“நிலா நீ நல்லா இருக்கணும்னு தான் நான் நெனச்சேன் இப்படி ஆகும்னு நினைக்கலடி “ என்று கமலி அழ,
” நீ ஏன் மா அழற? அதான் நீ நெனச்சதெல்லாம் நடந்துருச்சு இல்ல.” என்று அழுகையும், ஆத்திரமுமாக வெண்ணிலா வினவ.
”கண்ணு இப்படி பேசாதடா. நீ விரும்புன பையனை தானே கட்டிக்கிட்ட. அவர் இப்படி கோபப்பட்ட நாங்க என்ன பண்ணடா? நீ கொஞ்ச நாள் பட்டுவோட நம்ம வீட்ல வந்திருடா. மாப்பிள்ளை தம்பிய கோபம் குறையவும், நாங்க போய் சமாதானப்படுத்தி உன்னை விட்டுட்டு வரோம்டா. அதுவரைக்கும் அம்மா உன்னை எதுவும் சொல்ல மாட்டேன்டா. உன்னையும் குட்டிமாவையும் நல்லா பாத்துக்குறேன் டா” என்று அவளை வீட்டுக்கு அழைக்க,
“ இனி மேல் அவரை சமாதானப்படுத்தி என்ன பண்ண போறீங்க. என் யுகா, என்னை விட்டு போயிட்டான். என் வாழ்க்கையை இப்படி சின்னாபின்னமாக நீங்க தான் காரணம். உங்களோட நான் வரமாட்டேன்.”
“பாப்பாவை உன்னால சமாளிக்க முடியாது. நம்ம வீட்டுக்கு வா.” என்று குழந்தையை சாக்காக வைத்து, மகளை தங்களோடு அழைத்துச் செல்ல முயன்றால் கமலி.
ஆனால் வெண்ணிலாவோ,” உங்க கூட பாப்பாவ வச்சு பிளாக் மெயில் பண்ற மாதிரி தானே சொல்றீங்க. பாப்பா நான் பார்த்துப்பேன். நீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க.”என்று நிலா எடுத்தெறிந்து பேசினாள்.
கமலியோ, “அம்மாடி! நான் தப்பு பண்ணிட்டேன் தான். இப்ப நான் உணர்ந்துட்டேன். ஆனா நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற. நான் என்ன சொன்னாலும் தப்பா தான் எடுத்துக்குற. என்னைக்காவது உன் கோபம் குறைஞ்சு, நான் செய்த தப்பை மன்னிச்சா, நம்ம வீட்டுக்கு வாடா.” என்றுக் கூறியவர், தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றார்.
முகுந்தனோ மகளது ஃபோனை அவளது கையில் திணித்து விட்டு மகளையும், பேத்தியும் திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றார்.
கோபத்தில் அந்த போனை அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தான் வெண்ணிலாவிற்கு தோன்றியது.
ஆனால் யுகித் அவளிடம் பேச வேண்டும் என்றால் இந்த நம்பருக்கு தானே அழைப்பான் என்று எண்ணியவள், ஃபோனை கையில் வைத்துக் கொண்டு அழுதாள்.
கண்ணில் நீர் வழிய இருந்த வெண்ணிலாவை ஆதரவாக அனைத்தார் மித்ரா.” அம்மாடி நிலா நீ தான் என் வீட்டு மருமக. அவன் தான் என்ன அம்மாவா நினைக்கல. ஆனா நீயாவது என்னை அத்தைனு நினைச்சா, என் கூட வா. பட்டுவையும், உன்னையும் பாத்துக்குறேன்.” என்று கூற அவளால் மறுக்க முடியவில்லை.
யுகித்தோடு சந்தோஷமாக அந்த வீட்டில் வாழணும் என்று நினைத்திருக்க, விதியோ தனியாக அவனது வீட்டில் அவளை கால் எடுத்து வைக்கச் செய்தது.
அவன், அவளுக்காவது வீட்டிற்கு வருவான், வருவான் என்று அவள் விழி மேல் வழி வைத்து காத்திருக்க, அவன் வரவே இல்லை ஏமாற்றமே அவளுக்கு பரிசாக கிடைத்தது.
