அத்தியாயம் 1
அதிகாலை நேரத்தில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் மட்டும் தமிழில் கந்தசஷ்டி கவசம் இசைக்கப்பட்டது.
சமையல் அறையில் காஃபி வார்த்துக் கொண்டிருந்த கலாராணியோ, “தெய்வானை, தெய்வானை” என்று மகளின் பெயரை ஏலம் போட்டுக் கொண்டு இருக்க, பாதி தூக்கத்தில் தாயின் சத்தம் எரிச்சலைக் கொடுத்திட எழுந்து வந்தவளோ
“அம்மா நி சமஸ்யா ஏமிட்டி? உதயம் நுன்சி நா பேரு வேலம் வெஸ்டந்நாவு”
என்றாள் தெய்வானை. “என்னடி சொல்லுற ஒரு மண்ணும் புரியலை” என்ற கலாராணியை முறைத்தவள், “உனக்கு என்னம்மா பிரச்சினை காலங்காத்தால என் பெயரை ஏலம் போட்டுட்டு இருக்க” என்றாள் தெய்வானை.
“உனக்கு எத்தனை முறை டீ சொல்லுறது என் கிட்ட தெலுங்கு பேசாதேன்னு” என்றார் கலாராணி. “அம்மா சுத்தி உள்ள எல்லோருகிட்டேயும் தெலுங்குல தான் பேசுறேன் அது அப்படியே வருது நான் ஏமி செய்யன்டி” என்றாள் தெய்வானை
“அது தெலுங்கு தெரிஞ்சவங்க கிட்ட பேசுடீ என் கிட்ட ஏன் பேசுற” என்ற கலாராணியை முறைத்தவள், ஏதோ சொல்ல வர “சரி தெய்வானை சீக்கிரம் குளிச்சுட்டு ரெடியாகு கோவிலுக்கு போகனும்” என்றார் .
“அம்மா உனக்கு எத்தனை முறை சொல்லுறது தெய்வானை இல்லை தெய்வா . என்னை தெய்வானு கூப்பிடு” என்று பற்களைக் கடித்தாள் தெய்வானை.
“உதயம் டள்ளி குட்டுல்லா மாத்யா கோடவா ஏமிட்டி?” என்றபடி வந்தார் கோகுலகிருஷ்ணன். “அடுத்த தெலுங்கா ஏன் பாவா நீங்களுமா?” என்று பற்களைக் கடித்தார் கலாராணி. “இந்த வீட்டில் யாரும் தமிழில் பேசவே மாட்டிங்களா?” என்ற கலாராணியை பார்த்து சிரித்தாள் தெய்வானை. “சரிம்மா கோவிச்சுக்காதே என்ன பஞ்சாயத்து அம்மாவுக்கும், மகளுக்கும்” என்றார் கோகுலகிருஷ்ணன்.
“நைனா இந்த அம்மாகிட்ட சொல்லி வைங்க என்னோட பெயர் தெய்வானை இல்லை தெய்வா” என்றாள் தெய்வானை. “அது என்னடி தெய்வா கூட அந்த னை போட்டு தெய்வானைனு கூப்பிட்டுக்கிட்டா என்னவாம்” என்றார் கலாராணி.
“உனக்கு உன் மாமியார் மேல உள்ள பாசத்தைக் காட்ட நான் தான் கிடைச்சேனா இப்போ தான் அந்த கிழவி பெயரை எனக்கு வச்சது மட்டும் இல்லாமல் மூச்சுக்கு முந்நூறு தடவை தெய்வானை தெய்வானைனு கூப்பிட்டுக்கிட்டே இருக்க” என்றாள் தெய்வானை.
“விடு தெய்வா” என்ற கோகுலகிருஷ்ணனிடம், “பின்னே என்ன நைனா நாம என்ன அரவக்குறிச்சியிலையா இருக்கோம் தெய்வானை தெய்வானைனு ஏலம் விட்டுட்டு ஹைதராபாத்ல இருக்கோம் தெய்வானு கூப்பிட சொல்லுங்க” என்றாள் தெய்வானை.
