அத்தியாயம் 8
“அவள் கேட்டதும் இவனும் ஐஸ் வாங்கி கொடுத்துட்டானா?” என்ற அருணா விடம், “ஆமாம்” என்று பற்களைக் கடித்த பவித்ரா, “என்னம்மோ சொன்னீங்க அவங்க இரண்டு பேரும் இதுவரை பேசிக்கிட்டதில்லை, பழகினதில்லைனு என்னமோ பத்து வருசமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன், பொண்டாட்டி போல அவ்வளவு அன்யோன்யமா இருக்காங்க. அவள் பாவா, பாவானு கொஞ்சுறதும், உங்க தம்புடு தெய்வா, தெய்வானு அவளோட முந்தானையை பிடிச்சுட்டு சுத்துறாரு என்னால அதை பார்க்க முடியலை வதனை” என்றாள் பவித்ரா.
“புது விளக்குமாறு பரட்டு பரட்டுனு தான் கூட்டும் போக போக தேய்ஞ்சு ஓடா போகுமே அது போல தான் கொஞ்ச நாள் போகட்டும் அவங்களை எப்படி அத்து விடுறேன்னு மட்டும் பாரு” என்ற அருணா கோபமாக தன் அம்மா வீட்டுக்கு சென்றாள்.
“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்ற குரலில் நிமிர்ந்தாள் அர்ச்சனா. “நீங்க ஏன் வதனை என் அறைக்கு வந்தீங்க அம்மா பார்த்தால் திட்டப் போறாங்க” என்றாள் அர்ச்சனா.
“அத்தைம்மா ஏன் திட்டுவாங்க” என்ற தெய்வானையிடம் , “நான் அபசகுணம்” என்று அவள் கூறிட அவளை கோபமாக முறைத்தாள் தெய்வானை.
“இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க அர்ச்சனா” என்றாள் தெய்வானை. “இல்லை வதனை நீங்களும், அண்ணையாவும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்” என்று அர்ச்சனா கூறிட, “நானும், பாவாவும் நீங்க எங்களை பார்த்தால் நல்லா இருக்க மாட்டோமா? என்ன பேச்சு இது எந்த காலத்தில் இருக்கீங்க நீங்க” என்ற தெய்வானை ஏதோ சொல்ல வர , “நீ இங்கே என்ன பண்ணுற தெய்வானை” என்று கத்தினாள் அருணா தேவி.
“எதற்கு கத்துறீங்க வதனை” என்றாள் தெய்வானை. “நீ ஏன் இவளோட அறைக்கு வந்த கல்யாணம் ஆகி இரண்டே நாளில் புருஷன் உயிரை முழுங்கின விளங்காதவள் இவள் இவளோட நிழல் பட்டாலே உன் தாலிக்கு ஆபத்து வந்துரும்” என்று அருணா கூறிட, “அக்கா” என்று கத்தினான் கார்த்திகேயன்.
“என்ன தம்புடு உண்மையை தானே நான் சொல்லுறேன்” என்று அருணா கூறிட, தெய்வானை ஏதோ சொல்ல வாயெடுக்க “தெய்வா நீ உள்ளே போ” என்றான் கார்த்திகேயன்.
கணவன் சொன்னவுடன் தன் அறைக்கு சென்று விட்டாள் தெய்வானை.
“என்ன பேசுற அக்கா அர்ச்சனா நம்ம கூடப் பிறந்த தங்கச்சி அவளைப் பற்றி வீட்டுக்கு வாழ வந்த மருமகள் கிட்ட என்ன சொல்லிட்டு இருக்க” என்றான் கார்த்திகேயன்.
“நம்ம தங்கச்சியா இருந்தாலும் நிதர்சனத்தை சொல்லி தான் ஆகனும்” என்று அருணா கூறிட , கார்த்திகேயன் ஏதோ சொல்ல வர , “கார்த்தி நீ என்ன சொன்னாலும் இவளுக்கு புரியாது அதனால் நீ உள்ளே போ” என்றார் சிவநேசன்.
“நைனா” என்று அருணா ஏதோ சொல்ல வர, “அர்ச்சனா பற்றி தப்பா பேசுவதா இருந்தால் தயவு செய்து இந்த வீட்டுக்கு நீ வராதே” என்றார் சிவநேசன் அழுத்தமாக.
“ஏமி பாவா உங்க அக்கா ஏன் பத்தாம்பசலியாட்டம் பேசுறாங்க” என்ற தெய்வானையிடம், “அவள் எப்பவுமே அப்படித்தான்” என்றான் கார்த்திகேயன்.
“தப்பு பாவா ரொம்ப ரொம்ப தப்பு. உங்க தங்கச்சி அந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு” என்றாள் தெய்வானை.
“நானும் அதை தான் சொல்கிறேன் அம்மா அவளை வெளியே வரவே விட மாட்டாங்க நான் முயற்சி பண்ணி தோத்துட்டேன். முடிஞ்சா நீ முயற்சி பண்ணு” என்றான் கார்த்திகேயன்.