தனக்குள் அழுத வண்ணம் இருக்க,
அதற்குக் கூட அவளது பட்டுக்குட்டி விடவில்லை. தாயின் அரவணைப்பை தேட ஆரம்பிக்க,
மித்ரா, “குழந்தையை பார்த்துக்கிறதுக்காவது நீ தைரியமாக இருக்கணும் வெண்ணிலா.” என்று அதட்டினார்.
தீரனும், “அம்மா சொல்றது சரி தான். நீ சும்மா வீட்லயே இருந்தா சரிப்பட்டு வர மாட்ட. எக்ஸாம் வரப்போகுதில்ல காலேஜுக்கு போ.” என்றுக் கூற.
“இல்ல… நான் காலேஜுக்கு போகலை.” என்று மறுத்து விட்டாள் நிலா.
தீரனும், மித்ராவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. “எனக்கு அங்க போனா யுகித் ஞாபகம் தான் வரும் அத்தை! ப்ளீஸ் என்ன கட்டாயப்படுத்தாதீங்க!” என்றாள்.
மித்ராவுக்கு வெண்ணிலா படிப்பை பாதியில் விடுறது பிடிக்கவில்லை. அது அவளோட எதிர்காலத்துக்கு நல்லதிலையே, அதனால் தன் பெரிய மகனிடம் அவளது படிப்பை பற்றி பேச.
“கொஞ்ச நாள் போகட்டும்மா. அடுத்த வருஷம் கூட எழுத வச்சுக்கலாம். அதற்கு என்ன புரோசிஜர்னு நான் பார்க்கிறேன். இப்பொழுது கொஞ்சநாள் நிலா அவ விருப்பப்படி இருக்கட்டும்.” என்றுக் கூற.
அவளோ அழுதுக் கொண்டே இருந்தாள்.
இது சரி வராது என்று அவர்களது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தான் தீரன்.
அங்கு சென்றதும் அவளுக்கும் நல்ல மனமாற்றமாக இருந்தது. கொஞ்சம், கொஞ்சமாய் இயல்பானாள் நிலா.
வெண்ணிலா அலுவலகத்திற்கு செல்லும் போது குழந்தையை மித்ராவும், மிதுனாவும் பார்த்துக் கொண்டனர்.
தீரன் சொன்னது போலவே அவளை அடுத்த வருடம் தேர்வு எழுத வைத்து விட்டான். ஆனால் அவளது நண்பர்களோடு டச் விட்டு போனது.
‘தான் கஷ்டப்பட்ட போதெல்லாம் கூட இருந்து, என் கஷ்டங்களை பார்த்த தீரன் மாமா, இப்ப தம்பிய பார்க்கவும் எப்படி ஈசியாக மன்னிக்க சொல்லிட்டு போறாரு. எங்க மாமாக்கு தம்பின்ற பாசம் கண்ணை மறைக்குது போல. எங்க அம்மாவை கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா இவருக்கு மன்னிப்பே கிடையாது.’ என்று எண்ணியவள், யுகித்தை முறைத்துக் கொண்டே நகர
அவனோ அவளை கைப்பிடித்து நிறுத்தினான்.
கையை வெடுக்கென்று உதறினாள் வெண்ணிலா “என்ன ஆச்சு நிலா ஷாக் எதுவும் அடிக்கிறதா? எப்பவும் நீயாக தொட்டால் மட்டும் இனிக்குதா. அதே நான் தொட்ட ஷாக் அடிச்சது போல உதறுற” என்று கேலி பேச.
அவனை முறைத்த வெண்ணிலாவோ, “இப்படி எல்லாம் பழசு ஞாபகப்படுத்த நீங்க பேசினா நான் உடனே சமாதானம் ஆயிடுவேன் நினைக்கிறீங்களா. நான் அனுபவிச்ச வலி அதிகம் தெரியுமா?
எத்தனை பேருக்கு தான் காதலிச்ச பெண்ணை கல்யாணத்தன்று மணமேடையில் அனைவரோட சம்மதத்தோட கரம்பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்? ஏதோ தீரன் மாமா நல்லவராகவும்,உங்க அண்ணனாக இருந்ததால் நமக்கு கிடைச்சது.
