மான்ஸ்டர்-6

4.8
(8)

அத்தியாயம்-6

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்பு  மாணிக்கவாசகம் தன் மனைவி காஞ்சனாவிடம் ராகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூறி அவனை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்.. “என்ன மாதிரி உன் புள்ளைய வளர்த்திருக்க பாரு.. கொஞ்சம் கூட அறிவுன்றதே இல்ல.. இப்ப அவனால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா..” என்று அனலாக கத்திக் கொண்டிருக்க..

ம்ச் அட சும்மா அவனையே சொல்லாதீங்க நீங்களும்தான் உங்க பிரண்டுக்கு போய் ஜாமின் கையெழுத்து போடுறேன்னு எவ்வளவு கோடி வாங்கி கொடுத்திருக்கீங்க..” என்று அவளும் எகிறிக்கொண்டிருந்தார். அதில் கற்பென்று வாயை மூடிக்கொண்ட மனிதரோ ம்ச் இப்ப என்னதான் என்ன செய்ய சொல்றன்னு எனக்கு தெரியல.. நம்மகிட்ட அதை அடைக்கிற அளவுக்கு சொத்தும் இல்ல.. ஒன்னுமில்ல..” என்று புலம்பியவரை கண்ட காஞ்சனாவின் முகம் சுருங்க.. பட்டென்று காஞ்சனாவோ முகம் பளபளக்க…

அட ஏன் இல்ல அதான் உங்க அருமை பொண்ணு பேர்ல நிறைய சொத்து இருக்கே..” என்று சந்தோஷமாக குதிக்காத குறையாக கூறியதை சமையல் கட்டில் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மைத்ரேயிக்கோ உள்ளம் படப்படத்தது..

அய்யோ ஆண்டவா…”என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டவளுக்கோ பாட்டி நன்றாக பேசிக் கொண்டிருக்கும்போது கூறியது இப்போது ஞாபகம் வந்து தொலைத்தது..

அம்மா மைத்து.. தாயே என் மேல ஒரு சத்தியம் பண்ணுடா செல்லம்.. எக்காரணத்தைக் கொண்டும் உங்க அம்மாவோட சொத்துல பாதி உன் பேர்ல இருக்குற சொத்த மட்டும் நீ இந்த ரெண்டு பணத்தாசை புடிச்ச பேய்களுக்கு மட்டும் கொடுத்துறவே கூடாது.. இது என் மேல சத்தியம்..”என்று ஒருநாள் சத்தியம் வாங்கி இருக்க.. அதை நினைத்த மைத்ரேயிக்கோ இப்போது வயிற்றை கலங்கி தவித்தது..

எப்படி இருந்தாலும் அடுத்தது அவர்கள் தன்னிடம் தான் வருவார்கள் என்று புரிய… அய்யோ இப்ப நான் என்ன செய்றது.. பாட்டி வேற அந்த சொத்தை கொடுக்கக் கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்களே.. அது அம்மாவோட ஞாபகமா இருக்கிற லாஸ்ட் சொத்து..அத புடுங்க நினைக்கிறாங்களே… இப்போ அவங்க வந்து கேட்டா நான் என்ன சொல்லி சமாளிக்கிறது..” என்று அவள் யோசித்துக் கொண்டே இருக்க.. அந்த யோசனை நிஜமாக்குவது போல அடுத்த நிமிடம் அவளிடம் வந்து நின்றுவிட்டார் மாணிக்கவாசகம்.. அவரது முகமோ இவ்வளவு நாள் இல்லாத பாசத்தை வழிவது போல ஒரு முக பாவனையை மாற்றிக் கொண்டு வந்து நிற்க.. அதனை மைத்ரேயிக்கு தெரியாதா? என்ன.. இத்தனை வருடங்களாக மாணிக்கவாசகர் இவளை அன்பாக கூட பார்த்ததில்லைஇன்று முகம் முழுவதும் புன்னகையுடன் அன்பை கொட்டுவது போல வந்து நிற்பவரையை நினைக்க நினைக்க வைத்ரேயிக்கு அருவருப்பாக தான் இருந்தது..

