசு நிறைஞ்சு போயிட்டு….. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்….. ஆனால்… “
“ஆனால் என்ன சக்தி…..?”
“இனிமேல் நீங்க என்கூட பேசவே கூடாது….. இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் இங்க வரவே மாட்டேன்… கல்யாணத்துக்கு கோயிலுக்கே வந்திர்றேன்…. “
“என்ன சக்தி இப்பிடி சொல்ற……?”
“என்னை நம்பாத உங்ககூட நான் பேசவோ இருக்கோ தயாரா இல்லை…..” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.
“பாருங்க…. சக்தி என்ன சொல்லிட்டு போறான்னு…..”
“அதை விடு… முதல்ல கல்யாண வேலைய பார்க்கலாம்……”
“ம்…”
இங்கே கோபத்துடன் தோட்டத்துக்கு வந்த சக்தி.. அங்கிருந்த கட்டிலில் இருந்தான். அப்போது அவன் அருகே ஒரு மெல்லிய கொலுசு சத்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தான்.. அங்கே கலைந்த கூந்தலுடன்… ஓடிவந்ததால் மூச்சு வாங்கியபடி தனது புடவை முந்தானையை திருகியபடி நின்றிருந்தாள் சத்தியரூபா…
இவன் எதுவும் பேசாது அவளைப் பார்த்தான். அவள் “பெரியையா….” என்றாள்.