ஆனால் அதை ஈஸியா தூக்கிப் போட்டுட்டுட்டு போயிட்டுங்க. பட்டுவ பத்தி உங்ககிட்ட சொல்லனும்னு எவ்வளவோ முயற்சித்தேன். ஆனா அத கேட்க கூட நீங்க தயாரா இல்லை. பட்டுவை விட்டுட்டு நான் எப்படி உங்களோட வர முடியும். அதுக்காகத் தயங்கினா, நீங்க தப்பா நினைச்சுட்டு போயிட்டீங்க.
அன்னைக்கு நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும் எப்படியும் எனக்காக வருவீங்கன்னு நினைச்சேன். ஆனா என்ன விடவும் உங்களுக்கு உங்களுடைய ஈகோ தான் முக்கியமா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு சாரினு ஒரு வார்த்தையில் எல்லாத்தையும் மறக்க முடியுமா? என்னால முடியாது.” என்றவள் அங்கிருந்து செல்ல முயல.
அருகே இருந்த நகுலனிடம், “நகுல்! நீயாவது உன் ப்ரெண்டுக்கு எடுத்து சொல்லேன். எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லு.” என்றுக் கூற.
அவன் பதில் சொல்வதற்குள் அவர்களுக்கிடையே ரகுலன் நுழைந்தான்.
“வெண்ணிலா மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன்டா!” என்றான் ரகுலன்.
“நீ ஏன்டா என்ன மன்னிக்க மாட்ட? உனக்கும், எனக்கும் என்ன பிரச்சனை? எதுக்கு லூசு மாதிரி உளறுற?” என்றான் யுகித்.
“ எனக்கு என்ன பிரச்சனையானானு கேட்குறியா? கல்யாண ஆன பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ணாத, பிரச்சனை பண்ணாத நான் தடுக்கும் போதெல்லாம் அடுத்தவன் பொண்டாட்டிய நான் எதுவும் செய்ய மாட்டேன்னு சொன்னியே. அப்போ அவதான் என் பொண்டாட்டின்னு ஒரு வார்த்தை சொன்னானீயாடா? துரோகி என்ன லூசாவே நெனச்சுட்டல்ல.” என்று பொறுமை இழந்து கத்த.
“சாரி மச்சி வெண்ணிலாவே கோவமா இருக்கும் போது அவளை பத்தி சொல்ல வேணாம்னு தான் நான் விட்டுட்டேன். வெண்ணிலாவை முதல்ல சமாதானம் செய்வோம் பிறகு காலேஜ் முழுக்க அவ தான் என் பொண்டாட்டின்னு சொல்லலாம்னு நினைத்தேன்.” என்றுக் கூற.
அவளோ இருவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
தனியே சென்று அமர்ந்த நிலா அருகே வந்த சபரிகாவும், மஹதியும் அவளை முறைத்துக் கொண்டிருந்தனர்.
”நீங்க மட்டும் ஏன்டி அமைதியா இருக்கீங்க? என்னை ஏதாவது திட்டணும்னா நன்றாக திட்டுங்க” என்றாள் வெண்ணிலா.
“என்னத்த சொல்ல ஆனால் இதுதான் உன் பேமிலியான்னு விசாரிச்சப்பக் கூட ஆமாம்னு சொன்னவ, யுகித்தை பத்தி மட்டும் எதுவுமே எங்க கிட்ட சொல்லலையே. உன்னை நினைச்சு எவ்வளவு கவலைப்பட்டுருக்கோம் தெரியுமா?” என்று சபரீகா கூற.
“அதானே…” என்றாள் மஹதி.
‘இவளுங்க வேற காமெடி பண்ணிட்டு இருக்காங்க.’ என்று தனக்குள் புலம்பியவள், “ஏன்டி நான் என்னமோ சீனியரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தின மாதிரியும், உங்கக் கிட்ட சொல்லாமா நாலைஞ்சு, பிள்ளைங்க பெத்த மாதிரில கேட்கிறீங்க. கல்யாணம் பண்ண அன்னைக்கே அவன் என்னை விட்டுட்டு போயிட்டான். இதுல அதை வேற நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்க முடியுமா?” என்று புலம்ப.
அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தீபிகா முறைத்துக் கொண்டிருந்தாள்.
தீபிகாவை பார்த்த வெண்ணிலா வோ,” பேபி! இன்னமும் உனக்கு உன்
ஃப்ரெண்டு தான் முக்கியம் இல்ல. இப்பவும் நீ அவனுக்கு தானே சப்போர்ட் பண்ற”. என்றாள்.