அவரோ வீம்பை காட்டாமல் தன்னுடைய வேலை தான் முக்கியமாக இருக்க அம்மாடி மைத்து…” என்று அவர் இழுத்தார்..

மைத்ரேயின் உடலோ இறுக்கிப் போனது.. மெதுவாக நிமிர்ந்து பார்த்தவளோ அவரை பார்த்து என்னப்பாஎன்று குரல் கம்மற கேட்க

அம்மாடி அப்பாக்கு ஒரு பிரச்சனைடாம்மா…” என்று அவர் குழைவாக பேசியவரை கேட்ட மைத்ரேயிக்கோ தான் நினைத்தது தான் நடக்கப்போகிறது என்பது தெளிவாக புரிந்துபோனது..

அட என்னங்க அவகிட்ட போய் கெஞ்சிட்டு இருக்கீங்க..” என்ற காஞ்சனாவோ எரிக்கின்ற பார்வை பார்த்த மாணிக்கம்.

நீ கொஞ்சம் சும்மா இருக்கியாநான் தான் அவகிட்ட பேசிட்டு இருக்கேன்ல..” என்று கத்தியவரோ அம்மாடி அப்பாக்கு ஒரு பிரச்சனை டா.. அதுக்கு உடனே பணம் தேவப்படுது.. அம்மா சொத்து உன் பேர்ல இருக்குல்ல அந்த இடத்தை என் பேருல எழுதி கொடுத்துடுடா தங்கம்.. இல்லனா அப்பா பெரிய பிரச்சனையில மாட்டிப்பேன்டா..” என்று நயவஞ்சக பேச்சாக பேச..

மைத்ரேயிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.. கண்கள் பட படவென்று அடித்துக் கொள்ள, மனமும் ஏதோ சஞ்சலமாகவே இருந்தது.. “..து அது இல்லப்பா.. து..”என்று மைத்ரேயி பயத்தில் திக்கி திணறியவளோ..

அட என்னடா பயம் உனக்கு எங்கிட்ட போயி.. நான் உன் அப்பாடா…”கொஞ்சியவருக்கோ இவ்வளவு நாட்கள் அவள் அவரின் மகள் என்றோ தான் அவருக்கு தந்தை என்றோ மறந்தே போய் இருந்தார் போல.. ஒருவேளை கோமாவில் இருந்திருக்கலாம்.. “எல்லாம் நம்ம குடும்பத்தோட நல்லதுக்கு தாண்டா.. அப்பா எவ்ளோ பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டேன் தெரியுமாடா.. சீக்கிரமா இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரனும்னா ஒரேடியா இந்த கடனை கட்டனும்டாஎல்லாத்தையும் அடைச்சிட்டு ஒரு நல்லவனா, குணமானவனா பார்த்து ஒருத்தவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்து ராணி மாதிரி வாழ வைக்கனும்.. அதுக்கு முதல அப்பாவோட எல்லா கடனும் அடைக்கனும்டாம்மா…” மாணிக்கம் நயவஞ்சகமாக பேச..

காஞ்சனாவிற்கோ இதுவரை வேண்டாத பெண்ணாக இருந்தவளிடம் இப்போது குழைவாக பேசும் தன்னுடைய கணவரை நினைத்து கடுப்பாகத்தான் இருந்தது… “இவக்கிட்ட என்னத்துக்கு இப்போ கெஞ்சிட்டு இருக்கீங்க.. எழுதி கொடுத்திட்டு போனா போகப்போறா… அத விட்டுட்டு இந்த கொஞ்சல் தேவையா..”என்று அதட்ட..

