மின்சார பாவை-1

4.6
(13)

மின்சார பாவை-1

“நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா.

அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா.

“ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க.

“தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா.

“பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா.

“ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட.

“அது…” என்று உள் இழுத்தாள் வெண்ணிலா.

“உன் நம்பரை வாங்குறதுக்குள்ள நான் பட்டபாடு.” என்று சபரிகா புலம்ப.

எதற்காக நம்பரை மாற்றினோம் என்பது நினைவு வர, முகம் மாறியவள் தலையை உலுக்கிக் கொண்டாள். “ப்ச்! பழசெல்லாம் எதுக்கு டார்லி‌. நீ எப்படி இருக்க? உனக்குன்னு அடிமை ஏதாவது சிக்குச்சா? அதான் கல்யாணம் ஆகிடுச்சா.” என்று பேச்சை மாற்றினாள் வெண்ணிலா.

“இவ்வளவு நாள் நீ கோமாவுல இருந்தியா? ஒரு மெசேஜ் கூட போடாத உன்கிட்ட இதை பத்தி சொல்ற ஐடியா இல்ல? நாங்க என்ன தப்பு செய்தோம்?. இல்ல நீ தான் என்ன தப்பு செஞ்ச? இந்த காலத்துல லவ் பண்ணறது அவ்வளவு பெரிய குத்தமா . இதுக்கு போய் உன் படிப்பை பாதில நிறுத்தி பெரிய சீன் கிரியேட் பண்ணினது உன் பேமிலி மெம்பர்ஸ். அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்? காலேஜ் விட்டு போயிட்டா நீ எங்களோட காண்டாக்ட்டையும் கட் பண்ணுவியா? அப்பக் கூட நான் வார்டனுக்குத் தெரியாமல் இரண்டு, மூனு தடவை உங்க வீட்டுக்கு வந்தேன். ஆனால் வீடு பூட்டியிருந்தது. அங்க யாருமே இல்ல

அக்கம், பக்கம் விசாரிச்சா உனக்கு கல்யாணம்னு தகவல் தான் கிடைச்சது. உன்னை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு தெரியாமல் நாங்க தவிச்ச தவிப்பு எங்களுக்குத் தான் தெரியும்.”

“ப்ச் சரி விடுடி!பழசை எல்லாம் பேசிக்கிட்டு, பாஸ்ட் இஸ் பாஸ்ட். அதை நினைச்சுப் பார்க்கக் கூட டைம் இல்லை.”

“அது எப்படி விடமுடியும்டி. அவ்வளவுதானா நம்ம நட்பு.உனக்கு கொஞ்சம் கூட எங்க நினைப்பு இல்லைல.ஆனால் புது லைஃப்ல அடாப்ட் ஆனதுக்கு அப்புறமாவது எங்கக் கூட பேசிருக்கலாம். கஷ்டம் வரும் போது கூட இருக்கிறது தானே உண்மையான நட்பு.” என்று மனத்தாங்கலா வினவினாள் சபரிகா.

“லூசு! இதை சொல்லத் தான் இப்ப ஃபோன் பண்ணுனீயா? சரி எனக்கு வேலை இருக்கு. நான் வைக்குறேன்.” என்று வெண்ணிலா கூற.

“எருமை! வச்சுடாத. முக்கியமான விஷயம். அதுக்காகத்தான் அலையோ, அலைன்னு அலைஞ்சு திரிஞ்சு உன் நம்பரை வாங்கிருக்கேன்.” என்று படபடத்தாள் சபரிகா.

“அப்போ மேட்டருக்கு வா!” புன்னகைத்தாள் வெண்ணிலா.

அந்தப்பக்கம் வந்த தீரன், அவளது முகத்தை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.

நீ எப்பவும் போல பேசி, சிரிக்கிறப்ப தான் நிம்மதியா இருக்கு. பழசெல்லாம் நினைச்சு, லைஃபை வீணாக்கிட்டியோன்னு கவலையா இருந்தேன்.”

“அப்படியா?” என்று பொருள் விளங்கா குரலில் வெண்ணிலா வினவ.

