மார்ட்டின் லுதாஸ் தனக்கு முன்னால் சோர்வாக படுத்திருப்பவரையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனை போல கட்டிலில் படுத்திருப்பவரும் இவனை தான் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.. அது வேறு யாரும் இல்லை மார்ட்டினின் தாத்தா சார்லஸ் தான்.. வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார்..
ஒரு காலத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்தவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் அப்போது இப்போது என்று நிலையில் தான் படித்திருந்தார்.. அவரைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு அவர் அருகிலேயே உட்கார்ந்து இருந்த மார்டினின் முகத்திலோ எந்த உணர்வுகளுமே இல்லை.. ஆனால் அவன் மனமோ தன்னுடைய தாத்தாவின் உடல் நிலையை நினைத்து பரம கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தது.. ஆனால் அவனாலும் என்ன தான் செய்ய முடியும்.. அவரது வயதோ கிட்டத்தட்ட 90ஐ தாண்டி சென்று கொண்டிருந்தது.. பின்னே இருக்காதா இவனுக்கே 35 வயதிற்கு மேல் ஆகிவிட்டதே.. அதனால் அவரின் உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக சீர்கெடுவதை அவனால் பார்க்கதான் முடிந்தது.
“ஆர் யூ ஓகே தாத்தா..”அவன் கனிவுடன் கேட்க.. அவரோ பேச முடியாமல் ஆமென் என்று தலையாட்டலுடன் படித்திருந்தார்.. கிட்டத்தட்ட ஒரு இரண்டு வருடங்களாகவே அவர் படுக்கையில் தான் படித்திருக்கிறார்.. அதாவது படுத்த படுக்கையாக தான் இருக்கிறார்.. அனைத்தும் அதே பெட்டில்தான்.. அவரைப் பார்த்துக் கொள்வதற்கு என்று தனியாக ஒரு வீடு கட்டி அந்த வீட்டையே அவருக்காக மருத்துவமனையாக மாற்றி வைத்திருந்தான்..
மார்ட்டின் வாரத்தில் ஒரு முறையாவது தன்னுடைய தாத்தாவை வந்து பார்த்துவிட்டு சென்று விடுவான்.. அடிக்கடி வருவது அவர் உடல் நிலைக்கும் சரியில்லை என்று மருத்துவர் கூறியதால் தான் இந்த நிலை.. இல்லை என்றால் அவருடனே தங்கியிருந்து அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்வான்..
பின்னே தாய், தந்தை இல்லாத தன்னை தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக வளர்த்துவாராயிற்றே.. என்னது மார்ட்டினுக்கு தந்தை இல்லையா. தாய் இல்லையா என்று நீங்கள் கேட்பது நன்றாகவே தெரிகிறது.. ஆம் அவனுக்கு தாயோ தந்தையோ இல்லை.. அவனோடு தந்தை தான் உயிரிழந்து விட்டார்..
ஆம் மார்ட்டினின் தந்தை மைக்கில் கிட்டத்தட்ட ஒரு 15 வருடங்களுக்கு முன்பு எதிரிகளின் தாக்குதலில் இறந்து போய்விட்டார்.. வழக்கம் போல கேங்ஸ்டர் அனைவரும் கலந்துக்கொள்ளும் ஒரு பார்ட்டியின் போதுதான் அவனின் தந்தை மைக்கெல் மிக்கி இறந்து போனார்.. அதுவும் கொடூரமாக அவர் உடல்களை கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு இறந்து போயிருந்தார்..
அப்போதுதான் மார்ட்டின் புதிதாக அந்த தொழிலுக்கே வந்திருந்தான்.. அப்படிப்பட்டவனுக்கு தன் தோளை தட்டி ஆதரவாக பேசிவிட்டு… “இந்த பாட்டிக்கு போயிட்டு வந்து ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசணும் மார்ட்டின்.. நீ இந்த தொழிலுக்கு வரத பத்தி தான் அது..” என்று கூறிவிட்டு புன்னகையுடன் சென்றவர் திரும்பி வரும்போது கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு உடல் உருக்குலைந்து வந்த வரை பார்க்க மார்ட்டினுக்கோ வெறி பிடித்தவன் போல் ஆகி விட்டான்.