“அரவக்குறிச்சினா என்ன கேவலமா டீ” என்ற கலா ராணியிடம், “நான் எப்போ அப்படி சொன்னேன் இருக்கிற இடத்திற்கு தகுந்த போல என்னோட பெயரை எனக்கு பிடிச்ச மாதிரி மாதத்தில் கிட்டேன் நீயும் அப்படியே கூப்பிடுன்னு சொன்னேன் அது குத்தமா?” என்றாள் தெய்வானை.
“என்ன சத்தம் இங்கே காலங்காத்தால நிம்மதியா தூங்க விடுறீங்களா?” என்று எழுந்து வந்தான் பிரசாந்த். “நீயே உன் அம்மா கிட்ட சொல்லு அண்ணயா மீரு என்னிசார்லு செப்புட்டாரு” என்றாள் தெய்வானை.
“ஏன்மா நீங்க தான் அவளை தெய்வானு கூப்பிட்டால் என்ன?” என்ற பிரசாந்திடம், “பெயர் எதற்கு வைக்கிறாங்க கூப்பிடத்தானே அது என்ன தெய்வா எனக்கு என் மகளை தெய்வானைனு கூப்பிடுவது தான் பிடிக்கும்” என்று கூறிய கலாராணியை முறைத்தவள், “அப்போ உங்களுக்கு புரியலைனாலும் நான் தெலுங்குல தான் செப்புவேன்” என்று சொல்லி விட்டு அவள் கிளம்பினாள்.
“ஏய் எங்கே டீ போற கோவிலுக்கு போகனும்” என்ற கலா தேவியிடம், “நெக்ஸ்ட் மந்த் நேஷனல் மீட் செலக்சன் இருக்கு அதனால் ப்ராக்டீஸ் இருக்கும்மா” என்றாள் தெய்வானை.
“பொம்பளைப் பிள்ளைக்கு குத்துச்சண்டை, குஸ்தி எல்லாம் எதற்கு ஒழுங்கா ஒரு புளிக்குழம்பு வைக்கத் தெரியலை அதை கத்துக்கோடீன்னா குத்துச்சண்டை கத்துக்க போறாளாம்” என்று கலாராணி கூறிக் கொண்டு இருந்தார். ஆனால் அதை கேட்க தான் அவர் பெற்ற தெய்வானை அங்கே இல்லை அவள் எப்பொழுதோ சென்று விட்டாள்.
“எங்கடா அவள்” என்ற கலா ராணியிடம், “அவள் இப்போ அவளோட மூக்கை உடைச்சுட்டு இருக்காளோ?” என்று சிரித்தான் பிரசாந்த்.
“மம்மி அந்த புளியோதரை ரெசிபி சொல்லி கொடுங்க” என்றான் பிரசாந்த். “பொம்பளைப் பிள்ளை குத்துச்சண்டை போட போயிருக்கு ஆம்பளைப் பையன் நீ என்னடான்னா புளியோதரை ரெசிபி கேட்கிற இந்த வீட்டில் எல்லாமே தலைகீழ் தான். இந்த குத்துச்சண்டைகாரிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து அதுவும் பட்டிக்காட்டில் கட்டிக் கொடுக்கனும் போயி மாமியாகாரி கூட குஸ்தி போடுடீன்னு” என்றார் கலாராணி.
“ஏன்மா உன் மகள் ஒரு பஞ்ச் விட்டாள்னா மாமியார் பரலோகம் போயிரும் உன் மகளை கட்டிக் கொடுத்து ஒரு உயிரை பறிக்க நினைக்கிறியே” என்று சிரித்தான் பிரசாந்த்.
“ஏன்டா அதுக்காக என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்காமல் வீட்டோட வா வச்சுக்க போறேன்” என்றார் கோகுலகிருஷ்ணன்.