“நிலா! உனக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது. ஆனால் உன்ன உங்க அம்மா வீட்டுல கூட்டிட்டு போன கொஞ்ச நாள்ல யுகித்துக்கு பெரிய ஆக்சிடென்ட் ஆனது.” என்றாள் தீபிகா.
”என்ன சொல்ற பேபி”என்று வெண்ணிலா பதற,
“பத்து நாளுக்கு மேல கோமாவுல இருந்தான். அப்புறமும் எழுந்து நடக்கிறதுக்கு ரொம்ப நாள் ஆனது ஆனால் நீதான் அவனோட வைஃப்னா, அந்த உரிமையில ஒரு தடவையாவது நீ அவனுக்கு போன் பண்ணியா. அவன் கோபமா போனா அப்படியே விட்டுடிவியா. அடிப்பட்டு கிடந்தவனுக்கு ஏன்னு கேட்க கூட ஆள் இல்லைத் தெரியமா?.”என்று கூறி கண் கலங்க.
“ நான் அப்படி எல்லாம் இல்லை பேபி. என்னை ஏன் விட்டுட்டு போனேனு சண்டை போட போன் பண்ணினேன். ஆனா ரீச் ஆகல.” என்று நிலா கூற,
“ஆமா ஆக்சிடென்ட்ல ஃபோன் நொறுங்கி போச்சு. உடனே விட்டது தொல்லை இருந்துட்டியா நீ ?”என்று நிலாவை குற்றம் சாட்ட,
“பேபி இப்படி எல்லாம் பேசாதே. அவன் போன் ரீச்சாகல்லைன்னதும், என்னோட தன்மானத்தை விட்டு ரகு அண்ணாவுக்கு மட்டும் போன் பண்ணி யுகாவை பற்றி விசாரிச்சேன். அவர் தான் சொன்னாரு வேலை கிடைச்சு யுகி வெளிநாட்டுக்கு போயிட்டான்னு. அது வரைக்கும் இங்கே என்னை தேடி யுகா வருவான், இல்ல மெசேஜ் பண்ணுவான், போன் பண்ணுவான்னு அந்த போனை வெறிச்சு, வெறிச்சு பார்த்துக் கிட்டே இருந்த நான் கோபத்துல அந்த சிம்மை உடைச்சு போட்டுட்டேன். எனக்கு யாருடனும் பேச விருப்பமில்லாமல் இருந்தேன்.” என்றுக் குரல் கம்ம கூறினாள் வெண்ணிலா.
“அடப்பாவி நீ என் நண்பனாடா? நான் உனக்கு என்ன துரோகம் பண்ணினேனு வெண்ணிலா கிட்ட வெளிநாட்டுக்கு போயிட்டேனானூ பொய் சொல்லி இருக்க.” என்று யுகித்தின் குரல் ஒலிக்க.
அனைவரும் திரும்பி பார்த்தனர்.
யுகித்தோ கோபத்துடன் அவன் சட்டையைப் பிடிக்க.
ரகுலன் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
நிலாவோ யுகித்தைப் பார்த்ததும் ஓடிக் சென்று கட்டிப்பிடித்தவள், “யுகா! சாரி யுகா! சாரி! உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சா? இல்லனா என்ன பாக்க வந்திருப்பீங்க தானே என்னை விட்டுட்டு போயிருக்க மாட்டிங்க தானே.” என்று அவள் சிறு குழந்தை போல வினவ,
அவள் கன்னத்தை பிடித்து முதல்ல கோவத்துல விட்டுட்டுப் போயிட்டேன். ஆனால் மனசுக் கேட்காமல் உன்ன கூட்டிட்டு போகலாம்னு வரும் திரும்பி வந்து போது தான் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு ஆனா எனக்கு ஞாபகம் வந்து போது எனக்கு போன் பண்ணி என்னை பத்தி யாராவது விசாரிச்சாங்களான்னு கேட்டேன். வீட்லயும் யாரும் விசாரிக்கல, நீயும் விசாரிக்கவில்லை என்று தெரிந்ததும் ரொம்ப மனசு ஒடஞ்சு போயிட்டேன்டி. எப்பயும் போல எனக்கு யாரும் இல்லைன்னு கோவமா வந்தது. வெளிநாட்டுக்கு தான் போகலாம்னு நினைச்சேன் ஆனா உன் நினைவை விட்டுவிட்டு போக எனக்கு மனசு இல்ல. உன்ன நெனச்சுக்கிட்டே இருக்கணும்னு தான் நம்ம காலேஜ்லயே ப்ரொபஸராக வேலைக்கு சேர்ந்தேன் என்று கூறி, அவனும் அவளை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டான்.