“கண்டிப்பா பாவா அர்ச்சனாவுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சு கொடுக்க வேண்டும்” என்ற தெய்வானையின் கன்னத்தில் கை வைத்தவன், “எனக்கும் அது தான் ஆசை தெய்வா” என்றான்.
“அதை நடத்தனும்னா அம்மா, அக்காவை விடு முதலில் அர்ச்சனாவை தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே கொண்டு வரணும்” என்றான் கார்த்திகேயன். “என்னை நம்புங்க பாவா” என்று தெய்வானை கூறிட அவளை அணைத்துக் கொண்டவன் “உன்னை நம்பாமல் யாரை நம்ப போறேன்” என்று கூறினான்.
“தெய்வானை” என்ற சௌந்திரவள்ளியிடம், “சொல்லுங்க அத்தைம்மா” என்றாள் தெய்வானை. அவளது இந்த ‘அத்தைம்மா’ என்ற அழைப்பும் அன்பான, அழகான புன்னகைத்த முகமும் கண்ட பிறகு அவளிடம் கோபமாக எதுவும் பேசத் தோன்றுமா என்ன? “சாப்பிட வா தெய்வானை” என்று சொல்லி விட்டு சென்று விட்டார் சௌந்திரவள்ளி.
“என்னம்மா இது அவள் கிட்ட போயி ஏன் அர்ச்சனா அறைக்கு போனாள்னு கேட்பீங்கனு பார்த்தால் சாப்பிட வா தெய்வானைனு பாசமா அழைச்சிட்டு வந்திருக்கீங்க” என்றாள் அருணா.
“அடியே அது என்னவோ தெரியவில்லை டீ அவளை திட்ட எல்லாம் மனசு வர மாட்டேங்குது எதுவா இருந்தாலும் உன் தம்புடுகிட்ட பேசிக்கலாம்” என்றார் சௌந்திரவள்ளி.
“நல்லா அந்த மயக்கி அத்தைம்மானு கூப்பிட்டு உங்களை மயக்கி வச்சுருக்கா” என்ற அருணா, “அதோ தம்புடு வரான் பாரு” என்று கூறிட சௌந்திரவள்ளி தன் மகனை அழைத்தார்.
“கார்த்தி தெய்வானை புதுசு அவளுக்கு தெரியாமல் கூட அந்த அறைக்கு போயிருக்கலாம் நீ தான் அவள் கிட்ட சொல்லி புரிய வைக்கனும். அர்ச்சனா வாழ வேண்டிய வயசில் வாழ்க்கையை இழந்தவள் அவளை உன் பொண்டாட்டி தழைய தழைய தாலி கட்டிட்டு, தலை நிறைய பூ வைத்து, நெற்றி நிறைய பொட்டு வச்சு கிட்டு போயி அவள் முன்னே நின்றால் அவள் மனசுக்குள்ள ஏங்க மாட்டாளா? அவள் ஏங்கிப் போனால் அது தெய்வானையை பாதிக்கும். தெய்வானையை பாதிக்கும்னா அது உன்னை பாதிக்கும். உன் உசுருக்கு எதுனாலும் பாதிப்பு வந்துருமோனு பயமா இருக்கு” என்றார் சௌந்திரவள்ளி.
“அம்மா போதும் அர்ச்சனாவை பற்றி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. தான் வாழாத வாழ்க்கையை யாரும் வாழக் கூடாதுன்னு நினைக்கிற பொண்ணுன்னா என் தங்கச்சி யாரைப் பார்த்தும் வயிறு எரிய மாட்டாள். அதுவும் தெய்வானையை பார்த்து கட்டாயம் அப்படி எல்லாம் யோசிக்க கூட மாட்டாள். அவள் நீங்க பெத்த பொண்ணும்மா அவளைப் போயி இப்படி நினைக்க உங்களுக்கு எப்படி மனசு வருதோ?” என்று வருந்தினான் கார்த்திகேயன்.
“தெய்வானை அவள் கிட்ட பேசுவது உங்களுக்கு நிஜமாகவே பிடிக்க வில்லையா? நாளைக்கு உங்களுக்கு பிறகு அர்ச்சனாவை பார்த்துக் கொள்ள வேண்டியது நானும், என் மனைவியும் தான்னு நான் நினைக்கிறேன் அந்த நினைப்பே தப்புன்னு நீங்க நினைத்தால் சொல்லுங்க இனிமேல் தெய்வானை அர்ச்சனாவை பார்க்க மாட்டாள்” என்றான் கார்த்திகேயன்.
“ஐயோ கார்த்தி என்னப்பா இது சின்னவளை எங்க காலத்திற்கு பிறகு நீயும், தெய்வானையும் தானே பார்த்துக்கணும்” என்று சௌந்திரவள்ளி கூறினார்.
“அப்பறம் என்ன” என்ற கார்த்திகேயன் தன் அக்காவை பார்த்து, “நீயும் ஒரு பெண்ணை பெத்து வச்சுருக்க அந்த நினைப்பு உனக்கு இருக்கா? கூடப் பிறந்த தங்கச்சியை நீ நடத்துற விதம் இருக்கே ச்சீ” என்று கூறி விட்டு சென்று விட்டான் கார்த்திகேயன்.