“வீட்டோட வச்சுக்க வேண்டாம் வீட்டோட மாப்பிள்ளை பார்த்து வச்சுக்கோங்க இல்லைனா, அம்மா சொன்ன போல தெய்வானை குத்துச்சண்டை வீராங்கனையா மாறி மாமியார் முகத்தில் ஒரு குத்து விட்டு நாக் அவுட் செய்து விடுவாள்” என்று பிரசாந்த் சிரித்தான்.
அதே நேரத்தில் இங்கே தெய்வானையும் எதிரே நின்று அவளுடன் போட்டியிட்டு கொண்டு இருந்தவளை ஒரே குத்தில் நாக் அவுட் செய்து இருந்தாள். “தெய்வா, தெய்வா” என்று கூச்சலைக் கேட்டு புன்னகைத்தாள் தெய்வானை.
“என்னம்மா இது இந்த சம்பந்தமும் கையை விட்டு போயிருச்சு” என்று குறைபட்டுக் கொண்டு இருந்தாள் அருணா தேவி. “என்ன செய்யட்டும் அருணா உன் தம்பிக்கு தான் செவ்வாய் தோஷம் இருக்கே” என்ற சௌந்திரவள்ளியிடம், “தம்பிக்கு வயசு இப்போவே முப்பத்து ஏழு ஆயிருச்சு இதுக்கு மேல எங்கே கல்யாணம் நடக்க போகுது பேசாமல் என் மகளையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் என்ன?” என்றாள் அருணா.
“முர்ஹுடா நிகு தெளிவு லேது, நிகு தெளிவு உண்டா லேதா, அவனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு அது மட்டும் இல்லை மீ குட்டுரிக்கு பதினைந்து வயசுதான் ஆகுது அவளை எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது” என்று திட்டினார் சௌந்திரவள்ளி.
“எனக்கு அறிவு நிறையவே இருக்கு தெளிவு லேதுன்னு செப்பாதே” என்ற அருணா, “நா சோதரு இன்னும் கல்யாணம் பண்ணாமல் சுத்திட்டு இருக்கானேன்னு தான் என் மகளை கட்டிக் கொடுக்க நினைத்தேன்” என்று கூறி விட்டு கோபமாக எழுந்து சென்றாள்.
“ஏமிமா அக்கா கோச்சுட்டு போகிறாள்” என்ற அர்ச்சனாவிடம், “ஒன்றும் இல்லை நீ ஏன் வெளியே வந்த உள்ளே போடீ பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்த கதை தான் என் கதை” என்று கத்திக் கொண்டே சௌந்திரவள்ளி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
அர்ச்சனா தன் தாயைக் கண்டு கசந்த புன்னகையை புரிந்தவள் தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.
“எதுக்கு இப்போ சின்னவளை திட்டிட்டு இருக்க” என்ற சிவநேசனிடம், “ என் கவலை என்னோடது கருவேப்பிலை கொத்து மாதிரி ஒத்தை ஆம்பளைப்பிள்ளையை பெத்து வச்சுருக்கேன். அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி இந்த வீட்டுக்கு விளக்கேத்த ஒரு மகராசியை அழைச்சிட்டு வந்து வச்சாளே போதும் நிம்மதியா ஒரு ஓரமா உட்கார்ந்து இருப்பேன்” என்றார் சௌந்திரவள்ளி.
“இதோ பாரு வள்ளி உன் மகனுக்கு இனிமேலா ஒருத்தி பிறக்கப் போகிறாள் ஏற்கனவே பிறந்து வளர்ந்து கல்யாண வயசுல இருப்பாள். இந்த வருசம் முடியுறக்குள்ள நி கொடுக்குக்கு விவாஹம் முடிஞ்சுரும் கவலைப் படாமல் இரு” என்று கூறினார் சிவநேசன்.
“கடவுளே என் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு அவளுக்கு தகுந்த ஜாதகம் வந்து இந்த வருசம் முடியுறக்குள்ள அவளுக்கு கல்யாணம் நடக்கனும் , குத்துச்சண்டை, குஸ்தினு அவள் சுத்தவே கூடாது” என்று இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தார் கலாராணி. அந்த நேரம் சரியாக கோவில் மணியை அவரது மகள் தெய்வானையே அடித்துக் கொண்டு இருந்தாள் புன்னகையுடன்.