ஆனா நீ போன் பண்ணினதையும், நான் வெளிநாட்டுக்கு போனதாக இவன் ரீல் விட்டதையும், இந்த துரோகி என்னிடம் சொல்லலடா” என்று கூறியவாறே ரகுலனை அடிக்கப் போக “டேய்! நான் என்னடா பண்றது அப்போ வெண்ணிலாக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டிருந்தோம். அவ உன்ன பத்தி விசாரிச்சா உனக்கு அடிபட்டுருச்சுன்னா தெரிஞ்சு அவ இங்கே வந்தா, அவ லைஃப் ஸ்பாயில் ஆயிடுமே. அதான் நீ வெளிநாட்டுக்கு போயிட்டேன்னு சொன்னேன். எனக்கு என்ன தெரியுமா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது” என்று கூற.
”உன்னை” என்று கத்தியபடி காலால் எட்டி உதைத்தான் யுகித்.
“நல்லதுக்கே காலமில்லை.” என்றவாறே ரகுலன் அங்கிருந்து நகர,
வெண்ணிலாவோ அவனை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இறுகக் கட்டிக்கொண்டாள்.
அங்கு அந்த நேரம் வந்து மதன் சாரோ,” என்ன நடக்குது இங்க? இன்னும் நீங்க தங்குற இடத்துக்கு போகாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?” என்றவர், அப்பொழுது தான் இருவரும் இருக்கும் நிலையை பார்த்து,” யுகி வாட் இஸ் திஸ்?” என்று கத்தினார்.
“சார்…” என்று யுகித் ஏதோ கூற முயல.
“ நீங்க ரெண்டு பேரும் தான் லவ் பண்ணீங்கன்னு எனக்கு தெரியும். ஆனால் இப்போ ஒரு கவுரமான போஸ்ட்ல இருக்க. இந்த மாதிரி பண்ணுறது தப்பு.” என்றுக் கூறி கண்டித்தார்.
“ புரோபஸரா இந்த காலேஜ்ல வொர்க் பண்ணா, வைஃபை கட்டிப்பிடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கா?” என்று இடக்காக வினவினான் யுகித்.
“வாட்? வெண்ணிலா உன் வைஃபா?” என்று வினவியவரின் முகம் சந்தோஷத்தில் விகசித்தது.
“ ஆமாம் சார், நான் தான் இவளோட ஹஸ்பண்ட். எங்களுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு.”என்றவாறே அவரின் காலில் விழ, அவளும் சேர்ந்து விழுந்தாள்.
இருவரையும் ஆசீர்வாதம் செய்தவர் “எனக்கு இப்பதான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. எப்பவுமே உங்க ஜோடி பொருத்தம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு நினைப்பேன். ஆனா உண்மையிலேயே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, ரொம்ப ஹேப்பியா இருக்கு . நீங்க ரெண்டு பேரும் என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்.”என்று கூற. அவரது நண்பர்களும் வாழ்த்தினர்.
என்றும் அவர்கள் மன நிறைவுடன் சந்தோஷத்தோடு இருப்பார்கள் என்று வாழ்த்தி விடைப் பெறுவோம்.
இரண்டு வருடங்களிற்கு பிறகு.
யுகித் மற்றும் வெண்ணிலாவின் நண்பர்கள் குழுமியிருக்க. அரட்டைக் கச்சேரி களைக்கட்டியது.
உடனே மறுபடியும் ரீயூனியன் பங்ஷன் என்று நினைக்க வேண்டாம்
யுகித்தின் குட்டித் தங்கைக்கு தான் திருமணம்.
அதில் கலந்துக் கொள்ள தான் நண்பர்கள் குழு வந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் உறங்க சென்றிருக்க. இவர்கள் நண்பர்கள் குழு மட்டும் அரட்டை அடித்துக் கொண்டிருந்து.