அந்த அரக்கியின் கத்தலில் பெண்ணவள் தான் உடல் வெடவெடக்க எழுந்து நின்றவள்.. “இல்லப்பா அது அம்மாவோட இடம்.. அவங்க ஞாபகமா…” என்று ஆரம்பிக்க…

காஞ்சனாவிற்கு அவ்வளவு வெறி ஏறியது. “என்னடி அம்மா சொத்து  அதான் உன் அம்மாவே போய் சேர்ந்துட்டா இல்ல அப்புறம் என்ன அம்மா சொத்து ஆட்டுக்குட்டி சொத்துன்னு.. ஒழுங்கா அவரு கேக்குற மாதிரி இடத்தை எழுதி கொடுத்துட்டு வழக்கமா இந்த வீட்டு மூலையில கெடக்குற மாதிரி கெடக்க பாரு..” என்று காஞ்சனா ஆக்ரோஷமாக கத்தினார்.

அதில் மென்மையான மனம் கொண்ட பெண்ணவளின் உடல் தூக்கி போட்டது.. “இல்ல சித்தி அது அம்மா ஞாபகமா வச்சுக்க சொல்லி பாட்டி சொன்னாங்கஇத யாரு கேட்டாலும் கொடுக்க கூடாதுன்னு எப்பயோ சத்தியமும் வாங்கிட்டாங்க..” என்று மைத்ரேயி உண்மையை கூற.

இதனை எல்லாம் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரமணிக்கும் தன்னுடைய பேத்தியின் நிலையை நினைத்து கண்ணீர் தான் அருவியாக கொட்டியது.. தான் மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால் தன்னுடைய பேத்தியை இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி இருக்க மாட்டார்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் இப்போது தான் எழுந்து உட்கார, ஏன் அசைய கூட முடியாத நிலையில் அல்லவா இருக்கிறார்.. அதனை நினைத்து அவருக்கு கண்ணீர் சொரிய தான் செய்தது.

ஓ அப்படியா இப்ப என்ன சொல்ல வர உங்க பாட்டி சத்தியம் வாங்கிட்டு அதனால இப்ப அந்த இடத்தை கொடுக்க மாட்டேன்னு சொல்ல வரியா..” என்று காஞ்சனா ஆத்திரப்பட்டவள்… “அந்த கிழவியே இன்னிக்கோ நாளைக்கோன்னு கெடக்கு.. அதோட சத்தியத்த காப்பாத்தி என்ன செய்ய போற… அப்டியே சமாளிக்கிற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல.. மரியாதையா அந்த சொத்தை எழுதி கொடுத்துட்டு ஒரு மூலையில கெடக்குற வழியை பாரு… ஏதோ நீ இந்த வீட்டுல பொறந்த ஒரே பேருக்காக உனக்கு தெண்டமா சோறு வேணா போட சொல்றேன்..” என்று திட்டியவரோ

நீங்க என்ன அவக்கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்கீங்க… நம்ம சொல்றத கேட்காம இவ எங்க போய்ட போறா… உங்களுக்கும் அவ்ளோதான்.. சொத்த மரியாதையா எழுதி வாங்குங்க உங்க பொண்ணு கிட்ட இருந்து..” என்று கத்தியவர் மாணிக்கவாசகர் எங்கே முறைத்தவாறு நின்று இருந்தார்..

மைத்து.. நான் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்.. இதுல தேவை இல்லாம நீயும் தான் அடிபடுவ.. ஒழுங்கா அந்த இடத்தை என் பேர்ல எழுதி கொடுத்துடு..” என்று மிரட்டிய தந்தையை பார்த்து மனதில் உறுதியெடுத்தாள்..