“ஏமி பாவா ரொம்ப டென்சனா இருக்கீங்க எங்கேயோ வெளியே கிளம்பினீங்க போகலையா?” என்ற தெய்வானையிடம், “தலைவலிக்குது தெய்வா” என்றான் கார்த்திகேயன்.
“நான் மருந்து தேய்த்து விடுறேன்” என்ற தெய்வானை அவனது நெற்றியில் மருந்து தேய்த்து நீவி விட்டாள்.
“உன் கையில் ஏதோ மாயம் இருக்கு தெய்வா” என்றவன் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான்.
“ஏமி பாவா ரொமான்ஸ் மூடா?” என்று கண்ணடித்தவளைப் பார்த்து சொக்கியவன், “நிஜமாகவே என்னை உனக்கு பிடிச்சுருக்கா?” என்றான் கார்த்திகேயன்.
“என்ன கேள்வி பாவா இது பிடிக்காமல் தான் உங்க மடியில் அதுவும் உங்க கழுத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கேனா?” என்ற தெய்வானை அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
“கல்யாணத்திற்கு முன்னே நாம பேசிக்கிட்டது கூட இல்லை” என்ற கார்த்திகேயனிடம், “பேசினால் மட்டும் தான் ஒருத்தரை புரிஞ்சுக்க முடியுமா பாவா? எனக்கு உங்களை பார்த்ததுமே பிடிச்சுருந்துச்சு , நமக்குள்ள எல்லாமே செட் ஆகும்னு தோனுச்சு” என்று அழகாக கன்னக்குழி விழ சிரித்தாள் தெய்வானை. அவளது கன்னக்குழியில் முத்தமிட்டவன், “முதலில் யோசிச்சேன் சிட்டியில் வளர்ந்த பொண்ணு என் கூட கிராமத்தில் எப்படி வாழ்க்கை நடத்தப் போறியோனு ஆனால் இப்போ சொல்றேன் நீ கண்டிப்பா இந்த ஊருக்கு செட் ஆகிருவ” என்றான் கார்த்திகேயன்.
“இந்த ஊரை பற்றி தெரியாது ஆனால் இந்த வீட்டை எனக்கு தகுந்த போல செட் பண்ணிடுவேன்” என்று சிரித்தாள் தெய்வானை.
“மயக்கி கட்டாயம் மயக்கிருவடீ” என்று அவன் கூறிட , “அது என்ன மயக்கி” என்றாள் தெய்வானை.
“என் அக்கா உனக்கு வச்ச பெயர்” என்று அவன் சிரித்திட, “மயக்கி நல்லா தான் இருக்கு பேசாமல் பாவா நீங்களும் என்னை அப்படியே கூப்பிடுங்களேன்” என்று அவள் கூறிட , “உத்தரவு மகாராணி” என்று கூறினான் அவளது கணவன்.
“பாவா எதாவது முக்கியமான வேலை இருந்தால் இன்னைக்கே முடிச்சுருங்க நாளைக்கு நாம ஹைதராபாத் போகனும்” என்று அவள் கூறிட , “அதெல்லாம் முடிச்சுருவேன் தெய்வா” என்ற கார்த்திகேயன், “சரி வா சாப்பிட போகலாம்” என்று மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான் கார்த்திகேயன்.
“என்ன பிரசாந்த் யோசனை” என்ற கலாராணியிடம், “தெய்வா ஃபோன் பண்ணினாளாம்மா?” என்றான் பிரசாந்த். “மாப்பிள்ளை தான் பேசினாரு உன் தங்கச்சி மாமியார் வீட்டோட நல்லா ஒட்டிக்கிட்டாள் போல பெத்தவளுக்கு ஒரு ஃபோன் பண்ணி பேசணும்னு கொஞ்சம் கூட நினைப்பு இல்லை” என்றார் கலாராணி.
“பாவா என்ன பேசுனாரு” என்ற பிரசாந்த்திடம் , “நாளைக்கு தெய்வானை, மாப்பிள்ளை இரண்டு பேரும் விருந்துக்கு நம்ம வீட்டுக்கு வராங்களே அதை சொல்ல தான் ஃபோன் பண்ணினாரு. உன்னை அனுப்புறோம்னு சொன்னதுக்கு கூட இல்லை அத்தைகாரு நானும், தெய்வானையும் வந்துடுறோம்னு சொல்லிட்டாரு” என்றார் கலாராணி.
“தெய்வா இந்நேரம் பாவா கிட்ட பேசிருப்பா பேசாமல் நாம பார்த்து வச்சுருக்கிற வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்” என்று யோசித்தவன் தன் தங்கைக்கு ஃபோன் செய்தான்.
குடும்பத்தோடு அனைவரும் கோவிலுக்கு சென்று விட வீட்டில் அர்ச்சனா மட்டும் தனியாக இருந்தாள்.
வெகு நேரமாக தெய்வானை யின் மொபைல் ஃபோன் ஹாலில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சார்ஜரில் போட்டு விட்டு அவள் கணவன், மாமனார், மாமியாருடன் கோவிலுக்கு சென்று விட்டாள்.
(…. மயக்கியே..)