இதற்கு காரணம் யாரு யாரு என்று தந்தையுடன் சென்ற அடியாட்களிடம் விலாசித்தள்ள.. அவர்களோ ஏற்கனவே அந்த எதிரிகளின் குழுவினால் பலமாக தாக்கப்பட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று தான் ஓடிவந்திருந்தவர்கள் இப்போது மார்ட்டினிடம் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருந்தனர்..
“சார் அந்த டிராகன் டீம் தான் சார் இதுக்கெல்லாம்..” என்று ஒருவன் இழுக்க அப்போது வெறிக்கொண்டு கையில் எடுத்தான் துப்பாக்கியும், வாளையும்.. தன் தந்தையை கொன்றவர்களை சும்மா விடாமல் அவர்களை துரத்தி துரத்தி ஒரு ஒருவரையும் கொடூரமாக கொலை செய்தான் மார்ட்டின்.. அப்போது மார்ட்டினுக்கு வெட்டுவதும் தெரியாது,குத்துவதும் தெரியாது அவனுக்கு தெரிந்ததெல்லாம் தன்னுடைய இல்லீகல் பிசினஸும், குத்து சண்டையும் மட்டுமே.. ஆனால் தன்னுடைய தந்தையை அதுவும் தனக்கு அம்மாவாக, நல்ல நண்பனாக இருந்த ஆசை தந்தையை தன்னை சிறுபிள்ளையிலிருந்து குழந்தை போல வளர்த்த தன்னுடைய தந்தையை அந்த நிலையில் பார்க்க அவனுக்கு உயிர் வெறி தான் பிடித்து விட்டது..
அனைத்தும் முடிந்து உயிரற்ற வெற்று மனமாக, உடலாக வந்தவனை அதற்கு பிறகு தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக வளர்த்தவர் சார்லஸ் தான்.. மார்ட்டினிடம் தாய் என்று இழுத்தால் அவ்வளவு தான்.. அந்த வார்த்தையை மட்டும் அவன் முன்னால் கூறி விடக்கூடாது.. சிறு பிள்ளையிலிருந்து அப்படித்தான்.. மார்ட்டினி தாய் அவனை அப்போவென்று விட்டு போனது அவனது எட்டு வயதில் தான்..
அவனின் தாய் மார்ஷா அமெரிக்காவை சேர்ந்தவள்.. அவள் ஒரு அமெரிக்கன்.. மார்ட்டினின் தந்தை மைக்கேல் ஒரு பெரிய பிசினஸ் டீலுக்காக அமெரிக்கா சென்றார்… அப்போது தான் அவருக்கு மார்ஷாவுடன் ஏற்பட்ட பழக்கம் போக போக காதலாக உருமாற.. அடுத்த நாளே மைக்கெல் மார்ஷாவை திருமணம் செய்து இந்தியாவிற்கு கூப்பிட்டு வந்தார்.
மார்ஷாவும் ஒன்றும் சாதாரணவள் எல்லாம் இல்லை.. அவளும் ஒரு நிழல் உலக தாதாவின் மகள்தான்.. அவளுக்கும் மைக்கெலை பார்த்தவுடனே பிடித்து போக அதுவும் அவனின் கண்ணியம் அவளை அடியோடு அசர வைக்க.. உடனே மைக்கெலின் காதலை ஏற்றுக் கொண்டு அவனுடன் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து விட்டாள். இந்தியாவிற்கு வந்து சேர்ந்தவளோ 8 வருடம் நன்றாக தான் வாழ்ந்தாள்.. சொல்லப்போனால் மைக்கெல் அவளை தன் கையில் தாங்கினான். தன் காதலில் கரைய வைத்தான் என்று தான் கூறவேண்டும்..