“சாரி நிலா! பழசெல்லாம் ஞாபகப்படுத்துறேனா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை பரி டார்லி. சரி நீ எதுக்கு என்னை வலை வீசி தேடுன. அதைச் சொல்லு‌? உனக்கு கல்யாணமா? அதுக்கு இன்வைட் பண்ண தான் கூப்பிடுறியா?”

“ஏதே! இருபத்தாறு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருக்க நான் என்ன நைண்டீன் கிட்ஸா? அதெல்லாம் இல்லை. ஐயம் டூ கே கிட்ஸ்யா? அதெல்லாம் ஆச்சு.” என்று மூச்சு வாங்க சபரிகா கூற.

“அப்போ எதுக்கு மேடம் என்னை வலை வீசி தேடுன?”

“ நம்ம காலேஜ்ல ரீ யூனியன்.”

“ரீ யூனியனா? ரொம்ப வருஷமான தானே எல்லோரும் மீட் பண்ண ரீயூனியன் வைப்பாங்க. நம்ம காலேஜ் முடிச்சு ஃபைவ் இயர்ஸ் கூட ஆகலையே. அதுக்குள்ள ரீயூனியனா?” என்று குழப்பத்துடன் வெண்ணிலா வினவ.

“இது நம்ம ஈ. ஸி டிபார்ட்மெண்ட் ஹெச் ஓ டி மதன் சாரோடோ ரிடையர்மெண்ட் பார்ட்டி. ஒன்லி ஈ.ஸி டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்ஸோட மீட் அப் மட்டும் தான். ஒன்வீக் ப்ரோக்ராம் .

அந்த ஒரு வாரமும் கொடைக்கானலையே தெறிக்க விடுறோம்.” என்றாள் சபரிகா.

“நான் வரலை.” என்று தயக்கத்துடன் வெண்ணிலா கூற.

“எதுக்கு வரமாட்டேங்குறேன்னு தெரியும். யுகி அண்ணாவை நினைச்சு தானே. அவர் பாரின்ல இருக்கார்.அவர் வர மாட்டார்.” என்று குரலை தழைத்துக் கொண்டு கூறினாள் சபரிகா.

“ இல்ல பரி.இது சரிபட்டு வராது.ஸாரி பரி நான் அங்க வரமாட்டேன்”.என்று நிலா சொல்லி முடிப்பதற்குள், “ அப்ப எங்கல எப்பவுமே மீட் பண்ணமாட்டியா? அவ்வளவுதானா நம்ப நட்பு… ஓகே குட் பை அன்ட் லாஸ்ட் பை பை” என்று பொறிந்தபடி போனை வைக்க போனாள் சபரிகா.

பரி குரலில் அவர்களின் நட்பின் ஆழத்தை உணர்ந்தவள்,‘அப்போ ரீயூனியனுக்கு போனால் என்ன?’ என்று வெண்ணிலா யோசித்தாள்.

ஆனால் ஏன் தான் போனோம் என்று எண்ணி வருந்தப் போவதை அறியவில்லை.

அவளது நிம்மதியைப் பறிக்கவென்று ஏர்போர்ட்டில் வந்து இறங்கினான் யுகித்.

வெண்ணிலாவின் ஒரு சில நொடி அமைதி தாங்க முடியாத சபரிகா படபடத்து விட்டாள்.” ஹே நிலா! நம்ம பஞ்சபாண்டவர் குரூப் உனக்காக தான் காத்திட்டு இருக்கு.”

“இன்னும் அந்த குரூப்ப கலைக்கலையா?” என்று வெண்ணிலா சிரிக்க.

“ சிரிக்காதடி கோவமா வருது.”

“ஜில்! எதுக்கு இவ்வளவு கோபம்? இரு! நேர்ல பார்க்கும் போது அந்த மூக்குலே ஒரு பஞ்ச் பண்றேன்.” என்று வெண்ணிலா கூறி முடிக்கவில்லை,

“ஹூர்ரே!” என்ற சபரிகாவின் கூச்சலில் ஃபோனை பதறி தள்ளி வைத்தாள் வெண்ணிலா.