என்ன ஆனாலும் சரி தன்னுடைய தாயின் சொத்தையே மட்டும் விட்டுவிடவே கூடாது..”என்று நினைத்தவளோ.. நடுக்கத்துடன்.. “அம்மா இடத்த தரமாட்டேன்ப்பா..”என்று மறுபடியும் மறுப்பாக தலையசைக்க…

காஞ்சனாவிற்கோ எங்கே இருந்து அவ்வளவு வெறியறியதோ? “என்னடி சொன்ன…”என்ற காஞ்சனா ஓடி சென்று மைத்ரேயியின் கழுத்தை இறுக்கிக்கொள்ள.. மைத்துவோ அதில் மிரண்டே போனாள். காஞ்சனா அப்படி நடக்கவும் காரணம் இருக்கின்றது அல்லவா.. அவர்களின் மகன் ராகவ் சிறிது நேரத்திற்கு முன்னால் வந்து கூறிய விடயம் அப்படி அல்லவா

அப்பா அப்பா..” என்று ஓடி வந்தவனை நான்கு மிதி மிதித்த அவனின் தந்தையோ அவனை கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்.. அப்படி அடித்துக்கொண்டிருந்தவரின் கையை வெடுக்கென்று பிடித்தவனோ.. “ஆஆஆஎதுக்குப்பா சும்மா வேலை வெட்டி இல்லாம என்னை போட்டு அடிக்கிறீங்க…”என்று எகுறியவனை கண்டு அனலாக முறைத்தவறோ.. “உன்ன கொல்லாம விட்டேனேனு சந்தோஷப்படுடா எரும..”என்று இன்னும் நான்கு மிதி மிதிக்க..

அய்யோ அப்பா நிறுத்துங்க.. அடிக்கிறத முதல நிறுத்துங்கப்பாநான் ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கேன்ப்பா…” என்றவனை பார்த்து முறைத்தவரோ..

நீ கொண்டு வர ஒவ்வொரு விஷயமும் வீணா போனது தாண்டா.. ஒன்னும் உருத்தேறாது..” என்று கத்திக் கொண்டிருந்தவரை பார்த்து…

அட இதுவர அப்டி செஞ்சிருப்பேன்.. இது ஒன்னும் அப்படியான மேட்டர் இல்லப்பா முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க..” என்றவனோ.. தன் தந்தையை முறைத்தவாறே… நம்ம ஊருக்கு புதுசா ஒரு கூல்டிரிங்ஸ் பேக்டரி வருதாம்.. அந்த பேக்டரிக்காக இடம் பாக்குறதா நம்ப பத்ரி இல்ல அதான் அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ப்யூன்னா வேலை பாக்குறானே.. அவன் வந்து சொன்னான்இந்த ஊர்ல பல கிரவுண்ட் இடத்தை அந்த கூல்டிரிங்ஸ் பேக்டரி தான் வாங்க போறதா.. அதுவும் உங்க மொத பொண்ணு பேருல இருக்குற அந்த இடத்துல தான் மெயினா ஃபேக்டரி கட்ட இருக்குறதாவும்.. அந்த இடத்த எல்லாம் கேக்குறாங்கன்னு சொல்றான்.. அந்த இடத்துக்கு எவ்வளவு விலை தெரியுமாப்பா… ப்பா.. அவன் சொல்றத பார்த்து நானே அசந்துட்டேனா பாருங்களேன்..” என்று ஆச்சரியமாக கண்களை விரித்தவாறே கூற.

அதனைக் கேட்ட மாணிக்கவாசகத்திற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.. “டேய் என்னடா சொல்ற.. எனக்கு நீ சொல்றது ஒன்னும் புரியல..” என்று அவனை அதட்டியவாறு சேரில் சாய்ந்து உட்கார்ந்தவரை பார்த்து…