அடுத்து இருவருக்கும் திருமணம் ஆகி அடுத்த வருடமே மார்ட்டின் பிறந்தான்.. மார்ட்டினின் மீது இருவருமே உயிராக தான் இருந்தார்கள்.. மார்ட்டினுக்கு சரியாக ஒரு எட்டு வயது ஆகி இருக்கும் அப்போதுதான் மைக்கெலுக்கும், மார்ஷாவுக்கும் இடையில் சண்டை வந்தது..
அது எதனால் என்றால் ஒரு மிகப்பெரிய டீல் ஒன்றினை முடிக்க மார்சாவின் தந்தை மைக்கெலிடம் கேட்டிருக்க மைக்கெலோ அந்த ப்ராஜெக்ட்டினால் ஏற்படும் தீயவைகளை நினைத்து செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார். மைக்கெல் இப்படிதான் அவர் செய்யும் ஒவ்வொரு விடயத்திலும் இருக்கும் நல்லவகைகளை ஆராயுவானோ என்னவோ ஆனால் கெட்டவைகளை நன்றாக ஆராயுவான்.. அப்படிதான் இந்த ப்ராஜெக்டையும் ஆராய்ந்தான்.. ஆனால் மார்ஷாவின் தந்தை பணத்திற்கு ஆசைப்பட்டு போதைப்பொருட்கள் அதுவும் மிகவும் அதிக அளவு நச்சிப்பொருள் கலந்த போதைப்பொருளை விற்க, வாங்க மைக்கெலை கேட்க.. அவனோ முடியவே முடியாது என்று அடித்து கூறிவிட்டான்.
அதில் கோவப்பட்ட மார்ஷாவின் தந்தையோ தன்னுடைய மகளை மைக்கெலுக்கு எதிராக தூண்டிவிட்டார். மார்ஷாவோ தன்னுடைய தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவள் அதனால் உடனே அவளும் மைக்கெலிடம் தன்னுடைய தந்தைக்கு பரிந்து பேசி சண்டை பிடித்தாள்… மைக்கெலோ அவளுக்கு எவ்வளவோ அதில் இருக்கும் குறைகளை எடுத்துக் கூற ஆனால் அவள் கேட்பதாகவே இல்லை..
“ம்ச் சீ மைக் எங்க அப்பா என்ன சொல்றாறோ அதை தான் நீ செய்யணும் அப்டி இல்லனா என்ன விட்டுடு..”என்றவள்.. “என் அப்பா தான் எனக்கு முக்கியம் அவருக்காக நான் என்ன வேணா செய்வேண்.. ஏன் உன்ன விட்டு கூட போவேன்..” அடித்து பேச அதில் வைக்கெலுக்கு இன்னும் ஆத்திரம்தான் அதிகமாகியது..
தான் எவ்வளவு கூறினாலும் அதனை காதில் வாங்காமல் தன் இஷ்டத்திற்கு பேசும் மனைவியின் மீது அதிக ஆத்திரம் வந்தது.. அதும் இல்லாமல் தன்னை மார்ஷா தன் கைக்குள், கட்டுக்குள் வைக்க முயல்வதாக நினைத்தவனோ.. “ம்ச் ஏன் எதுக்காக உங்க அப்பா சொல்றத நான் செய்யணும்.. நான் என்ன அவரோட அடிமையா… நானும் மனுஷன் தான்.. அதுவும் நாங்க ஒன்னும் உனக்கோ, இல்ல உன் அப்பனுக்கோ குறைஞ்சவங்க இல்ல.. நாங்களும் பெரிய உலகத்த ஆண்டுக்குட்டு இருக்குறவங்க தான்..” என்று இவனும் பேச.. சண்டை இன்னும் வலுத்தது.
