அத்தியாயம் 3
“என்ன பண்ணுற அருணா, உன் அம்மா வீட்டுக்கு போகாமல்” என்ற கண்ணனிடம், “அங்கே நான் எதுக்கு பாவா போகனும்” என்றாள் அருணா தேவி.
“என்ன பேசுற உன் அம்மா, அப்பா, தம்பி மூன்று பேரும் ஹைதராபாத் வரை போயிருக்காங்க, வீட்டில் அர்ச்சனா மட்டும் தனியா இருப்பாளே அவளுக்கு துணையாக நீ போயி இருக்க வேண்டாமா?” என்றார் கண்ணன்.
“அந்த பீடையை என்ன காக்காவும், கழுகுமா தூக்கிட்டு போகப் போகிறது. விளங்காதவள், விளங்காதவள் அவளால் தான் நான் ஹைதராபாத் போக முடியாமல் போச்சு” என்றாள் அருணா தேவி.
“ஓ உனக்கு உன் தம்பிக்கு கல்யாணம் நடந்து விடுமோ என்ற கவலையா நீ எல்லாம் ஒரு அக்காவா உன் தம்பிக்கு கல்யாணம் நடக்க கூடாது என்று நினைக்கிற” என்ற கண்ணனிடம் , “என் தம்பியோட கல்யாணம் என் மகள் கூட நடக்கனும் என்று ஆசைப்படுகிறேன்” என்றாள் அருணா.
“பைத்தியமா டீ நீ நம்ம பொண்ணு வயசு பதினைந்து உன் தம்பி வயசு முப்பத்து ஏழு உன் மகளை விட இருபத்தி இரண்டு வயசு மூத்தவன் அவனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிற” என்றார் கண்ணன்.
“வயசு என்ன பெரிய வயசு என் தம்பி பெயரில் இருக்கிற சொத்தோட மதிப்பு தெரியும் தானே அவ்வளவு சொத்தும் நம்ம பொண்ணுக்கு தான் அதை யோசிப்பீங்களா இப்போ தான் வயசாம் பெரிய வயசு. எவளோ ஒரு ஹைதராபாத்காரி வந்து அவ்வளவையும் அனுபவிக்க போகிறாள். கடவுளே இந்த கல்யாணம் நடக்கவே கூடாது” என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்.
“உன்னை திருத்தவே முடியாது” என்று நினைத்துக் கொண்ட கண்ணன், “வைஷ்ணவி” என்று அழைத்திட, “ஏமி நைனா” என்ற படி வந்தாள் அருணா தேவியின் மகள் வைஷ்ணவி.
“உன் சித்தி தனியா இருப்பாங்க நீ போயி சித்திக்கு துணையா இரு” என்று மகளை அனுப்பி வைத்த கண்ணன் மனைவியை முறைத்து விட்டு சென்றார்.
“காலையில் அவங்களை பத்திரமா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திரு பிரசாந்த்” என்றார் கோகுலகிருஷ்ணன். “சரிங்க நைனா” என்ற பிரசாந்த் தங்கையின் அறைக்கு சென்றான்.
“ஏமி அண்ணையா” என்ற தெய்வானையிடம், “இந்த மாப்பிள்ளைக்கு வயசு அதிகம் தெய்வா” என்றான் பிரசாந்த். “வயசு கம்மியா உள்ள ஆளை தான் கல்யாணம் பண்ணிக்க கூடாது அண்ணையா” என்று சிரித்தாள் தெய்வானை.
“எல்லாமே உனக்கு விளையாட்டா? அதுவும் அந்த ஊரு பயங்கர கிராமம். மூடநம்பிக்கையில் மூழ்கிப் போன ஊருன்னு வேற கேள்விப்பட்டேன்” என்றான் பிரசாந்த்.
“அண்ணையா அது எப்படி பட்ட ஊரா இருந்தால் என்ன அது தானே நம்ம நைனாவுக்கும் பூர்வீகம் நம்ம நைனாவோட நைனா ஹைதராபாத் வந்ததால் நாம இங்கே இருக்கோம் இல்லைனா நாமளும் அங்கே தானே இருப்போம்” என்றாள் தெய்வானை.
“அப்போ அந்த பட்டிக்காட்டில் குப்பை கொட்ட முடிவு பண்ணிட்ட போல” என்ற பிரசாந்த்திடம், “அது என்ன கல்யாணம் ஆன பிறகு பொண்ணு தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போகனுமா என்ன இந்த தெய்வாவை கல்யாணம் பண்ணிக்கனும்னா அந்த கார்த்திகேயன் தான் வீட்டோட மாப்பிள்ளையா வரணும்” என்றாள் தெய்வானை.
“அந்த ஆளு ஊரில் சொத்து பத்து எல்லாம் விட்டுட்டு வருவாரா நடக்கிற கதையா இது” என்ற பிரசாந்த் தன் அறைக்கு சென்று விட மெத்தையில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள் தெய்வானை.