அதில் தூங்க போகணும்னு நினைத்திருந்த மாப்பிள்ளையை போக விடாமல் பிடித்து வைத்திருந்தனர்.
ஆம் மாப்பிள்ளை, அவர்கள் நண்பர் குழுவில் உள்ள அதி முக்கியமானவன். அதுவும் காதல் திருமணம்.
தீபிகா தான், மாப்பிள்ளை தலையில் லேசாக தட்டி, “மிது எப்படிடா உன்னை செலக்ட் பண்ணா?”என்று கிண்டல் அடிக்க.
“எங்க வாழ்க்கையில எந்த விஷயத்தை வைத்து கும்மி அடிச்சானோ, அந்த ஒரு காரணமே என் தங்கச்சியோட மனச அசைச்சுடுச்சு.” என்றான் யுகித்.
“என்ன சீனியர் சொல்றீங்க புரியவில்லையே.” என்று சபரீகா வினவ.
“அதுவா, வெண்ணிலாவோட வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக ரகுலன் போராடினதைப் பார்த்து என் தங்கச்சிக்கு பிடிச்சிடுச்சுடு. அதுவும் ப்ரெண்டை விட ஒரு பொண்ணோட வாழ்க்கை முக்கியம்னு நினைக்கிறாரார்னா, அவர் ரொம்ப நல்லவருன்னு சொல்லிட்டா எங்க மிதுனா.
சரி தான் நம்ம ப்ரெண்டுக்கு நம்மளே வாழ்க்கை கொடுக்கலைன்னா எப்படின்னு வாழ்க்கைக் கொடுத்துட்டேன்.” என்று யுகித் கூற.
“ஐயோ! யுகா! என்ன சொல்றீங்க?” என்று அலறினாள் வெண்ணிலா.
“ஹான்! என்ன சொன்னேன்னு இப்படிக் கத்துற?” என்று யோசித்தவனுக்கு, தான் சொன்ன வார்த்தை புரிய, “ ஐயோ! ச்சே கருமம். என் தங்கச்சி வாழ்க்கை கொடுத்திட்டான்னு சொல்ல வந்தேன். டங் ஸ்கிப் ஆயிடுச்சு. ஆனாலும் நிலா என்னை நீ இப்படி சந்தேகப்பட்டு இருக்க கூடாது.” என்றுக் கூற.
எல்லோரும் நகைத்தனர்.
நிலாவும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நகைக்க
எங்கிருந்தோ வந்த ஒரு பெண்,”நிலா! இப்படியேலாலாம் சிரிக்கக் கூடாதாம். முதல்ல போய் உன்னை போய் படுக்க சொன்னார் உங்க மாமா.” என்றுக் கூறி புன்னகைத்தாள்.
அவள் தான் அனன்யா. இந்த வீட்டின் மூத்த மருமகள். அனன்யாவுக்கும் தீரனுக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
அவர்களுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமாகிறது.
தீரனுக்கு ஏத்தாற் போலவே அனன்யா பொறுப்பானவள். அந்தக் குடும்பத்தையே அன்பால் கட்டிப்போட்டு வைத்திருந்தாள்.
“அண்ணி! அண்ணன் சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருக்காதீங்க. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க . காலையிலிருந்து வந்தவங்கள கவனிச்சுக்கிட்டு ஓடி ஆடிட்டே இருக்கீங்க. இப்பவும் ஓய்வெடுக்காம அவன் சொல்றான்னு எதுக்கு வர்றீங்க.” என்று கடிந்துக் கொண்டாள்.
“உங்க அண்ணன் சொல்றது நல்லதுக்கு தானே யுகி. இந்த மாதிரி நேரத்தில் சிரிச்சா இடுப்பு புடுச்சுக்கும்.” என்றவள், வெண்ணிலாவிடம் திரும்பி,” நீ போய் படு வெண்ணிலா. எவ்வளவு நேரம் தான் நின்னுட்டே இரூபாப. அப்புறம் கால் வலிக்கும்.”என்று நிறைமாதத்தில் இருக்கும் வெண்ணிலாவை பார்த்து கூறினாள்.
“ குட்டீஸ் ரெண்டு பேரும் என்ன பண்றாங்க அக்கா?” என்று வெண்ணிலா வினவ.