“எருமை! மெதுவா கத்து. காதே செவுடா போயிடும் போல. அப்புறம் நான் வர்றேன்னு சொல்லவே இல்லையே.” என்று புன்னகையுடன் வெண்ணிலா கூற.

“ அதான் நேர்ல பார்க்கலாம்னு சொல்லிட்டியே. அப்புறம் என்ன? முதல்ல நம்ம குரூப்ல நீ வர்ற விஷயத்தை சொல்றேன். அப்புறமா உன்னையும் அந்த குரூப்ல ஆட் பண்றேன்.” என்று படபடத்தவள், வேகமாக ஃபோனை வைத்து விட.

சபரிகாவின் ஆர்ப்பாட்டத்தை ரசித்த வெண்ணிலா புன்னகையுடன் டைனிங் டேபிளுக்கு சென்றாள்.

அங்கிருந்த மொத்தக் குடும்பமும் இவளையே பார்த்துக் கொண்டிருக்க.

“என்ன இன்னைக்கு எல்லாரும் சீக்கிரமா சாப்பிட வந்துட்டீங்க?” என்று வினவ.

“அண்ணி! நீங்க தான் .டென் மினிட்ஸ் லேட். பட்டுக்கே பசிக்க ஆரம்பிச்சிருச்சு. உங்களுக்காக தான் வெயிட்டிங்.” என்றாள் மிதுனா.

அப்போதுதான் கையில் இருந்த ஃபோனில் டைம் பார்த்த வெண்ணிலா தலையில் தட்டிக்கொண்டு, “சாரிடா பட்டு.” என்று அங்கிருந்த குட்டி தேவதையிடம் மன்னிப்பு வேண்டினாள்.

அவள் இனியா. அந்த வீட்டின் முதல் பேரக்குழந்தை. எல்லோருக்கும் செல்லம்.

அவளோ,” மா! சூப்பர்” என்று வெண்ணிலாவை நெட்டி முறித்து செல்லம் கொஞ்சினாள்.

“அடேய் பட்டு! உங்க அம்மாவை விட அத்தை தானே ப்யூட்டிஃபுல்லா இருக்கேன். அத்தைக்கு செய்ய மாட்டியா?” என்று போட்டிப் போட்டாள் மிதுனா.

“நோ! நிலாமா சூப்பர்.” என்றாள் மூன்று வயது இனியா.

“அண்ணா! பாருண்ணா… உன் பொண்ணை…” என்று அண்ணனிடம் சிபாரிசுக்கு செல்ல.

“ பட்டுக்குட்டி சொல்றது போல உன் அண்ணி முகத்துல ஏதோ ப்ரைட்னஸ் தெரியுது.” என்று தீரன் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தப்படி கூறினான்.

“என்ன மாமா சொல்றீங்க? நான் எப்பவும் போல தான் இருக்கேன்.” என்றவள் வேகமாக எழுந்து வாஷ்பேஷன் கிட்ட இருந்த கண்ணாடியில் தன் முகத்தை ஆராய,

அவளது காதருகே, “ இவ்வளவு நேரம் தேஞ்சுப் போன நிலா மாதிரியிருந்த, இப்போ என்னைப் பார்த்ததும் தான் உன் முகத்துல ஒளிவட்டம் தெரியுது. பவுர்ணமி நிலா மாதிரி தகதகன்னு மின்னுற. நீ என் மின்சார பாவை! “என்ற குரல் காதருகே ஒலிக்க …

விதிர்விதித்து திரும்பினாள்.

அங்கு யாரும் இல்லை.

தலையை உலுக்கியவள், தனது ஏமாற்றத்தையும் உதறி விட்டு, டேபிளில் அமர்ந்து, “ சாரி!” என்று விட்டு குழந்தைக்கு ஊட்டிக் கொண்டே அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

 அவளது ஃபோனில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டுக் கொண்டே இருக்க.

“ யாருமா! மெசேஜ் போட்டுட்டே இருக்காங்க. எதுவும் முக்கியமான விஷயமா” என்று நிரஞ்சன் வினவ.