அட உண்மையா தான் பா சொல்றேன்அதான் உங்க பொண்ணு பேருல இருக்கே அந்த 40 ஏக்கர் இடம் அந்த இடத்திற்கு எவ்வளவு மதிப்புன்னு தெரியுமா…” என்று ஆரம்பித்தவனோ.. “அதுவும் கிட்டத்தட்ட அந்த 40 ஏக்கர்ல 30 ஏக்கருக்கு பெருசா பேக்டரி கட்ட போறாங்களப்பா அதுவும் கூல்டிரிங்ஸ் ஃபேக்டரியாம்யாரோ மும்பையிலிருந்து வந்து வாங்கி கட்ட போறாங்களாம்.. அதனால அவங்க அந்த இடத்தை வேணும்னு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல டீல் பேசினா அவனுங்க எவ்வளவு தெரியுமா பேசி வச்சிருக்காங்க.. அந்த இடத்த அந்த மும்பைக்காரனுக்கு நம்மக்கிட்ட இருந்து வாங்கிக்கொடுத்துட்டா கிட்டதட்ட 40 லட்சம் கமிஷன் தர சொல்லி பேசி வச்சிருக்காங்க.. அப்ப அந்த இடத்துக்கு எவ்வளவு கொடுப்பாங்கன்னு யோசிச்சு பாருங்க..” என்று அவன் கூற..

அதனை கேட்ட மாணிக்கவாசகத்தின் மூளை என்னென்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தது.. “என்னது அந்த வீணா போன பியூனுக்கு 40 லட்சமா..” என்று காஞ்சனாவும் கத்தியவாறே நெஞ்சில் கை வைக்க

ராகவோ ஆம் என்று தலையாட்டியவன்… அம்மா இதுக்கே நெஞ்சில கை வைக்கிறியே.. அந்த இடத்தை ரெண்டு நாளைக்குள்ள ரிஜிஸ்டர் பண்ணிக்கொடுத்தா அந்த ரிஜிஸ்டரு இருக்கானே அவனுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி காசு தரேன்னு சொல்லி இருக்காங்களாம்அதனால ரிஜிஸ்டரும் இதுல இறங்கிட்டாரு தெரியுமா?.. அவரும் எப்படியாவது அந்த 40 ஏக்கர் இடத்தை நம்மகிட்ட இருந்து வாங்கி அந்த மும்பைக்காரனுங்களுக்கு கொடுத்துடனும்னு அலைஞ்சுகிட்டு இருக்காரு…” என்று கூறியவனா..

ம்ம் சீக்கிரமா நாம அந்த இடத்த அவங்களுக்கு கொடுக்குறோம்னு வைங்களேன்.. அதுனால மட்டுமே கிட்டத்தட்ட நாற்பது ஏக்கருக்கு மட்டுமே நமக்கு எவ்வளவு கோடிக்கு கிடைக்கும் தெரியுமா..” என்று கண்கள் ஆசையில் ஜொலிக்க கூறிய ராகவை கண்டு அவனின் தாயும், தந்தையும் கண்களில் ஆசை வழிய.. மொத்த குடும்பத்தையும் பயப்பார்வை பார்த்தவாறே கிட்சனில் உட்கார்ந்திருந்தாள் பெண்ணவள்.

மாணிக்கவாசகமும், அவரின் பேராசை மனைவியுமான காஞ்சனாவும் இப்போவே அந்த இடத்திற்கான பணத்தை கணக்கு பண்ண ஆரம்பித்துவிட்டனர்.. காஞ்சனாவோ தாடையில் கை வைத்துக் கொண்டு… ஏங்க எப்படியாச்சும் உங்க பொண்ணுக்கிட்ட பேசி அந்த இடத்தை உங்க பேர்ல எழுதி வாங்குங்கஇல்லனா நமக்கு தான் கஷ்டம்.. என்ன கொஞ்ச நெஞ்ச பணமா வரபோது நமக்கு.. கிட்டதட்ட பல கோடிகள் வரும்ல..” என்று ஆரம்பித்து விட.

அன்றிலிருந்து ஆரம்பித்தது தான் மைத்ரேயிக்கு கொடுமைகள். இதோ இப்போது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.. “முடியாதுப்பா என்னால அம்மாவுடைய இடத்தை யாருக்கும் கொடுக்க முடியாது..” என்று அவள் கத்திக் கொண்டிருந்தாள்.