சார்லஸ் தன்னுடைய மருமகளிடம் எவ்வளவோ எடுத்து கூறி பார்த்தார்… ஆனால் மார்ஷாவோ அதனை ஈகோ பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அந்த ப்ராஜெக்ட்டை முடிக்கவே வேண்டும் இல்லையென்றால் நான் மைக்கெலுடன் வாழவே மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நிற்க மைக்கெலோ முடியாது என்று ஒற்றை வார்த்தையில் தன்னுடைய திருமண வாழ்க்கையே முடித்துவிட்டார்.
அதில் மார்ஷாவோ வெறி கொண்டவள் “அப்போ நான் என் புள்ளைய கூட்டிட்டு கிளம்புறேன்…”ஆத்திரத்துடன் மார்ட்டினை கையை பிடித்து இழுக்க..
அதில் மைக்கெல் வெடுக்கென்று மார்ட்டினை தன் பக்கம் இழுத்துக் கொண்டவனோ “அவன் என்னோட வாரிசு அவனை என்கிட்டே இருந்து பிரிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை..”வெறிக்கொண்டு கத்தியவனை மிரட்சியாக பார்த்த மார்ஷாவிற்கு தன் மகனை மைக்கெலிடம் விட மனமில்லை.. அதற்கு ஈகோ கூட ஒரு காரணம் தான்…
“அதெல்லாம் முடியாது என் பிள்ளை என்னோட தான் இருப்பான்..” என்று மைக்கெலை ஒரு தள்ளாக தள்ளிவிட்டு தன் மகனை தன்னுடன் அழைத்து செல்ல.. மார்ட்டினோ தன் தந்தையின் மீது அப்போது உயிராக இருந்தான்… “அப்பா அப்பா..” என்று அந்த அறியாப்பிள்ளை கத்திக்கதற.. மைக்கெலால் ஒன்றுமே செய்ய முடியவில்லை..
“ம்ம் அப்பா என்னோட புள்ளப்பா..” என்று தன் கையை இறுக்க பிடித்து அவர்களின் பின்னால் போகாமல் தடுத்த தன் தந்தையை பார்த்து கூற…
“ம்ச் மைக் கொஞ்ச நாள்ல அவன் அம்மாவோட இருக்கட்டும்.. இப்போதைக்கு இந்த பிரச்சனை இதோட விடுங்க கொஞ்ச நாள் போனா அவளும் ஆட்டோமேட்டிக்கா உன்கிட்ட வந்துருவா…”தற்காலிகமாக அந்த பிரச்சனையை முடிக்க சார்லஸ் எடுத்து கூற… மைக்கெலுக்கும் அதான் சரியென்றுப்பட்டது.
ஆனால் இந்த பிரச்சனையோ கடைசியில் போய் நின்றது என்னவோ விவாகரத்தில் தான்.. ஆம் மார்ஷா ஊருக்கு சென்ற அடுத்த மாதமே தன் கணவனுக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப அதனை பார்த்தவனுக்கோ ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது..
மைக்கெல் அப்போதும் சும்மா இல்லை.. நேராக அவளிடம் சென்று “நீ போறதா இருந்தா போடி எதுக்காக என் பையனையும் கூட்டிட்டு போன…” என்று மார்ஷாவிடம் கத்திக் கொண்டிருந்தான்.
ஆனால் மார்ஷாவோ அதனை காதுகளுக்குள் வாங்கவே இல்லை.. இப்படியே காலங்கள் ஓட.. மைக்கெல் தன் மகனை தன்னிடம் கொண்டு வர என்னேன்னவோ செய்துப்பார்க்க.. ஆனால் மார்ஷா அதற்கு எதற்கும் அசையவில்லை. அவனுக்கும் நன்றாக தெரியும் இதற்கு எல்லாம் பின்னால் இருப்பது மார்ஷாவின் தந்தை தன என்று..