“யாழினி எப்பவும் போல நைட் டியூட்டி பார்க்க ஆரம்பிச்சுட்டா. கத்திட்டு இருக்கா. அவளைப் பாத்துக்கிறதை தீரன் தலையில் கட்டிட்டேன். பட்டுவ கமலி அம்மா தூங்க வைக்கிறேன்னு கூட்டிட்டு போய்ட்டாங்க. பாட்டியே பார்த்ததும் எங்களை விட்டுட்டு ஓடிட்டா.” என்று கூறி அனன்யா புன்னகைக்க.
“ஆமாம் அவளுக்கு அவங்க பாட்டிய பாத்துட்டான் போதும், நாமெல்லாம் ஒரு ஆளே கிடையாது.”என்று பல்லைக் கடித்தாள் வெண்ணிலா.
அதற்குள் யுகித்துக்கு கோபம் வர,” ஏன் கோபப்படுற? அவக் குழந்தை. யார் பிரியமா இருக்காங்களோ, அவங்க கிட்ட பிரியமா இருப்பாங்க. எல்லாரும் உன்ன மாதிரியே இருப்பாங்களா? “ என்று திட்ட.
“ ஆமாம் உங்க பொண்ண சொன்னா மட்டும் போதும், சண்டைக்கு வந்திருங்க.” என்று அவளும் அவனிடம் மல்லுக்கட்ட.
“அடடா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையே நிறுத்திட்டு போய் தூங்குங்க” என்றவள், அங்கு அமர்ந்து இவர்கள் போடும் சண்டையே வாய்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களைப் பார்த்து, “நாளைக்கு பேசலாம். நீங்களும் போய் படுங்க. காலைல சீக்கிரம் முகூர்த்தம்.”என்று அவர்களையும் விரட்டினாள் அனன்யா.
ரகுலனோ, அனன்யாவை பார்த்து மிரண்டு போனான்.
அடடே! மாப்பிள்ளை நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா? உங்களுக்கு தூங்குற ஐடியா இல்லையா? இப்படியே முழிச்சிட்டிருந்தா, நாளைக்கு கல்யாணம் மேடையில் தூங்கிடப் போறீங்க.” என்று கேலியாக கூற.
“ஐயையோ! அப்படி எல்லாம் ஆகுமா? இல்ல, இல்ல நான் போய் தூங்குறேன்.” என்று பதறிய ரகுலன் வேகமாக அந்த இடத்தை காலி பண்ண.
அனன்யாவும், வெண்ணிலாவும் வாய் விட்டு நகைத்தனர்.
இவர்கள் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா வேகமாக அங்கு வந்து,” எதுக்கு இப்படி சத்தம் போட்டு சிரிக்கிறீங்க. யார் கண்ணாவது பட்டுடப் போகுது.” மருமகள்களை கடிந்துக் கொண்டவர், “ ஒரு நிமிஷம் இருங்க.” என்று விட்டு சமையலறைக்குச் சென்று உப்பு எடுத்து வந்து மருமகள் இருவருக்கும் சுற்று போட்டார்.
“இதெல்லாம் நம்பிக்கை இருக்காத்தை.” என்று வெண்ணிலா கேலி செய்ய.
அவள் தலையில் லேசாக குட்டிய மித்ராவோ,“உங்களுக்கு இல்லைன்னா என்ன, எனக்கு நம்பிக்கை இருக்கு. சரி போய் படுங்க.” என்று அதட்டி அவர்களை அனுப்பி வைத்தார்.
இதெல்லாம் தனது அறை வாயிலில் இருந்து பார்த்த கமலிக்கு ஏக்கமாக இருந்தது.
தன் மகள் தன்னிடமும் இது போல் விளையாட மாட்டாளா என்று ஏக்கத்துடன் பார்த்த கமலிக்கு, இந்த அளவுக்கு அவள் தன்னிடம் மூஞ்சி கொடுத்து பேசுவதே வேறு பெரிய விஷயம் என்பது புரிய, பெருமூச்சு விட்டுக் கொண்டே அறைக்குள் சென்று விட்டார்.
மறுநாள் காலை பொழுது அழகாக விடிய, அந்த வீட்டின் இளவரசியின் கையை, ரகுலனின் கையில் பிடித்துக் கொடுத்தனர்.
Nice story
Thank you so much sis 💖