அதிகாலை நேரத்தில் ஹைதராபாத் வந்து சேர்ந்தனர் கார்த்திகேயன், சிவநேசன், சௌந்திரவள்ளி மூவரும். வந்தவர்களை பிரசாந்த் வீட்டிற்கு அழைத்திட, “விலாசம் மட்டும் கொடுங்க நாங்க இங்கே ஹோட்டலில் ரூம் எடுத்து குளித்து விட்டு வருகிறோம்” என்றான் கார்த்திகேயன்.
“இல்லை பாவா, நைனா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாரு” என்று அவன் வற்புறுத்தியும், “அதெல்லாம் முறையா இருக்காது பிரசாந்த் மாவய்யா கிட்ட சொல்லி புரிய வைங்க நாங்க சரியா பத்து மணிக்கு உங்க வீட்டில் இருப்போம்” என்றான் கார்த்திகேயன் காராக.
“பொண்ணு பார்க்க வரும் போதே நம்ம வீட்டில் கை நனைக்க கூடாதுன்னு இந்த ஆளு இம்புட்டு உறுதியா இருக்காரே நம்ம தெய்வா கூப்பிட்டு இவரு வீட்டோட மாப்பிள்ளையா தங்குவாரா?” என்று தான் யோசித்தான் பிரசாந்த்.
“என்ன பிரசாந்த் நீ மட்டும் தான் வந்திருக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரவில்லையா?” என்றார் கோகுலகிருஷ்ணன்.
“இல்லை நைனா அவங்க ஹோட்டலில் ரூம் புக் பண்ணிட்டாங்களாம் குளிச்சு முடிச்சிட்டு பத்து மணிக்கு நம்ம வீட்டுக்கு வந்துடுறேன்னு சொல்லிட்டாங்க” என்றான் பிரசாந்த்.
“ஏமி அண்ணையா
மீ பாவா போட்டோல உன்னட்லுங்கனே உன்னாரா? (உன் பாவா ஃபோட்டோல உள்ள மாதிரி இருந்தாரா)“ என்றாள் தெய்வானை.
“படி கண்டலுக்கு வச்செ மீரே சூடன்டி (பத்து மணிக்கு வருவாரு நேரில் பார்த்து தெரிஞ்சுக்கோ)” என்று கூறிய பிரசாந்த் தன் அறைக்கு சென்று விட புன்னகையுடன் திரும்பினாள் தெய்வானை.
“சரி ,சரி தெய்வானை நீ கிளம்பு” என்றார் கலாராணி. “எங்கே போக சொல்றீங்கம்மா என்ற தெய்வானையிடம் பியூட்டி பார்லர்க்கு டீ மாப்பிள்ளை வரும் போது நீ இன்னும் அழகா இருக்க வேண்டாமா?” என்றார் கலாராணி.
“ஆ கிராமம்லோ பியூட்டி பார்லர் உண்டோ? நேனு அக்கட பெல்லி சேசுகுண்டே பியூட்டி பார்லர்க்கு வெல்லவாக்கா? (அந்த கிராமத்தில் பியூட்டி பார்லர் இருக்கா? அங்கே கல்யாணம் முடிச்சு போனால் பியூட்டி பார்லர்க்கு போக முடியுமா?)” என்று அவள் கூறிட அவளது தந்தை டிரான்ஸ்லேட்டர் வேலையை கவனிக்க கலாராணி மகளை முறைத்தார்.
“உன்னை தினமும் யாருடீ பியூட்டி பார்லர்க்கு போக சொன்னது இன்னைக்கு போயிட்டு வான்னு தான் சொன்னேன்” என்றார் கலாராணி.
“இஷ்டம் இல்லை அம்மா இருக்கிற முகத்தை பார்த்து அவங்களுக்கு பிடிக்கட்டும்” என்ற தெய்வானை சென்று விட , “என்ன பொண்ணு இவள்” என்றார் கலாராணி.
“நம்ம பொண்ணு தான்” என்று கோகுலகிருஷ்ணன் கூறிட , “இல்லை குப்பையில் கிடந்த பொண்ணு வந்துட்டாரு காமெடி பண்ணுறதுக்கு காபி பவுடர் ஆர்டர் போடுங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் நேரம் ஆச்சு” என்றார் கலாராணி. “ஆர்டர் போட்டுட்டேன் கலா இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துரும்” என்ற கோகுலகிருஷ்ணன் சென்று விட கலாராணி பலகாரம் செய்ய ஆரம்பித்தார்.
“அண்ணையா நேனு அண்டகா உன்னானா? (அண்ணா நான் அழகா இருக்கேனா?)” என்ற தெய்வானையிடம், “கொஞ்சம் சுமாரா தான் இருக்க இந்த புடவை உனக்கு நல்லாவே இல்லை வேற கட்டிக்கோ டீ” என்று வந்தார் கலாராணி.