இப்படியே நாட்கள் ஓட.. மார்ட்டின் பிரிந்து போய் சரியாக ஒரு எட்டு மாதம் சென்று இருக்க மார்ட்டினோ தன்னுடைய தந்தையின் முன்னால் வந்து நின்றான்.. அவன் வந்ததை பார்த்த மைக்கெலுக்கு அவ்வளவு சந்தோஷம் தாங்க முடியவில்லை.. “மார்க்… எப்படிப்பா வந்த அமெரிக்காவிலிருந்து தனியாவா வந்த..” என்று தன்னுடைய மகனை கட்டிப்பிடித்து ஆறத்தழுவி அவனை முத்தமிட… மார்ட்டினோ கலங்கிய கண்களுடன் ஆம் என்று தலையாட்டினான்..
தன் மகனின் கலங்கிய கண்கள் தந்தையானவனுக்கு ஏதோ இருப்பதாக தோன்ற… “என்னப்பா ஆச்சு.. ஆர் யூ ஓகே..”பரிதவிப்பாக கேட்ட தந்தையை பார்த்து இல்லை என்று வேகமாக தலையாட்டியவனோ…
“ப்பா.. அம்மா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அந்த புதுசா கல்யாணம் ஆனவருக்கு என்ன பிடிக்கவே இல்லை.. என்ன அந்த வீட்ல வச்சு ரொம்ப அடிச்சாங்க தெரியுமா..” என்று அழுது கொண்டே கூற.. அதனை கேட்ட அவனின் தந்தைக்கு அவ்வளவு வெறி ஏறியது..
“அது எப்படி அவன் கொடுமை படுத்துற அளவுக்கு உன் அம்மா விட்டா…” என்று எகிறிக்கொண்டிருந்தான்..
மைக்கெலை விவாகரத்து செய்துவிட்டு சென்ற அடுத்த இரண்டாவது மாதத்திலேயே தன்னுடைய தந்தையின் கேங்கில் இருக்கும் ஒருவனை மார்ஷா திருமணம் செய்து கொள்ள.. மார்ட்டினோ அப்போது அவளுக்கு வேண்டாதவனாகி விட்டான். அப்பொழுது தனது மகனை அவள் கவனித்துக் கொள்வதாகவே இல்லை. தன்னுடைய புது வாழ்க்கையை பற்றி மட்டுமே யோசித்து,அனுபவித்து ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்க.. அந்த அடியாளோ மார்ட்டினை போட்டு வெளுத்து எடுத்துக் கொண்டிருந்தான்..
இதனை முதலில் கண்டுக்கொள்ளாமல் இருந்த மார்ஷாவோ அதன் பிறகு மனம் கேளாதவள்.. ஒரு நாள் மார்ட்டினிடம் வந்தவள்..
“நீ வேணும்னா உங்க அப்பாவுடைய போ.. என் வாழ்க்கையில் இனிமே நீ குறுக்க வராத..” என்று முகத்தில் அடித்தவாறே கூறிய தன் அன்னையை வெறித்து பார்த்த மார்ட்டினோ அடுத்த நிமிடம் கிளம்பி இந்தியாவிற்கு தன் தந்தையிடமே வந்துவிட்டான்..
இப்போது தெரிந்திருக்கும் அவன் ஏன் பெண்கள் என்றாலே கடுப்பாகிறான் என்று தன்னுடைய தாய் வேறு ஒருவனை முத்தமிடுவதையும், அணைத்துக் கொள்வதையும் ஒன்றாக சுற்றுவதையும் இன்னும் நெருங்கி பழகியதையும் பார்த்தவனுக்கு பெண்கள் என்றாலே கொஞ்சம் கடுப்பாகவும், அருவருப்பாகவும் தான் இருந்தது..
அதனால்தான் கிட்டத்தட்ட 35 வருடங்களாக திருமணமே செய்து கொள்ளாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றான்… அதனை எல்லாம் நினைத்தவாறே சார்லஸ் கண்கலங்க படித்திருக்க..