“ஏமிமா” என்ற தெய்வானையிடம் , “என் வேண்டுதல் கண்டிப்பா பழிச்சுரும்”
என்றார் கலாராணி. “அப்படி என்னம்மா வேண்டுதல்” என்ற பிரசாந்திடம், “நிக்கு தெளுசா அண்ணையா மா அம்மாயிக்கு நேனு பாக்ஸிங் வெல்லவாடு அவ்வளவு தான் இல்லையா” என்றாள் தெய்வானை.
“அவள் பாக்ஸிங் போக கூடாதுன்னாம்மா வேண்டிகிட்டீங்க” என்ற பிரசாந்திடம், “வேண்டுதல் வெளியே சொன்னால் பலிக்காது” என்றார் கலாராணி.
“நேனு செப்பன்னா மா அம்மாயிக்கு ஒக்கே அபியார்த்தனா தெய்வானை பாக்ஸிங் வெல்லவாடு” என்று சிரித்தாள் தெய்வானை.
“என்னடா சொல்லிவிட்டு போகிறாள்” என்ற கலா ராணியிடம் , “உங்களுக்கு இருக்கிற ஒரே வேண்டுதல் அவள் பாக்ஸிங் போக கூடாதுங்கிறது மட்டும் தானாம்” என்ற பிரசாந்த், “இனிமேல் அம்மாவும் , பொண்ணும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் தினமும் கொடுங்க உங்களுக்கு டிரான்ஸ்லேட்டர் வேலை பார்த்தே எனக்கு நாக்கு தள்ளிரும் போல ஏழுகுண்டுல வாடா வெங்கட்ரமணா நா சோதரிக்கு த்வாரலோ பெல்லி சேசுகுண்டாம்” என்று சகோதரிக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டான் பிரசாந்த்.
“உன் கடவுள் கிட்ட என்னோட பாவா எங்கே என்ன பண்ணிட்டு இருக்காருன்னு கேட்டு செப்பு அண்ணையா” என்று சிரித்தாள் தெய்வானை.
மனைவி சௌந்திரவள்ளியிடம் , “ஆமாம் நி கொடுக்கு அட்டானு எக்கடிக்கு வெல்லடு” என்ற சிவநேசனிடம் , “அண்ணையா கபடி மேட்ச்சுக்கு வெல்லடு நைனா” என்றாள் அர்ச்சனா தன் அறையில் இருந்தபடியே.
“கபடி, கபடி , கபடி, கபடி” என்று பாடி வந்த ஒருவனை ஒற்றை ஆளாக பிடித்து வெளியே தள்ளி விட்டான் அவன். “மாப்பிள்ளை நீ போடா” என்று உள்ளே வந்தவன் கூறிட தரையை தொட்டு வணங்கி கைகளில் மண்ணை அள்ளி இரண்டு கைகளையும் தட்டினான். தட்டி விட்டு “கபடி ,கபடி, கபடி, கபடி” என்று பாடிக் கொண்டே எதிரணிக்குள் சென்றான் அவன்.
“மாப்பிள்ளை இன்னைக்கு அவனை அடிச்சு தூக்கனும்டா” என்று ஒருவன் கூறிட மற்றவர்களும் அதை ஆமோதித்து பாடி வரும் அந்த வீரனுக்காக காத்திருந்தனர். அவன் இருவரை காலால் எட்டி உதைத்து அவுட்டாக்கினாலும் செல்லாமல் அனைவரும் சேர்ந்து அவனைத் தாவிப் பிடித்தனர். தன் மீது விழுந்த தடியர்களை ஒரு சிலுப்பு சிலுப்பி அவர்களைத் தள்ளி விட்டு எல்லைக் கோட்டைத் தொட்டு வெற்றி
யை கைப்பற்றி எழுந்தான் அவன் கார்த்திகேயன். நம் நாயகன்.
…. தொடரும்…