அவள் கத்துவதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் அந்த நாற்பது ஏக்கர் இடத்தின் மத்தியில் தான் அவளின் அன்னை கோசலாவின்  உடலை புதைத்து அங்கு சிறிய கோயில் மாதிரி ஒன்றை கட்டியிருந்தார் ரமணி. எப்போதும் தனக்கு மனம் சரியாக இல்லை என்றால் மைத்ரேயி அங்கு சென்று உட்கார்ந்து விடுவாள்.

இப்போது அவர்கள் கேட்பது அந்த இடத்தை தான். “சொன்னா புரிஞ்சிக்கோ மைத்து.. அந்த இடத்த அப்பா பேர்ல எழுதிக்கொடுத்துடு.. அப்பா உனக்கு நிறைய நகை போட்டு ஜம்முனு கல்யாணம் செஞ்சித்தரேன்.. அத விட்டுட்டு இப்டி முரண்டு புடிச்ச…”என்று மாணிக்கவாசகம் கத்த..

பெண்ணவளோ அழுகையுடன் முடியாதுப்பா அங்க ஏற்கனவே அம்மாவோட உடம்பு புதைச்சு வச்சி அதை நான் கோயில் மாதிரி கும்பிட்டுட்டு வரேன்.. அந்த இடத்தை போய் கொடுக்க சொல்றீங்களேப்பா.. எனக்கு அம்மாவோட வாழ தான் கொடுப்பன இல்ல.. இப்டி அம்மாவ புதைச்ச இடத்தையாவது எனக்கு தாங்கப்பா…” என்று மைத்து கண்ணீர் வழிய கூற

மாணிக்கவாசகத்திற்கு அவளை பார்க்க பார்க்க வெறியேறியது. காஞ்சனாவிற்கோ சொல்லவும் வேண்டுமா என்ன.. அவளை அப்படியே முடியை பிடித்து தூக்கி கொல்ல தோன்றியது.. ஆனாலும் அதனை செய்யாமல் தடுத்த தன் கணவரை நினைத்து மனதில் திட்டிக்கொண்டே இருந்தவளோ அனல் பார்வை பார்த்தார் மைத்துவை.

ராகவிற்கும் அப்படிதான்.. தன் உடன் பிறவா சகோதரியாக இருக்கும் அதுவும் தன் வயதில் இருப்பவளை சிறு பிள்ளையில் இருந்து எவ்வளவோ மட்டம் தட்டி, எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை வாங்க வைத்து என்று அவளை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமை செய்கின்றான் அவன்… இப்போதும் தன்னுடைய ஆசைக்க்கு நடுவில் நிற்கும் அவளை வெறுத்தவனாக ஆனால் அதனை வெளி காட்டிக்கொள்ளாமல் ஏன் மைத்து இப்டி பண்ற.. பாவம் அப்பா எவ்ளோ கெஞ்சிறாரு.. அவரு எவ்ளோ பெரிய பிரச்சனையில மாட்டிருக்காரு தெரியுமா.. அப்டிப்பட்டவருக்கு அந்த இடத்த கொடுத்தாதான் என்னவாம்…”என்று கெஞ்சலாக அவளை மிரட்டினான்..

ஆனால் மைத்ரேயி ஒரே கட்டமாக முடியாது என்று மறுப்பவளை கண்டு அவ்வளவு ஆத்திரம் அங்கு அனைவருக்கும்.. “அம்மாடி அப்பாவோட சூழ்நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோடா..” என்று மாணிக்கவாசகம் கெஞ்ச… அவளோ முடியாது என்றவாறே இரு பக்கமும் தலையாட்டினாள்…

இந்த பிரச்சனைக்கு வேற ஏதாவது சொல்யூஷன் இருந்தா பாருங்கப்பா.. என்னால அம்மாவுடைய இடத்தை மட்டும் தர முடியாது..” என்று கூற.