“ம்ச் இப்போ என்ன தாத்தா ஆயிடுச்சு உங்களுக்கு..” என்று ஆதரவாக அவர் கையை வருடியவரை கேட்டான் மார்ட்டின்…
அவரோ திக்கி திக்கி “உன் மேரேஜ் உன் மேரேஜ்…” என்று சிரமத்துடன் கூற…
அதில் சலித்துக் கொண்டவனும் “ஒவ்வொரு தடவை நான் உங்களை பார்க்க வரும்போதும் இந்த ஒரு வார்த்தையை மட்டும் ரெகுலரா சொல்லிடுறீங்க தாத்தா எனக்கு எந்த கல்யாணமும் வேண்டாம். நான் இப்படியே தனியா சந்தோஷமா இருந்துடுறேன்.. எனக்கு பிசினஸ் இருக்கு.. எனக்கு நாள பின்னால வாரிசு வேணும்னா கூட நான் அதுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணிப்பேன் தாத்தா.. ஏன் இந்த மருத்துவ உலகத்துல எவ்வளவோ சாதனைகள் நடக்குது கல்யாணம் பண்ணா தான் வாரிசு வரும்னு என்ன இருக்கு…”தோளை குலுக்கியவாறே பேச..
அது அந்த வயதானவருக்கு மேலும் மனதை புண்படுத்த தான் செய்தது. “இல்லப்பா..” என்று அவர் எதையொ கூற வர…
“அட தாத்தா ப்ளீஸ் எனக்கு பொண்ணுங்கனாளே பிடிக்கல தாத்தா…” என்று கூறியவனோ “விடுங்க இதப்பத்தி நம்ம பேச வேண்டாம்… நீங்க உங்க உடம்ப பார்த்துக்கோங்க..”சட்டென்று கூறியவன்.. அவரை ரெகுலராக பார்த்துக் கொள்ளும் மருத்துவர=ரிடம் அவரது ஹெல்த்தை பற்றி விசாரிக்க…
அவரும் அவர் தாத்தா பற்றிய ரிப்போர்ட்டை எடுத்து கூறிக் கொண்டிருந்தார். “வயசாயிடுச்சு இல்ல சார் அதனால கொஞ்சம் உடம்பு தளர்ந்து போச்சு… இதுக்கு மேல அவர் மேல நம்பிக்கை வைக்கிறது கஷ்டம் தான்…” என்று கூற மார்ட்டினிற்கும் இதற்கு மேல் என்ன செய்வது என்றே தெரியவில்லை… சரி என்று தலையாட்டியவனும் ஒரு முக்கியமான டீல் ஒன்றினை பேசுவதற்காக வேகவேகமாக சென்றுவிட்டான்..
இங்கு மதுரை ஜங்ஷனில் தன் கைகளை பிசைந்தவாரே நின்று கொண்டிருந்தாள் மைத்ரேயி.. சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவாளின் கல்லூரி தோழனான ஜான்சன் அவளை கொல்கத்தா அனுப்புவதற்காக ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்காக சென்றிருந்தான்..
கிட்டத்தட்ட அவள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு 10 நாட்கள் ஓடி விட்டிருந்தது. அந்த 10 நாட்களும் எவ்வளவோ அந்த வீட்டினை விட்டு வெளிவர முயன்று விட்டாள்.. ஆனால் அவளால் ஒன்றுமே முடியாமல் போக சரியாக இன்று மாலை தான் ஒரு பங்க்ஷனிற்காக தனது சித்தியும், அவளது தம்பியும் தனது தந்தையும் வெளியே சென்று இருப்பதை பார்த்து வீட்டில் இருந்து தப்பித்து ஓடி வந்திருந்தாள்.. அதில் அவளுக்கு உதவியாக இருந்தது அவளுடன் படித்த ஜான்சன் தான்…