“இது மட்டும் எப்படி புரிஞ்சுது” என்ற தெய்வானையிடம், “அண்டகானா அழகா தானே, உங்க கூட தானே குப்பை கொட்டுறேன் எல்லாம் புரியும்” என்ற கலாராணி, “சுமாரா இருக்க வேற புடவை கட்டு” என்றார்.
“அப்படியா அப்போ இந்த புடவையில் தான் இருப்பேன்” என்றாள் தெய்வானை. “அடங்காத கழுதை” என்று மகளை திட்டி விட்டு சென்று விட்டார் கலாராணி.
“அம்மாகிட்ட வம்பிலுக்கலைனா உனக்கு தூக்கமே வராது” என்ற பிரசாந்த், “நீ ரெடியாகு நான் வெளியே போகிறேன்” என்று அவளது அறையை விட்டு வெளியே சென்றான்.
சிவநேசன், சௌந்திரவள்ளி, கார்த்திகேயன் மூவரும் கோகுலகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களை கோகுலகிருஷ்ணன், கலாராணி, பிரசாந்த் மூவரும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
கலாராணி தெய்வானையை அழைத்திட அவள் அவர்களுக்கு காஃபி எடுத்து வந்தாள். அழகான பட்டுடுத்தி அதற்கேற்ற நகை அணிந்து அளவான ஒப்பனையுடன் அழகு பதுமையாக வந்து நின்ற பெண்களைக் கண்டு ஒரு நிமிடம் சொக்கித் தான் போனான் கார்த்திகேயன். ஆனாலும் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு காஃபியை எடுத்துக் கொண்டு பருகிட ஆரம்பித்தான்.
சௌந்திரவள்ளிக்கும் தெய்வானையை பார்த்த உடனே பிடித்துப் போனது. அவளது தலையில் பூ வைத்து விட்டார்.
“உங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சிவநேசன் கூறிட கோகுலகிருஷ்ணன் மகளை பார்த்தார். அவளோ ஒரு நொடி அவனது முகத்தை பார்த்து விட்டு சம்மதம் என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
“அப்பறம் என்ன சம்மந்தி பிள்ளைகளுக்கு பிடிச்சிருக்கு இப்போ வெத்தலை பாக்கு மாத்திக்கலாம் சீக்கிரமே சொந்த பந்தங்களை அழைச்சிட்டு வந்து நிச்சயம் பண்ணி கல்யாணத்தை முடித்து விடலாம்” என்று சிவநேசன் கூறிட கோகுலகிருஷ்ணன் யோசிக்க கலாராணியோ கணவனை இடித்து சம்மதம் சொல்ல பாக்கு, வெற்றிலை மாற்றி திருமணத்தை உறுதி செய்து விட்டனர்.
“ஏய் உனக்கு மண்டையில் மசாலா எதுவுமே இல்லையா?” என்ற பிரசாந்திடம், “ஏமி அண்ணையா” என்றாள் தெய்வானை.
“மாப்பிள்ளையை ஒரு செகண்ட் பார்த்துட்டு பிடிச்சிருக்குன்னு சொல்லுற கொஞ்சம் தனியா பேசணும்னு பேசி பார்த்திருக்கலாம்ல” என்றான் பிரசாந்த்.
“அம்மா கிட்ட என்ன சொன்னேன் நேசனல் செலக்சன்ல தோத்துப் போய் விட்டால் அவங்க பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே அதைத் தான் செய்திருக்கேன்” என்று புன்னகைத்தாள் தெய்வானை.
“தெய்வா இது உன்னோட வாழ்க்கை அம்மா சொன்னாங்க, நைனா சொன்னாங்கன்னு உன் வாழ்க்கையை தொலைச்சிடாதே. அவருக்கும், உனக்கும் பதினைந்து வயது வித்தியாசம்” என்ற பிரசாந்த்திடம், “அண்ணையா மீரு சின்டின்ககான்டி , பாவா சாலா அண்டகா உன்டே (அண்ணா நீ கவலைப்படாதே பாவா நல்லா அழகா தானே இருக்காரு), வயசும் அப்படி ஒன்றும் தெரியவில்லை” என்றாள் தெய்வானை.
“நிஜமாகவே உனக்கு பிடித்திருந்தால் எனக்கு சந்தோஷம் தான் தெய்வா” என்ற பிரசாந்த் சென்று விட தெய்வானை புன்னகைத்து விட்டு தன் வேலையை கவனித்தாள்.
“பொண்ணு அம்புட்டு அழகு நா கொடுக்குக்கு ஏத்த பொண்ணு” என்று சௌந்திரவள்ளி தெய்வானை யின் ஃபோட்டோவை காட்டி சொல்லிக் கொண்டு இருக்க அருணாவிற்கு தான் காதில் புகை வந்தது.
“இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் அது முடிஞ்சதும் இரண்டு வாரத்தில் கல்யாணம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சௌந்திரவள்ளி மகனின் திருமணத்திற்கு ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.
அவரது மகள் அருணாவோ உடன் பிறந்தவனின் திருமணத்தை நிறுத்த என்ன வழியோ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
(மயக்கியே..)