அட என்னடி தர முடியாது..” என்ற காஞ்சனாவோ வேகமாக மைத்ரேயியின் அருகில் சென்று வேகமாக அவளின் பூப்போன்ற கன்னத்தில் அறைந்தாள். அதில் பெண்ணவளில் கண்ணத்திலோ அனல் பறந்தது…. வலியில் முகம் சுருக்கியவள்… “அம்மாஎன்று அடுப்படியிலேயே விழுந்து கிடந்தவளை தூக்கவோ.. மேலும் அடிக்கும் காஞ்சனாவை தடுக்கவோ அங்கு நாதியில்லை..

ராகவ்வும் இதனை ஸ்டைலாக கால் மேல் கால் போட்டு ஹாலில் உட்கார்ந்தவாறு வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தான். ரமணி தான் தன்னுடைய அறையில் அசைய முடியாமல் படுத்து கிடந்தவர் அந்நேரத்திலும் தன் பேத்தி அடி வாங்குவதை பார்த்து அய்யோ என் பேத்திய அடிச்சே கொல்றாங்களே… அடேய் பாவிங்களா… அவளை விடுங்கடா அவளை விடுங்கடா..” என்று புலம்பலாக கத்திக் கொண்டிருக்க.. பாவம் அந்த குரலோ கொஞ்சமும் மேலே எழும்பவே இல்லை..

ஆஆஆ அய்யோ அடிங்காதீங்க சித்தி…”என்று கதறியவள்… ப்பா… ப்ளீஸ்பா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்கப்பா.. என்ன சித்தி அடிக்க வேண்டாம் சொல்லுங்க பா..” என்று மைத்ரேயி அழுது கொண்டிருக்க ஆனால் மாணிக்கவாசகம் அதனை கேட்பதாக இல்லை.

நீ சொல்ற மாதிரி நான் உன்னை அடிக்க வேண்டாம்னு சொல்கிறேன். ஆனால் அதுக்கு பதிலா நீ அந்த இடத்த என் பேர்ல எழுதி கொடு..” என்று மறுபடியும் மாணிக்கவாசகம் அங்கையே வந்து நிற்க..

நோமுடியாது என்னோட அம்மாவோட சமாதிப்பா அது.. அது எனக்கு கோவில்… அத தரமுடியாதுப்பா..” என்று அவளும் அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று மட்டும் அல்ல கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவள் இந்த கொடுமையை தான் அனுபவித்துக் கொண்டிருந்தாள்காஞ்சனா அவளுக்கு சாப்பாடு போடுவதில்லை.. ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும்தான் சாப்பாடு கொடுக்கின்றனர் அதுவும் எங்கே அவள் கையெழுத்து போடாமல் இறந்து விடுவாளோ என்ற நிலையில்தான் ஒருவேளை சாப்பாடு கொடுத்து காலையும் மதியமும் இரவு அவளைப் போட்டு வெளுத்துக் கொண்டிருந்தார் காஞ்சனா..

ஆஆ எவ்ளோ அடிக்கிறேன்.. கொஞ்சமாச்சு அந்த இடத்தை எழுதி தரேன்னு சொல்றாளா பாத்தீங்களா..” என்று காஞ்சனாவோ கத்திக் கொண்டிருக்க. உடல் முழுவதும் காயத்துடன் மைத்ரேயியோ அந்த இருட்டு குடோன் அறையில் மயங்கி கிடந்தாள்.

பெண்ணவளின் உடல் முழுவதும் அடிகள் ரணமாக வலிக்க.. ஆனால் எக்காரணம் கொண்டும் தன்னுடைய அன்னையின் சமாதி இருக்கும் இடத்தை மட்டும் அவர்களுக்கு கொடுப்பதாக இல்லை அவள்..

ஆனால் இதற்கெல்லாம் உச்சபட்சமாக அடுத்த நாள் நடந்த கொடுமை தான் கொடுமையிலும் கொடுமை…

(கேப்பச்சினோ..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!