“ஒன்னுமில்லை மாமா! காலேஜ் ப்ரெண்ட்ஸ் கிட்ட இருந்து தான்.ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் என் நம்பர் கண்டுபிடிச்சு பேசுறாங்க ”

“ ஓ! அது தான் உன் முகம் ப்ரைட்டா இருக்கா?” என்று கேலி செய்ய.

“சும்மா இருங்க! நீங்களும் சின்ன புள்ளையாட்டாம் மருமகளை வம்பு இழுக்குறீங்க.” என்று அதட்டினார் யாழினி.

“ டாட்! மாம் இருக்கும் போது வாய் தொறக்கலாமா? அண்ணன் எப்படி அமைதியா இருக்கார். அவரைப் பார்த்துக் கத்துக்கோங்க.” என்று கேலி செய்தாள் மிதுனா.

தங்கையை அழுத்தமாகப் பார்த்து விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பிய தீரன்,”நிலா! என்ன திடீர்னு ஃப்ரெண்டஸ்ங்க கிட்ட இருந்து மெசேஜ்.” என்று புருவத்தை உயர்த்தி வினவ.

“அது வந்து… எங்க காலேஜ்ல ரீயூனியன்.” என்று சபரிகா சொன்ன விஷயத்தை பகிர்ந்துக் கொண்டாள் வெண்ணிலா.

“ஓ!” என்ற தீரன், நீ போறியா என்பது போல் பார்க்க.

“ நான் போகலாம்னு இருக்கேன்.” என்றாள் வெண்ணிலா.

அவளை ஆச்சரியமாக பார்த்தவனோ‍, “குட்! எப்பப் போற? எத்தனை நாள் ப்ரோக்ராம்?” என்று அவளிடம் விசாரித்தான்.

“ஓன் வீக் ப்ரோக்ராம். ஆனால் எப்போன்னு தெரியலை.”

“எப்பவா இருந்தா என்ன? நம்ம ஆஃபிஸ் தானே. லீவ் பத்தி பிரச்சனை கிடையாது. என்னைக்கு மீட்டிங்கோ அதுக்கு இரண்டு நாள் முன்னாடியே கிளம்பிடு. அப்படியே

அத்தை, மாமாவையும் பாத்துட்டு வா. அங்க போய் ரொம்ப நாளாச்சு.” என்ற தீரனைப் பார்த்து முறைத்தாள் வெண்ணிலா.

“என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான் தீரன்.

“அது நான் அங்க போகலை மாமா.”

“இப்போ தானே போறேன்னு சொன்ன?”

“ உங்களை எல்லாம் விட்டுட்டு போக முடியாது‌”

“அப்படியா ?” என்று நக்கலாக வினவினான் தீரன்.

“அதானே!” என்றாள் மிதுனா.

“ப்ச்! அங்க ரொம்ப குளிரும். நான் போகலை.”

“ப்ச்! நீ பிறந்து வளர்ந்த ஊரு கொடைக்கானல். அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று பல்லைக் கடித்தான் தீரன்.

“ பாப்பா ஏங்கிடுவா?”

“ நிலா! பாப்பாவை பத்தி கவலைப் படாதே. நான் தான் இருக்கேனே. நான் பார்த்துப்பேன். அம்மா இருக்காங்க. மிது இருக்கா… அப்புறம் என்ன?” என்று அதட்ட.

கண் கலங்க அமைதியாக இருந்தாள் வெண்ணிலா.

“கோபப்படாமல் பொறுமையா சொல்லு. அவ கேட்டுப்பா.” என்று நிரஞ்சன் சப்போர்ட்டுக்கு வர.

“அப்பா! மருமகளுக்காக சப்போர்ட்டுக்கு வர்றாதீங்க.” என்றவன், “ லுக் நிலா! ஒரு முடிவு எடுத்துட்டா அதுல ஸ்டெடியா இருக்கணும். மனசு தடுமாறக் கூடாது. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.” என்று கூற.

அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “மின்சார பாவை-1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!